சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 3 டிசம்பர், 2025
1
கனவு, டாப் லைட் நூலகம் ஏற்பாடு செய்திருந்த கவிதை முகாம் :30/11/25
இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
1.சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்த “ சுற்றுச்சூழல் பிரார்த்தன”
போப் ஆண்டவர் எழுதிய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு அது.
2. தூரிகை சின்னராஜ் எழுதிய “ இயற்கைக்கு செயற்கையாக சிரிக்கத் தெரியாது “ பிரபல ஓவியர்கள் பற்றியக் கட்டுரை
இரண்டும் திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு
பல்லடம் எஸ் எல் முருகேசு இயக்கிய “ தண்ணி டம்ளர் “ குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது
இது குடிக்கு எதிரானக் குரலை முன்வைத்தது.இவர் முன்பே முப்பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவர். சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட பள்ளி மறு திறப்பு , இரக்கம் உள்ளிட்டவை அவை.
0
கவிதை வாசிப்பு.. கல்லூரி மாணவி சிந்து நதி
கவிக்கோ ஆவணப் படம் திரையிடல்.
பல்லடம் புத்தகக் கண்காட்சி முத்திரை வெளியீடு
இவற்றுடன்
கவிதை முகாம் தொடங்கியது
ஐந்து குறும்படங்களால் களை கட்டியது
கவிதை முகாம் குறும்பட முகாம் ஆகிப் போனது
0
அமளி துமளி
2009ல் வெளிவந்த தாண்டவகோன் குறும்படம் திரையிடப்பட்டது.
அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடிகர்கள்
துள்ளல் மிகுந்த ஆரவாரமான படம்
எங்கோ சென்றிருக்க வேண்டியவர்
கொஞ்சம் பிசகி விட்டது
இனி மான் வேகம் தான்
0
முகாமின் துவக்கமாக கவிக்கோ அப்துல்ரகுமான் பற்றிய ஒரு மணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது.
Oபொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம்.
ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது.
எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ.
அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார்.
மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..dinamalar
ட
மாலையில் நடைபெற்ற படிப்போம் பகிர்வோம் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அறிமுகம் செய்து பலர் பேசினர்.
நூலகர் இந்துமதி .. தூரிகை சின்ன ராஜ்.சிரிராம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு.
[ ] പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക്
അവതാരിക
[ ] ഡോ സി ഗണേഷ്
പ്രകൃതി പാഠങ്ങളിലേക്ക് കുഞ്ഞുങ്ങളെ നയിക്കുന്ന ചെറിയ നോവലാണ് ചൂട്. പരിസ്ഥിതി സ്നേഹിയായ ശോഭ പ്രേംകുമാറിനാണ് ഈ പുസ്തകം സമർപ്പിച്ചിരിക്കുന്നത്. അധ്യാപികയും ചിത്രകാരിയും ബാലാവകാശ പ്രവർത്തകയും മനഃശാസ്ത്രജ്ഞിയുമായ ശോഭ പ്രേംകുമാറിന് ഈ പുസ്തകം സമർപ്പിക്കുന്നതിലൂടെ രചയിതാവായ സുപ്രഭാരതി മണിയൻ വലിയൊരു സന്ദേശം നൽകുന്നു. പ്രകൃതി സ്നേഹത്തിന്റെ മഹത് പൈതൃകം അടുത്ത തലമുറയിലേക്ക് കൈമാറേണ്ടതുണ്ട് എന്ന സന്ദേശമാണത്. കുട്ടികൾക്കായി രചിക്കപ്പെട്ടിരിക്കുന്ന ഈ നോവൽ വായിക്കുന്ന ഏതൊരു കുട്ടിയും കാലാവസ്ഥാ വ്യതിയാനത്തെക്കുറിച്ചും നമ്മുടെ പരിസ്ഥിതിയിൽ ഉണ്ടാകുന്ന മാറ്റങ്ങളെക്കുറിച്ചും കൂടുതൽ ചിന്തിക്കും. ഇത് അവരുടെ പരിസ്ഥിതി സ്നേഹത്തെ മാത്രമല്ല മാനവിക സ്നേഹത്തെയും മൗലികവും പുതുമയുള്ളതുമാക്കും.
