சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

கரோனா கவிதை .. -சுப்ரபாரதிமணியன்

கிழமைகள் பொதுவாகிவிட்டன.
நடை தூரங்கள் மாடி சுவரின் இருப்புகளுக்குள் அடங்கி விட்டது.
 நாள் முழுக்க முகக்கவசம் அணிந்து முகம் வேறு வடிவம் எடுத்து விட்டது.. துர்வாசம் வீசும் முகக்கவசம்.  முகக்கவசம் எம் 95 வாங்குவதற்கு வசதிப்படவில்லை.
பத்து ரூபாய் பதினைந்து ரூபாயில் சுருக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. பின்னலாடை உற்பத்தி மறுபடியும் துவங்கியிருக்கிறது.
ஆனால் பெரும்பாலும் முகக்கவசங்கள்தான் செய்கிறார்கள். பனியன் துணியில் செய்யப்படும் முக்கவசங்கள் சுகாதாரணமானவையல்ல. அவை கூட அதே விலைக்குத்தான் கிடைக்கின்றன.
மீளமுயாத நாட்களில் கிழமைகள் மாறுவதில்லை.
புத்தகங்கள் இல்லாவிட்டால் தற்கொலை எண்ணம் சுலபமாக வந்திருக்கும். முகசவரம் செய்யாத்தால்
முளைத்த் வெள்ளை நரை மயிர்கள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகான வயதைக் கடத்தி விட்டது.
 வெறுக்கத்தக்கவர்களாக
 சக மனிதர்கள் ஆகிவிட்டார்கள். முகக்கவசம்  போட்டு வருபவர்களைக் கூட உட்கார அனுமதிக்க மனதில்லாமல்...
அழலாம் போலிருக்கிறது .திரைப்படக்குறுந்தகடுகள் வாங்கிச் செல்ல வந்த நண்பருக்கு 75 வயதாகிறது. மலையாளப்படங்கள்தானா
வேறென்ன
நீலப்படம் இல்லையா.
 ஏனோ என்னை நானே வெறுத்துக் கொள்கிறேன்.
அவருக்கு எந்த வகையிலும் உதவிசெய்ய முடியாது.
 இந்த மாதம் செலவழித்த பல்வேறு அமைப்புகளுக்கான பத்தாயிரம் ரூபாய் பெரிய தொகைதான்.
பத்து ரூபாய் நீலப்படக்குறுந்தகடைத்தான் அவர் கேட்கிறார்.
கொள்ளை நோயின் தூதராகஎண்ணி தள்ளி நிற்கச் சொல்லியே பேசி அனுப்புகிறேன்.
ஐம்பது வருடப் பழக்கம்.
ஐம்பது நாள் கொரானாவுக்குப் பிறகு அவரைக்குற்றப்பட்டியலில்  சேர்ப்பார்களா.
ஞாயிறு முடிந்து  வேலை நாள் வரும் என்ற பழைய நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
-சுப்ரபாரதிமணியன்