சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 14 நவம்பர், 2013

சூழல் அறம்

சூழல் அறம்

சுப்ரபாரதிமணியன்

சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது  தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான். “
எல்லோருக்குமான தண்ணீர்” என்பது சுத்தமான குடிநீர் உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது.தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே செய்கின்றன.” தண்ணீர் விற்பனைக்கல்ல “ என்று  தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன.

 கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்கிற பணத்திற்கு பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்பதோடு ஒதுங்கிக் கொள்ள வாய்ப்புகள் வந்திருக்கின்றன. கழிவு நீரைச் சுத்திகரிக்கும் தொழில் என்பது வளர்ந்து வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்துக் குடிப்பது பலநாடுகளில் அமுலுக்கு வந்தாகி விட்டது. தண்ணீர் சார்ந்த் உரிமைகளை வாங்குதல், வணிகம், விற்றலில் முக்கியத்துவம் பற்றிய புதிய நடைமுறைகள் உலக அளவில் வந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்  தகவல் தொழில்நுட்பத்துறை இருந்தது போல தண்ணீர் சார்ந்த விசயங்களில் கடுமையான ஒழுங்குமுறைகள் கோரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எந்த  வியாபாரத்திலும் அடிப்படை நேர்மை, அறம் எதிர்பார்க்கப்பட்ட காலங்கள் உண்டு. நுகர்வும், பேராசையும் விசுவரூபம் எடுத்திருக்கும் நவீன உலகில் சூழலைச் சிதைக்கிற ” அறப்போராளிகள் “ வியாபாரத்தில் பெருகி விட்டார்கள். கார்ப்ப்ரேடுகள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு கொண்டு செயல் படுவதே பெரும் அறமாகக் கொண்டாடப்படுகிறது.

 தண்ணீருக்கான தேடல் பல நாடுகளில் வறுமையோடு சம்பந்தப்பட்டது  என்பதையும் மறுப்பதற்கில்லை. சாதாரண புல் பூண்டிற்கும், விலங்குகளுக்கும் கரிசனம் காட்டிய  வேண்டிய மனிதன் சகமனிதனின் தாகத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது.

அழகான காடு. வியாபாரத்திற்குச் சென்ற தலைவன் தலைவியைக் காண அழகிய மணிகள் உள்ள தேரில் விரைந்து வருகிறான். வரும் வழியில் தேனை உறிஞ்சி உணவு உண்ண தேன் சிட்டுகள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. தலைவனின் தேரின் மணிகள் எழுப்பும் சப்தம் இரைச்சலாகி விடுகிறது. அதைக் கேட்டு பறவைகள் சிதறுகின்றன. தேனீக்கள் சிதறுகின்றன. தலைவன் தன் தேரோட்டியிடம் மணிகளின் நாக்குகளை எடுத்து விடும் படி செய்கிறான். அவனின் விரைந்த பயணம் தொடர்கிறது.

அகநானூற்றில் இக்காட்சி பாடல் ஒன்றில் இடம் பெற்றிருக்கிறது. தேன் சிட்டுகளுக்கு கூட துன்பம் தரக்கூடாது என்கிறது இப்பாடல். இயற்கையை நேசிப்பதும், அதனுடன் இயல்பாக உறவாடுவதும் நல்ல வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்று நமது இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' பற்றி வள்ளுவரும் சொல்லி அறமாக்கியுள்ளார்.

    மனிதனின் பேராற்றலும், பிறவற்றைக் கட்டுப்படுத்தும் ஆசையும் காடு, மலை, கடல், மணல் என்று எல்லாவற்றையும் சீரழிக்கிறது. உலகில் எல்லாவகை உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. ஒவ்வொரு உயிரினமும் தனக்கானப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு பாக்டீரியா கூட தான் சார்ந்து வேறொரு நுண்ணுயிர்க்கு உணவையும் பாதுகாப்பையும் தரக்கூடியது. அனைத்து உயிர்களும் வாழ எதிர் நோக்கும் அறத்தை கொல்லுவதை காடுகளை அழிப்பது, ஆறுகளை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழலை கெடுப்பதன் மூலம் மனிதன் செய்கிறான்.

