சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 12 ஜூன், 2014

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

சுப்ரபாரதிமணியன்

– சுப்ரபாரதிமணியன்
————–
படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல.
நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் தொலைபேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை தேவியர் இல்லம் பற்றிக் குறிப்பிட்டார். நானும் மேய்ந்ததில் திருப்பூர் வாசி என்பது தெரிந்தது.பின்னலாடை சார்ந்து பல கட்டுரைகள் இருந்தன.தொழில் சார்ந்த விபரங்களும், அணுகுமுறைகளும், ஏற்றுமதி கொள்கைகள் என்று நிறைய தகவல்கள்.
திருப்பூரைப் பற்றி அதன் நகரம்,தொழில், சுரண்டல், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று இதுவரை சுமார் 100 சிறு கதைகளாவது வெளிவந்திருக்கும் சில நாவல்கள் கூட.பின்னலாடை சார்ந்த சிலர்-தொழிலாளர்கள், படித்தவர்கள்- அவற்றை எழுதியிருக்கின்றனர். ஆராய்ச்சிமுகமாக இங்கு வரும் வெளிநாட்டினர் அங்கு போய் அவிழ்த்து விடும் சமாச்சாரங்கள் டண்டன்னாக இருக்கின்றன. திருப்பூரைப் பற்றி வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அவை தரும் செய்திகள் அதிர்ச்சி தரத்தக்கவை. சில பெருமைப்பட வைப்பவை. கடின உழைப்பு, விருந்தோம்பல் என்றெல்லாம். அமைந்திருக்கும். உலகமயமாக்கலில் அதன் விளைவுகளை சுட்ட திருப்பூர் போதும்.. வகை வகையாய் பிரச்சினைகள். தீர்வுகள், டாலர்கள் பவுண்ட்கள், அந்நிய செலவாணி என்று.
தேவியர் இல்லம் என்பதை முன்பு ஏதோ டுடோரியல் காலேஜ் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த பெயரில் பள்ளி, டுடோரியல் காலேஜ் நடத்தினவர்கள் இருக்கிறார்கள். இந்த இல்லமும் ஒரு கல்லூரிதான். ஒரு வகையில் நிப்ட்கல்லூரி . பின்னலாடை பற்றி தகவல் குவியலகள். இதை எழுதுகிற ஜோதிஜி அந்த துறை சார்ந்து தொடர்ந்து தொழில் நிமித்தமாய் இயங்குகிறவர் என்பதால் அந்த துறை சார்ந்த கசமுசாக்கள், கிசுசிசுக்கள், நுட்பமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.பத்திரிக்கையாளர் பாணியில் . தினத்தந்தி வாசகனுக்கும், படிக்கிற கடைசி தரப்பு வாசகனுக்கும் சென்றடைய அளவில் எளிமையான மொழி, அஜல் குஜல் சமாச்சாரங்கள் என பதிவர்களின் மொழியில் சுலபமாக இயங்குபவர்.பின்னலாடைத் தொழிலில் இருக்கும் சிறுசிறு விசயங்கள் முதல் உற்பத்தி தந்திரம் வரை அலசல். ஒரு வகையில் விளிம்பு நிலைப் பார்வை. சுரண்டல், வில்லன் ஆசாமிகள் என்று அடையாளம் காட்டுகிறார். ஊர் இப்படியாகிப்போச்சே என்று அங்கலாய்ப்பும் இருக்கிறது.சில இடங்களில் நுணுக்கமான பார்வைகள், விவரிப்புகள் இலக்கிய நுட்பத்தை எட்டுவது நல்ல விசயம்.திருப்பூரைச் சார்ந்த வாசகனுக்கு இவை நுணுக்கமாய் தெரியலாம். வெளி அந்நியனுக்கு, சாதாரணஇந்தியனானவனுக்கு சிரமம்தான்.இதெல்லம் இவ்வளவு விரிவாய் எதற்கு என்று அலுப்பு ஏற்படலாம். ஜோதிஜி அலுப்பை உதறி விட்டுத் தொடர்கிறார். சொலவடைகள் , மச்சி மாமா சம்பாஷனைகள் போல் நறுக்கு தெறிக்கின்றன. 2015ல் 25,000 கோடி எட்டி விட வேண்டும் என்ற கனவும், சிரம் திசையும் காட்டுகிறார்.. பல இடங்களில் குதிரைப் பாய்ச்சல். சில இடங்களில் பந்தயக் குதிரை போல் வட்டத்துள் வந்து திரும்பக்கூறல்.வெளி ஆட்கள் வந்து பத்திரிக்கைப் பாணியில் எழுதுவது போய் அந்தந்த துறை சார்ந்தவர்களே நுட்பங்களுடன் எழுதும் பின்நவீனத்துவ காலகட்டம் இது. அந்த மாதிரி ஜோதிஜியும் இருக்கிறார். அதேசமயம் ஜோதிஜியின் உழைப்பும் சிரத்தையும் நல்ல சகுனங்கள். “ வாழ்க்கை விசனகரமானது என்பது உண்மையல்ல. அழுகையும் துயரமும் தவிர அதில் வேறொன்றும் இல்லை என்பதும் உண்மையல்ல. மனிதன் அதில் எதையல்லாம் தேடி கண்டு பிடிக்க விரும்புகிறானோ அவையெல்லாம் வாழ்க்கையில் உள்ளன. வாழ்க்கையில் எது இல்லையோ எது குறைவாக உள்ளதோ அதனைத் திருத்திக் கொள்ளும் சக்தி, உருவாக்கிக் கொள்ளும் சக்தி மனிதனிடம் உண்டு” என்கிறார் மார்க்சிம் கார்க்கி. அந்த வகை மனிதர்களில் ஒருவர் ஜோதிஜி. தொடர்ந்து போராடுதலை சாதாரணமாக்கிக் கொண்டும் எழுதியும் வருபவர். இந்தக் கட்டுரைகளில் நல்ல காரைகுடி சமையல் போல் , புளிப்பும், காரமும் உண்டு. பத்தியமும் உண்டு. வயிறு கெடாமல் இருக்க எல்லாம் தேவை. எது வயிறைக் கெடுக்காது என்பது திருப்பூர் வாசகனுக்கும், பின்னலாடை துறை பற்றி தெரிய ஆசைப்படுபவனுக்கும் புரியும். வெளிநாட்டு இணையதளமொன்றில் தொடராக வந்தது இது . ஜோதியின் தொடர்ந்த உழைப்பு இப்புத்தக வடிவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
– சுப்ரபாரதிமணியன், திருப்பூர்