சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 5 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்

" மல்லையா விமானப் பயணிகளைச் சரியாக கவனிக்க வேண்டுமென்றால் பீர்பாட்டிலோ, ஒயின் பாட்டிலோ கூடத்தரலாம். இப்படி விமானப் பயணத்தின்போது வெறும் சாண்ட்விச்சைத் தர வேண்டியதில்லை. ஒரு காபியோ டீயோ கூட இல்லாமல் 100 மில்லி தண்ணீர் மட்டுந்தானா, பக்கத்து இருக்கையில் இருந்த எல்.பி.எப்ஃ தொழிற்சங்கத்தைச் சார்ந்த பாலசுப்ரமணியன் அலுத்துக் கொண்டார். ‘கிங்பிஷரில்’ பயணத்தின்போது வெறும் சாண்ட்விச் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் நடுவில் வைத்து வழங்கப்பட்டது. ஒரு வகை அலுப்புடன் பழைய தின்பண்டத்தைப் பார்ப்பது போல் பலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் வழங்கப்படும் உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது என்று பொதுவாகக் கருதுகிறார்கள்.( சிங்கப்பூர் - சென்னை பயணத்தில் ஒரு தரம் பல ஆண்டுகளுக்கு முன்னால் உணவின் தரம் திருப்தியாக இல்லை என்று சொன்னபோது அந்த விமானத்தில் பயணிகளாக இருந்தவர்களைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு முஸ்தபா கடை பொருட்களுடனும், லுங்கி வேட்டியுடனும் திரும்பும் தொழிலாளர்களாகயிருந்தனர்.) விமானக் கட்டணம் குறைவாக இருப்பதன் காரணமாகவும், குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் உணவு தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது அல்லது உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது அல்லது காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொள் என்று விதி மாற்றப்பட்டது என்றார்கள். உணவு விநியோகம் செய்ய பணிப்பெண்கள் தேவை. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை மனதில் கொண்டு சம்பளக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்றார் அலோசியஸ். ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற ரீதியில் உணவு தரப்படுவது குறைந்து விட்டது.








ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களில் ‘பரிசுக் குலுக்கல்’ அமோகமாக நடக்கிறது. பயணிகளுக்குத் தரப்படும் அட்டையில் என்ணைச் சுரண்டினால் குறிப்பிட்ட எண்ணுக்கு ஏதாவது குறிப்பிட்ட தொகை செலுத்தி பரிசுப் பொருள் பெறலாம்.( இதேரீதியில் முன்பெல்லாம் கிராமங்களில் பலர் ஏமாந்து தில்லி கம்பெனிகள் பார்சலில் காகிதங்களையும், செங்கல்லையும் அனுப்புவதை பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்). சுரண்டுபவர்களுக்கு ஏகதேசம் ஏதாவது பரிசு கிடைத்து விடுகிறது. செலுத்தும் பணத்திற்கு உகந்தது என்ற அபிப்ராயம் வருமளவு பரிசுப் பொருள் கைக்கடிகாரம், காதணி என்று இருக்கிறது. சின்னதாய் ஏலம் என்ற அளவில் அட்டையையும் தருகிறார்கள். சூட்கேஸ், டிராவல் பேக், காமிரா, ரகசிய பதிவு செய்யும் பேனா என்று ஏலத்திற்கான பொருட்களையும் பட்டியலிட்டு, அழகாக அச்சிட்டுத் தருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக அட்டையில் எழுதிக் குறிப்பிட்டாலும் " வா, வந்து பொருளைப் பெற்றுக் கொள்" என்று விமானப் பணிப்பெண் வந்து அழகாய் சொல்லி விட்டுப் போகிறாள்.இன்னும் குறைத்துப் போட்டிருக்கலாம் என்ற அபிப்ராயமும் வந்து விடுகிறது.



