தமிழ் திரைப்பட உலகத்தை அரசியல் வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.தெலுங்கு திரைப்பட உலகத்தில் திரைப்பட வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.நாகேஸ்வராவின் மகன் நாகார்ஜுனனுக்கு 50 வயதிற்கு மேலாகிறது இன்னும் ஏக்சன் ஹீரோவாக விளங்குகிறார். நாகார்ஜுனனின் மகன் நாக் சைத்தன்யா இன்றைய இளம் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர்.
(அமலா நாகார்ஜுனனின் மகன் இன்னும் 10 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாவார்)
சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் , தேர்தல்கள் திருப்தியாக இல்லை அவருக்கு.சமீபத்திய Greater Hyderabad தேர0��் உரிமை மறுக்கப்பட்ட வாழ்க்கையின் துயரங்களை அவர்கள் வெறுமனே கடலிடம் தான் முறையிட்டுக் கொள்கிறார்கள்.
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 26 டிசம்பர், 2009
வெள்ளி, 25 டிசம்பர், 2009
ஈரம் "சிறுகதை"
கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணர்ந்திருந்தான்.
செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத் திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும்: "முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"
அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்.
அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு சீக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.
அணை நிரம்பி விட்டது. வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளைத் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ணீரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்க்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.
கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ணீர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தடதடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அணைக்கட்டும், சுற்றியுள்ள நிலமும் சாயம் பூத்து விட்டன. குடிப்பதற்கு லாயக்கற்றுப் போய்விட்டபோது நாற்பது கி.மீ.க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ணீரை ஏற்றி வரும் தண்ணீர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ணீர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.
ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினோதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளைக் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் கொள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.
"பறக்கிற டைனோசர் இருக்கா?”
" இருந்திருக்கும். இல்லீன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா ". அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ணீரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித் தண்ணீரின் சுவையை விட மினரல் கேன் தண்ணீரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின்போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சலடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கலவை அவனுக்குப் பிடித்திருந்தது. "நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.
தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது. இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.
வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைகளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிறபோது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம். ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.
புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும், நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது.
வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெட்ரோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.
மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும். தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கலாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் தட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்தபோது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.
* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் இருந்து வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.
சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி: "ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பித்தீர்கள்"
ரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிறபோது ராட்சத பூச்சியின் நகங்களைச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.
"படத்தில் ராட்சத மனிதர்களையெல்லாம் செத்த எலிகளைத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். "என்ன எதிர்பார்க்கிறீர்கள். எனது ராட்சதப் பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலாத்காரம் செய்ய வேண்டுமா" சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வசீகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஓர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் காட்சியளித்தது.
"நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம்." கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது. மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அது அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.
"சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே" சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்.
" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம்". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.
"தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும்." கலைந்து போவதில் சீரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொரக் கன்னத்தைத் தடவினாள். பூச்சி கிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது.
"சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே". இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியினைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "பெர்லின் போயிருந்தபோது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.
வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத் திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.
- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)
செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத் திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும்: "முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"
அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்.
அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு சீக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.
அணை நிரம்பி விட்டது. வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளைத் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ணீரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்க்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.
கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ணீர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தடதடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அணைக்கட்டும், சுற்றியுள்ள நிலமும் சாயம் பூத்து விட்டன. குடிப்பதற்கு லாயக்கற்றுப் போய்விட்டபோது நாற்பது கி.மீ.க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ணீரை ஏற்றி வரும் தண்ணீர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ணீர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.
ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினோதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளைக் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் கொள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.
"பறக்கிற டைனோசர் இருக்கா?”
" இருந்திருக்கும். இல்லீன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா ". அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ணீரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித் தண்ணீரின் சுவையை விட மினரல் கேன் தண்ணீரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின்போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சலடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கலவை அவனுக்குப் பிடித்திருந்தது. "நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.
தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது. இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.
வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைகளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிறபோது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம். ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.
புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும், நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது.
வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெட்ரோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.
மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும். தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கலாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் தட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்தபோது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.
* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் இருந்து வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.
சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி: "ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பித்தீர்கள்"
ரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிறபோது ராட்சத பூச்சியின் நகங்களைச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.
