சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 1 மார்ச், 2011

அண்டை வீடு; பயண அனுபவம்

வங்கதேச அரசாங்கமே ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் என்று ’சேவ்’ அலோசியஸ் குறிப்பிட்டார். பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டாலும் வரி வசூலில் இருக்கும் சிரமங்களால் சரியாகப் பொதுவரி மூலமான வருமானம் கிடைப்பதில்லை. அரசுக்கும் சரியாக நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வங்கதேச அரசாங்கம் வெளிநாட்டு நிதி உதவியைப் பெரும்பாலும் எதிர்பார்த்து, வாங்கி அரசாங்கம் நடக்கிறது என்றார்.
40,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வங்கதேசத்தில் இயங்குகின்றன. வறுமையும், ஏழ்மையும் மிகுந்த நாடு என்பதால் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உலகநாடுகள் நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும், வங்கதேசத்திற்கு வருகிற நிதி ஆதாரங்களைப் போல இல்லை. ரஷ்யாவில் 3 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமீபமாய் இயங்குவதாய் சொல்லப்படுவதுண்டு.

குழந்தைத் தொழில் உழைப்பு, சுகாதாரத் திட்டங்கள், மரம் வளர்த்தல், பெண்களின் திருமணப் பாதுகாப்பு, மதுப்பழக்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், வரதட்சனைக் கொடுமைகள், தொழிலாளர் நலன்கள், முதியோர் பணிகள், பெண்களை ஒருங்கிணைக்கும் சுயநிதிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்காக நிதி ஆதாரங்களை வெளிநாடுகள் வழங்குகின்றன. இந்நாட்டின் மனிதர்களை "ஹ்யுமன் போன்சாய்" என்ற அடைமொழிகளுடன் அழைக்கிறார்கள்.

இஸ்லாம் அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக முன்னர் இருந்தனர். பெண்களுக்கான கல்வி, பெண்களின் முன்னேற்றம்,பெண்களை ஒருங்கிணைத்துக் கல்வி, பெண்களின் முன்னேற்றம், பெண்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்திற்கு முன் வைத்தல் போன்றவை இஸ்லாமிய விதிமுறைகளுக்கு முரணானவை என்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவ ஆதரவும் அவர்களை எரிச்சலூட்டியிருக்கிறது.

தற்சமயம் தன்னார்வக் குழுக்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கான ஆதரவாகவும், நிதி பெறுவதிலும், நிதி திரட்டுவதிலும் முன் நிற்கின்றன. இது அபாயகரமான போக்காகவும் கணிக்கப்படுகிறது. ரம்லான் போன்ற முஸ்லிம் பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்களை ஒருங்கிணைத்தல், பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கும் தன்னார்வக் குழுக்களின் நிதி உதவி பயன்படுகிறது.

இந்தியாவில் தன்னார்வக் குழுக்களின் நிதி ஆதாரங்கள் கல்விப் பணிக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்போது, வங்கதேச தன்னார்வக் குழு நிதி ஆதாரம் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. ஏழைகள் மலிந்த, ஜனப்பெருக்கம் அதிகம் கொண்ட நாட்டில் இயற்கை சீற்றம் மக்களை வெகுவாக அலைக்கழிக்கிறது. கடல்சார்ந்த நில அமைப்பும், வெள்ளப் பாதிப்பு விரைவில் ஏற்படும் வகையில் அது இருப்பதும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் வெள்ளத்தில் சுலபமாக முழ்கி விடுகிறது.

1998ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அரசு தத்தளித்தபோது தன்னார்வக் குழுக்கள் அந்த நிலையை சரியாகப் பயன்படுத்திப் பணிபுரிந்தன. 10 லட்சம் பேர் அப்போது வீடிழந்தனர். 3லட்சம் பேர் இடம்பெயர வேண்டியதானது. 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரெட் கிராஸ், கிறிஸ்டியன் எய்ட், வாங்குவிஷன் போன்ற உலக தன்னார்வ அமைப்பினர் அந்த சமயத்தில் பெரும் உதவி புரிந்தனர். தெற்கு ஆசியாவில் ஒரு டாலரை ஒரு தின வருமானமாகப் பெறுபவர் குறைவு. அதிலும் வங்கதேசத்தில் அரை டாலரை ஒரு நாள் வருமானமாகப் பெறுவோர் பாதி மக்கள் தொகை உள்ளனர்.இவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அரசும் நிர்க்கதியாகி விடுகிறது. வெள்ள அபாயக் காலங்களில் தன்னார்வக் குழுக்களின் பணி மெச்சத்தக்கதாக இருக்கிறது.
டாக்கா நகரின் வீதிகளில் தென்படும் BRAC பார்க் தன்னார்வக் குழுக்களின் அடுக்குமாடிக் கட்டிடங்களும் வணிக நிறுவனங்களும், அவர்கள் நடத்தும் வங்கிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன. ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் டாக்காவின் BRAC தன்னார்வக் குழு அமைப்பில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண்கள். 80% நிதி பெண்களின் சுயநிதிக் கொள்கைக்காகப் பயன்படுகிறது. பால், கோழி, துணி வகை தொழில்களுக்கு முதலீடாகியுள்ளது. 40,000 ஆரம்பப் பள்ளிகளை இவர்கள் நடத்துகிறார்கள்.

70,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகித்து சுகாதாரப் பணி செய்கிறார்கள். 5 வருடங்களுக்கு இலவசக் கல்வி தரும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள், 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற நூலகங்களும், பள்ளி நூலகங்களும் இவர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வங்கதேச விடுதலைக்குப்பின் 1972ல் பாஸிப் ஹுசேன் ஆபிட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், உகாண்டா போன்ற நாடுகளில் பெருமளவில் கிளைகளை வைத்து இயங்குகிறது.

