சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

நியூட்ரினோ நியதி : விளைவும், ஆபத்தும் : ஒரு பார்வை

சுப்ரபாரதிய மணியன்

காளிதாஸ் அவர்களின் தலைமையிலான     கோவை "ஓசை"அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் போது நியூட்ரினோ திட்டம் பற்றி முதலில் அறிந்து கொண்டேன்.
நீலகிரியின் சிங்காரா பகுதியில் அப்போது நியூட்ரினோ மையம் அமைக்கப்படுவதாக இருந்தது. முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும், நியூட்ரினோ திட்ட சுரங்க நடவடிக்கைகள் பைக்கார மின் திட்டத்தை பாதிக்கும் போக்கும் மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பவே சிங்கார திட்டம் தற்போது தேனி மாவட்டதேவாரத்திற்கு மாறி உள்ளது.

120 ஆண்டுகள் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். நியூட்ரினோ என்றால் அணுவின் அடிப்படை துகள்கள் என்று சொல்லலாம். நுண் நொதுமி என்று தமிழில் அதற்குப் பெயரிட்டிருக்கிறது. நியூட்ரினோ அணு ஒளியை விட விரைவாக பயணம் செய்யக் கூடியது. 1330 கோடி செலவாகும். 2030 மீ ஆழம் சுரங்கம் தோண்டப்படும். 50 டன் எடையுள்ள மின் காந்தம் அந்த ஆழத்தில் அமைக்கப்படும்.

நில நடுக்கம், ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், பேரிடர் விபத்துகள், உலகத்தின் தொன்மை, உயிர்களின் தோற்றம் குறித்து நிறைய ஆய்வுகளை நியூட்ரினோ மையம் நிகழ்த்தும். சூரியனில் நடக்கும் பல்வேறு மாற்றங்கள், பிற கிரகங்களில் உள்ள உயிரினச் சூழல் பற்றியும் இது ஆய்வுகளை மேற்கொள்ளும்.

1965ல் கோலார் தங்கச் சுரங்கப் பகுதிகளில் இதை அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டன. நீலகிரி மலையில் அமைக்கப்படுவதால் காட்டுயிர்களின் அமைதிச் சூழல் பாதிக்கப்படும், என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2030 மீட்டர் ஆழமான மலையைக் குடைதல், மரங்களை வெட்டுதல், கழிவுகளைக் கொட்டுதல் என்ற வகையில் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்ற எதிர்ப்பின் காரணமாக அங்கு கைவிடப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் நியூட்ரினோ ஆய்வகத்தில் ஏற்பட்ட வேதிக்கசிவு, நிலத்தடி நீர் மற்றும் காட்டுயிர்கள் மீது ஏற்படுத்திய விளைவுகளால் அங்கு சுற்றுச் சூழல் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தவிர அமெரிக்கா, கனடா, ஜப்பான் நாடுகளிலும் இந்த வகை ஆய்வு மையங்கள் உள்ளன.

இந்த ஆய்வக கட்டுமானப் பணிகள் ஆரம்பத்தில் நிறைய சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கும். 2030 மீ ஆழமான சுரங்கம் தோண்டப்பட வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை. தற்போது தேர்வு செய்து அடிப்படை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேனி மாவட்டம் தேவாரம் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் நிறைந்த பகுதியாகும். இங்கு பொழியும் கணிசமான மழை காரணமாக தென் மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த முல்லைப் பெரியாறு வைகையாறு போன்ற ஆறுகளுக்கு மூலாதாரமான சிறு ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. தேவாரத்திற்கு அருகிலான மேக மலை காட்டு எருதுகள், யானைகளின் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட இடமாகும் மலை அணில் வாழ்விடத்திற்கான சிறப்பிடமாக சுருளை மலை காட்டுப் பகுதி அமைந்துள்ளது.

வான்வெளியிலிருந்து வெளிப்படும் பிற கதிர்களால் நியூட்ரினோ துகள்களுக்கு பாதிப்பு ஏற்படும் நியூட்ரினோக்கள் எங்கும் ஊடுருவும். காஸ்மிக் கதிர்களை சிறந்த முறையில் வடிகட்ட கடினமான பாறை வகைகள் இப்பகுதியில் இருக்கின்றன. மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கப்படும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள நியூட்ரினோ ஆய்வு கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் துகள்களை பூமிக்குள் ஊடுருவச் செய்து தேவாரம் ஆய்வகத்தின் வழியே பெறும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் பிற்காலத்திட்டமும் உள்ளது.

இயற்கையுடன் ஒன்றி வாழும் தேவாரம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கட்டுமான அளவிலேயே அதிகம் பாதிக்கப்படும் சுரங்கம் வெட்டுவதால் வெளியில் கொட்டப்படும் கழிவுகளும், அதை எடுத்துச் செல்லும் போக்குவரத்து நடவடிக்கைகளும், அதனால் உண்டாகும் ஒலி மாசும், காட்டுயிர்களுக்கும், காட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாகவே அமையும். அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வகை ஆய்வுக்காக பழைய சுரங்கப் பகுதிகளை எடுத்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இங்கு புதிதாய் சுரங்கம் வெட்டப்படும் போது பல நுண்ணுயிர்கள், காட்டு விலங்குகள், மனிதர்களுக்கு கல்லறை எழுப்பப்படுவதும் நடக்கிறது.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிய மணியன்