"ഭൂമി നമ്മുടെ അമ്മ നമ്മുടെ അമ്മയെ ബഹുമാനിക്കുക പരിസരത്തെ നമ്മൾ സംരക്ഷിക്കും" ഇങ്ങനെ ഒരു വാചകത്തോടെയാണ് ഈ ലഘു നോവൽ ആരംഭിക്കുന്നത്. കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ ഒരു ചെറിയ വിദ്യാലയമാണ് രംഗം. അവിടെ പഠിക്കുന്ന പ്രവീണിന്റെ കാഴ്ചപ്പാടിലൂടെയാണ് കഥ വികസിക്കുന്നത്. തുടക്കത്തിൽ ചൊൽപ്പൊരുളിന്റെ അർത്ഥ വ്യാപ്തിയെക്കുറിച്ച് പറയുന്നുണ്ട്. കഥ മുന്നോട്ട് പോകുമ്പോൾ കടൽക്കര എന്ന ഗ്രാമത്തിലെ വിദ്യാലയം നേരിടുന്ന വലിയ പ്രതിസന്ധി ബോധ്യപ്പെടുന്നു. പ്രകൃതി ചൂഷണം കൊണ്ട് അന്തരീക്ഷ താപനില വർദ്ധിക്കുകയും കടൽ ക്ഷോ ഭിക്കുകയും വിദ്യാലയത്തിന്റെ നിലനിൽപ്പ് വരെ അപകടത്തിൽ ആവുകയും ചെയ്യുന്നു. പ്രവീൺ എന്ന വിദ്യാർത്ഥി സയൻസ് അധ്യാപകനായി പഠിച്ച അതേ സ്കൂളിൽ എത്തുന്നതോടെ അതിജീവനത്തിനായുള്ള ശ്രമങ്ങൾ ആരംഭിക്കുന്നു. ഈ വിഷയമാണ് അതീവ വായനായോഗ്യമായ നോവലിലൂടെ എഴുത്തുകാരൻ അവതരിപ്പിക്കുന്നത്. ഓരോ അധ്യായത്തിലും സംക്ഷിപ്തമായി നൽകുന്ന പ്രകൃതി പാഠങ്ങളും നിരീക്ഷണങ്ങളും വായനയെ ഒരു പുതിയ തലത്തിൽ എത്തിക്കുന്നു. കുട്ടികൾ ഒരുപോലെ ആസ്വദിച്ച് വായിക്കാവുന്ന നോവലാണ് ചൂട്.
തമിഴ് ഭാഷയിൽ നൂറിലധികം കൃതികൾ എഴുതിയ സുപ്രഭാരതി മണിയന്റെ ഈ കൃതി സ്വാഭാവികമായ മലയാളത്തിലേക്ക് തർജ്ജമ ചെയ്ത ഷാഫി ചെറുമാവിലായി വലിയ അഭിനന്ദനങ്ങൾ അർഹിക്കുന്നു. ഈ പുസ്തകം കൊച്ചു കൂട്ടുകാരുടെ മുമ്പിലും മുതിർന്നവരുടെ മുമ്പിലും സ്നേഹപൂർവ്വം അവതരിപ്പിച്ചുകൊള്ളുന്നു.
ഡോ. സി ഗണേഷ്
പരീക്ഷാ കൺട്രോളർ
തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാള സർവകലാശാല
തിരൂർ മലപ്പുറം കേരളം.
வெளிவர உள்ள புதிய நாவலில் ஒரு பகுதி :
டாலர் பவுண்ட் ரூப்பியா.. நாவல்
சுப்ரபாரதிமணியன்
0
எண்ட் ஆப் லைப்.. .
எண்ட் ஆப் லைப் லிவிங் லைஃப். .ஸ்டில் ஐ அம் கீபிங்.. வாக்கிங்............
அந்த
முதியவர் பெரிய வர்ணமயமான கேக்கின் மீது பல மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அவற்றை பார்த்த படியே பேசிக்கொண்டிருந்தார்
” எனக்கு ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருக்கிறது ஹெல்ப் உண்டு வாழ்க்கை வாழ்க்கை இன்னும் போர் அடிக்கவில்லை என்னுடைய பொறுப்புகள் எல்லாம் முடிந்து விட்டன வாழ்வதற்காக .எனக்கு பாரங்கள் எதுவுமில்லை. நான் சூப்பர் மேன் அல்ல சாதாரண மனிதன் தான் வாழ்க்கை நதி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது நான் ஓய்வு
பெறுவதற்கு காரணம் மரணத்தை நோக்கி செல்வதற்கு.