எங்கள் குழுவில் மொத்தம் 15 பேர் இருந்தோம். டாக்கா உள்ளூர் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த பய்ஜ் உட்பட பலர் பெண் பிரதி இல்லாததைக் குறையாகச் சொன்னார்கள். எங்கள் குழுவை க் கவனித்த ஒரு தன்னார்வக் குழுத் தலைவர் சொன்னார்: " உங்கள் குழுவில் பெண்களே இல்லை. எங்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதிநிதிக் குழுக்களில் எங்கள் பிரதமர் பெண்மணி முதலிடத்தில் இருப்பார். எங்கள் குழுக்கள் இவ்வளவு சிறியதாக இருக்காது. 80-90 பேர் கொண்ட பெரிய குழுக்களாக இருக்கும். விமானத்தில் பாதியை இடம் பிடித்துக் கொள்வர். பெரிய குழு சாதாரணம். விரைவில் அது 100 என்பதை எட்டலாம்".

வங்கதேசத்திலிருந்து 40 லட்சம் பயணிகள் சென்றாண்டு வெளிநாடு சென்றிருக்கிறார்கள். இது சென்றாண்டை விட 80 சதவீதம் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பெரிய சாதனை என்கிறார்கள். என்றாலும் உள்ளூர் வங்கிகள் விமான சேவைக்காக கடன் கொடுப்பதில் வெகுவாகத் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், விமானக் கோளாறுகளும் விபத்துகளும், பெரிய முதலீடும். உள்ளூர் விமான சேவை அதிகரித்திருக்கிறது. இடம்பெயர்வு தொழிலாளர்கள் அதிகம் பயணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு 10 வங்கிகள் ‘பீமன்’ என்ற விமான சேவை நிறுவனத்திற்கு 800கோடி ரூபாய் அடுத்த ஆண்டுகளில் புதிய ஜெட் விமானங்கள் வாங்கத் தந்துள்ளன. யுனைடெட் ஏர்வேஸ், ஜிஎம்ஜி போன்றவை இதுபோல் பெரும் பண உதவி பெற்றுள்ளனர். விமானங்களை இயக்குவது முழுக்க கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது. விமானஓட்டி கணினி மேற்பார்வையிடும் வேலை செய்கிறார். இவ்வாண்டின் மிக மோசமான மங்களூர் விபத்தில் ‘கறுப்புப் பெட்டி’ விமானஓட்டியின் நெடுநேர குறட்டைச் சப்தத்தைப் பதிவு செய்திருக்கிறது.



பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் புகைவண்டி போல ஒரு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியதால் டாக்காவில் நாங்கள் பிடிக்க வேண்டி இருந்த ஜெர் ஏர்வேஸ் விமானத்தைக் கோட்டை விட்டோம். இமிகிரேஷ்ன் செக்கிங் முடிந்து, போடிங் பாஸ் தந்துவிட்டாலும் நேரமாகிவிட்டது என்று காலையில் கிளம்பிக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விமானம் மத்தியானம்தான். அதற்கு அபராதம் கட்ட வேண்டியிருந்தது. வெளியிலும் செல்ல முடியாது. செக்யூரிட்டியில் இருந்த ஒரு மலையாளி அதிகாரி முகஜாடையையும், மொழிப் பரிமாற்றத்தையும் புரிந்துகொண்டு நால்வரை வெளியேகொண்டு போய் சாப்பிட்டு விட்டு மற்றவர்களுக்கு பொட்டலங்கள் வாங்கி வர அனுமதி தந்ததால் வெளியே சென்றுவிட்டு வந்தோம். எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்ற சிக்கல் இருந்தது. சர்வதேச விமான நிலையம். உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் தோழமையுடன் குளிர்ந்த தரைப்பரப்பில் பொட்டலங்களை விரித்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் அதைக் கூர்ந்து கவனித்தபடி கிண்டல் அடித்தார்: " சர்வதேச விமான நிலையம் இந்திய புகை வண்டி நிலையம் போலாகிவிட்டது. சர்வதேச விமான நிலையத்தை இந்தியர்கள் சர்வதேச புகைவண்டி நிலையம் ஆக்கிவிட்டார்கள்."

Subrabharathi@gmail.com