வங்கதேசத்தின் வெற்றியடைந்த இன்னொரு தன்னார்வக்குழு " கிராமின் " என்பதாகும். முகமது யூனஸ் என்ற இந்த அமைப்பை நிறுவியவர் 2006ம் ஆண்டிற்கான் நோபல் பரிசு பெற்றபோது சிறு உதவிகளும், நுண்ணிய பொருளாதார உதவிகளும் செய்து சாதாரண மனிதர்களை மேம்படுத்துவதை உலகம் அறிய முடிந்தது. கிராமின் அமைப்பில் 80 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டிக் கடைக்காரர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்த சிறு கடன் உதவித் திட்டத்தை மாற்றுக் கோணத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் யூனஸ். கிராமப்புற மக்களும் , பிச்சைக்காரர்களும் கூட இதில் பயன்பெறுமாறு திட்டங்களை வகுத்து வெற்றிகண்டிருக்கிறார்.

மனித உரிமை விஷயங்களில் கிராமின் அக்கறை கொண்டது என்பதால் துணி உற்பத்தியில் அது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மலின உழைப்பு, சாயக் கழிவுக் கேடு உட்பட குறைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு புதிய திசையை வங்கதேசத்தில் காட்டியிருக்கிறது. 2009 நவம்பரில் ஜெர்மனின் நிறுவனத்தோடு இணைந்து இந்த மாற்றுத்திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

ஓட்டோ ஜரோப்பிய, வட அமெரிக்கா, ஆசியா நாடுகளில் 123 சில்லறை விற்பனை மற்றும் பொருளாதார சேவை நிலையங்களை நடத்தி வருகிறது. கிராமின் அமைப்புகளுடன் இணைந்து ஓட்டோ அமைப்பு ஜவுளித்துறையும், சமூக நடவடிக்கை நலன்களுமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. முன்னோடி தொழிற்சாலையாக டாக்காவில் அது அமைய, நிறுவனப் பணியில் இயங்குகிறது. கிராமின் ஓட்டோ அறக்கட்டளைகளுக்கு இதன் லாபம் செல்லும்.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு லாபம் செல்லாது. லாபம் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்தப் பயன்படும். லாபம் மீண்டும் தொழிற்சாலை உருவாக்கத்திற்கும், சுகாதார மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். முறையான எரிபொருள் சக்தி, சுத்தமான குடிநீரை ஏழைகளுக்கு வழங்க வகை செய்யும்.

முகமது யூனஸ் ஏழை மக்கள் தர்மத்தை எதிர்பார்ப்பதில்லை. ஏழ்மைக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இவ்வகையான தொழில் திட்டங்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்கிறார். கிராமின் ஓட்டோ ஜவுளித்துறை அனுபவங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயர்ந்த தொழிலாளர் நலன்களுடன் உற்பத்தி செய்கிறது. ஆரம்பத்தில் 1000 பேர் கொண்ட தொழிற்சாலையை டாக்காவில் ஆரம்பித்திருக்கிறது.

சரியான பொருளாதார தீர்வுக்கான சமூக நலன்களுடன் அது வங்கதேசத்தில் உற்பத்தியை துவக்கிச் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க இது போல் மாதிரி தொழிற்சாலைகளை நடத்த எண்ணி வருகிறது.

மாசுபட்ட தொழிற்சாலை கருத்தமைவுக்கு எதிரான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை இது தொடங்கியிருப்பது, பின்னலாடைத் துறையில் மோசமான முன்னுதாரணமாக விளங்கும் பல தொழிற்சாலைகளுக்கு முன் மாதிரியாக விளங்க ஆரம்பித்திருக்கிறது.

subrabharathi@gmail.com

புதன், 23 பிப்ரவரி, 2011

அண்டை வீடு:பயண அனுபவம் : லஞ்ச மயம்

டாக்காவில் போலீஸுக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலி சித்தரிப்புதான்.நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படிக் கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு வங்க தேசம் . டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா திரும்பி வரும்போது தொழிற்சங்கத் தலைவர் காளியப்பன் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டார்கள்.1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்து விட்டனர். டாக்காவை இந்தியப் பணமாக மாற்ற 50% கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள். " கல்கத்தா ஏர்போர்ட்ல போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதான் போடணும். எங்கிட்ட குடுத்தா 50 ரூபாயாச்சும், பாதி கெடைக்கும்.." வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு விட்ட நண்பர்களுக்குத் திருப்தி.



வங்கதேசத்தில் ஊழல் என்பது சாதாரண வாழ்க்கை முறையாகி விட்டது. 95% காவல்துறையினர் லஞ்சத்தில் ஊறித் திளைக்கிறவர்களாக இருக்கிறார்கள். நிலம், கஸ்டம்ஸ், அரசாங்க அலுவலக காரியங்கள் எல்லாவற்றிலும் ஊழல் மலிந்திருக்கிறது. பொதுத் துறையை அரசைத் தன் காரியத்திற்காய் பயன்படுத்திக் கொள்வதற்கு லஞ்சம் என்ற பெயர் அடிமட்டத்திலிருந்து பிரதமர், நீதித் திறை வரைக்கும் ஊடுருவியுள்ளது. யார் குறைவாக வாங்குகிறார் என்பதில்தான் வேறுபாடே இருக்கிறது. சமூக குடியமைப்புகளின் செயல்பாடுகளும் உரிமை கோரலும் வெகு சாதாரணமாகவே இருக்கிறது. வன்முறை நடவடிக்கைகளும், கொள்ளையும் கற்பழிப்பும் லஞ்சத்தை ஊடுருவச் செய்து விட்டன. உலகின் பதிமூன்றாவது மோசமான லஞ்சம் திளைக்கும் நாடாக இருக்கிறது.