அல்ல மரணத்தை எதிர் கொள்ளல்மனதில் இருக்கிறது
..எதுவும் .. அறுபது வயது ஆகிவிட்டால்
தற்கொலைக்கு போய்விடலாம் என்று பல மேற்கத்தியத்
தத்துவங்கள் சொல்கின்றன. நமது சாமியார்களும் வாழ்வே மாயம் என்று தான் சொல்கிறார்கள் .அப்படித்தான் மரணத்தை
எதிர்கொள்கிறார்கள் .என்னுடைய ஆப்ஷன்ஸ்
இல்லாமல் போகிற போது
அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
அதை ஒருவர் இடை மறித்தார்.
”இப்படி எல்லாம் பேசாதீர்கள். நான் கேன்சர் பேசன்ட் நானே வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன்.
எனக்கு இப்படியான ஓய்வு
நானும் இன்னும் கேக் சாப்பிடுகிறேன்
மெழுகுவர்த்திகளை அணைத்து கொள்கிறேன்
இதில் உங்களுக்கு என்ன சிக்கல் “
“ எனக்கு எதுவும் இல்லை நான் தொழுது கொண்டு இருக்கிறேன் ஏதோ நான் ஓய்வு பெற்றதால் முடங்கி விடக்கூடாது என்று பலரும் முணு முணுக்கிறார்கள் அது நல்லதல்ல
“ இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
கூறப் போகும்,
எனது பிரிவுரை
இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக் கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
பிரிவுரை யாகட்டும் அதுவே!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!
வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் எல்லாமும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அதுவே என் பிரிவுரை ஆகுக!
ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை
எனக்கு
நெருங்கி விட்டால்! “
தாகூர் கவிதை இது. என் வாழக்கை அனுபவம் கூட எந்த எழுத்தாளனின்
எழுத்தும் யாரோஒருவனின் அனுபவம் தானே ”
கேன்சர் முதியவர் கவிதையைச் சொல்லியபடி அவர் உட்கார்ந்திருந்த
நாற்காலியில் ஏதோ வலியால் அவதிப்படுபவர் போல் சாய்ந்தார். சிலர்
அவரின் நாற்காலி அருகில் நெருங்கினர். அவர் புன்னகையை உதிர்த்தார்.
ஆங்கிலத்தில் அந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்தது .பிரான்சிஸ் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்து உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் . விடுதியின் அறைக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற குளிர் பிரதேசங்களில் பேன் பயன்படுத்தப் படுவதில்லை .இந்த சூழலில் ஜன்னலை திறக்கலாம் என்று மெல்ல ஜன்னல் பக்கம் போய் அவற்றை விடுவித்து பார்த்தார் .ஆனால் எல்லாம் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன திறக்க முடியாதபடி ஏதோ செய்து இருக்கிறார்கள்.
அறைக்குள் உட்கார முடியாது என்று தோன்றியது வரவேற்பறைக்கு தொலைபேசி செய்து தகவல் சொன்னபோது ஒருவர் வந்து திரும்பத் திரும்ப ஏசி மேல்
மூடியை நீக்கி பார்த்தார் அது வேலை செய்யவில்லை
“ எலித் தொல்லையாக இருக்கும் ஏதாவது
மின்சார ஒயரை கடித்து விட்டுப் போயிருக்கும் பார்க்க
வேண்டும் ”
”பார்க்க வேண்டுமா நான்.. இரவில் எப்படி தூங்குவது ஏதாவது
பேன் .தர தயார் செய்ய முடியுமா”
”பேன் நாங்கள் பயன்படுத்துவது இல்லை ”
”அப்புறம் பனையோலை விசிறி “
