சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
சிறுகதை
பாட்டில்கள்: சுப்ரபாரதிமணியன்
அசோக மரங்களின் குவியல் அடர்த்தியான நிழலைக்கொண்டு வந்திருந்தது. மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகள் திரைப்பட விழாவுக்கானது என்றில்லாமல் அயனக்ஸ் திரையரங்குகளின் நிரந்தரத்தன்மையால் உருவாக்கப்பட்டவை. மண்தரையின் ஈரம் இன்னும் குளுர்ச்சியைக் கொண்டு வர முயற்சித்தது
கோவா திரைப்பட விழா ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டன.கோவாவின் முத்திரை எங்குமாக இருந்தது.பேசுபவர்களின் வாயிலிருந்து வரும் மது வாசனை முக்கியமானது . மது குறைந்த விலையில் எங்கும் கிடைப்பதே இங்கிருந்து போனவர்களை தாரளமாகப் புளங்கச் செய்தது.
தாடிக்கார்ர் ஒருவர் சுற்றிலும் போடப்பட்டிருந்த ஸ்டால்களில் விநியோகிக்கப்பட்ட அட்டைகளை சீட்டுக்கட்டை ஒன்றின் மேல் ஒன்று மடக்கி அடுக்குவது போல் அடுக்கிக் கொண்டிருந்தார். அதில் உணவு விபரங்கள், மத்திய அரசின் என் எப் டி சி ஸ்டாலில் கிடைக்கும் இந்திய இயக்குனர்களின் படங்களின் பட்டியல், பழமையான திரைப்படக்கலைபொருட்கள், திரைப்படம் சம்பந்தமான வெவ்வேறுப் போட்டிகளை அறிவிப்பவை என்றிருந்தன, படங்கள் பற்றியக் குறிப்புகளை அடுக்கி வைத்திருந்தார்.அந்த அடுக்கின் மேல் பகுதியில் சோவியத் ரஷ்யப்படங்களின் விபரங்கள் அழுத்தமான வர்ணஙகளில்
பளீச்சிட்டன. சட்டென மேலிருந்த சோவியத் அரங்கின் அட்டைகள்கவிழ்ந்து விழுந்து தூரமாய் தெரித்துப் போனது. அது ஒரு பெண் இயக்குனரின் காலடிக்குச் சென்று உட்கார்ந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்து வியந்து கொள்வதைப் போல் பார்த்துக் கொண்டார். . தார்க்கோவிஸ்கியின் மிரர் படத்தின் காட்சியை அந்தப்படம் காட்டியது
காட்டிக் கொண்டிருந்த்து. ட்ரினிடி மடாலயத்திலிருந்து துறவிகள் ஆந்த்ரேய் ருப்ளேவ், தானியல், மூவர் புனித உருவங்களை வரைவதற்காக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். .மழைக்காக ஒதுங்குமிடத்தில் ஆடியும் பாடியும் அங்கிருப்போரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் காவலர் பிடித்துச் செல்லும் காட்சி அதிலிருந்தது. அக்காட்சியை அப்பெண் இயக்குனர் பார்த்துக் கொண்டிருந்தார்.
”இன்னையிலிருந்து நாலு நாளைக்கு பிலிம் பஜார்க்கு போயிருவேன். என் படம் அதிலெ இருக்கு ...மார்கெட்டிங்க் பண்ணனும். வாய்ப்பு இருக்குமான்னு பாக்கணும். என்னோட படம் ஒரு நாள் ஸ்கிரினிங். இருக்கு”
”பாஸ்.. நாங்க பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்குமா