விமான நிலையத்தில் எங்களுக்கு ஏற்பட்ட லஞ்ச விவகாரத்தை வைத்துக்கொண்டு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது விமான நிலையத்தில் சென்றாண்டு நடந்த ஒரு சாவு பற்றி அவர் சொன்னார். பிர்ராஜ் மியா என்பவர் இங்கிலாந்திலிருந்து வங்க தேசத்திற்குத் திரும்பியிருக்கிறார். வங்க தேசத்தைச் சார்ந்தவர்தான் அவர். இங்கிலாந்தில் குடியேறி ஓர் உணவு விடுதியை நடத்தி வருகிறார். மனைவியும் 5 குழந்தைகளும் அவருக்குண்டு. டாக்கா விமான நிலையத்தில் இறங்கியவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சிரமப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு டாக்காவின் அரசு மருத்துவமனையில் அவர் பிணம் இருந்ததாகச் சொல்லப்பட்டதாம். உடல்முழுக்க காயங்கள் இருந்திருக்கின்றன. அவரின் பெட்டி காணாமல் போயிருக்கிறது. பிர்ராஜ் மியாவின் மனைவி இங்கிலாந்திலிருந்து டாக்கா வந்து முறையிட்டபோது உடல்நலம் குறைவால் இறந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 3 லட்சம் வங்கதேச மக்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக பிர்ராஜ் மியாவின் சாவு இருந்திருக்கிறது. லஞ்சம் கொடுக்க மறுத்தவரின் மீதான வன்முறைதான் அவரைச் சாகடித்திருக்கிறது. லஞ்சம் பெற வன்முறை கையாளப்படுவது அங்கு சாதாரணமாகியுள்ளது.



சுப்ரபாரதிமணியன்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அண்டைவீடு: பயண அனுபவம்

டாக்கா செய்தித்தாள்களில் கப்பல் உடைப்புப் பணிகளில் ஈடுபடுவோரின் சாவும், விபத்துகளும் அது குறித்த அரசின் எச்சரிக்கைகளும், சட்டரீதியான நடவடிக்கைகளும் செய்திகளாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க நேரிட்டது.

1970க்குப்பின் கப்பல் உடைத்து அதன் இரும்பு பாகங்களை ப் பிரித்தெடுப்பது முக்கிய வேலைகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் 700 கப்பல்கள் பழையதாகியும், செயலிழந்தும், விபத்துக்கள் ஏற்பட்டும் உடைப்புப் பணிக்காகத் தயாராகின்றன. இதுவரை 45,000 கப்பல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து, தைவான், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முக்கியத் தொழிலாக இது நடந்து வருகிறது.


இந்தியாவில் அலாங் என்ற குஜராத்தைச் சார்ந்த கடற்பிரதேசத்தில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்றாண்டு சென்னையில் செயலிழந்து போன ஒரு கப்பலை உடைக்கும் பணி தொடங்கியபோது சர்ச்சைக்குள்ளானது.

வங்கதேசத்தில் டாக்காவிலிருந்து 125 கி.மீ. தள்ளி உள்ள சிட்டகாங் துறைமுகப் பகுதியின் 20 கிமீ பரப்பளவு உடைக்கப்பட்ட இரும்புப் பொருட்கள், உதிரி பாகங்களால் மாசுபடுத்தப்பட்ட மிக மோசமான பகுதியாக இருக்கிறது. உடைக்கும்போது ஏற்படும் விபத்துகளில் சிட்டகாங்கில் மட்டும் கடந்த 20 வருடங்களில் 400க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். 6000 பேருக்கு மேற்பட்டோர் கடுமையான காயங்கள் அடைந்திருக்கிறார்கள். ஒரு கப்பல் தளப்பிரதேசத்தில் ஒரு நாளைக்கு ஒருவராவது மிகுந்த

2.சோதனை மிகுந்த அளவில் காயப்படுவது என்பது சாதாரணமாக நிகழ்கிறது. இரும்புக் கம்பிகள், தளவாடங்கள் நசுக்கி சாகிறவர்களும் இருக்கிறார்கள். மின்வாயு மூலம் இரும்புப் பகுதிகள் துண்டிக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. பெரிய விபத்துக்கள் என்றால் 10ஆயிரம் முதல் 15ஆயிரம் டாக்கா வரை நஷ்ட ஈடு தருகிறார்கள்.1965ல் வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமொன்று ஒரு லட்சம் டாக்கா வரை நஷ்டஈடு தர வாய்ப்பு தந்துள்ளது. ஆனால் அது அமலாக்கப்படுவதில்லை என்பதாலும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் இல்லை என்பதாலும் போராட்டங்களும் தொடர்கின்றன.உலகின் 430 தொழில்கள் மோசமானவை என்ற பட்டியலில் உள்ளன. அதில் 67 இன்னும் மோசமானவையாகவும், அதிலும் இன்னும் இன்னும் மோசமான தாகவும் கணிக்கப்படுகிறது. 11ல் ஒரு தொழிலாக கப்பல் உடைப்பு இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களும் பெண்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.ஆனந்தா குழும ம் சிட்டகாங்கில் கப்பல் உடைப்புத் தொழிலிலும், புதுக் கப்பல்களை உருவாக்கும் பணியிலும் தீவிரமாக வங்கதேசத்திலும், இந்தியாவிலும் ஈடுபட்டு வருகிறது. குறைந்தது ஆண்டுக்கு 25 கப்பல்களையாவது ஆனந்தா குழுமம் உடைத்தெடுத்து இருக்கிறது.


பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சோர்வுறும் மீனவர்களும் கப்பல் உடைப்புத் தொழிலுக்கு மாறிவிடுகிறார்கள். மீனவர்கள் கரையேறி விட்டாலும் கஷ்டங்கள் ஓய்வதில்லை.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