”சார் கிண்டல் வேண்டாம் முயற்சி செய்கிறோம். தூங்குவதற்குள் இதை
சரிசெய்ய பார்க்கிறோம் .அறை சாவி வேண்டாம் எங்களிடம் மாஸ்டர் கீ இருக்கிறது நீங்கள் வெளியே போவதாக இருந்தால் போய்விட்டு வாருங்கள்
அப்படித்தான் இரண்டாவது மாடியில் வந்து நின்றபோது அந்த பிருந்தாவின் ஹால் கண்ணில் பட்டது. நுழைந்து பார்க்கலாம் என்று நினைத்தான் பிரான்சிஸ் .இதுபோன்ற பல இடங்களில் சர்வசாதாரணமாக பிரான்சிஸ் நுழைந்திருக்கிறார் அழைப்பில்லாமல் இருந்தால்கூட போய் உட்கார்ந்து கொள்வது சாப்பாடு கிடைத்தால் போய் சாப்பிடுவது என்பதெல்லாம் அவனுக்கு சாதாரணமாகி
விட்டது யாராவது கேட்டால் ஏதாவது பதில் சொல்லலாம்
. இப்படி சொரணை கெட்டு போய் விட்டாயே என்று
கூட சில சமயங்களில் கேட்டுக் கொள்வான் எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு சரிவுகள் எவ்வளவு காயங்கள் இதையெல்லாம்
தாண்டி தான் இங்கு வந்திருக்கிறோம். இவர்கள் கேட்கிற நீ யாரென்ற
சாதாரணமான கேள்விக்கு சாதாரணமாகவே பதில் சொல்ல முடியும்
என்பது தான் அவனின் சமாதானமாக இருந்திருக்கிறது
இங்கு வரும்போது அப்படித்தான் அவருக்கு லேசான காயம்
ஏற்பட்டுவிட்டது. ஊரிலிருந்து ஹீரோ ஹோண்டாவின் இங்கே வந்து
விடலாம் என்றுதான் புறப்பட்டான்
மேட்டுப்பாளையம் குன்னூர் அன்னூர் என்பதை எல்லாம் கடந்து மெல்ல
வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் குமரன்குன்று சென்றான் அங்கிருக்கிற முருகன் கோவிலின் உச்சியைப் நின்று வேடிக்கை பார்த்தான். திருப்பூருக்கு நீர் வருகிற பெரிய நீர்த் தொட்டி தொட்டிகள் எல்லாம் சவுரி பாளையத்தில் பார்த்தான் .மேட்டுப்பாளையத்தில்
வந்து ஊட்டி பேருந்து பக்கம் சென்ற போது
பெரிய வரிசை இருந்தது .
ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு நண்பரை பார்க்கப்
போனான் அவர் ஊரில் இல்லை அங்கிருந்த
பெண்மணி வந்தால் என்ன சொல்வது என்றாள்
நானே தொடர்பு
கொள்கிறேன் என்று வந்துவிட்டான். கல்லாறு
பழப்பண்ணை பூங்கா பல வருடங்கள்
முன்னால் சென்றது வாகனத்தை
நிறுத்துவதற்கு வசதி இருப்பதாக தெரியவில்லை..பக்கத்தில்
இருந்த
அகத்தியர் மடத்திற்கு செல்லலாம் என்று நினைத்தான்
அங்கு தியாகராஜன் என்ற நண்பர் இருந்தார்., சமீபத்தில்தான்
செத்துப்போனார் அவர் ஒரு காலத்தில் பெரிய
பட்டிமன்ற பேச்சாளராக இருந்தார் பட்டிமன்றத்தில் பேசும்
அந்த இன்னொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு தனியாக வாழ்க்கை நடத்த
ஆரம்பித்தார்
பட்டிமன்றம் சலித்துப் போனது போல திடீரென்று
சாமியார் ஆகிவிட்டார். கல்லாறு பழப்பண்ணையில் எதிரில் ஓர் இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரின் ஓர் ஆசிரமம் இருந்தது .அந்த ஆசிரமத்தில் சென்று ஒரு நாள்
தங்கியிருந்தார் .பக்கத்தில் இருக்கிற ஆற்றில் சென்று குளித்தான்
மலை ரயில் செல்லும் பாதையில் ரொம்ப நேரம் நடந்தான்
ஒரு நாள் இரவு வந்து தங்கி இருந்தான்
தியாகராஜனின் வாழ்க்கை முழுவதும் மாறிப் போயிருந்தது
கொஞ்சம் யோகா கொஞ்சம் மந்திரம் சொல்வது கொஞ்சம் பூஜை என்று
