சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 30 மார்ச், 2009

காலச்சுவடு

சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
திரு. மீரா அவர்கள் எனது முதல் கவிதைத் தொகுப்பான "புதையுண்ட வாழ்க்கை'யை வெளியிட்டார். அவர் பெயரால் விருது வழங்கப்படுகிற போதுதான் அவர் மறைந்தது எனக்குத் தெரிய வருவது என் துரதிருஷ்டம். அவருக்கு அஞ்சலியாக இந்த மூன்று கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


மரணத்தின் நுழைவாயிலுக்கு
சென்று திரும்பிவிட்டேன்
வந்த பின்னர் இன்னும்
மரணத்தைப் பற்றின ஆசைதான்
ஆனால் என் குழந்தைகளின்
கண்ணீரில்மனது ஊஞ்சலாடுகிறது
எனக்கும் சூரியனுக்கும்
மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது
எல்லோரும் ரிஷிகளாகிறார்கள்
மெüனம் எப்போதும்
என்னைச்சிறையில் அடைக்கிறது.
மரணம் ஒரு பெரிய விசயமல்ல.
உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு
பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும்
கடிகாரத்தைப் போலவே
மனமும் மரணமும் . . .
பரிசுகளும் பாராட்டுகளும்
ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன
ஆனால் நானும் என் உடலும்
மெüனமாய்த் தொங்குகிறோம் - தூங்குகிறோம்
மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன்
வேதனையைத் தூண்டிவிடுகிறது.
மூளை இறந்தபடி வாழ்கிறேன்

பதிவேட்டில் ஒரு முகம்
எப்போதும் உள்ளத் தூய்மை
வள்ளுவர் சொல்கிறார்.
வள்ளுவர் படத்தைப் பார்க்கிறேன்
அவர்தான் இதைச் சொல்கிறார்.
எப்போதும் ஊக்கமளிக்கும் சொற்கள்
எப்போதும் பண்பான செயல்
வள்ளுவர் சொல்கிறார்.
புத்தகங்களைப் படித்துஎதுவுமே
நிகழவில்லைநிமிடத்திற்கொரு முறை
மாறும் என் மிருகம்
விடுதலை ஆகிவிட்ட பின்பும் மனக் கூண்டிற்
குள்வள்ளுவர் சொல்கிறார்வெளியே வா
வெளியே வந்து நான் யாரிடம்
என்ன சொல்லஎன் அறியாமையின் கூண்டினுள்
எதிர்காலம் சிற்பங்களாய்.
வள்ளுவர் இதையே சொல்கிறார்.
எப்போதும் விடுதலை கேட்கும்
என் உயிர்கள்.எக்காளமிட்டுத் திரிகின்றன
உயிர்களின் குரல்கள்
.வள்ளுவர் இதையே சொல்கிறார்.

சுக துக்கங்கள் ஒரு தராசுபூலச்சந்தர்ப்பவாதம்
எப்போதும் வெல்வதில்லை
ஓயாத குரலில் அழுது
துடிக்கும் குழந்தைமொழி
தெரியாமல் சிரிக்கிற பெண்கள்.
எப்போதும் சுவற்றுடன் ஓயாத
ஓவியங்கள்கவலையற்றுக் கிடக்கிறது
பூமிஏன் என்று அழுகையில் கிடக்கிற
வானம்பூக்கள் இன்னும்
பூத்துக்கொண்டிருக்கின்றன.
எப்போதோ ஓய்ந்துபோன கவலைகளை
சுவடற்றுப் போக்க எல்லாமும்.
எப்போதும் எதுவும் நிரந்தரமில்லைதான்.