"படத்தில் ராட்சத மனிதர்களையெல்லாம் செத்த எலிகளைத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். "என்ன எதிர்பார்க்கிறீர்கள். எனது ராட்சதப் பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலாத்காரம் செய்ய வேண்டுமா" சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வசீகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஓர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் காட்சியளித்தது.
"நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம்." கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது. மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அது அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.
"சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே" சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்.
" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம்". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.
"தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும்." கலைந்து போவதில் சீரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொரக் கன்னத்தைத் தடவினாள். பூச்சி கிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது.
"சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே". இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியினைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "பெர்லின் போயிருந்தபோது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.
வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத் திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.
- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)
புதன், 2 டிசம்பர், 2009
பிங்கி ஸ்மைல்
குறும்படங்கள் :2
பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.
உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..
பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.
இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.


subrabharathi@gmail.com
பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.
உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..
பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.
இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.


subrabharathi@gmail.com
திங்கள், 23 நவம்பர், 2009
குறு குறு குறும்படங்கள்
குறுகுறு குறும்படங்கள்
=====================
1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------
தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.
2. Stair case ( Direction : George Mangalath Thomas )
முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.
3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )
” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.
4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)
ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.
=====================
1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------
தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.
2. Stair case ( Direction : George Mangalath Thomas )
முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.
3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )
” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.
4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)
ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.
கொஞ்சம் மண்ணும், கொஞ்சம் சூரியனும்


குறும்படங்கள்: 1
15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் கபீரை முன் வைத்து அயோத்தி ராமனின் "போராளி"த்தனத்தை அலசுவதற்கு "கபீர் காடா பஜார் மெய்ன்" என்ற படம் உருவாகக்கப்ப்ட்டிருக்கிறது. பிராமணன் பெரியவனா, வேதம் பெரிதா, மனிதத்துவம் பெரிதா என்ற கேள்வியை, ராமன் அயோத்தி பிரச்சினையை முன் வைத்து யோசித்தவர் போல்"நன்றாய் இருப்பவை ஒன்றே" என்கிறார் கபீர். ஆனந்த் பட்வர்த்தனைப் போல் அயோத்திப் பிரச்சினையை அலசுவதற்கு இந்தப்படம் உதவியது என்றாலும் , ராமனை முன் வைத்து கபீரினுள் சென்று நோக்குவதற்குமான உபாயமாக இருக்கிறது . கபீரைப்பற்றிய பல தொன்மங்கள் உள்ளன.
1.கபீர் முஸ்லீம் நெசவாளி. ஆனால் பிரார்த்தனைகள், சடங்குகளில் நம்பிக்கையில்லாததால் முஸ்லீம்கள் அவரி நிராகரிக்ககிறார்கள். கபீர் என்ற சொல்லுக்கு "அல்லாஹ்" என்ற பொருளுமுண்டு.
2. கபீர் இந்து. மூஸ்லீமால் வளர்க்கப்பட்டவர்.
3. தாமரை மலரில் பிறந்தவர். சாதாரண மனிதரல்ல.அவதாரபுருசர்.
4. விஸ்ணுவின் அவதாரம்
5. ஒரு சூபி, நாட்டுப்புறக்கலைஞன்
இந்த வெவ்வேறு கோணங்கள் பற்றிய பார்வைகளை பலர் முன் வைத்திருக்கிறார்கள். அந்த அவதானிப்பபுகளில் அவரவர் பக்கமிருந்து சான்றுகளை அந்தந்த தரப்பினர் முன் வைக்கிறார்கள். மரத்தின் வேர்களை அறிய முடியாதது போல கபீரின் மூலத்தையும் அறிய முடியாமலிருக்கிறது. சாதாரண மனிதராக இருந்து அதி அற்புத பிறவியாக்கப்பட்டிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் சப்னம் வீரமணி கபீரின் கவிதைகளைப் பாடும் கவிஞர்களையும், பாடகர்களையும் தேடிச் சென்று பேட்டி கண்டிருக்கிறார். கபீரை ஆதர்ச மூச்சாகக் கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். இந்தத் தேடலை இந்தியாவில் மட்டுமல்ல பாக்கிஸ்தானுக்கும் சப்னம்வீரமணி நீட்டித்திருக்கிறார்.
நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கமும், பாடும் முறைகளும் கபீருக்குள் இருப்பதைக் கண்டறிந்து நாட்டுப்புறப்பாடகர்கள், அவரைக் கொண்டாடுகிறார்கள். சூபி கவிஞர்களும் , பாடகர்களும் நாங்கள் அவரை உள்வாங்கிக் கொண்டதைப் போல யாரும் உள்வாங்கி தெளிவு பெற்று விட முடியாது என்கிறார்கள். ஒரு கவிஞன் என்ற அளவில் சாதாரண மக்களின் மனதில் இவ்வளவு ஆழப்பதிந்திருப்பதைப் பார்க்கும் போது இந்த அளவு தென்னிந்தியாவில் யாராவது மக்களின் மனதில் ஆழத்திற்கு சென்றிருப்பார்களா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. கபீர் என்னும் கவிஞன் அதிர்ஷ்டசாலி என்று தோன்றுகிறது. ராமன் பற்றி கபீர் சொன்ன மாயாவாதங்களை இப்படத்தில் ராமனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசும் மக்கள் தங்களைத் திரும்பிப் பார்த்ததுக்கொள்ள இப்படம் ஏதுவாகலாம்.
குறிப்புகள்:
1. எனது ‘சாயத்திரை’ நாவலை ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி மொழிபெயர்த்திருக்கிறார். கன்னடத்தில் தமிழ் செல்வி ‘ பண்ணத்திரா’ என்ற தலைப்பிலும், மலையாளத்தில் ஸ்டேன்லி ‘ சாயம் புரண்ட திர’ என்ற தலைப்புகளிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீனாட்சி பூரி ‘ ரங்ரங்கிலி சாதர் மெஹெலி’ என்று தலைப்பிட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்டபோது கபீரை வடஇந்தியர்கள் நன்கறிவார்கள். சாதாரணமக்களுக்கும் பரிச்சயமானவர். அவர் ஒரு நெசவாளி. நெசவு, சாயத்தோடு சம்பந்தம் கொண்டது என்பதால் இத்தலைப்பினை கபீரின் கவிதைகளில் இருந்து எடுத்தேன் என்றார். சுற்றுச்சூழலை மையமாக வைத்துத் தலைப்பிட்டால் சட்டென்று விளங்காமல் போய்விடும்.
2. கபீரை நாடகமாக்குகிற ஒரு நாடகாசிரியர்.: கபீர் பற்றின மூலம் சர்ச்சசைக்குரியதே. கபீருக்கு எந்த வகையில் தாடி வைப்பது, எப்படி தொப்பி வைப்பது, எந்த வகை உடைகளை அணிவிப்பது என்பது ஒவ்வொருமுறையும் சர்ச்சசைக்குறியதாகிறது. நானும் என் மனநிலை தோன்றுவதற்கேற்ப தாடி வைக்கிறேன்,தொப்பி, உடைகளை வடிவமைக்கிறேன். சர்ச்சையும் தீராது. கபீர் இன்றைக்கும் சர்ச்சைக்குறிய கவி புருசர்தான்.
3. ‘சப்னம்’ வீரமணியின் இன்னொரு விவரணப்படம் ‘ கோல் சுந்தர் ஹை’ கபீரின் பாடல்களை மேடைகளில் பாடுபவரான குமாரகவுரவ்வை முன் வைத்து கபீரைப்பற்றின ஒரு மீள் பார்வையை இதில் வெளிப்படடுத்துகிறார். குமார் 1947ல் பிறந்தவர். மிகவும் இள வயதிலேயே பாடகராகப் பரிணமித்தவர். 23 வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். பாடுவதற்குத் தடையிருந்தது.1952ல் அதிலிருந்து மீண்டு, மீண்டும் கச்சேரிகள் செய்கிறார். கபீரை முமுமையாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியவர் என இதில் இடம்பெற்றிருக்கிற பல்வேறு பேட்டிகளில் சிலாகரிக்கப்படுகிறார். சுபாமுக்தல், ராம்பிராசாத், திபாங்கே போன்றோரின் விளக்கமானப் பேட்டிகளும் கபீர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களும், குமாரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இதில் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன. "ஒருவன் செத்தால் தூக்கம் சில நாளைக்குக் கூட வரும். ஞானவான் செத்தால் அவர் கூடவே இருப்பார். கபீர் ஞானவான்" என்கிறார் ஒரு நாட்டுப்புறப்பாடகர்.
