சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 12 ஜூன், 2011

அண்டை வீடு : பயண அனுபவம் சிலுவை


டாக்கா விமானநிலைய இமிகிரேஷன் சோதனையில் அலாரம் சப்தத்துள் முடங்கிப்போனார் ஜ.என்.டி.யூ.சி. தண்டபாணி. துப்பாக்கிக்குப் பயந்து கைகளைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டார். அலாரம் தொடர்ந்தது. கைபேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் வெளியேற்றி விட்டார். இன்னும் அலாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ கண்டுபிடித்தவர் போல அலாரத்திற்கான காரணமாக இடுப்பில் இருந்து ‘அரணாக்கயிறு’ என்று அரைஞான்கயிறைச் சுட்டியபடி கத்திக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்ப அரணாக்கயிறு என்றார், பிறகு தமிழ்நாடு தமிழ்நாடு என்றார். அரைஞாண்கயிறு பற்றிய விளக்கத்தை அவர் தொடங்குவதற்கு முன்பாகவே அவரைப் போகச் சொல்லி விட்டனர்.ஏதோ சிரிப்புடன் அவரை போகச் சொன்னார்கள் உலகத் தொழிலாளி வர்க்கம் இப்படித்தான் கைகளைத் தூக்கி கேட்பாரற்று, எங்களை கவனிக்க யாருமில்லையா என்று கதறுவதாகத் தோன்றுகிறது. உலகம் முழுக்க மலின உழைப்பு, குறைந்த கூலியில் தொழிலாளர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

தண்டபாணி டாக்காவில் நடந்த சில கூட்டங்களின் இடையே வெளியேறி வெளியே போய் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்.

"என்னங்க, இங்க வந்திட்டீங்க?"

"எவ்வளவு நேரம்தா அவன் சொல்ற பொய்யைக் கேட்டுட்டு உக்காந்திட்டிருக்கிறது."


பொய்யும் புனைவும் லாபம் சம்பாதிக்க வார்த்தைகளைக் கொட்டியபடி முதலாளி வர்க்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் இருந்து கொண்டிருக்கின்றன. எட்டுமணி நேரஉழைப்பு என்பது 10மணிநேரம், 12மணிநேரம் என்றாகிவிட்டது. தினக்கூலிகள், பீஸ்ரேட் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாய் தொழிலாளர் வர்க்கம் மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கிறது.

மே தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு முதிய தொழிற்சங்கத் தலைவர் அழைக்கப்பட்டார். அவர் சொன்னது: " எட்டு மணி நேர உழைப்புக்கு மே தினம். கொண்டாட்டம் எல்லாம். உங்க ஊர்லதா அது 12 மணி, 16 மணி நேரம்னு அதே கூலியில் போய்ட்டிருக்கே. இதிலே எதுக்கு மேதினம் கொண்டாடறது?"

வங்கதேசப் பின்னலாடையில் ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் ஒன்றுதான்: மலின உழைப்பு. இது உலகம் முழுவதும் தொடர்கிறது. எல்லா தொழில்களிலும், துறைகளிலும் தொடர்கிறது. வங்கதேச வங்கிகள் 100 மில்லியன் டாலர் பணத்தைப் பின்னலாடை ஏற்றுமதியில் முதலீடு செய்யப் போகின்றன. வரும் ஆண்டில், 1989 முதல் வெளிநாட்டு மூலதனப் பொருட்கள் பருத்தி உட்பட்டவை தருவித்துக் கொள்ளப் பெரும் உதவி செய்திருக்கிறது. 330 மில்லியன் டாலர் இதுவரை உதவி தந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் 3.5% வட்டியில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். வழக்கமான வட்டி விகிதமான 12% விட இது மிகவும் குறைவு. இவ்வகையான உதவிகள் போட்டியான சர்வதேச சூழலில் தங்கள் வியாபாரம் பெருக உதவும் என்கிறார்கள். 29 வணிக வங்கிகள் உதவத் தயாராக உள்ளன. தொடர்ந்த வெளிநாட்டு மூலதனங்கள் தொழிலை இன்னும் ஊக்குவிக்கும்.




ஆனால் தொழிலாளி வர்க்கம் கையறு நிலையில் உழைப்பைக் கொடுத்து விட்டு சாவுப்பெட்டியைத் தயார் செய்து கொள்கிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் என்று வர்த்தக தார்மீகக் கோட்பாடுகள் உலகளவில் மனித உரிமைகளாகப் பேசப்பட்டு வரும் இன்றைய நாட்களில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினர் நவீனக் கொத்தடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகள், நிரந்தரப் பணி பாதுகாப்பு என்று எதுவும் கோராமல் தினக் கூலியாக நிரந்தர உருவம் எடுத்து வருகிறது. நவீன கொத்தடிமை முறையில் கோர முகம் பயஙகரமானதுதான். அது கார்ப்பரேட் உலகின் கவர்ச்சிகளையும், குரூரங்களையும் ஒருசேரக் கொண்டது.

"ஏலி ஏலி லாமா சபக்தானி" (தேவனே , என் தேவனே, ஏன் எங்களை கைவிட்டீர்).