சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 ஜூன், 2014

அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…

சுப்ரபாரதிமணியன்

பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
சுப்ரபாரதிமணீயன்
கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது.
கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று எந்தத்தலைவனையோ, தலைவியையோ புகழ்ந்து பாடும் யாசகக் குரல். ஆனால் சமூக நீதி இயக்கம் சார்ந்து இயங்குபவனுக்கு அது கைவாள்தான். மக்களிடம் தன் அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு செல்லும் கருவிதான்.
பாரதிவாசன் தொடர்ந்து அரசியல் தளங்களில் இயங்கி வருகிறவர். 15 ஆண்டுகளுக்கு முன் அவரின் முதல் தொகுப்பு ” யாதெனீல் ..” கனவு வெளியீடாக வந்தது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது முக்கிய நிகழ்வாகும். பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஞானக்கூத்தன், திலகவதி, கவிதாபாரதி, டொமினிக் ஜீவா, வ.அய். செ. ஜெயபாலன், அறிவுமதி மறைந்த இதயக்கனி இயக்குனர் செகநாதன், நிகழ் திருநாவுக்கரசு என்று பலர் கலந்து கொண்டனர். 15 ஆண்டுகள கழித்து 90 பக்கத்தில் அவரின் இரண்டாம் கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. கவிதையின் தேர்ந்த வாசகன் ஒருவனுக்கு, முறையான கவிதைப் பயிற்சி உள்ளவனுக்கு ஒருமாதம் என்பது ஒரு தொகுப்பை எழுதி வெளியிடபோதுமானது. ஆனால் 15 ஆண்டுகள் என்பது நீண்ட இடைவெளி . இந்த இடைவெளியில் அவர் அரசியல் செயல்பாடுகளால் தன் வானத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்.
மாற்றுத்திரைப்பட புத்தகங்களை வெளியிடுதல், அவற்றை விற்றல், மாற்றுத்திரைப்பட குறும்பட நிகழ்வுகள்,குறும்பட பயிற்சிப்பட்டறைகள், மாற்றுக் கல்வியான தாய்த்தமிழ்ப்பள்ளியின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு, மாற்று உணவு சார்ந்த விற்பனையக செயல்பாடுகள் , மாற்று மருத்துவம் சார்ந்த செயலாக்கங்களில் ஒருங்கிணைப்பு என்று தொடந்த செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். இவையெல்லாம் மாற்று பண்பாடு, மாற்று சமூகம் குறித்த அக்கறையான செயல்பாடுகள். இந்த மாற்றுப்பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது அது தமிழ் தேசிய அரசியல்..ஒரு வகையில் சமரசம் செய்யாத அரசியல் குரல் அவருடையது. அவர் கடந்து வந்த பொதுவுடமைக் கட்சிகளின் மீதான விமர்சனத்தினூடே இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு வந்திருக்கிறார். அது ஈழம், முல்லைபெரியாறு, கூடாங்குளம் அணுமின்சக்தி என்ற கருத்து மோதல்களால் நிகழ்ந்ததாகும்.
அரசியலில் அக்கறை கொண்ட கவிதை மனம் எப்படி செயல்படும் . அதற்கு உதாரணம் இத்தொகுப்பு. அதிகமாய் காதல் கவிதைகள் இருந்தாலும் அவை சாதி மறுப்பை முன்வைக்கும் செயல்பாடுகளாகும்.காதலை எழுதுகிறவன் சாதியை வெளியேற்றுகிறவன் சாதி மறுப்பை செயல்பாடுகளால் காட்டுபவன் . காதல் உணர்வுகளோடு சமூகம் தரும் எல்லா வித செயல்பாடுகளுக்கும் தன் அரசியல் செயல்பாடுகளோடு இலக்கியத்திலும் பதிவு செய்கிறவனாகிறான்.அந்த வகையில் பாரதிவாசன் மாற்றுப் பண்பாடு குறித்த அரசியல் செயல்பாடுகளோடு தமிழ் இலக்கிய வாசகனாகவும், போராளியாகவும் பன்முகத்தன்மைகொண்டு செயல்படுகிற நிர்பந்தத்தில் தன்னைச் சளைக்காமல் ஈடுபடுத்திக் கொள்வேதே அவரின் இருப்பை இளைஞர்கள் மத்தியில் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பின் மூலமும்.
( பாரதி வாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம் “ கவிதைத்தொகுப்பு.. . ரூ60 / வெளியீடு : நிழல், 31/48 இராணி அண்ணா நக்ர், சென்னை 78 9444484868 ).