சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 11 ஜூலை, 2012

கோவை இலக்கியச் சந்திப்பு

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து..

கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து அது கோவை நகர மக்களுக்குக் கிடைக்க்க மூலமாக இருந்தவர். கலாநிதி என்ற பெயரிலான முதல் அச்சுக்கூடம், ஆங்கிலேயருடன் சேர்ந்து அவரை இயக்குனராகக் கொண்ட முதல் மில் ஆகியவை கோவையில் நிறுவப்பட்டிருக்கிறது.அவரால் கட்டப்பட்ட டவுன்ஹால் அருகில் இருக்கும் விக்டோரியாவின் நினைவான விக்டோரியா ஹால் அந்தக் காலக் கட்டிடக்கலைக்கு அத்தாட்சியாக விளங்குவது. முதல் பொது நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அவர் பெயரிலான அப்பள்ளியில் இருமுறை சாகித்யா அகாதமி பரிசு பெற்ற புவியரசு, நாவலாசிரியர் சி.ஆர். ரவீந்திரன், கவிஞர் இரணியன் போன்றோர் பணி புரிந்திருக்கிறார்கள். பள்ளி வளாக வகுப்பறை ஒன்று இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு களமாக இருந்தது.

பிர்தொஸ் இராஜகுமாரனின், “ போன்சாய் மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பை ( உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியீடு ) ஜி.தேவி விமர்சனம் செய்தார். தேவி அவர்கள் பெண்தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றிய பல்வேறு ஆய்வுகளையும் களப்பணியையும் நடத்தியவர். மாதர் சங்க பொறுப்புகளில் வழி நடத்திக் கொண்டிருப்பவர். பிர்தொஸ் ராஜகுமாரனின் கதைகள் முஸ்லீம் சமூகத்தின் மூடுண்ட பகுதிகளை வெளிச்சமிடுகின்றன.முஸ்லீம் குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை கொண்டு கேள்விகளை எழுப்புகின்றன. பென்களின் மனமுறிவு சாதாரணமாகும் சூழல்களை முன் நிறுத்துகின்றன். இலக்கிய வாதிகளின் போலி முகங்களை அடையாளம் காட்டுகின்றன். முஸ்லீம் சமூக மத நிர்வாகிகளின் ஊழலை அம்பலப்படுத்துகின்றன. அவை பற்றிய அபிப்பிராயங்களில் அவர் முகம் தட்டுப்படுகிறது. முஸ்லீம் சமூகம் பற்றிய நுணுக்கமான பதிவுகளை அவர் அச்சமூகத்தில் இருப்பதால் வெளிப்படுத்த அவருக்கான வாய்ப்புகளை இன்னும் விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

பொன்.இளவேனில் சுப்ரபாரதிமணியனின் “ மந்திரச்சிமிழ்’” கவிதைத் தொகுப்பை ( காவ்யா பதிப்பகம் சென்னை வெளியீடு ) விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டார். சாதாரணத் தொழிலாளிகளின் வாழ்நிலையும், பெண்கள் மீதான கரிசனமும், சுற்றுலா குறிப்பு அனுபவங்களும், சுற்றுச்சூழல் பதிவுகளும் இடம்பெற்றிருப்பதை கவிதைகளை எடுத்து வாசித்துக் காட்டினார்.


7 நாவல்கள், குறுநாவல்கள் , கட்டுரைத்தொகுப்புகள் , திரைப்படக்கட்டுரைத் தொகுப்புகள், பயண அனுபவ நூல்கள்,நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 35 நூல்கள் வெளிவந்துள்ளன. இது அவரின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.இதற்கு முன் அவரின் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்ததில்லை..ஆரம்பத்தில் கவிதைப்படைப்புகளின் மூலம் படைப்புலகிற்கு வந்தவர்.

சமூகமும் அதன் செயல்பாடுகளும் ஏற்படுத்தும் மன அவஸ்தைகளின் வெளிப்பாடாகவும், இருப்பின் சிதைவையும், வெளி உலகத்தின் நிர்ப்பந்தங்களையும், அவற்றின் எதிர்வினையாகவும் இக்கவிதைகளைக் கொள்ளலாம். இக்கவிதைகள் எளிமையானச் சொற்களுடனும், படிமங்களின் பாரத்தாலும், அனுபவங்களின் திரட்சையாலும் மூச்சுத்திணற வைக்கின்றன. காட்சிகளின் விவரிப்பும், படைப்பாக்க ரசவாத்தின் சூட்சுமமும் பெரும் வெளியாய் விரிகின்றன.அடிமைத்தளத்திலிருந்து வெளீயாகும் முனகல்கள் விடுதலைக்கான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. கதறலும், காதலும், அன்பின் வலிமையும், சுதந்திரமாய் பறத்தலும் என்று விரிகின்றன. அவரின் புனைகதைகளின் அம்சங்களை இவற்றிலும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தாலும் அதன் கச்சாப்பொருட்களிலிருந்து அவரால் விலக்கிக் கொள்ள முடியாதபடி இக்கவிதைகளின் மறுவாசிப்பு அமைந்துள்ளது. கவிதை மூலம் மொழி சார்ந்த பயிற்சி, புதிய பிரக்ஞைக்கான தளம், அனுபவப் பகிர்வு, தொடரும் வாசகனின் நுண்ணியப் பார்வைக்கான சவால் என்று இக்கவிதைகளை சுப்ரபாரதிமணியன் இத்தொகுப்பை வடிவமைத்துள்ளார்.