subrabharathi@gmail.com
வியாழன், 12 நவம்பர், 2009
திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
==திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
=================================
* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்
* கட்டணம் ரூ 1,700/ மட்டும்
* சிறப்பு பயிற்சியாளர்கள்:
இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )
எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்
ஒளிப்பதிவாளர் தாமு, படத்தொகுப்பாளர் உதயசங்கர், இசையமைப்பாளர் சுரேஸ் தேவ்
பதிவுக்கு: VRP Academy of Arts, 1503, ஞானகிரி சாலை, காமராஜபுரம் காலனி, சிவகாசி 626 189 கைபேசி: 99524 24292, manohar_vrp@yahoo.com
===========================================================
திருப்பூர் அரிமா விருதுகள்
===========================
* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)
* அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்
நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )
* சென்றாண்டு பரிசு பெற்றோர்:
அரிமா குறும்பட விருது :
1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )
2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )
3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )
4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )
6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ
7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
8. விஜயகுமார், சேலம் ( குப்பை)
9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )
சிறப்புப் பரிசுகள்:
1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )
2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )
3. நம்பி, அவிநாசி ( Stop child trafficking )
* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை
* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை
அரிமா சக்தி விருது
===================
1. அரங்க மல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், கவிதைகள்)
2. ச.விஜயலட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், கவிதைகள்)
3. மு.ஜீவா, கோவை ( பின்நவீனத்துவமும், பெண்ணிய செயல்பாடுகளும்)
4.மித்ரா, சிதம்பரம் ( ஜப்பானிய தமிழ் ஹைக்கூக்கள்,கட்டுரைகள்)
5.சக்தி ஜோதி, திண்டுக்கல் ( நிலம்புகும் சொற்கள்,கவிதைகள்)
6.ரத்திகா, திருச்சி (தேய்பிறையின் முதல் நாளிலிருந்து கவிதைகள்)
7.சக்தி அருளானந்தம், சேலம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ,கவிதைகள்)
சிறப்புப் பரிசுகள்
==============
1.சந்திரவதனா, ஜெர்மனி ( மனஓசை, சிறுகதைகள்)
2.ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் ( மனப்பிரிகை, நாவல்)
3.நா.சண்முகவடிவு, கோவை(வான்வியல் சாஸ்திரம்)
4.மு.ச.பூங்குழலி, பழனி (எரிமலைப்பூக்கள், கட்டுரைகள்)
அனுப்ப வேண்டிய முகவரி:
========================
மத்திய அரிமா சங்கம், 39/1 ஸ்டேட் பேங்க் காலனி,
காந்திநகர், திருப்பூர் 641 603.
தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215
===============================================================
=================================
* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்
* கட்டணம் ரூ 1,700/ மட்டும்
* சிறப்பு பயிற்சியாளர்கள்:
இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )
எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்
ஒளிப்பதிவாளர் தாமு, படத்தொகுப்பாளர் உதயசங்கர், இசையமைப்பாளர் சுரேஸ் தேவ்
பதிவுக்கு: VRP Academy of Arts, 1503, ஞானகிரி சாலை, காமராஜபுரம் காலனி, சிவகாசி 626 189 கைபேசி: 99524 24292, manohar_vrp@yahoo.com
===========================================================
திருப்பூர் அரிமா விருதுகள்
===========================
* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)
* அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்
நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )
* சென்றாண்டு பரிசு பெற்றோர்:
அரிமா குறும்பட விருது :
1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )
2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )
3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )
4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )
6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ
7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
8. விஜயகுமார், சேலம் ( குப்பை)
9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )
சிறப்புப் பரிசுகள்:
1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )
2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )
3. நம்பி, அவிநாசி ( Stop child trafficking )
* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை
* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை
அரிமா சக்தி விருது
===================
1. அரங்க மல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், கவிதைகள்)
2. ச.விஜயலட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், கவிதைகள்)
3. மு.ஜீவா, கோவை ( பின்நவீனத்துவமும், பெண்ணிய செயல்பாடுகளும்)
4.மித்ரா, சிதம்பரம் ( ஜப்பானிய தமிழ் ஹைக்கூக்கள்,கட்டுரைகள்)
5.சக்தி ஜோதி, திண்டுக்கல் ( நிலம்புகும் சொற்கள்,கவிதைகள்)
6.ரத்திகா, திருச்சி (தேய்பிறையின் முதல் நாளிலிருந்து கவிதைகள்)
7.சக்தி அருளானந்தம், சேலம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ,கவிதைகள்)
சிறப்புப் பரிசுகள்
==============
1.சந்திரவதனா, ஜெர்மனி ( மனஓசை, சிறுகதைகள்)
2.ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் ( மனப்பிரிகை, நாவல்)
3.நா.சண்முகவடிவு, கோவை(வான்வியல் சாஸ்திரம்)
4.மு.ச.பூங்குழலி, பழனி (எரிமலைப்பூக்கள், கட்டுரைகள்)
அனுப்ப வேண்டிய முகவரி:
========================
மத்திய அரிமா சங்கம், 39/1 ஸ்டேட் பேங்க் காலனி,
காந்திநகர், திருப்பூர் 641 603.
தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215
===============================================================
திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்
திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்
==========================================
1. சிட்டுக்குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை: ( கோவை சதாசிவம் )
சிட்டுக்குருவிகளின் வகைகள், அறிவியல் பெயர், அவற்றின் சுபாவம் இவற்றோடு அவற்றின் இருப்பு குறைந்து வருவதைப் பற்றி சொல்லும் படம். அவற்றின் அழிவுக்குக் காரணமான விசயங்களையே ஆராய்கிறது. 16 நிமிட குறும்படத்தில் அவசரம் துரத்தும் தார் சாலைகளில் குருவிகளைப் பற்றின அக்கறையைச் சொல்லும் படம்
2. வறுமையின் கனவு : ( ஜோதிகுமார்)
ஜோதிகுமாரின் இரண்டாவது குறும்படம் இது. வட்டிக் கொடுமையைச் சித்திகரிக்கிறது. வட்டி வாங்குபனின் கழிவிரக்கம், வட்டி கொடுப்பவனின் அதிராம் இவற்றினூடே தென்படும் மனித முகங்களை ஒருங்கே இணைத்துள்ளார். சமூக அவலம் என்ற வகையில் அதை முன்னிருத்துவதில் நிறை பெறுகிறது.எஸ்.ஏ பாலகிருஸ்ணன், நாகராஜன் போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
3. தூரம் அதிகமில்லை ( ராகுல் நக்டா)
பள்ளிச் சிறுவன் மனதில் ஏற்படும் எண்ண மாறுபாட்டையும் அதை அவன் கல்வியினூடே களைந்து கொள்வதையும் குறிக்கிறது. மாணவர்களைப் பற்றிய ஒரு கல்லூரி மாணவனின் படம்.
4. தக்காளி : ( து சோ பிரபாகர் )
மடிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் அதன் வேராய் இருக்கும் தொழிலாளர்களையும் தட்டி எழுப்பும் சிறு முயற்சி என்கிறார் பிரபாகர். தக்காளி என்ற விளை பொருளை முன் வைத்து விவசாயிகளின் நிலையை எடுத்துக் கூறுகிறது. பின்னணி உரையாடல் மூலம் கதை போல் நகர்த்திச் செல்வது நல்ல முயற்சி .
5. சுமங்கலி : ( ரவிக்குமார்/சுப்ரபாரதிமணியன் )
நவீனக் கொத்தடிமைத்தனமாய் இன்றைக்கு பஞ்சாலை தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலை வாங்கும் திட்டமும், அது சார்ந்த விமர்சனமும் இந்தக் குறும்படத்தில் பதிவாகியிருக்கிறது.கவிஞர் சுபமுகியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது
==========================================
1. சிட்டுக்குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை: ( கோவை சதாசிவம் )
சிட்டுக்குருவிகளின் வகைகள், அறிவியல் பெயர், அவற்றின் சுபாவம் இவற்றோடு அவற்றின் இருப்பு குறைந்து வருவதைப் பற்றி சொல்லும் படம். அவற்றின் அழிவுக்குக் காரணமான விசயங்களையே ஆராய்கிறது. 16 நிமிட குறும்படத்தில் அவசரம் துரத்தும் தார் சாலைகளில் குருவிகளைப் பற்றின அக்கறையைச் சொல்லும் படம்
2. வறுமையின் கனவு : ( ஜோதிகுமார்)
ஜோதிகுமாரின் இரண்டாவது குறும்படம் இது. வட்டிக் கொடுமையைச் சித்திகரிக்கிறது. வட்டி வாங்குபனின் கழிவிரக்கம், வட்டி கொடுப்பவனின் அதிராம் இவற்றினூடே தென்படும் மனித முகங்களை ஒருங்கே இணைத்துள்ளார். சமூக அவலம் என்ற வகையில் அதை முன்னிருத்துவதில் நிறை பெறுகிறது.எஸ்.ஏ பாலகிருஸ்ணன், நாகராஜன் போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
3. தூரம் அதிகமில்லை ( ராகுல் நக்டா)
பள்ளிச் சிறுவன் மனதில் ஏற்படும் எண்ண மாறுபாட்டையும் அதை அவன் கல்வியினூடே களைந்து கொள்வதையும் குறிக்கிறது. மாணவர்களைப் பற்றிய ஒரு கல்லூரி மாணவனின் படம்.
