சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 20 ஆகஸ்ட், 2009

சாகித்திய அகாதமி

கவிதை குழாம்; வத்தலகுண்டு
=============================

வ‌த்தலகுண்டு சி சு செல்லப்பா, ராஜம் அய்யர், ராமையா போன்ற இலக்கிய முன்னோடிகளையும், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திர தியாகிகளையும் நினைவு கொள்ளச் செய்யும் ஊராகும். சிறப்பு தன்மை வாய்ந்த ஊரில் சாகித்ய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுப்ரமணிய சிவா வீட்டைத் தேடிப்போனால் யாரும் அடையாள‌ம் காட்ட மறுக்கிறார்கள். நினவிடம் என்று எதுவும் இல்லை. புது வீடு முளைத்திருக்கிறது. செல்லப்பா வீட்டை நினைவு கொள்ளும் அவரின் உறவினர்கள் ஆறுதல் தந்தார்கள். ராஜம் அய்யரின் நினைவாய் ஒரு கல்வெட்டு இருந்தது. இலக்கிய முன்னோடிகளின் ஊரில் அவர்களை அடையாளம் காட்ட ஆளில்லை. வருத்தமாக இருந்தது.
சுப்ரபாரதிமணியன் நவீன தமிழ்க் கவிதையை அடையாளப்படுத்தும் வகையில் இரு கவிஞர்களைப் பற்றிய கட்டுரையை வாசித்தார்.1 சிற்பி பாலசுப்ரமணியன். மூத்த கவிழஞர் என்ற வகையில் மரபும், புதுமையும் இணைந்த முயற்சிகளை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைதொகுப்பை முன் வைத்து விளக்கினார். இளைய கவிஞர் என்ற முறையில் சூரிய நிலாவின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து நவீன அம்சங்களை எடுத்துரைத்தார்.தென்மண்டல செயலாளர் இளங்கோவன் சாகித்திய அக்கதமியின் ஒருமைப்பாட்டு பணியை பல் வேறு நிகழ்ச்சிகளை முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார்.தங்கம் மூர்த்தி நவீன கவிதையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றி பேசினார். ஆனைவாரி ஆன்நதன் மரபுக் கவிதயின் பலம் பற்றி எடுத்துரைத்தார்.


கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை காவல் துறை அதிகாரியும் கவிஞருமான சின்னசாமி துவக்கிவைத்தார்.... 2000 ஆண்டு கால் மரபு கொண்ட தமிழ்க் கவிதையின் செழுமை பற்றி விள‌க்கினார். பழ‌மலை கவிஞ‌ர்களை அறிமுகப்படுத்தியும், தமிழ் சூழ‌லில் அரசியல் செலுத்தும் செல்வாக்கு பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர்கள் ரசூல், சக்தி ஜோதி, ரத்திகா, சுபமுகி, மயூரா ரத்தினசாமி. அம்சப்பிரியா,பழமலை,சாஜகான்,தங்கம் மூர்த்தி, யவனிகா சிரிராம்,அமிர்தம் சூர்யா , சுதிர் செந்தில் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.மனுஸ்யபுத்திரன் உடல் நல‌க் குறைவு காரணமாக கலந்து கொள்ள முடியவிலலை.கவிஞ‌ர்கள் சந்திப்பு மற்றும் கலந்திரையாடலுக்கான நல்ல களமாக வத்தலகுண்டு கவிஞர்கள் சந்திப்பு அமைந்திருந்தது.எழுத்தாளர்கள் காமுத்துரை, ஸ‌பி, வதிலை பிரபா, அல்லி உதயன், தாரகை போன்ற கவிஞர்களும் கலந்து கொண்டனர்.