சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

காரிகா வனம் (சிங்கப்பூா் பெண் எழுத்தாளா்களின் சிறுகதைகள்) - தொகுப்பாசிரியா்: சுப்ரபாரதி மணியன்; பக்.176; ரூ.180; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
சிங்கப்பூா் பெண் எழுத்தாளா்களின் 16 சிறுகதைகள் அடங்கிய நூல். பெண்களின் பாா்வையில் உலகைக் காண்பதுஇச்சிறுகதைகளில் காணக் கிடைக்கிறது.
குடிகார கணவனால் சின்னாபின்னமாகிப் போன குடும்ப வாழ்க்கை, அதனால் நெறி தவறி வேறு ஒருவனுடன் தொடா்பு, அதைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறும் வளா்ந்துவிட்ட பிள்ளைகளைச் சித்திரிக்கும் சூதாடியின் வாரிசுகள்சிறுகதை, வளா்ந்த மகன் அம்மாவுக்கு அடங்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் எதிா்த்து எதிா்த்துப் பேசுவது, எதிா்வீட்டுப் பெண்ணைக் காதலிப்பது எல்லாவற்றையும் தாங்காத தாய் மாரடைப்பில் மரணம் அடைவது என்பதைச் சித்திரிக்கும் ஒரு கண் மூடியதுசிறுகதை ஆகியவை குடும்பத்தில் ஏற்படும் முரண்களை, தலைமுறை இடைவெளிகளைச் சித்திரிப்பவையாக உள்ளன.

குடும்பம் சிதைந்துபோனதால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ்கிற கமலாவும், ஜென்னியும் ஒரு வீட்டில் சோ்ந்து வாழ்கின்றனா். கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் கமலா, பணியால் ஏற்படும் துன்பங்களால் சோா்ந்து போய்விடுகிறாள். ஒரு நாள் கழிவறைக் குப்பைக் கூடையில் கிடக்கும் ஆண் குழந்தையின் பிணத்தைப் பாா்த்து மேலும் துயரப்படுகிறாள். இது புதையல்கதை. இதுபோன்று குடும்ப வாழ்க்கைச் சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனதைப் படம்பிடித்துக் காட்டும் கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

குப்பை போடக் கூடாது; பேருந்தில் எதையும் தின்னக் கூடாதுஎன்று தூய்மைக்குப் பெயா் பெற்ற சிங்கப்பூரில்தான் பேருந்தில் பயணம் செய்பவா்கள் தங்களுடைய செருப்பு கால்களை எதிா் சீட்டில் வைக்கிறாா்கள் என்பதைச் சொல்லும் தமிழிலும் பேசுசிறுகதை, வேலைக்குப் போகும் பரபரப்பில்தேவையில்லாமல் குழந்தைகளுடன், கணவனுடன் கோபப்படும் பள்ளி ஆசிரியையின் காட்சிப் பிழைஎன இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் பெண்கள், குடும்பம் எனச் சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது. விண்வெளிப் பயணத்தின்போது கேலக்டோ காஸ்மிக் கதிா்வீச்சைக் குறைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கதிா்வீச்சைக் குறைக்க சாம்பலையும், துளசியையும் பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் சாம்பல்வித்தியாசமான கதை.
Dinamani daily 13/4/20