தொடர்ந்து கொண்டிருந்தார் . அப்பெண்மணி அவர்
கூடத்தான் இருந்தார். தியாகராஜனின் குடும்பம் திருப்பூரில் தனியாக
இருந்தது அவர் மனைவி பனியன் கம்பெனிக்குப் போய் இரண்டு பெண்
பிள்ளைகளை வாழவைத்துக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு
கேள்விப்பட்ட போது அந்த ஆசிரமத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டது
தெரிந்தது. அங்கு போனபோது அதன் பரப்பளவு அவனை
ஆச்சரியப்படுத்தியது
பெரிய விக்கிகரமாய் அம்மன் ;விக்கிரகம்.. மகாலட்சுமி இருந்தாள்
அவரை சந்திப்பதற்காக பலர் வரிசையில் இருந்தார்கள். பூஜை
புனஸ்காரம் என்று சுற்றிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தன பூஜை
புனஸ்காரங்கள் ஹோமம் என்று அந்த பகுதியே
திணறிக் கொண்டிருந்தது. இந்தநிலையில் தியாகராஜனை போய்
பார்ப்பது
நல்லதா என்று தோன்றவில்லை
தியாகு சாமிகள் பிசியாக இருக்கிறார் என்று திரும்பத்திரும்ப
சொல்லப்பட்டது
இந்த முறை அவர் காலமாகி விட்டார் என்பதை அவன் அங்கு போய்
இருந்தபோதுதான் அறிந்து கொண்டான்
இப்போ ஆசிரமம் யார் பொறுப்பில
அதாம்மா இருக்காங்களே.. மாதாஜி மாதாஜி ஓட கருணையுள்ள ஆசிரமம்
நல்லா நடக்குது ஏழை குழந்தைகளுக்கு படிப்பு.. .படிப்பு உதவி அப்படின்னு
போயிட்டு இருக்கு
குன்னூரில் சிம்ஸ் பார்க்கப்போனால் மெல்ல வெளியில் அலைந்து
கடந்து
வரும் போது மிகவும் களைப்படைந்து விட்டான்
ஆனால் வீட்டில் சும்மா
உட்கார்ந்து கொண்டிருப்பதை விட இப்படி பயணப்படுவது சிறந்தது என்று
தான் அவனுக்கு தோன்றியது.அதுதான் அப்பயணம்
ஆனால் விரைவில் தனக்கு பின்னால் லாரி தொடர அவனுடைய பயணம்
சிரமமாக
இருந்தது .ஒரு லாரி ஒன்று இரும்புச் சாமான்களை சுமந்து கொண்டு
வந்தது அவன் வழி விட்டு கையை காண்பித்தாலும் அது பின்னாலேயே
நகர்ந்து கொண்டிருந்தது .சிறு குறுகலான பாதைகளில் அவனை
சங்கடப்படுத்தியது
என்ன நோக்கத்திற்காக அவன் பின் தொடர்கிறான் என்று கூட சந்தேகம்
வந்தது ஒரு வளைவில் அப்படித்தான் அவன் தடுமாறி கீழே விழுந்து
விட்டான் அந்த லாரி பின்னால் இருந்தது .அவன் விழுந்ததை ஒரு நிமிடம்
நின்று பார்த்துவிட்டு அதிலிருந்து அவர்களின் சிரிப்புடன் கடந்து சென்றது
தன்னை கீழே தள்ளிவிட்டுக் காட்டுவதற்காகத்தான் அவன் எந்த மாயம்
செய்திருக்கிறார் .என் காயம் சிராய்ப்பு அவருக்கு சிறு சந்தோசத்தை
தந்திருக்கிறது என்று அவன் நினைத்தான்
நல்லவேளை சிரமமில்லாமல் அவன் சூரிய விடுதிக்கு வந்து விட்டான்
இரண்டு நாட்களாக அவரின் ஹீரோ ஹோண்டா வாகனம்
பத்திரமாக
இருக்கிறதா என்று அந்த விடுதியின் பின்புறம் பகுதியை சென்று பார்த்து
விட்டான் அது பத்திரமாக தான் இருந்தது. தானும் பத்திரமாக தான்
இருப்பதாக அவனுக்குத் தோன்றியது“
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
Mannudam November issue
இறப்பிற்குப் பின் மனிதன்
( சூழலைப் பாதுகாக்க......)சுப்ரபாரதிமணியன்
என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தியானம் என்பதாகும். அது தாமரை இதழில் வந்தது.
