சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 11 செப்டம்பர், 2009

செய்தி சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
==================================================


சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி நாவலை வெளியிட்டுப் பேசினார். " மூன்றாம் உலக நாடுகளின் ச்ற்றுச்சூழல் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து மனித உரிமை விசயங்களாக மாறி வருகின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் சார்ந்த அக்கறையை கலைப்படைப்புகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை " நாவல் வலியுறுத்துகிறது. " என்றார்.

" சாயம் புரண்ட திர " நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் கோவையைச் சார்ந்த ஸ்டேன்லி ஆவார். திருப்பூரின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையாமாகக் கொண்டும் , நொய்யலை ஒரு கதாபாத்திரமாகவும் கொண்ட " சாயத்திரை " நாவல் ஆங்கிலத்திலும் ( டாக்டர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பு ‍ The coloured curtaiந் ), ஹிந்தியிலும் ( மீனாட்சிபுரி மொழிபெயர்ப்பு ‍ Reng Rengli sadhar meiheli ) முன்பே மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. கனனடத்தில் தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து 2 ஆண்டுகள்ல ஆகி விட்டது. அது விரைவில் வெளி வரலாம்.

" சாயம் புரண்ட திர " நூலை திருவனந்தபுரம் " சிந்த " பதிப்பகம் வெளியிட்டுள்ளது . விலை ரூ 85



செய்தி : issundarakkannan7@gmail.com

-------------------------------------------------------------------------------------
சாயத்திரைகள்




சுற்றுச் சூழல் சீர்கேட்டில் சாயப்பட்டறைகள் குறித்த எந்தவொரு முனுமுனுப்பையும் சகித்துக் கொள்ளாதபடி தொழில் சமூகம் இருந்தது. மூடப்பட வேண்டிய சாயப்பட்டறைகளின் பட்டியல்கள் நீதிமன்றங்களும் மாத கட்டுப்பாது வாரியல்களும், அரசும் அறிவிக்கிற போது தொழிலாளர் நலனை முன்னிருத்தி அவை பயங்கரவாத செயல்களாக பேசப்படுவது கேளிக்குறியது. சுற்றுச் சூழல் பற்றின அக்கறை நியாய வணிகத்தின் நெறிமுறைகள் திரும்ப திரும்ப பல்வேறு வகையான ஏற்றுமதிக் கொள்கைகள் மனித உரிமை அம்சங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை அலட்சியப்படுத்தப்படும் போதும் தொழில் சமுகம் இவ்வகை நெருக்கடிகள் குறித்து யோசிக்காதது இன்னும் கேலிக்குள்ளானது.

சாயப்பட்டறை சலவை ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று கடலில் கலக்கம் செய்ய வேண்டும். இது மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி என்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் நகராட்சியின் தலைவருமான ஒருவர் சுனாமியில் பாதிக்கப்பட்ட காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சி தரும் இந்த சுனாமி செய்தி இப்பிரச்சனைக்கு சாயப்பட்டறைகள் மட்டுமா காரணம் என்று கொதிக்கிறார்க்ள் சாயப்பட்டறை உரிமையாளர்கள். பின்னலாடை தயாரிப்பில் 6000 கோடி அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதில் சாயப்பட்டறைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டால் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறையும். நிலத்தடி நீர் தில்சூர் மட்டுமல்ல அதையொட்டிய ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விவசாய பயன்களுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பளையம் அரசு தில்சூர் சாயக்கழிவுகளை தேக்கி வைத்திருக்கிற வெடிகுண்டாக இருக்கிறது. அதில் தேங்கியிருக்கும் சாய நீரை வெளியேற்றுவது குறித்து பல சர்ச்சைகள் உள்ள அணையைத் திறந்து விடாதீர்கள் என்று விவசாயிகள் கூக்குரல் இடுவது சாதரணமாகி விட்டது. உலக சுற்றுச் சூழல் தினத்தில் அணையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகும் இளைஞர்கள் அவ்வப்போது அணையில் மதகுகளை திறக்க வேண்டாம் என்று சொல்லி மறியலில் கைதாகும் விவசாயிகளின் நம்பிக்கைகளும் தகர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களை வழி நடத்தும் சிறு சிறு குழுக்களின் தலைவர்கள் பல்வேறு தரப்பிலிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். தங்கள் வீடுகளின் கல்யாணம், சாவு காரியங்கள் ஊர் பொது கோவிலில் திருப்பணிகள் காரணமாய் இப்பிரச்சனையில் தாங்கள் ஈடுபட முடியாமல் இருப்பதாக அவ்வப்போது தெரிவிக்கிறார்கள். ஓரத்துப்பiளாயம் சாயக்கழிவு குறித்த போராட்டத்தை முன் நின்று நடத்திச் செய்ய தன்னார்வக் குழுக்களும் தயங்குகின்றன. அப்பகுதியின் விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றினைவதில் பல தடைகள் நிர்பந்தங்கள் உள்ளன. விவசாயிகளே சட்ட ரீதியான அலோசனைகளுக்கு கூட தங்களை தயார்படுத்திக் கொண்டு தன்னார்வ குழுக்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறத் தயங்கும் போது போராட்ட செயல்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.