” மண் புதிது “

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்

By சோ முத்து சரவணன்



பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு எழுதி வைப்பார்கள்.
சுப்ரபாரதிமணியன் தான் சந்தித்த வெளிநாட்டுமனிதர்களின் மனோபாவங்களையும், அவர்களோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். நாடறிந்த எழுத்தாளர் . அவர் இஅ எப்படி எழுதி இருந்தாலும் நண்பர்கள் வட்டம் பெருமைப்படுத்தவே செய்யும். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குறிய தார்மீகச் சிந்தனைகள் சிறிதும் பிறழ்வாமல் இவர் பதிவு செய்திருக்கும் குறிப்புகள் மிக மிக கனமானவை.
நான் இந்நூலை வாசிக்கும் போது எனக்கு இந்நூல் மறுபதிப்பு
வழியாக , 15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் வாசிக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வருந்தினேன்.
மார்க்க்சியம் சார்ந்த சிந்தனையாளர் என்பதால் இதில் மனித உறவுகளின் மகத்துவம் பற்றி வெகுவாக உரசிப்பார்த்துள்ளார் இந்நூலினை 25 அத்தியாயங்களாக பிரிதுது எழுதியுள்ளார். இதை வாசிப்போர் தொடர்ச்சியாக இன்றி எந்தவொரு பகுதியை மட்டும் வசித்தாலும் அற்புதமாக பல விசயங்களைப் புரிந்து கொள்ளலாம். அய்ரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம் இதில்.
புலம் பெயர்ந்த ஆசியர், இந்தியர், இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகளும் அவர்களது இன்னல்களையும் இங்கிலாந்துப் பெண்களின் வாழ்க்கை முறை , அதை இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை, ஜெர்மனி இணைப்பின் விளைவுகள், புதிய நாஜிக்கள் என்ற அடையாளத்துடன் சில புல்லுருவிகள் செய்யும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீதான் தாக்குதல், பிரான்சைக்கலக்கும் அல்ஜீரிய தீவிரவாதிகள் பற்றிய கலக்கம், அதே நேரம் அங்கே கடைபிடிக்கப்படும் ஜனநாயக மரபு, அதன் பிண்னனியில் உள்ள உண்மைகளை நிதர்சனமாக நம் கண் முன் கொண்டு வருகிறார்..
மூன்றாம் அலக நாடுகள் மீதான் முதல் இரண்டாம் உலக நாடுகளின் ஈவிரக்கமற்ற கரிசனம், தன் இயற்கை வளங்களை பாதுகாக்க மூன்றாம் நாடுகள் மீதான இந்த கரிசனப்பார்வையின் ஊளனத்தை 21ம் நூற்றாண்டின் 10 ஆண்டுகளிலேயே உலகம் அறிந்து கொண்டாலும் நூலாசிரியரின் பார்வையில் அது முன் கூட்டியே அலசப்படுகிறது. இது அவரின் எழுத்து சிந்தனைக்கு வளம் சேர்ப்பதாகும். அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்குள் எழும் பிரிவினை கோசங்களைப் பார்க்கைகையில் ஆசிரியர் பின் வரும் அத்தியாயத்தில் ஈழத்தின் மறுவாழ்வு பற்றிய ஆசிரியரின் கணிப்பு தவறாகிப்போனது.
மலையகத்தமிழனை, மட்டக்க்கிளப்பு தமிழன் மட்டம்காக நினைக்கும் நிலையில் இந்தப் பிரிவினை எண்ணம்தானே இன்று ஈழம் பற்றிய கனவு வீழக் காரணமானது. தமிழன் உலகம் முழுவது வாழ்கிறான் என்பது பெருமிதம், அதே வேளையில் பிரிந்தே வாழ்கிறான் என்ற செய்தி வேதனை தருகிறது.
நிற வெறி, இன வெறி என்பது சென்னை தூதரகத்திலேயே துவங்கி விட்டதை ஆசிரியர் குறிப்பிடும் போது இந்த உலகம் இன்னும் நாகரீகத்தின் எல்லையைத் தொடவில்லை என்பது உறுதிப்படுகிறது.
தஸ்லிமா நஸ் ரீன் பற்றிய பார்வை விலாசமானது மெக்டொனால்ட் உணவு பற்றிய ஆசிரியரின் பயம், நம் நாட்டின் தற்போது விற்பனையாகும் ஜங்புட் கலாச்சாரம் , தீம்பார்க், மாயாஜால் என்று மேலைக் கலாச்சாரத்தின் வேகம் ஜீரமாக பரவி வருவதை கண்கூடாக்க் காட்டுகிறது. அங்கு பார்த்த திரைப்படங்கள் பற்றிய பார்வை உலகை ஒரு சுற்று வர வைக்கிறது.
மனிதனுக்கான எல்லை எது என்பதில் மனிதம் மட்டுமே தோற்பதில்லை. வெகுவான மனிதர்களும் தோற்கிறார்கள் எல்லைகள் விரிவடைந்த போதிலும் மனித மனங்களின் விரசங்கள் விரிவடையக் தொடங்கியது. சமாதானத் த்த்துவம் மட்டுமே சகஜமானதாகப்பார்க்கப்படுகிறது. இதுவே உலக அரங்கில் அதிகார மையத்தின் அரசியல் சண்டையானது. இக்கட்டுரைதொகுப்பைப் படித்தபோது எனக்குள் எழுந்ததே இந்த விமர்சனத்தத்துவம் . இச்சிந்தையை தரும் இந்நூல் அதனளவில் வெற்றியே.
( சுப்ரபாரதிமணியனின் ” மண் புதிது “ பயணக்கட்டுரை.
அறிவு பதிப்பகம், சென்னை வெளியீடு
ரூ 60/ )

= சோ.முத்து சரவணன்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அண்டை வீடு : பயணக் கட்டுரை

போர்க்குற்றவாளிகள்
--------------------------


4
இலங்கை இனப்படுகொலையை முன்னிட்டு ராஜபட்சே உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உலக டப்ளின் நீதிமன்றம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

இதுபோல் வங்கதேச விடுதலையின்போது 1971ல் வங்கதேச மக்களின் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரஜாக்கர்கள் உட்பட முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வன்முறையும், கொலைக்குற்றமும் குறித்த போர்க்குற்றவாளிகளாய் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் மீதான விசாரணையும், தண்டனையும் குறித்து முப்பதாண்டுகளாக வங்கதேசத்தில் பேசப்பட்டு வருகின்றன. இப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இது குறித்து ஆவணம் செய்யப்படும் என்று தொடர்ந்து பேசிவருகிறார்.

