சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 14 அக்டோபர், 2009

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'
===================================================


முன்னாள் துணைவேந்தர் ப க பொன்னுசாமியின் புதிய நாவல் "படுகளம்" நூல் பற்றிய அறிமுகக் கூட்டம் உடுமலை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மருத்துவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.நாவலினை சுப்ரபாரதிமணியன், கிருஸ்ணராஜ், பள்ளபாளையம் ஆறுமுகம் ஆகியோர் விமர்சித்துப் பேசினர். ( " "படுகளம் " ' நாவல் மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு, விலை ரூ300 )

ப‌ க‌ பொன்னுசாமியின் " நூற்றாண்டுத் தமிழ் " நூலை முன் வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மோகன செல்வி வாசித்தார்.


சுப்ரபாரதிமணியனின் " ஆழம் " சிறுகதைத் தொகுதியை ப க பொன்னுசாமி வெளியிட மடத்துக்குளம் பஞ்சலிங்கம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ( ஆழம் சிறுகதைத் தொகுதி, அறிவு பதிப்பகம் வெளியீடு விலை ரூ 65 )



ப க பொன்னுசாமி ஏற்புரை நிகழ்த்தினார். " கொங்கு மண்ணின் ஒரு பகுதியான உடுமலை மக்களின் கிராம வாழ்க்கையை முப்பதாண்டு கால அளவில் இதில் முன் வைத்துள்ளேன். என் கிராம மனிதர்களின் மனித நேயம், நற்குணங்கள், விவசாயம், கரும்பு நடல் உட்பட பல விசயங்கள் நாவலில் தளமாகி உள்ளன. ப்டுகளம் என்பது கவுண்டர் ஜாதியில் நடக்கும் ஒரு சடங்கு என்றாலும் , இன்றைக்கு உலகமே சமூக, ஜாதீய பிரச்சினைகளால் படுகளமாகி போராட்டமாய் விளங்குவதை சித்தரித்துள்ளேன். எனது முந்தின ஆறு நூல்களும் அறிவியல் நூல்கள். அறிவியல் வளரும். ஆனால் இலக்கியம் வாழும் என்பதால் நம் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பதிவு செயவதற்காக இந்த நாவலை எழுதினேன். எனது அடுத்த நாவல் இந்த நாவலில் நாம் சந்திக்கிற மனிதர்களின் அடுத்தத் தலைமுறைகளைப் பற்றியதாக இருக்கும். ஆங்கிலத்திலும் அதை ஒரே சமயத்தில் வெளியிடுவேன். "

மஞ்சளாதேவி, சுப்ரமணிய சிவா, மருத்துவர் ஜனனி உட்பட பலர் பேசினர் . கனவு இலக்கிய வட்டம் இந்த கூட்டத்தை நடத்தியது.



" படுகளம் " நாவல் பற்றின எனது கட்டுரையை " தீராநதி " ஜூலை இதழில் வாசியுங்கள் .