சுப்ரபாரதிமணியனின் சமீபத்திய , எட்டாவது நாவலான “ நீர்த்துளி “

( உயிர்மை பதிப்பக வெளியீடு, சென்னை) பற்றிய விமர்சன உரையாக தஞ்சை நெருஞ்சி இலக்கிய அமைப்பைச் சார்ந்த எழுத்தாளரும், கடற்குதிரை பதிப்பக நிர்வாகியுமான முத்தமிழ் விரும்பி பேச்சை அமைத்திருந்தார். பிதொஸ்ராஜகுமாரன் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய முஸ்லீம் சமூகம் பற்றிய பதிவுகளை நீர்த்துளி நாவலின் சிக்கந்தர், லியாகத் அலி பாத்திரங்கள் பிரதிபலித்திருக்கின்றன.திருப்பூரைச் சார்ந்த உதிரி மனிதர்களின் வாழ்நிலையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்என்றார்.

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டு விட்ட ஒரு தொழில் நகரம் ஒரு விதப்பூச்சுடன் மினுங்குவதை காட்டியவர். இந்த நாவலில் சுற்றுச்சூழல் பாதிப்பு மனித உரிமைப்பிரச்சினையாகி சாயப்பட்டறைகள் மூடப்படுதலையும் அதனால் அவதியுறும் தொழிலாளர்கள் பற்றியும் சக மனிதர்களின் அனுபவங்கள் வழியே விவரிக்கிறது, இடம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்கிறது. தனித்து வாழும் உதிரி மக்களின் வாழ்க்கை சமகால அரசியலுடன் பேசப்படுகிறது. பலமான உரையாடல் தளங்கள்..சிறு சிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்து போகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.



கோவை ஞானி நீர்த்துளி பற்றி பேசினார். திருப்பூர் என்ற வணிக நகரம் தன் இயல்புகளை இழந்து சிதைவுகளின் படிமமாகி வருவதை சுப்ரபாரதிமணியன் சாயத்திரை., பிணங்களின் முகங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, சமையலறைக்கலயங்கள் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை க்லைவடிவங்களாக்கியுள்ளார்.இச்சிதைவு தவிர்க்க இய்லாதது. மனிதத்தை நிராகரிக்கும் எந்த சமூகமும் இச்சிதைவை சந்தித்தே தீரும், அதை எழுத்தில் கொண்டு வருவதில் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்றார்.

இளஞ்சேரலின் கட்டுரை கோவையில் சுரேஷ் குமார் இந்திரஜித்தைக் கொண்டு “ அருவி” அமைப்பு நடத்திய “ புனைவின் மொழி “ என்ற தலைப்பிலான நிகழ்வு பற்றிய சுவாரஸ்மானக் கட்டுரையாக அமைந்திருந்த்து. பிதொஸ்ராஜகுமாரன் ஏற்புரையில் முஸ்லிம் சமூகம் பற்றிய ஒளிவு மறைவற்ற பதிவுகளுக்கு தன் குடும்பம் ஊக்குவிப்பதால் இன்னும் தீவிரமாக இயங்க வழி பிறந்திருகிறது என்றார். சுப்ரபாரதிமணியன் தன் ஏற்புரையில் “ நீர்த்துளி “ நாவலின் பின்புலம் பற்ரி விரிவாகப் பேசினார்.உலக்மயமாக்கலில் இடம்பெயரும் மக்களின் புகலிடமாக திருப்பூர் உள்ளது.அதில் ஒற்றைப் பெற்றோரின் பங்கும் அவர்களின் பாலியல் சுதந்திரமும் உளவியல் சிக்கல்களுக்குக் கொண்டு செல்கிறது. கலாச்சார கட்டுடைப்பு என்பது பல தளங்களில் நிகழ்ந்தாலும் அது குற்ற உணர்வின் மேலிடலாக இருக்கிறது. தொழிற்சங்க உணர்வை இழந்த நவீன தொழிலாளி கொத்தடிமையாக இருக்கிறான். சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட அவன் சமூகப்பாதுகாப்பற்ற மனிதனாக அகதியாகத் திரிகிறான். சாயப்பட்டறைளின் மூடும் நீதிமன்ற தீர்ப்பு பொருளாதார சிக்கல்லளூடே அவனை மன நோயாளியாகுவதை சுலபமாகப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இணைந்து வாழ ஆசைப்படும் திருமண முறிவில் இருக்கும் ஒரு பெண், திருமணமாகாத் ஒரு ஆணுடன் இணைந்து வாழ்தலை சட்டம் அனுமதித்தாலும் சமூகம் பார்க்கும் பார்வையின் கோணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறது. ஊடாக சுற்றுசுழல் குறித்த இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மனித உரிமைப்பிரச்சினையாக வடிவெடுத்திருக்கின்றன என்றார்.

விவாதங்களில் யுகமாயினி சித்தன், நாவலாசிரியர் மா.நடராசன், பொதிகைச் சித்தர், கலை இலக்கியப் பெருமன்றம் பா.ரமணி , சிறுதுளி ஜெயராமன் உட்பட பலர் பங்கு பெற்றனர்.


செய்தி: சாமக்கோடாங்கி ரவி