ஓரத்துப்பாளையம் சாயக்கழிவை சுத்தம் செய்ய ரூபாய் 6 கோடி என்ற சாதாரண நஷ்ட ஈட்டுத் தொகையை உயர்நீதிமன்றம் உத்தரவாக சாயப்பட்டறைகளுக்கு வழங்கியது. அதில் சொற்ப பணமாக ரூபாய் 1 கோடி மட்டும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிலும் முதல் தவணையாக ரூபாய் 1 கோடி மட்டும் பெயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் சொன்ன நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டுதல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்கி தொழிலைத் தொடர்தல் என்பது மட்டுமே இன்றைக்குள்ளத் தீர்வாக உள்ளது. சுமார் ஆயிரம் சாயப்பட்டறைகள் உள்ள ஊரில் 5ரூ சாயப்பட்டறைகள் மட்டுமே ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் என்ற சாயக்கழிவு நீரை மறுசுழற்சி சுத்தமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கழிவுநீர் மறுசுழற்சி முறைக்காக ஆகும் செலவு லாபத்தை குறைக்கும் என்பதே தயாரிக்ககுறியதாகிறது பொது சுத்திகரிப்பு முறை என்பது பெரிதாக முன் வைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை கை கொள்ளாதவர்கள் தொழிலில் இருந்து துரத்தப்படுவார்கள் என்பது தொழில் சமூகத் தரப்பிலிருந்தே பல ஆண்டுகளாய் எச்சரிக்கையாய் விடுக்கப்பட்டதை மறுத்ததால் சிறிய சாயப்பட்டறையினர் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

சாயக்கழிவு நிர் பிரச்சனைக்கு சாயப்பட்டறையினர் மட்டுமே காரணமல்ல பணியின் உற்பத்தியாளர்களும் எனவே நஷ்டஈட்டை அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்பதில் மேற்கத்திய நாடுகள் அக்கறை கொண்டிருக்கும் நேரத்தில் பணியின் சாயக் கழிவால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித உரிமை பிரச்சனையாக விருவரூபம் எடுப்பது மேலை நாடுகள் தங்களின் தொழில் அக்கறையை திருப்பூரிலிருந்து வேறு ஊர்களுக்கு நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடும் சூழல்கள் உருவாகியுள்ளன.

சமீபத்தில் சில சாயப்பட்டறைகள் மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவில் அதிர்ச்சி அடைந்த சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தமே தொழிலாளர், முதலாளிகள் தரப்பில் பல வகை அச்சங்களைக் கிளப்புவதாக இருந்தது சாயப்பட்டறைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் அதை பயத்துடன் ஓய்வு தினமாக எடுத்து கொண்டனர் ஆனால் ஒரே நாளில் சாயப்பட்டறைகளுக்கு பயன்படும் உப்பு, சாயம், ரசாயனம், விறகு, தண்ணீர் ஆகியவற்றின் விற்பனையான ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டது. திருப்பூர் சாய ஆலைகளில் ஒரு மாதத்தில் 400 டன் சாயமும், 500 டன் சோடா வாஷ், காஸ்டிக் சோடா, உள்ளிட்ட ரசாயனப் பொருட்களும் 1000 லோடு சோடியம் குளோரைடு உப்பும் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர இதனால் அரசுக்கு வரும் வருமான இழப்பும் பெரிய தொகையாகும் சாய சலவை தங்களுக்கு ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் பயன்பாடாகிறது. இவை முழுக்க வாலிகள் மூலமே கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் கொண்டு வரப்படுத்தலிலும் சிக்கல்கள் தொடர்கின்றன அவை எடுத்து வரப்படும் பக்கத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கிராமவாசிகள் நடத்தும் மறியல் போராட்டங்கள் தொடர்வதால் இன்னும் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. பவானியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பொதுமக்களும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது தொழில் நலத்தை முன்னிட்ட துரோகச் செல் என்று வெளிக்காட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

சாயப்பட்டறைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திருப்பூர் தண்ணீர் திட்டம் தெற்காசியாவிலேயே கட்டி, உரிமையாக்கி இயக்கி மாற்வம் திட்டம் எனப்படுகிறது. பவானி ஆற்று நீர் இதற்கு பயன்படப் போகிறது. இதில் நாளொன்றுக்கு 1150 இலட்சம் லிட்டர் நீரை பின்னலாடைத் துறையினர் பெறுவர். திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கும் இத்திட்டத்தில் மகேந்திரா மகேந்திரா (இந்தியா) பெச்டெல் (அமெரிக்கா), யுனைட்டெட் யூடிலிட்டி (இங்கிலாந்து) முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயிரம் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய் தண்ணீர் கட்டணம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோகத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ஐந்து ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது பவானியில் நீர் குறைந்து போவது மற்றும் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகும்போது பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்திலிருந்து நழுவிக் கொள்வது திருப்பூரை பாலைவனமாக்கும்.

தமிழகத்தின் தண்ணீர் மயமாக்கம் திட்டத்தின் முன்னோடியான திருப்பூர் பல சந்தேகங்களையும், சங்கடங்களையும், உருவாக்கியுள்ளது பின்னர் பசி சாவுகள் போல தாக சாவுகளும் ஏற்படும் செய்திகள் விஷக்காய்ச்சலால் பரவும் கண்களை மறைக்க பல திரைகள் உள்ளன.