    "யுத்தம் முடிவுக்கு வரப்போகும் நாள். நம் பாவங்களுக்குக் கடவுளால் நடத்தப்படும் விசாரணை நாள். அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அகத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமானவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" -பைபிள்-வெளி 22:11-12.

    "(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவர். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி, கணக்குக் கேட்பதில் மிக்க கெடுப்பானவன்" -குர்ஆன்- அர்ர அது 13:41.

    5-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புத்தமதத் துறவியான புத்த கோஷா, "அழிவின் தொடக்க நிலையில், தெய்வீகத்தை அடைந்த துறவிகள் இல்லாமல் போவார்கள். இரண்டாம் நிலையில் புத்தரின் உண்மை போதனைகளைப் பின்பற்றப் போவதில்லை. கடைசி நிலையில் புத்தரைப் பற்றிய நினைவும் இல்லாமல் போகும்" என்றார்.

    கி.மு. 250-900 வரையிலான காலத்திய அமெரிக்கப் பழங்குடிகளான மாயன் சமூகத்தினரின் பெரு நாட்காட்டி 0.0.0.0.0 எனத் தொடங்கி. ஒவ்வொரு வரிசையும் 0-19 வரை மாறி சென்ற  டிசம்பர் 21-ல் 13.0.0.0.0 (5,125 ஆண்டுகள்) என இருக்கப்போகிறது. இந்த தேதிக்குப் பிறகாக நாட்காட்டியில் எதுவும் குறிக்கப்படவில்லையெனப்பட்டது. இதனடிப்படையில் 2012 டிசம்பர் 21-உடன் உலகம் அழிவுக்கு வரும் என்று சொன்னதும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உலகம் அழிவதென்னமோ சுற்றுச்சூழல் கேட்டினால்தான் என்று தோன்றுகிறது. பாரதி சொன்னதை இயற்கை மீதானக் காதலாகவும் வழிபாடாகவும் கடைபிடிக்கக் கூடியதாக மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா உயிர்களுக்குமான சமநிலை மிக் முக்கியமாகும்.

    "மண் மீதுள்ள மக்கள் பறவைகள்
    விலங்குகள் பூச்சிகள் புல் பூண்டு மரங்கள்
    யாவும் என் வினையால் இடும்பே தீர்ந்தே
    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட”

தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது. பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார்.

அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களில் காட்டப்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில் சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படிபூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதி விளங்கி விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

காதலை மையப்படுத்தியே இயங்கும் இந்தியத் திரைப்பட, வெகுமக்கள் படைப்பிலக்கிய உலகம்  தண்ணீரில்லாமல் காதலர்களும் வாழ முடியுமா எனபதை மையமாக்க் கொண்டு படைப்புகளுக்காய் கதைகளைத் தேடும் காலம் சமீபத்து வருகிறது. “ தாகத்துடன் இருப்பவர்களுக்கு எந்த விலையுமின்றி நீருற்றிலிருந்து தண்ணீர் தருவேன் “ என்ற பைபிளின் வாசகங்களை தேர்தல் வாக்குறுதியாக கொள்ளும் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கட்சிகளும் வெகு சீக்கிரம் உணர்ந்து அந்த கோசங்களை கையிலெடுக்க தயங்க மாட்டார்கள். முகத்தில் பிராண வாயு கவசம், கை, கால்களில் பாதுகாப்பு உறைகள் அணிந்தபடி  அந்தவகை வாக்குறுதியைத்தரும் கட்சிக்கு  வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு இந்தியக் குடிமகன் செல்லும் காலமும் கற்பனைக்கு அப்பாற்பட்டதல்ல. அறம் படிமச் சிலையாக காட்சிக்கு தெரிந்து கொண்டிருக்கிறது.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்