4. தக்காளி : ( து சோ பிரபாகர் )
மடிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் அதன் வேராய் இருக்கும் தொழிலாளர்களையும் தட்டி எழுப்பும் சிறு முயற்சி என்கிறார் பிரபாகர். தக்காளி என்ற விளை பொருளை முன் வைத்து விவசாயிகளின் நிலையை எடுத்துக் கூறுகிறது. பின்னணி உரையாடல் மூலம் கதை போல் நகர்த்திச் செல்வது நல்ல முயற்சி .
5. சுமங்கலி : ( ரவிக்குமார்/சுப்ரபாரதிமணியன் )
நவீனக் கொத்தடிமைத்தனமாய் இன்றைக்கு பஞ்சாலை தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலை வாங்கும் திட்டமும், அது சார்ந்த விமர்சனமும் இந்தக் குறும்படத்தில் பதிவாகியிருக்கிறது.கவிஞர் சுபமுகியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது
சனி, 7 நவம்பர், 2009
சாயக்கழிவு
இந்த இடம்
தடை செய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்துவிடும் போங்களேன்
இந்த இடம்
நதியும், சாயக்கழிவும், ஒன்று சேரும்
இடம்
இதற்கப்புறம் நதி
சாயக்கழிவுகளின் சங்கமம்தான்
பிறர் வருகைக்கென்று
இந்த இடம் தடைசெய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்து விட்டுப் போங்களேன்
சுப்ரபாரதிமணியன்
தடை செய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்துவிடும் போங்களேன்
இந்த இடம்
நதியும், சாயக்கழிவும், ஒன்று சேரும்
இடம்
இதற்கப்புறம் நதி
சாயக்கழிவுகளின் சங்கமம்தான்
பிறர் வருகைக்கென்று
இந்த இடம் தடைசெய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்து விட்டுப் போங்களேன்
சுப்ரபாரதிமணியன்
சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.
உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ரஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரணமான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.
பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.
கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.
சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் எனவரவேற்ற ஆவணங்கள் இருந்தன.
மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .
துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.
இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இலக்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.
=சுப்ரபாரதிமணியன்
( thinnai.com)
ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.
உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ரஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரணமான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.
பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.
கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.
சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் எனவரவேற்ற ஆவணங்கள் இருந்தன.
மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .
துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.
இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இலக்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.
=சுப்ரபாரதிமணியன்
( thinnai.com)
திங்கள், 2 நவம்பர், 2009
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
====================================================
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனின் தேர்ந்தேடுக்கப்பட்டக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஆங்கில நூலாக ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவந்துள்ளது. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார். " ஓடும் நதி " கவிதைத் தொகுதிக்காகவும் ( 20030), அக்னிசாட்சி மலையாள நாவல் மொழிபெயர்ப்புப் பணிக்காகவும். சாகித்திய அகாதமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளார். டாக்டர் கே எஸ் சுப்ரமணியன் மொழிபெயர்த்திருக்கிறார்.அக்கவிதைகள் 1968லிருந்து 2005 வரை சிற்பியால் எழுதப்பட்டவற்றில் சில ஆகும். ( ரூ 100, 136 பக்கங்கள்: வெளியீடு: கோலம், 106( 50 ), அழகப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி 641 001.) டாக்டர் கேஎஸ் எஸ் இதுவரை 6 நாவல்கள், 4 குறுநாவல் தொகுப்புகள், மூன்று தமிழ் கவிதைத் தொகுப்புகள் ஆகியவற்றை மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார். அவரின் நானு கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
டாக்டர் கே எஸ் சுப்ரமணியன் சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி கூறுகிறார்: Sirpi a major poet in the modern era of Tamil Literature. His reputation as a poet is not merely based on the many awards which have come his way e.g. the Sahitya Akademi Award. The quality and range of his poetic creativity , his significant contribution to the genere of Tamil New Poetry spanning about four decades; his immersion in modern Tamil literature , which being deeeply rooted in the rich and ancient Tamil poetic tradition; and a rare capacity to combine in himself depth of scholarship with creative sensitivity-these attributes account for his position in the modern Tamil literary field. I consider it a pleasant privilege to produce a book of translation of selected poems of this respected poet, and a dear friend.