போர்க்கால விதிமுறைகளை மீறுபவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. பிடிபட்டவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் துன்புறுத்துவதும், வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வருபவர்களைக் கொல்வதும் போர்க்குற்றங்களாகவே கணிக்கப்படுகிறது.







1971 வங்கதேசத்தில் ஜெனரல் யாஹ்யகானின் அதிகார வன்முறையோடு ஜமாத் அமைப்பினரும், முஸ்லிம் லீக்கும், ரஜாக்கர்களும் துணையாக இருந்தனர். 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நாலரை லட்சம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமை அமைப்பைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கொல்லப்பட்டனர். 1971 ஜனவரி 25, 26 இருதினங்களில் மட்டும் டாக்கா நகரில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. ஒன்பது மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடுமைச் செயல்களால் பல ஆயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் அடிமைகளாய் ராணுவத்தினரால் ஆக்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் பாலியல் இயந்திரங்களாக்கப்பட்டனர் பெண்கள். இந்துப் பெண்களின் கட்டாய கர்ப்பமும் கொடுமையான விஷயமானது. Ôமுட்டுக் கல்யாணம்Õ என்ற தற்காலிகத் திருமணங்கள் நிகழ்த்தப்பட்டன. தற்காலிகத் திருமணங்களை முஸ்லிம் மரபானவர்கள் ஏற்பதில்லை.



ஜெனரர் யாஹ்யாகான் , அலிபூட்டோ, டிக்காகான், மேஜர் ஜெனரல் ரா பார்மென் அலி உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்தது.

இந்தக் கொடுமைச் செயல்களில் ரஜாக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். Ôவாலிண்டியர்Õ என்ற சாதாரணப் பொருள் ரஜாக்கர்களுக்கு அர்த்தப்படுத்தப்பட்டாலும், அவர்கள் அசாதாரண கொலைகாரர்களாகவே விளங்கினர்.

டாக்காவின் இரண்டாவது இடத்தில் அதிக பிரதிகள் விற்கும் Ôடெய்லி இன்குலாப்Õ என்ற பத்திரிகையைப் போர்க்குற்றவாளிகள் கைப்பற்றி தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது ‘டெய்லி இன்குலாப்’ போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக இயங்கி வருகிறது.


போர்க்குற்றவாளியான ராணுவத்தினர் 195 பேர் பாகிஸ்தானுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டதாய் சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் போர்க்குற்றவாளிகள் என வங்கதேசத்தில் யாருமில்லை என்று அறிவித்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதையொட்டி இதில் பங்குடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் அலி அஸ்மா முகமது முஜிபுரும், 1971ல் ஜமாத் அமைப்பு போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேகம் கலீதா ஜியா முன்னாள் பிரதமராக இருந்த காலத்தில் போர்க்குற்றவாளிகள் தண்டனை பெறுவர் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இன்றைய பிரதமர் ஷேக் ஹசீனாவும் அதையே கூறுகிறார். சமீபத்தில் ஜமாத் இஸ்லாம் சார்ந்த 40 பேரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜமாத் இஸ்லாமின் தலைவரான ஹான்சா குலாம் ஆசாத் கொடுமைக்கார ரஜாக்கர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். முன்னர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது ஹன்சா குலாம் ஆசாத்திடம் சென்று ஆட்சி புரிய ஆசி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பேகம் கலிதா ஜியா கட்சியின் கூட்டணியில் முஸ்லிம் மத அமைப்புகளும் ரஜாக்கர்களும் இருப்பதால் அவர்களை அடக்க ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உண்டு.

ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கதேச விடுதலைக்குப்பின் 1975ல் கொல்லப்படும் வரை போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பமே கொல்லப்பட்டது.

டாக்காவில் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளின்போது இருந்தோம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்று பிளக்ஸ் போர்டுகளும், கட்அவுட்டுகளும், ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் இல்லாதது ஆறுதல் தந்தது. அன்று ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது பற்றியும் தெரிவித்தார்.

அன்று செப்டம்பர் 30 – ‘தி டெய்லி ஸ்டார்’ - ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.


சுப்ரபாரதிமணியன்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

”கனவு” இலக்கிய கூட்டம்

திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம்

9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை

தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின் மொழிபெயர்ப்பு

நூல்கள் அறிமுகம் நடந்தது.

சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை” நாவலை 1998ல் காவ்யா பதிப்பகம்

வெளியிட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ( ஆங்கிலத்தில்

பாண்டிச்சேரி ராஜ்ஜா, THE COLOURED CURTAIN ,வெளியீடு; BRPC, NEW DELHI )

மலையாள மொழிபெயர்ப்பு, “ சாயம் புரண்ட திர “ (மலையாளத்தில்

மொழிபெயர்ப்பு ஸ்டான்லி, சிந்த

பதிப்பகம், திருவனந்தபுரம் ), கன்னட மொழிபெயர்ப்பு “ பண்ணத்திர “

( கன்னடத்தில் தமிழ்ச்செல்வி, வெளியிடு நவயுக பெங்களூரு ) ,இந்தி

மொழிபெயர்ப்பு “ ரங் ரங்கிலி சாதர் மெஹெலி “ ( இந்தியில் மீனாட்சி புரி ,

வெளியிடு நீலகணட் பிரகாசன், மொளர்லி , புது தில்லி ) ஆகியவை

அறிமுகப்படுத்தப்பட்டன.


“ சாரு நிவேதிதாவின் கலகக்குரல்” என்றத்தலைப்பில் சுந்தர்

அர்ணவா, “ பிரகடனமாகாத வாக்குமூலங்கள்= வாசந்தியின் சிறுகதைகளை

முன்வைத்து வாசந்தியின் படைப்புலகம்” என்ற தலைப்பில்

சுப்ரபாரதிமணியன், “ அம்பேத்கார் திரைப்படம் எழுப்பும் காந்தி மீதான

கேள்விகள் “ என்ற தலைப்பில் முத்துசரவணன் ஆகியோர் உரையாற்றினர்.

