சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 19 அக்டோபர், 2010

திருப்பூர் : தற்கொலை நகரம்

சுப்ரபாரதிமணியன்



சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்

“ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை முயற்சிகளும், மாத்த்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற்கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர்..இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குற்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.

( முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்- தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். -, மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகித்த்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன. )

10லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்து போகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்ற 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.

திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு

படையெடுக்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காக செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக்கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறை கூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீதின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன . அதனால் 5டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு

.

பல சமயங்களில் வேலை நிரந்தரமின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.

இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடுமப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது க்டன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த கடனிலிருந்து மீளவது சிரம்மாகி விடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணி நேர உழைப்பு என்பது இங்கு அமுலாக்கப்படுவதில்லை. குறைந்த்து 10 மணி நேர சிப்ப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும் போது தான் சாத்தியமாகிறது. அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி , வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை வாங்குவதிலும் தன் சேபிப்பை செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான

.

தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும் போது பெண் ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தயும் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஆண் ஊரில் இருந்து கொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவாசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம்பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் போது சுதந்திரமாய உணர்கிறார்கள். ஜாதி உணர்வை புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் வேற்று பாலியல் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும் , தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன. .

. தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டு போயிருக்கிற தொழிலாளிக்கு பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிகைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும்,

கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாக கருதுவதில்லை, அதற்க்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள். அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்கு தடங்கல் இல்லை என்றுத் தெரிகிற போது வெளியேறுப்வர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத்துடிக்கிறவனாக்க்குகிறது.தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிற போது தொழிந்சங்கங்களை அணுகுவதை விட தொழிற்சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. வாரம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம் தரப்படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழ்ழிற்சங்கத்தினர் அவனை அணுகுவது கூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ந்ல்ல பூங்காக்களோ ( இருக்கு ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர்நார்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது. ) இல்லை. மாவட்டம் என்று ஆகிவிட்டாஅலும் மாவட்ட்திற்கான மையநூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் ப்ப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடிநீருக்காக மக்கள் பணம் தருவதை கட்டயமாக்கும் திட்டம் இது.இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதை சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலை சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியை சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏர்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும் ,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன. தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும் , திரவ புட்டியின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை.சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்ர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்று சூழல் பாதிப்பு எற்படுகிறது.சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச் சூழல் பாதிப்பும் , சுற்று சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை.தொழிற்சங்கவாதிகளும் , அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்க்க கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் . தர முடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாத்தாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனை பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ் ரேட் செய்கிறவனாக , காண்டிராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனை பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்.

சமூக மனிதனாக அவன் நடமாடுவதாற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத்தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது முந்தின தலை முறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வளர்ந்ததின் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சார குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக் தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த .சூழல்கள் அவனை சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நிய செலவாணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும் கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்த போனஸ் இது.

சுப்ரபாரதிமணியன் , subrabharathi@gmail.com

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு

சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.


” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு


சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.


Interior Decoration :ஆங்கிலk கவிதை தொகுப்பு


பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.


( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )


நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்


பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.




wwww.thinnai.com 

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சுப்ரபாரதி மணியன்: FRONTLINE#links#links

சுப்ரபாரதி மணியன்: FRONTLINE#links#links

சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு

சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு

--------------------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.

Interior Decoration :ஆங்கில கவிதை தொகுப்பு

--------------------------------------------------------------------------------

பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.

( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )

நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்

--------------------------------------------------------------------------------

பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.

FRONTLINE


Subrabharathi Manian. His writings espouse the cause of the poor.


“THE greatest tragedy of Tirupur, the erstwhile bastion of the leftist and trade union movements in western Tamil Nadu, is that the class consciousness of the workers, more particularly the migrant labour in the garment industry, has been blunted and they are being pushed into the drudgery of a monotonous, dull and mechanical life,” says Subrabharathi Manian, a member of the Sahitya Akademi Advisory Board, who in his writings espouses the cause of the poor and the marginalised, particularly the migrant labourers in the garment industry.

Talking to Frontline, he expressed anguish at reports on suicides and attempts to commit suicide by migrant workers and their family members. “Many migrant workers in the garment industry, who alienate themselves from the trade unions in a bid to earn more through hard work, ultimately slip into depression the moment they realise that they have been drawn into an illusory world of prosperity,” he said.

According to him, the worst hit among the migrants are single parents and their children. He recalled how he, along with his parents, migrated to Tirupur five decades ago, when he was hardly 10 years old, from his native Segadanthaazhi village. For hundreds of families in Segadanthaazhi and a few other villages in the area, Tirupur's fledgling hosiery industry offered hope .