”விஸ்வம் நீங்க விரும்பிக்கேட்டதாலே முயற்சி பண்றேன். பிலிம் பஜார் ரெசிடென்சி ஸ்டார் ஓட்டலே நடக்குது. ஆன் லைனே பதிவு பண்ணுனதுனாலே பதினாலாயிரம் ரூபாய் கட்டணம். நேரடியாப் பண்ணுனா பதினெட்டாயிரம் ரூபாய். இந்த நிலமையிலெ மத்தவங்க நுழைய முடியுமான்னு தெரியலே. வாய்ப்பு இருந்தா சொல்றன்”
சூசன் ” அன்பே எல்லை “ என்ற முழுநீளத்திரைப்படம் எடுத்திருந்தார். .கோவையைச் சார்ந்த முஸ்லீம் சகோதரர்கள் இருவர் இருபது லட்சம் ரூபாய் போட்டுத் தயாரித்திருந்தார்கள்
“சென்சாருக்கு அனுப்பிச்சிங்களா சூசன்”
”இல்லே தம்பி குரு . அதுலே மதவாதக்கட்சிகள் பத்தி நேரடியான விமர்சனங்கள் இருக்கு. சென்சாருக்குப் போயி தப்பி வருமான்னு தெரியலே. ஜிப்சி படம் போயி படற பாடு தெரியும். எவ்வளவு வெட்டுக ..அது கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட் இது வெறுமனே இருபது லட்சம். பட்ஜெட். பல திரைப்பட விழாக்கள்லே , பல பிரிவுகளே பரிசு வாங்கறதுனாலே என் படத்து மேலே ஒரு அபிப்ராயம் உருவாயிட்டிருக்கு. அடுத்த கட்டம் சென்சாருக்கும் முயற்சி பண்ணனும்”
”உங்க படத்தெ யார் பாக்க வருவாங்க”
”கிருஷ்ணபிரபு …..பாரின் டெலிகேட்ஸ்.. படத்தெ டிஸ்ரிபுட்பண்ண விருப்பம் உள்ளவங்க வருவாங்க . .உங்களெ மாதிரி எழுத்தாளர்கள் பாத்துட்டு எழுதணும்”
”பாக்க வாய்ப்பு குடுங்க சூசன்”
கிருஷ்ணபிரபு கையில் வைத்திருக்கும் அவர் நடத்து சிறு பத்திரிக்கை தேடல் பிரதிகளை பார்க்கும் தமிழ்க்காரர்களுக்குத் தருவார். அவரின் கவிதைகள், மற்றும் சிறுகதைகளை ஆங்கிலத்தில் சிறு பிரசுரங்களாக அச்சடித்து இருப்பதை பிறருக்கு விரும்பித்தருவார்
”கிருஷ்ணபிரபு நீங்க மத்தவங்களுக்கு உங்க புத்தகங்களெ விரும்பிக் குடுக்கறீங்க. பலர் விருப்பமில்லாமெ வாங்குவாங்க. வெளிநாட்டுக்காரங்க்கிட்ட தர்றப்போ
அவங்க சந்தோசப்பட்டு பாராட்டுறதெச் சொல்லியிருக்கீங்க . அது மாதிரிதா வெளிநாட்டு டெலிகேட்ஸ் மரியாதை தருவாங்க. பாராட்டெ சந்தோசமாக் காம்பிப்பாங்க. நம்ம தமிழ் ஆளுக போலித்தனமா இருப்பாங்க. வெளிப்படையாப் பாராட்ட மாட்டங்க. படம் பாத்து கை குலுக்கி தலை அசச்சா படம் மொக்கைன்னு தெரிஞ்சுக்கணும். கட்டித்தழுவி இவ்வாண்டின் ப்ளாக்பஸ்டர்ன்னு சொன்னா நல்ல படம் .. புருவத்தெ உயர்த்துட்டுப் போனா உருப்படாதுன்னு அர்த்தம்.. சிலபேர் நக்கலா எங்கியோ இருக்கீங்கன்னு தப்புச்சுட்டுப் போயிருவீங்க”
”என்ன மாதிரி சாமியார்களுக்கு இலவசமா உங்க பில்ம் பஜார் ல உட மாட்டாங்களா”
”லோகு நீங்க சாமியாரா... கதர் உடுத்தறீங்க. முடி வெட்டறதில்லெ. இங்க வந்த பின்னாலே இயற்கை உணவே வுட்டிட்டீங்க. இப்போ ஜீன்ஸ் பேண்டுக்கு மாறிட்டிங்க
”அது சூசன். கோவா வெயில் கொடுமை தெரியும். பொண்டாட்டிமாருக இம்சை மாதிரி . வெயில்லே உடம்புலே சட்டை ஒட்டிப்போயிருது. அதுதா வேற வழியில்லாமெ இந்த யூனிபாமுக்கு மாறிட்டேன்”
”எதுக்கு அவ்வளவு ..ரூபா என்ரி பீஸ்..”