ஜோதி கவிதைகள் வாசித்தார். ரவி மகேஸ் நன்றி கூறினார்.

பிப்ரவரியில் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட

உள்ள திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பான

” பருத்திக்காடு ” பற்றி சி ரவி அறிமுகப்படுத்தினார்.


” கனவு “ இலக்கிய வட்டத்தின் மாதாந்திர கூட்டச் செய்திகளுக்கு ;

ரவி 9994079600., முத்து சரவணன் 7200733728.

செய்தி: முத்து சரவணன்

ஒரு கவிதை & ஒரு நூல்

1.ஒரு கவிதை:

==========================

”பங்கரி’லிருந்து வந்த மனிதனை

வரவேற்றேன்.

தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன்

ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்.

அலுவலக நேரத்தில்

அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)

ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது

சாமான்யக் காரியமல்ல

( மெமொ-விளக்கம் தரவேண்டியிருக்கும்

அலுவலத்தண்ணீர்க் குழாயிலிருந்து

இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை

என்மேல் இன்னும் இருக்கிறது)

“பங்கரி”ல் கடவுளையும், சாத்தானையும்

சந்தித்ததாகச் சொன்னார்.

கடவுள் நீங்குகையில் சாத்தானும்

சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்

கற்பனை செய்து கேட்டேன்..

இருவரும் ஒரே நேரத்தில்

“ பங்கர்” குழிக்குள்

அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.

எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்த்து.

கடவுளும், சாத்தானும் “ பங்கரில் “ தூங்குவதில்லை என்பது

வருத்தமாக இருந்தது.

முடிகிறபோது வாருங்கள் என்றார்.

அவரின் அழைப்பு அபரிமிதமானதாகத் தோன்றியது.

ஆனாலும் தலையசைத்தேன்.

எனது அலுவலகப்பகுதியோ

எந்து வீடுள்ள பகுதியோ

நான் காலை நடை போகும் பகுதியோ

இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்.

சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது

வருத்தம் தருகிற விசயமாக இருந்தது.

கடவுளும், சாத்தானும்

என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி

அவ்வப்போது வந்து போகிறது.





2. ஒரு நூல்

” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல”

திரைப்படக்கட்டுரைகள் நூல்:

பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்

படாதக் குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.



(ரூ 60/= உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )


செய்தி :
issundarakannan7@gmail.com

வியாழன், 13 ஜனவரி, 2011

கிடுகிடு கட்டிடங்கள்

2008ல் டாக்கா அதிர்வுக்குள்ளான நிலநடுக்கம் காரணமாக நிகழ்ந்த சேதத்தின்போது இன்னுமொரு அதிர்ச்சியான நிலநடுக்கம் டாக்காவில் நிகழுமானால் டாக்கா நகரத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிடும் என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் சொல்லிக் கொண்டிருந்தன. மோசமான கட்டிட அமைப்புகள் இதற்குக் காரணம். சிமெண்ட் பூசப்படாத செங்கற்கள் வைத்து கட்டப்பட்ட மூளிக்கட்டிடங்களைப் பார்க்கும் போது அவற்றின் உயரமும், விஸ்தாரணமும், அவை நிறுத்தப்பட்டிருக்கும் Ôபில்லர்Õ அமைப்புகளும் பயமுறுத்தவே செய்கின்றன.

திருப்பூரில் இருப்பது போன்று தனியான பனியன் தொழிற்சாலைக் கட்டிடங்களோ, தனிப்பகுதிகளோ இல்லாமல் டாக்காவின் பிரதான வீதிகளில் பலமாடிக் கட்டிடங்களில் சிலவற்றை பனியன் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்திருப்பது நகராட்சி பலமாடிக் கட்டிடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சின் சில மாடிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது போன்றதாகவே பனியன் தொழிற்சாலைகள் டாக்கா நகரில் தென்படுகின்றன. அவ்வப்போது உயரமான பனியன் தொழிற்சாலை செங்கல் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பனியன் தொழிலார்கள் காயமடைவதும் மரணமடைவதும் குறித்து அலோசியஸ் புள்ளி விபரங்கள் தந்தார். அதிர்ச்சிகரமான நிலநடுக்க அதிர்வாகத்தான் அது இருந்தது.










1858 முதல் 1930 வரை ஐந்து மிக முக்கியமான நிலநடுக்கங்களால் பங்களாதேஷ் நிலைகுலைந்திருக்கிறது. 1762இ 1934ல் மிகப்பிரம்மாண்டமான நிலநடுக்கங்கள் 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அப்போதெல்லாம் இந்தியாவிலும் பாதிப்புகள் அதிகம்தான்.

250 - 300 வருடங்களுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்று ஜப்பானிய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலர் 100 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்கின்றனர்.

வெள்ளம், புயல் காரணமாய் டாக்கா ஆண்டுகள் தோறும் பாதிக்கப்படுவதுண்டு, இதில் நிலநடுக்கம் தரும் அதிர்வும் அபாயகரமானதாக இருக்கிறது.

இந்தியாவில் 2001ல் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமான 2 லட்சம் பேர் இறந்தனர். சுனாமி 2004ல் 3 லட்சம் மக்களை பலி கொண்டது. காஷ்மீரில் 2005ல் நிகழ்ந்த நிலநடுக்கம் 80000 பேரை சாகடித்தது.