Manian learnt a lot about the travails of migrant labourers when he was an employee of the Telecom Department in Hyderabad for eight years, until 1993. The labourers, most of them from southern Tamil Nadu looking for work in Andhra Pradesh, inspired his first novel, Matrum Silar (And a Few Others), in 1989. Issues such as inter-State river water disputes, which posed a formidable challenge to national integration, provoked him to pen Sudu Manal (Hot Sand) in 1992.

When he returned to Tirupur in 1994 he was stunned by the growth of the knitwear industry, which had started earning foreign exchange to the tune of Rs.10,000 crore. But soon he was able to see the other side of the “Dollar City”, with 30,000 children employed in the hosiery industry. Beside, the release of untreated effluents into the Noyyal river, the lifeline of Tirupur, by dyeing units added to the agony of the farming community.

As a socially conscious writer committed to socialism and democracy, Manian wielded his pen against the evil practice of child labour and the pollution of the Noyyal. His novel Saayathirai (The Coloured Curtain), published in 1994, described the devastating effect of effluents from dyeing factories on the cultural and economic life of the people. Translated into English, Hindi, Malayalam and Kannada, the novel won the appreciation of the literary world. A recipient of the “katha” award for the ‘best short story writer' and the Tamil Nadu government's award for ‘best novel', he has authored 30 works, including seven novels, 13 short story collections and a travelogue.

It was a sad reality that activists of different political parties in Tirupur were prepared to discuss everything under the sun but carefully skirted issues such as child labour, labour rights and protection of the environment. Marxism helped him to see things from a different perspective. Along with a few NGOs, he and his friends in the progressive literary circles launched an awareness campaign on child labour and environment protection. However, he made it clear that they were not opposed to industrial development or science and technology.

They were disheartened by the lukewarm response from the people and the industry but saw light at the end of the tunnel in the form of pressure on the exporters from buyers. This forced the exporters to adopt mechanisms such as social audits, including ISO 9000 and Social Accountability 8000, to ensure labour standards and eco-friendly garments, he said. The media forced the government to intervene, he added.

Though child labour was no longer in vogue in the big export units, it was still practised at the sub-contract level and by some of the units producing knitwear for the domestic market, said Manian. Exporters now responded to issues relating to pollution, and corporate social responsibility and fair trade practices were among the issues that were widely discussed in the town, said Manian.

Large-scale influx of migrant workers added a new dimension to Tirupur's problems. These first-generation workers are mostly single men or women and they tire themselves out when still young.

Manian said government agencies, exporters, trade unions, political parties and intellectuals should put their heads together to evolve a strategy to ensure that the garment labourers were treated humanely. Writers had a key role to play in this regard, he concluded.

S. Dorairaj


--------------------------------------------------------------------------------


நன்றி

FRONT LINE

http://www.hinduonnet.com/fline/stories/20101008272001800.htm

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி

திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.

இங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருருந்தார் தமிழருவி. உறுப்பினர் சந்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். ( நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்க என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.
ஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.
3. லியோனி 4. ராசா
சிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.


======================================================>சுப்ரபாரதிமணியன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
--------------------------------------------------------------

- சுப்ரபாரதிமணியன்

தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.

இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.

நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.

முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.

ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.

இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .


நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

-------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்


தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் வருமானவரி தொல்லை, ரெய்டு என்று ஆரம்பித்து தொல்லை தொடரும். எடுத்த படத்தை அவர்களிடம் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் சொல்லும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவது உத்தமம். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் இவர்கள் வசம் என்பதால் இடியாப்பசிக்கல். இவர்களின் கைங்கரியத்தால் தியேட்டர் கிடைக்காமல் 60 படங்கள் காத்துக் கிடைப்பதாய் ஆனந்தவிகடன் தகவல் தந்திருக்கிறது. திரைப்படங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தகுழுமத்தால் திரைப்படத்றையினருக்குத் தலைவலி. திரைப்படதுறை முடங்கிப் போகும் சூழல்.பத்திரிக்கைத்துறையில்எதிர் கருத்தாளர்களுக்கு இருக்கும் மிரட்டலும், தாக்குதலும் அபாயகரமானவையாக மாறிஉள்ளன. சூர்யா, கார்த்திக் எந்தப்படங்களில் நடிப்பது என்பதை அவர்களோ, தந்தை சிவகுமாரோ தீர்மானிக்க முடியாது. சிவகுமார் சொற்பொழிவுகளில், பேச்சு சிடி தயாரிப்பதில் அக்கறை கொண்டு பொழுதைப் போக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சிவகுமாரின் இது “ ராஜபாட்டை அல்ல” ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆங்கிலத்திலும் அதே தலைப்பில்.. ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு தலைப்பு இடப்படவில்லை என்று தெரிகிறது.இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. தலைப்பு ஆங்கிலத்தில். உள்ளே தமிழ் அறிஞர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கின்றன. அந்த தமிழ் அறிஞர்கள் பற்றி ஆங்கில வாசகன் அறிந்திருக்காத போது அவற்றால் என்ன பயன். சோ, தமிழருவி மணியன், நக்கீரன் கோபால் ஆகியோரின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது அவர்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் இல்லை. சிவகுமார் பற்றிய அறிமுகக்குறிப்புகள் கூட இல்லை. தமிழில் இதைப் படித்தவன் எதற்கு மறுபடியும் ஆங்கிலத்தில் படிக்கப்போகிறான்.ஆங்கிலவாசகர்களை மனதில் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிப்பட வேண்டும். அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையினர் எழுதிய புத்தகங்கள் என்றால் அவற்றைல் 200, 500 பிரதிகள் பெற்றுக்கொள்ள பணக்காரர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்ப்பில் வரும்போது அவர்களைப் பாராட்ட நல்லி போன்று சிலர்தான் இருக்கிறார்கள். இவ்வாண்டு 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை மொழிபெயர்பாளர்களுக்கு நல்லி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் வழ்ங்கினார்.

பலபரிசுகளை வாங்கிக் குவித்திருக்கும் சிற்பி பாலசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் மாத்ருபூமி வீரேந்திர குமாரின் பயணக்கதை

” வெள்ளிப்பனி மீதில்” குறிப்பிட்த்தக்கதாகும். தமிழில் இருந்து மலையாளத்திற்கு தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கும் சாபி செருமாவிலாயி 15 ஆண்டுகள் தேனீர் கடையில் வேலை பார்த்தவர். இப்போது கேரளத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.. இவரின் நூலும் பரிசு பெற்றது.

( எனது சுடுமணல் நாவலை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். )

ஆகாசம்பட்டு சேசாசலம், கீதா சுப்ரமணியன், அசோகன் முத்துசாமி, ஆர் பி சாரதி, , மா ராமலிங்கம், தருமி , சுப்ரபாலன், பாலாஜி ஆகியோர் பரிசு பெற்ற மற்றவர்கள். கொஞ்சம் ஆங்கிலப்புலமை, வெளிநாட்டில் இருந்தது ஆகிய தகுதிகளே பலருக்கு ஆங்கிலத்திலிருந்து நூல்களை மொழிபெயர்க்கும் தகுதியையும், பரிசையும் கொடுத்திருப்பதை சமீபத்தில் வந்திருக்கும் சில ஆங்கில மொழி ஆக்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சம்பந்தப்பட்ட நூல்களின் மூல களமும், கலாச்சார விசயங்களும் அக்கறை கொள்ளப்படாமல் இயந்திர ரீதியான மொழிபெயர்ப்புகளாய் அவை அமைந்திருக்கின்றன.



கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ( 2 முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர், சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர்) கடந்த 15 ஆண்டுகளாய் கவிஞர்களுக்கு பரிசு அளித்து வருகிறார். இவ்வாண்டு சிற்பி இலக்கிய விருதில் 1 லட்சம் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டவர்கள்: கவிஞர்கள் கலாப்ரியா, இளம்பிறை, மரபின் மைந்தன் முத்தையா , சக்திஜோதி, தங்கம் மூர்த்தி, அழகிய பெரியவன் ஆகியோர், கவிஞர்களுக்கு அங்கீகாரம், பரிசுகள், பாராட்டுகள் சுலபமாகக் கிடைத்து விடுகின்றன. உரைநடையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்களுக்கு அவ்வகை அங்கீகாரம் சுலபமாக கிடைப்பதில்லை. துரதிஸ்டாசாலிகள் அவர்கள்.



சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

சாகித்ய அகாதமி

சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

--------------------------------------------------------------------------------

22-08-10 ஞாயிறு மாலை 5 மணி ,தமிழ்ச் சங்கக்கட்டிடம், சேலம்.
தலைமை; தமிழ்நாடன்

அறிமுகவுரை: சுப்ரபாரதிமணியன்
( சாகித்ய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் )
கதை வாசிப்பு:
பெருமாள் முருகன்
க வை பழனிச்சாமி
இல வின்சென்ட்
மு அம்சா
கவிதை வாசிப்பு:
சூர்ய நிலா
சிபி செல்வன்
அ கார்த்திகேயன்
கு கணேசன்
சக்தி அருளானந்தம்
கோனூர் வைரமணி
க ஆனந்த்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொன்னீலனின் "மறுபக்கம்"

பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்


சுப்ரபாரதி மணியன்



சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும்.