“பதினெட்டாயிரம்.. எபினேசர்.. நீங்க நல்ல சாப்பாடா தேடிச்சாப்புடுவீங்க. அந்த மாதிரி சாப்பாடு. மதியம் தண்ணி சப்ளை ஆரம்பச்சா ராத்திரி பத்து மணி வரைக்கு ம் இருக்கும் எவ்வளவு வேண்ணா குடிக்கலாம். காலையிலேயே பீர் சர்வ சாதாரணம் “
”நல்ல அனுபவமா இருக்கும் சூசன்”
ஆமா பிரான்சிஸ். நீங்க சினிமா பத்தி பல வருசமா எழுதறீங்க. கேமரா வெச்சிருக்கீங்க .,”நீங்க நிறைய பேசறீங்க . இது வரைக்கும் ஒரு குறும்படம் எடுத்ததில்லெ. எடுங்க. . ..நான் இந்த படம் எடுக்கறதுக்கு முந்தி ஒரு குறும்படம் முப்பது நிமிசத்திலெ நாயா அலஞ்சுதா எடுத்தேன். பிச்சையாப் பணம் வாங்கித்தான் எடுத்தேன்.அது இந்த படத்துக்கு விசிட்டிங்க் காட்டா இருந்துச்சு. உங்களெ மாதிரி எழுத்தாளர்கள் குறும்படங்களாச்சும் எடுக்கணும்”
”எங்களுக்கான ரசிகர்கள் தமிழ்லே இருக்காங்களா...ச்ச்… எங்களுக்கான வாசகர்களே இல்லெ ”
பிரான்சிஸ் இப்படிச் சொல்லியே தமிழ் வாசகர்களே , ”ரசிகர்களை முட்டாள் பண்ற வேலையெ செய்யாம வெளியில வாங்க”
” செரி... உங்க படம் பாக்க வாய்ப்பு இருந்தா சொல்லுங்கள். கதை என்ன”
”நடிகை கிட்ட வயசு என்னனு கேட்கறமாதிரி கதை சொல்லச் சொல்றது. நாம நண்பர்கள். ஒரே இடத்திலெ இருந்து வந்திருக்கம் . நமக்குள்ளே என்ன ரகசியம் வேண்டியிருக்கு
இரண்டு முஸ்லீம் தம்பதிகள். ஒரு தம்பதி வயசானவங்க. சமூகத்தாலே உறவினர்களாலே கை விடப்பட்டவங்க. இன்னொரு தம்பதி கலப்பு மணம் பண்ணீட்டவங்க. முஸ்லீம் பையன் . இந்து பொண்ணு. அவங்க பிரச்சினைகளைப் பத்தி.. ரெண்டும் ரெண்டு எழுத்தாளர்களோட சிறு கதைகள்.. இணச்சிருக்கேன்”
”நல்ல முயற்சி .பெஸ்ட் ஆப் லக். ..பிலிம் பஜார்லே நல்ல மார்கெட் ஆகணும் ”
”பெஸ்ட் ஆப் லக்”.
”எல்லோரும் கோரசாகச் சப்தமிட்டார்கள்”
”பெஸ்ட் ஆப் லக்” .... பைரவனின் குரல் தனியாக ஒலித்தது.
”பைரவனின் குரல் தனியாத் தெரியுது. அவர் மாதிரி வசதியானவங்கதா ஏதோ ஒரு முறையிலெ இந்தப்படத்துக்கு ஆதரவு தரணும். தாங்க்ஸ் பார் எவிரிபடி. தாங்கஸ். பிலிம் பஜார் அனுபவங்களுக்குப் பிறகு சந்திப்போம் அதுவரைக்கும் உங்ககூட நான் படம் பாக்க வாய்ப்பில்லை ”
” அ.. ..மிஸ் யூ சூசன் வெரி மச்”
”தேங்யு”
விஸ்வம் தினந்தோறும் பதிவு செய்யப்பட வேண்டியப் படங்களின் பட்டியலை சூசனிடம் கேட்பார். அவர் முன்பே ஹோம்வர்க செய்து அதிக ரேட்டிங் உள்ள படங்கள், அதிகமான உலகாளவிலானப் பரிசுகள் பெற்றப் படங்கள் என்பவற்றைத் தேர்வு செய்து வைத்திருப்பார். அவற்றைச் சொல்வார். . .சென்றாண்டு இணைய தளப் பதிவு ஆரம்பித்தபோது அவரே சேர்த்து படங்களைபதிவு செய்து விட்டுச் சொன்னார். இந்தாண்டு வேறு அறைக்குச் சென்று விட்டார். அதுவும் பிலிம் பஜார் வேலை என்று நான்கு நாட்கள் செல்கிறார். .இனி அவரிடம் பார்க்க வேண்டியப் படங்களின் பட்டியலைக் கேட்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. ஏதாவது மனதில் வரும்
படங்களைப் பார்க்க ஆரம்பித்தால் பொழுது வீணாகி விடும். எபினேசர் சிலவற்றைத் தேர்வு செய்து சொல்பவராக இருந்தார், தேர்வு செய்து தந்தார்.