2010 செப்டம்பர் 10ல் நிகழ்ந்த நிலநடுக்கம் கூட டாக்காவை பெரிதும் பாதித்திருக்கிறது. நொடிகளில் தெருக்களின் பல கட்டிடங்கள் சாய்ந்து விட்டன. வீதியெங்கும் ஓலம். மக்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்து நெரிசலால் சாவுகள். முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீப்பிடித்து சில கட்டிடங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் நகராமல் நின்று விட்டன. சிதைந் கருகிய இடல்கள் ஆங்காங்கே தென்பட்டன. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினர் பெண்கள். வீதிகள் சிதிலமடைந்து தாறுமாறாய் இருந்தன. நகரம் சிதைந்தது என்கிறார் சேரில் கண்ட ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளில் நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலப்பரப்பு பகுதியை ஒட்டி நிறைய நிகழ்ந்துள்ளன. அது வங்கதேசத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை என்பதன் பாதிப்பு அது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹிமாலயன் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் வங்க தேசத்தைப் பாதித்திருக்கிறது. 1897ல் நிகழ்ந்த ஷில்லாங் நிலநடுக்கம் கிழக்கு வங்காளத்தை மிகவும் பாதித்தது. பிரம்மபுத்ரா நதியின் போக்கு திசை மாறியது. யாமுனா நதி புதுப்போக்கில் அமைந்தது.



சிட்டகாங், டாக்கா ஆகியவை நிலநடுக்க பாதிப்புப் பகுதிகளாகவே விஞ்ஞாளிகள் கருதுகிறார்கள். டாக்காவின் பெருநகர வளர்ச்சி சென்ற பத்தாண்டில் குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிட விதிகள் மீறப்படுகின்றன. தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் கட்டிடங்கள் வந்துள்ளன. ஏரிகள் குளங்களில் கட்டிடங்கள் கிளம்பியுள்ளன. அவையும் பலமாடி வீட்டுக் குடியிருப்புகளாகவும், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறியுள்ளன. பல பழைய கட்டிடங்கள் பராமரிக்கப்படுவதில்லை. பழைய அரசாங்கக கட்டிகங்கள் பராமரிப்பின் நிராகரிப்பில் உள்ளன. பழைய நகரத் தெருக்களின் குறுகிய பாதைகளும் நெரிசலும் நில அதிர்வை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 1.8 லட்சம் கட்டிடங்கள் சிட்டகாங்கில், 1 லட்சம் கட்டிடங்கள் டாக்காவில் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய அதிர்வு ஏற்படுமானால் டாக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அமு பகல் என்றால் முக்கால் லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்கா கட்டிடங்களால் விரிவடைந்துகொண்டே வருகிறது. பில்லர்களைக் கொண்ட அடிமட்டங்களால் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது முதலமைச்சர் கருணாநிதி ‘ஏய்யா... ஏன்ற நாற்காலியை புடுச்சு உலுக்கறீங்க’ என்றார். நாற்காலி பயம் எப்போதும் அவருக்கு. நாற்காலிகளில் சௌகரியமாக உட்கார வேண்டுமானால் நிலநடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை கொள்வது, அப்போது மட்டும் கலக்கமடைந்து தற்கால நிவாரணங்களைத் தேடுவது நல்லதல்ல என்கிறார்கள். இயற்கை மனிதனின் செயல்கள் மீது கோபம் கொண்ட விளைவு என்பது நம்பிக்கையாய் எல்லோர் மனதிலும் புதைந்து வருகிறது.

சுப்ரபாரதிமணியன்


pls vist

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3844

புதன், 22 டிசம்பர், 2010

பயணத் தொடர்:

1. பதற்றம்

பதற்றத்தில் ஆங்கிலத்தில்தான் கத்திக்கொண்டிருக்கிறேன் என்று உணர ஒரு நிமிடம் ஆயிற்று. எப்படி ஆங்கில பிசாசுள் அகப்பட்டேன் என்று தெரியவில்லை. சேவ் அலோசியஸ் அவரின் கைப்பை சோதனை முடிந்த திருப்தியில் தூரம் போய் உட்கார்ந்திருந்தார். அனைவரின் கல்கத்தா, டாக்கா விமான டிக்கெட்டுகளையும் ஒருங்கிணைத்து சரிபார்க்கிற வேலையில் இருந்தார். என் கைப்பையைக் காணவில்லை என்பதைத்தான் பதற்றத்துடன் ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தேன். தமிழில் ஏன் கத்தவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது.

கோவை விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனைக்காகச் சென்றதில் எனது பை மட்டும் திரும்பவில்லை. என்னவாயிருக்கும் என்று பதற்றமடைந்திருந்தேன். சற்று நகர்ந்ததும் அவினாசி பாஸ்கரன் என்ன என்று விசாரித்துவிட்டு சோதனையிடத்தில் இருந்த பெண்மணியிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் சரளமான இந்தி பேசியது ஆச்சர்யமளித்தது. அவர் ஏன் இந்தியில் பேசுகிறார். தமிழிலேயே கூட கேட்கலாம். அல்லது ஆங்கிலத்தில். ஆனால் சோதனையிடப் பெண்ணின் உடம்பும் முக வாகும் வடக்கத்திய தோற்றத்தைக் கொடுத்து இந்தியில் பேச வைத்திருக்குமா? சட்டென ஆங்கிலமும் அவருக்குக் கைகூடவில்லையா என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தப்பெண் கீழே கிடந்த என் கைப்பையைக் காட்டினாள். அதனுள் கைப்பேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் இருந்தன. பாஸ்கரன் மீண்டும் சரளமாக இந்தியில் பேசியதும் இந்த இளம்பெண் சோதனைக்கு மீண்டும் என் கைப்பையை அனுப்பினாள். அது மீண்டு வந்தபோது என் பையைத் திறக்கச் சொன்னாள். ஒரு புத்தகப் பண்டல் முழுமையாக உறையிடப்பட்டதாக இருந்தது. அதை சேவ் அலோசியஸ் என்னிடம் விமான நிலைய முகப்பில் கொடுத்திருந்தார். அதனுள் எனது தேநீர் இயைடவேளை நாவலின் திருமதி பிரேமா நந்தகுமாரின் மொழிபெயர்ப்பிலான ஞழவந ருறேசவைவவந« டுநவவநசளஞ ஆங்கில பிரதிகள் மற்றும்¬ கூ£ந டுயளவ ளுலஅடிலே என்ற எனது தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பிரதிகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கோவை பாலகிருஷ்ணன்) இருந்தன. அவை இரண்டையும் சேவ் அலோசியஸ் வெளியிட்டிருந்தார். வங்கதேசம் செல்வதையொட்டி சில பிரதிகளை அவரிடம் கேட்டிருந்தேன்.