’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.


இதன் மூலமான மதச்சார்பின்மை பற்றி கருத்து வலுப்பட்டு பிரதிபலிக்கிறது. மதக்கலவரங்களில் மக்கள் சிக்குண்டு வேதனைப்படுகிறார்கள். அவன் கழுத்தில் தொங்கும் ஏசுநாதர் இதெல்லாம் கண்டு அலறுவார் என்று ஒரு வாசகம் ஓரிடத்தில் வருகிறது. அவை ஏசுநாதர் மட்டுமல்ல, பல்வேறு மத தெய்வங்களின் அரற்றலாயும் இருக்கும். இதற்கெல்லாம் ஆறுதலாக அமைபவை இந்நாவலில் இடம்பெறும் மகான்களும், அவதார புருஷர்களும்தான். வைகுண்டசாமி, மீட் அய்யர், மார்த்தாண்ட வர்மா, பப்புத் தம்பி, ராமன் தம்பி, அயோத்திய தாசப் பண்டிதர், குன்றக்குடி அடிகளார், ஜீவா போன்றோரின் வாக்குகளும் செயல்பாடுகளுமே மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. இவர்களின் மூலம் சாதியத்திற்கும், அரசிற்கும், வைதீகத்திற்கும், எதிரான எதிர்ப்புக் குரலாக இந்த நாவலின் மையம் தன்னை கட்டமைத்துக் கொள்வது விசேஷமானது. விடுதலை பெற்ற உண்மைகள் மனிதனின் இறுக்கங்களை,அடிமைத்தனத்தை விடுதலை செய்யும் என்பது தெளிவாகிறது. “சேர்வைக்காரன் சாமிய சிவனாக்கியது எவ்வளவு பெரிய ஆன்மிகத் தொண்டு..... அப்ப கிருஷ்ணனை ஏசுவாக்கினா பாராட்டுவீங்களா.... ஏசுதானே சர்வ வல்லமையுள்ள சர்வதேசக் கடவுள். அது அன்னிய மதம்” என்று விவாதிக்கிறார்கள்.


இந்த ஆவணங்கள் சேதுமாதவன் பலரை சந்திக்கச் சென்று சேகரிக்கிற தரவுகள் மூலம் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. வெறும் ஆவணங்களின் தொகுப்பாகவும் பெரும்பான்மை நாவலின் பகுதிகள் அமைந்துவிட்ட பலவீனமும் இதனால் வெளிப்படுகிறது. இது ஒரு வகை நாவல் தன்மையாகவும் கணிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சி.ஆர். ரவீந்திரனின் ‘கண்ணில் மின்னல்’ என்ற நாவலில் திருப்பூர் பற்றிய செய்திகளும், ஆவணங்களும், பத்திரிக்கை விவரங்களும் அப்படியே தரப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நகரம் பற்றிய சித்தரிப்பு தரப்பட்டிருக்கிறது.அந்த வகையிலே பலவகை ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலின் பெரும்பகுதி அமைந்துவிட்டிருக்கிறது. இதில் உலாவும் மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த அலுவல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. முத்து என்ற பெண் கதாபாத்திரம் மட்டும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. திருமணமான உறவு சகிக்க முடியாத்தாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கிற அவளின் முயற்சிகள் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சாதனாதியாக இந்த நாவலில் நுழையும் சேதுமாதவன் வெளியே வர முத்து போன்ற பெண்களும், ஆவணப்பதிவுகளும் உதவுகின்றன. மற்றைய கதாபாத்திரங்கள் வெறும் தட்டையாகத்தான் பிரதிபலிக்கிறார்கள்.


ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவல் முழு வடிவம் எடுக்கிற முயற்சியிலிருந்து கன்னியாகுமரியின் தொன்மக் கதைகள், வெவ்வேறு குரல்களாய் மகான்கள் தென்படுவது, நாடகப் பணியிலான ஒரு பகுதி, உரையாடலாய் தனிப் பகுதிகள், தனி உரையாடல்கள் போன்றவை அமைந்து தப்பிக்க வைக்கிறது. 800 பக்க நாவலில் மனித ஆளுமையோடும், பலவீனங்களோடும் மிகச் சொற்பமாக கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது பலவீனமாகும். சமகால அரசியலை முன் வைக்கும் மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல் என்ற வகையில் அதன் குரல் கரவத்திற்குரியது.


( மறுபக்கம்: பொன்னீலனின் நாவல் , ரூ 350, என்சிபிஎச் வெளியீடு, சென்னை )


விமர்சனம் : சுப்ரபாரதிமணியன்