சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 29 செப்டம்பர், 2008

இலக்கியப் போட்டி 2008

Thursday September 18, 2008

அறிவிப்பு
============


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்

இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008

=======================================================

வென்றோர்கள்

===========

சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:


நவீனம்

சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)


சிறுகதை

மதுரா (போதி மரக்காடு)


கவிதை நூல்

நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)

மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)


நாடக நூல்

பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)

கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)


கட்டுரை நூல்

சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)

தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)


சிறப்புப் பரிசுகள்:

--------------------

கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)

முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)

முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)


தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)

எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)


அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)

வாய்மை நாதன் (நாலி)


எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)

இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)



இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி

பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

======================================================================

செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001

9442138856

======================================================================

=issundarakannan7@gmail.com

======================================================================




Copyright:thinnai.com