சோதனைப் பெண் பண்டலைக் காட்டி என்னவென்று கேட்டார். கூ£ந ருறேசவைவந« டுநவவநசள பிரதியொன்று பையில் இருந்ததை எடுத்துக்காட்டினேன். Òஓ... எழுத்தாளரா... புத்தகமாÓ என்றாள்.

அந்த இரண்டு நூல்களுமே நடுப்பக்கத்தில் பின் அடித்த விதமான பைண்டிங் முறையில் இருந்ததால் காப்பர் ஒயர்களாகவும், அவற்றின் துண்டுகளாகவும் தெரிந்திருக்கிறது. பரிசோதனையில் குண்டுகளும், அபாயப் பொருட்களும் இப்படித்தான் ஒயர்களாகவும். துண்டுகளாகவும் தென்படுமாம். புத்தகங்கள் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட விதம் ஏதோ பல எலக்ட்ரானிக் கார்டுகளை ஒன்று சேர்த்து வைத்தவிதமாய் இருந்திருக்கிறது. அந்த பண்டல் புத்தகங்களது என்று தெரிந்ததும் கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. ஆசுவாசமாக இருந்தது. பதற்றம் குறைந்துவிட்டது.

ஒரு மாதத்திற்கு மேலாக வங்கதேசம் பயணத்தையொட்டி பதட்டம் வந்துவிட்டிருந்தது. அலுவலகத்திலிருந்து பெறப்படவேண்டிய என்ஓசி தரப்படாமல் இருந்தது. சில புரிதல்களுக்காக அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டு சங்கடமளித்துக் கொண்டிருந்தது. எனது முந்தின வெளிநாட்டுப் பயணங்களில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிங்கபூர், இந்த தாமதமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கமாய் கணக்கியல் துறையும், கண்காணிப்புத் துறையும் ஆட்சேபணைகள் எழுப்பாதபோது சுலபமாகக் கிடைத்துவிடும். இந்த முறை பயணப்படுகிறதுக்கு முதல்நாள் கூட உத்தரவாதமாய் எதுவும் தெரியவில்லை. எங்கள் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் என்ஓசி தரப்படாததன் காரணத்தைக் கேட்டிருந்தார். கோவை அலுவலக மேலாளரை இறுதியாகச் சந்திக்கச் சொன்னார் பாஸ்கியும், கோவை வி.சுப்ரமணியனும் மேலாளரிடம் எனது பயணத்திட்டத்தையும் விபரங்களையும் தந்தேன். நான் எழுத்தாளர் என்ற விபரக் குறிப்புகளையும் தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு திருப்தியடைந்தார். அந்த வாரம் குசடிவே டு¬நே பத்திரிகையில் (அக்டோபர் 8, 2010) னுச¬எந« வடி னநளயிசை என்ற தலைப்பில் திருப்பூர் தொழில் வளர்சியினூடாக அது தற்கொலைக் களமாகியிருப்பதைப் பற்றி வந்த கவர் ஸ்டோரி 24 பக்கக் கட்டுரையில் எனது பேட்டி ய§ஜிலீமீ ஷிவீறீமீஸீt ஜிக்ஷீணீரீமீபீஹ் என்ற தலைப்பில் வந்திருப்பதையும் மேலாளரிடம் காட்டினேன். அவர் கீழ் மட்டத்திலிருந்து கோப்பு வரவில்லை, விசாரிப்பதாகச் சொன்னார். காத்திருந்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு வந்த கைப்பேசி அழைப்பில் மாலையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்கள். ஆறுதலாக இருந்தது. மாலைவரை கோவையில் காத்திருந்து வாங்கிச்செல்ல எண்ணியிருந்தேன். மாலையில் சென்னை மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று வந்தபின்தான் தரமுடியும் என்றார்கள். தொழிற்சங்க தலைவர் புறப்படுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார்.

சான்றிதழ் இல்லாமல் கிளம்பி விட்டால் துறை சார்ந்த நடவடிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டுப் பயணத்தை இந்த திகிலுடன் சுவாரஸ்யப்படுத்த முடியாது. சேவ் அலோசியஸிடம் இதை தெரிவித்தால் சங்கடமே. கோவை, கல்கத்தா, டாக்கா, போக வர விமான டிக்கெட்டுகள், டாக்காவில் தங்கும் விடுதியின் முன்பதிவு விபரங்கள் ஆகியவற்றைத் தந்திருந்தார். எப்படியும் கிளம்பி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

அலுவலக ரீதியான நடவடிக்கை என்றால் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பது மனதிலிருந்தது. பதற்றத்துடனே வெளிநாட்டுப் பயணம் என்பதில் விமான நிலைய கைப்பை சோதனையும் அமைந்துவிட்டது.

சென்னை விமானத்திற்காக காத்திருந்தோம். சிஎஸ்டிஈ பாஸ்கரன் அடுத்தவாரம் திருப்பூரில் நடைபெற உள்ள கல்வி உரிமை மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததை ஞாபகப்படுத்தினான். பழ.விசுவநாதன் அவர்கள் கனவு சார்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தேன். கல்வி உரிமை சட்டம் பற்றி விரிவாய் சொல்ல ஆரம்பித்தார். திக்ஷீஷீஸீt லிவீஸீமீ என் பேட்டியைப் படித்தார். அதையொட்டி திருப்பூரில் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தேன்.
கடைசி அத்தியாயங்களில் கல்வி உரிமை பற்றியும், திருப்பூரின் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றியும் விரிவான கட்டுரைகளையும், பிரண்ட்லைன் என் பேட்டியின் தமிழாக்கத்தையும் இணைத்திருக்கிறேன்.

வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.

.

விடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான மோதல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.

250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “


” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்

ரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

---------------- சுப்ரபாரதிமணியன் ----------------
( subrabharathi@gmail.com )