சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மலேசியாவில் தமிழ் நாவல் பயிற்சிப்பட்டறை


மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

சுப்ரபாரதிமணியன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் 28, 29l கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது.
மலேசியாவிலிருந்து எழுதும் ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து”, கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின் விமர்சன முகம்-2 .இவை இரண்டும் இம்மாதம் அங்கு நடைபெறும் மு.வ. நூற்றாண்டு விழாவில் 29ல் வெளியிடப்படுகின்றன).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது, பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது.இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.
1. ரெ.கார்த்திகேசுவின் “ சூதாட்டம் ஆடும் காலம்”
2.எஸ்.பி.பாமாவின் “ தாயாக வேண்டும் “ நவீன நாவல்கள் பற்றிய பரிச்சயம் வெகு குறைவாக இருந்தது.முனைவர் முல்லை நாவல் எழுதும்போது மனதில் கொள்ள வேண்டியவை பற்றி விரிவாகப் பேசினார்.பட்டறையை ஒட்டி நான் தயாரித்து அளித்த ஒரு கையேட்டில் தமிழ் நாவல் சில குறிப்புகள், தமிழின் சில சிறந்த நாவல்கள் பட்டியல், கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள், எனது நாவல்கள் பற்றிய சில விமர்சனக்கட்டுரைகள் என இடம் பெற்றிருந்தன.அதில் ஒரு பகுதி இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் அமைந்துள்ளது. மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன் தனது நிறைவுரையில் “ நிறைய வாசியுங்கள், குறைவாக எழுதுங்கள். 50 நாவல்கள் இப்போட்டியில் இதுவரை கலந்து கொண்டிருந்தாலும் மிகத் தரமான நாவல்கள் இல்லை என்ற வசவு ஒழிய வேண்டும்” என்றார். பங்கேற்பாளர்கள் தாங்கள் இவ்வாண்டின் போட்டிக்கு எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் கதை சுருக்கத்தையொட்டி நாவல் வடிவம், உத்திகள், நடை என ஆலோசனைகள் தரப்பட்டன.இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் தங்கி பட்டறையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, உறைவிடம் என்று வசதிகள் தந்து கட்டணமில்லாமல் நடத்தப்பட்டது.(சென்றாண்டு இதேபோல் எஸ்.இராமகிருஸ்ணன் சிறுகதைப்பட்டறையை மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்காக நட்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.) குறிப்பேட்டிலிருந்து…
தமிழின் சில முக்கிய நாவல்கள்:* நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
* ஒரு மனிதன் ஒரு வீடு – ஜெயகாந்தன்
* ஒரு நாள் – க.நா.சுப்ரமணியன்
* மோகமுள் – தி. ஜானகி ராமன்
* ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தரராமசாமி
* கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
* நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
* மானசரோவர் – அசோகமித்திரன்
* வெக்கை – பூமணி
* தலைமுறைகள் – நீல பத்மநாபன்
* துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
* காகித மலர்கள் – ஆதவன்
* சாயாவனம் – சா.கந்தசாமி
* புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்
* கடல் புரத்தில் – வண்ணநிலவன்
* தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
* வாக்குமூலம் – நகுலன்
* மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
* மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம்கிருஸ்ணன்
* செடல் – இமயம்
* யாமம் – எஸ்.ராமகிருஸ்ணன்
* ரப்பர் – ஜெயமோகன்
* மூன்றாம் விரல் – இரா.முருகன்
* அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத்தேனீரும் – எம்.ஜி.சுரேஷ்
* மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
* நல்ல நிலம் – பாவைச் சந்திரன்
* கங்கணம் – பெருமாள்முருகன்
* ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
* நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்
கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள்:* உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
* கொற்கை – ஜே.டி. குரூஸ்
* ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
* அபிலாஷ் – கால்கள்
* நிழலின் தனிமை – தேவிபாரதி
* கண்ணகி – தமிழ்ச்செல்வி
* வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
* மறுபக்கம் – பொன்னீலன்
* படுகளம் – ப.க. பொன்னுசாமி
* குவியம் – ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர்)
* விடியல் – அ. ரங்கசாமி ( மலேசியா )
* சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)
0 சுப்ரபாரதிமணியன் 0 subrabharathi@gamil.com