சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்