சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 18 ஜனவரி, 2011

”கனவு” இலக்கிய கூட்டம்

திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம்

9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை

தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின் மொழிபெயர்ப்பு

நூல்கள் அறிமுகம் நடந்தது.

சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை” நாவலை 1998ல் காவ்யா பதிப்பகம்

வெளியிட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ( ஆங்கிலத்தில்

பாண்டிச்சேரி ராஜ்ஜா, THE COLOURED CURTAIN ,வெளியீடு; BRPC, NEW DELHI )

மலையாள மொழிபெயர்ப்பு, “ சாயம் புரண்ட திர “ (மலையாளத்தில்

மொழிபெயர்ப்பு ஸ்டான்லி, சிந்த

பதிப்பகம், திருவனந்தபுரம் ), கன்னட மொழிபெயர்ப்பு “ பண்ணத்திர “

( கன்னடத்தில் தமிழ்ச்செல்வி, வெளியிடு நவயுக பெங்களூரு ) ,இந்தி

மொழிபெயர்ப்பு “ ரங் ரங்கிலி சாதர் மெஹெலி “ ( இந்தியில் மீனாட்சி புரி ,

வெளியிடு நீலகணட் பிரகாசன், மொளர்லி , புது தில்லி ) ஆகியவை

அறிமுகப்படுத்தப்பட்டன.


“ சாரு நிவேதிதாவின் கலகக்குரல்” என்றத்தலைப்பில் சுந்தர்

அர்ணவா, “ பிரகடனமாகாத வாக்குமூலங்கள்= வாசந்தியின் சிறுகதைகளை

முன்வைத்து வாசந்தியின் படைப்புலகம்” என்ற தலைப்பில்

சுப்ரபாரதிமணியன், “ அம்பேத்கார் திரைப்படம் எழுப்பும் காந்தி மீதான

கேள்விகள் “ என்ற தலைப்பில் முத்துசரவணன் ஆகியோர் உரையாற்றினர்.

ஜோதி கவிதைகள் வாசித்தார். ரவி மகேஸ் நன்றி கூறினார்.

பிப்ரவரியில் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட

உள்ள திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பான

” பருத்திக்காடு ” பற்றி சி ரவி அறிமுகப்படுத்தினார்.


” கனவு “ இலக்கிய வட்டத்தின் மாதாந்திர கூட்டச் செய்திகளுக்கு ;

ரவி 9994079600., முத்து சரவணன் 7200733728.

செய்தி: முத்து சரவணன்