”அடுத்த வருசம் நான் வருவனான்னு தெரியலே விஸ்வம்”
”அப்படியேல்லா சொல்லாதீங்க எபினேசர் சார். நிச்சயமா வருவீங்க .. நானும் வருவேன்”
”வயசெப்பத்தியில்லே. நிறைய நல்ல படங்கள் மார்கெட்லே கெடைக்குது. சீக்கிரம் ஸ்மார்ட் டிவி வாங்கி நெட் கனெக்சனோட பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ்லே படம் பாக்கலாமுன்னு இருக்கேன். இவ்வளவு தூரம் வர்றது, தங்கறது, வயசு காரணமான சிரமங்களைத் தவிர்க்கலாமுன்னு.”
”கல்யாணமின்னு ஒன்னு இருந்தா ரெண்டு மூணு நாள் எல்லாத்தையும் அனுபவிக்கலாம் சொந்தக்காரங்களோட. ரிசப்சன்னு வந்தப்புறம் ரெண்டு மணி நேர அவசரத்திலெ எல்லாரையும் பாத்துப் போயிர்ரம். அதுமாதிரி.
பிலிம் பெஸ்டிவல் மூணு நாள் கல்யாண விசேம்ன்னு சொல்றீங்களா”
”இல்லே. பத்துநாள் கல்யாண விசேசம். கண்ணெத் தொறந்துட்டு கொஞ்சம் கோவாவெச்சுத்துனா தெரியும் “
அவ்வளவு வேண்டாம் . மாண்டோவி நதிக்கரை, இந்த காம்ளக்ஸ், கலா அக்காடமி, ”மிரமர் பீச்சுன்னு போனிங்கன்னாலே இந்தக் கொண்டாட்டம் புரிஞ்சிரும்”
”கல்யாணக் கொண்டாட்டமா இதை ஆக்கிடலாம். இப்போ வரிசை நகர ஆரம்பிக்குது . வாங்க போலாம். பிலிம் பஜாருக்குப் பிறகு உங்களெப் பாக்கறன் .. பை..பை”.
சூசன் தன் ஜோல்னாப் பை அசைந்தாட விரைந்தார்.. அவரின் பையினுள் இருந்தத் தண்ணீர் பாட்டில் அசைந்து தொட்டிலில் உறங்கும் குழந்தையைப் போல் மிதந்து சென்றது.
”தண்ணி பாட்டிலெ வெளியே எடுத்துட்டுப் போட்டுப் போ சூசன். உள்ளே உடமாட்டாங்க”.
”செரி. ஆ.னா வயித்துக்குள்ள தண்ணி இருந்தா என்ன பண்னுவாங்க . நான் சொல்றது அந்தத் தண்ணீயெ.. மதுவெ.. முந்தியெல்லா இங்க தியேட்டர்லே உள்ளே கமகமன்னு வாசனை இருக்கும். இப்போ அந்த வாசனை கொறஞ்சிருக்கு ..ஹ.ஹ.ஹா..”
0
நுழைவு வாயிலில் பரிசோதனை கடுமையாகத்தான் இருக்கும்.தண்ணீர் பாட்டில் அனுமதியில்லை. கத்தி, கபடா, கீ செயின், அனுமதியில்லை. அறை சாவியை அடையாளம் கண்டு இயந்திரம் கத்தும். அறை சாவிதான் என்று கெஞ்ச வேண்டும். தங்கியிருக்கும் விடுதியின் வரவேற்பறையில் தந்து விட்டு வர பல சமயங்களில் தயக்கம் இருந்தது.
திரையரங்கின் உள் நுழைவு வாயிலை நெருங்கினான் சூசன். நம்மூர் என்றால் ” மது அருந்து விட்டு திரையரங்கிற்கு வராதீர்கள். வெளியேற்றப்ப்படுவீர்கள் “ என்ற அறிவிப்பு இருக்கும் அதிரடியாக.
இங்கு அந்த அறிவிப்பு இல்லை
பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதி இல்லை என்ற அறிவிப்பைப் பார்த்தபடி கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என்று குடித்தான்..இன்னும் அரை பாட்டில் தண்ணீர் பாட்டிலில் மிச்சமிருந்தது.. பாட்டிலை அங்கிருந்த பெட்டிக்குள் பாதியளவு தண்ணீருடன் போட்டான்.
வயிற்றிலிருந்த மது தண்ணீரை உள்வாங்கி வயிற்றை மத்தளமாக்கியிருந்தது அவனுக்கு.
0