சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 1 ஜனவரி, 2026

சுற்றுச்சூழல் திரைப்பட விழா இன்று 28/12/25 டாப்லைட் நூலகம் , பல்லடம் சாலையில் நடந்த சுற்றுச்சூழல் திரைப்பட விழாவில் ஆவணப்படங்கள் குறும்படங்கள் என்று நிறைய திரையிடப்பட்டன குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள் களிறுஎன்ற ஒரு ஆவணப்படம் திருப்பூர் சந்தோஷ் இணைந்து ஈடுபட்டிருந்த படம் இந்த படம் இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். இன்றுதான் இந்த திரைப்பட விழாவில் பார்த்தேன் யானைகளுடைய வருகை யானைகள் உடைய இருப்பிடம், வாழ்விடம் மாறுதடங்கள் பற்றி விரிவாக பேசிய படம். இன்று டாப் லைட் நூலகத்தில் சிறார் செயல்பாடுகளில் ஓவியங்கள் சார்ந்த பயிற்சிகளை சின்ன ராஜீ நடத்தினார்கள் இன்று பொங்கல் அட்டை தயாரிக்கும் பணியும் சிதறல் ஓவியங்களும் முக்கியமான பங்கை வைத்தன சிறுவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினர் இன்று டாப் லைட் நூலகத்தில்அந. செந்தில் குமார் அவர்கள் எழுதிய ” வள்ளுவர் கரம் பிடித்து என்ற திருக்குறள் சார்ந்த நூல் வெளியீடு நடைபெற்றது . முத்துபாரதி வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார். மாலை நிகழ்ச்சியில் பலர் பல முக்கிய நூல்கள் பற்றி அறிமுகங்களை நிகழ்த்தினார்கள் குழந்தைகள் கதை சொல்லுதல்முதல் பெரியோர்களின் ரசிப்பு வரை பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன நான் சுற்றுச்சூழல் நாவல்கள் என்பதைப்பற்றி பேசினேன். காலையில் நடந்த சுற்றுச்சூழல் திரைப்பட விழாவின் தொடர்ச்சியாக என்னுடைய நூல்களைப் பற்றி பேசினேன். சாயத்திரை புத்துமண் முதற்கொண்டு சமீபத்திய வெப்பம் நாவல் வரைக்கும் சுற்றுச்சூழல் அம்சங்களை இடம்பெற்றிருப்பதைப் பற்றி பேசினேன் விழாவை நூலகர் இந்துமதி, சிரிதர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். திருக்குறள்.ல் கணேசன் உட்பட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர் கனவு., மறுபக்கம், ஆகிய அமைப்புகள் டாப் லைட் நூலகத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்தின சுப்ரபாரதிமணியன்