Sirpi scales the peaks of his creative outpouring in his award winning collection " Oru Gramaththu Nadhi " . "The river of a village " revisiting his
formative years in is native village. This is a delectable string of charming vignettes of lyrical nostaligia. The poet is also facinated and overwhemlmed by the 'vishwaroopa' of the universe , and the awesome power and fury of nature' and can conjure up a stunning vision of the sun being trashed into the bowels of distant space, plunging the earth into an open ended epoch of unrelieved Darkness. These pen pictures are riveting and find a prominent place in this volume.
ஒரு கவிதை மொழிபெயர்ப்பில்:
THE BODY THE MIND
===================
He
Slowly sinking
into quicksand.
Frightened eyes
Saw Knees disappearing
Struggling hands
Buried
Sand covered the chest.
Sand
Creeping up the neck
Lo, In his eyes
Rapture bloomed.
At some distance
A young shepherdes
Sans blouse.
( Udalum Ullamum : 2005)
====================================================
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனின் தேர்ந்தேடுக்கப்பட்டக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஆங்கில நூலாக ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவந்துள்ளது. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார். " ஓடும் நதி " கவிதைத் தொகுதிக்காகவும் ( 20030), அக்னிசாட்சி மலையாள நாவல் மொழிபெயர்ப்புப் பணிக்காகவும். சாகித்திய அகாதமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளார். டாக்டர் கே எஸ் சுப்ரமணியன் மொழிபெயர்த்திருக்கிறார்.அக்கவிதைகள் 1968லிருந்து 2005 வரை சிற்பியால் எழுதப்பட்டவற்றில் சில ஆகும். ( ரூ 100, 136 பக்கங்கள்: வெளியீடு: கோலம், 106( 50 ), அழகப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி 641 001.) டாக்டர் கேஎஸ் எஸ் இதுவரை 6 நாவல்கள், 4 குறுநாவல் தொகுப்புகள், மூன்று தமிழ் கவிதைத் தொகுப்புகள் ஆகியவற்றை மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார். அவரின் நானு கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
டாக்டர் கே எஸ் சுப்ரமணியன் சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி கூறுகிறார்: Sirpi a major poet in the modern era of Tamil Literature. His reputation as a poet is not merely based on the many awards which have come his way e.g. the Sahitya Akademi Award. The quality and range of his poetic creativity , his significant contribution to the genere of Tamil New Poetry spanning about four decades; his immersion in modern Tamil literature , which being deeeply rooted in the rich and ancient Tamil poetic tradition; and a rare capacity to combine in himself depth of scholarship with creative sensitivity-these attributes account for his position in the modern Tamil literary field. I consider it a pleasant privilege to produce a book of translation of selected poems of this respected poet, and a dear friend.
Sirpi scales the peaks of his creative outpouring in his award winning collection " Oru Gramaththu Nadhi " . "The river of a village " revisiting his
formative years in is native village. This is a delectable string of charming vignettes of lyrical nostaligia. The poet is also facinated and overwhemlmed by the 'vishwaroopa' of the universe , and the awesome power and fury of nature' and can conjure up a stunning vision of the sun being trashed into the bowels of distant space, plunging the earth into an open ended epoch of unrelieved Darkness. These pen pictures are riveting and find a prominent place in this volume.
ஒரு கவிதை மொழிபெயர்ப்பில்:
THE BODY THE MIND
===================
He
Slowly sinking
into quicksand.
Frightened eyes
Saw Knees disappearing
Struggling hands
Buried
Sand covered the chest.
Sand
Creeping up the neck
Lo, In his eyes
Rapture bloomed.
At some distance
A young shepherdes
Sans blouse.
( Udalum Ullamum : 2005)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)