சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 27 ஜூலை, 2008

"உயிர் எழுத்து" ஓராண்டு பயணம்

சுப்ரபாரதிமணியன்


படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் "உயிர் எழுத்து" கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.


வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை "இன்லெண்ட் லெட்டர்" சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் 'இன்லெண்ட் லெட்டர்' வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் 'இன்லெண்ட் லெட்டர்' கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் "இன்லெண்ட் லெட்டரில்" எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.

அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து "போஸ்ட் கார்ட்" கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் "ஹைதராபாத் பக்கம்" என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் " உயிர் எழுத்து " கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.


இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.


உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.



( - சென்னையில் நடைபெற்ற "உயிர் எழுத்து" முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)


விழாவில் 8 புதிய நூல்கள்

வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,

கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,

நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

" உயிர் எழுத்து " திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1

email: uyirezhuthu@gmailcom


========================================

அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

========================================

thinnai.com