தனிமையில் முதுமையில் கஷ்டப்படும் ஒருவரை பற்றி.. தன்னுடைய சாவும் தான் அடக்கம் செய்யப்படுவதும் கௌரவமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார். பலருக்கும் சொல்வார். கல்யாண முதல் சாவு வரை காரியங்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவார் .என் சாவுக்கு பின்னால் த்ன்னுடைய உடல் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை பற்றி அதில் எழுதுவார். தன்னுடைய சாவுக்கு பின்னால் தன்னுடைய உடல் கேவலப்பட்டு போய்விடக்கூடாது முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதற்காக பணம் சேர்த்து வைத்து தகவல் சொல்லுவார்.. இப்படி பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது
இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சில நிறுவனங்கள் வந்திருக்கின்றன. தாராள மனப்பான்மையுடன் அவர்கள் செயல்படுகின்றன.. மத வேறுபாடு இல்லாமல் ஜாதி வேறுபாடு இல்லாமல் இறந்த மனிதர்களின் பிணங்களை சரியாக அடக்கம் செய்ய அவை உதவுகின்றன இதை பெரிய சேவை என்று தான் சொல்லலாம்.
ஏனென்றால் யாரும் கவனிக்கப்படாமல் கிடக்கும் பிணங்கள். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள். பரவும் அபாயம் இதிலிருந்து உடல்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை செய்யும் நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும்.
இப்போதெல்லாம் புதை குழிகளில் புதைக்க சரியான ஆள் கிடைப்பதில்லை. பழைய அரசாங்க கல்லறைகள் மூடப்படுகின்றன அல்லது அவை மின் மயான்ங்களாக மாற்றப்படுகின்றன.. கல்லறைகளில் புதைக்க ஆள் கிடைப்பதில்லை அல்லது நிறைய பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.. அதை மீறி மென்மையான தீர்ப்பு கொண்டு மின் மயானத்திற்கு கொண்டு சென்று உடலை சாம்பல் ஆக்கி விடக்கூடாது புதைக்கத்தான் வேண்டும் என்று விரும்புகிற பழைய தலைமுறை இப்போதும் இருக்கிறார்கள்.
என்னுடைய சகோதரர் ஒருவர் அப்படித்தான் தன் இறுதி ஆசையாக தான் மின் மயானத்தில் எரிக்கப்படக்கூடாது புதைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அவரின் ஆசையை நிறைவேற்ற நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. நகரின் மத்தியில் இருந்த அரசாங்க்க் கல்லறைக்கு போய் ஆட்களை பிடிப்பது சிரமமாக இருந்தது, பிறகு அதன்பின் வந்த சடங்களுக்கும் அங்கு செல்வது அங்கு இருக்கிற ஆட்களை பயன்படுத்துவது என்பதில் பல சிரமங்கள் இருந்தன, அது எல்லாம் ஒரு சிறுகதையாக்க் கூட எழுதலாம்,
திருப்பூரில் நான்கு மின் மயானங்கள் வந்துவிட்டன முதலில் வந்த ஒரு அரிமா சங்கத்தின் மின்மயானத் துவக்க விழாவில் வைரமுத்து வந்து மரணம் பற்றி ஒரு கவிதை பாடினார். அது பற்றிப் பேசினார் அது கல்வெட்டில் இடம்பெறு வகையில் முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்ட.து. அந்த காணொளி பல லட்சம் மக்களை கவர்ந்திருக்கிறது. மரணம் பற்றிய வைரமுத்துவின் கவிதையும்..
.. இப்போது திருப்பூரில் நான்கு மின்மயானங்கள் வந்துவிட்டன. ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசிய ஒரு முக்கியமானவர் அவர் அதைச் சார்ந்திருக்கிறார். மின்மயானம் நான்கு உலைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் இரண்டிற்கு பிணங்கள் வருவதில்லை அதை கவனிக்க முடியுமா கேட்டுக் கொண்டார். முன் வரிசையில் இருந்த நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.. அது அவருக்கு எரிச்சல் ஊட்டியது பல லட்சம் பணம் முதலீடு செய்து மின்மயானங்களை போட்டு இருக்கிறோம் ஆனால் அவை பயன்பாட்டுக்கு இல்லாமல் சும்மா கிடக்கின்றன அதனால் தான் என்னுடைய வேண்டுகோளை வைத்தேன். சிரிக்கிறீர்கள் இது சிரிப்பதற்கான விஷயங்களை என்று சொன்னார்... அவருடைய கவலை அவருக்கு
. கொரோனா காலத்தில் இந்த மின்மயானங்கள் எப்படி பயன்பட்டது என்பது நமக்கு தெரியும் அப்போது அந்த பிணங்களின் மதிப்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும். பிணங்கள் என்றால் அருவருப்பு தான் .ஆனால் கொரோனா காலத்து பிணங்கள் இன்னும் அருவருப்பையும் பக்கத்தில் நெருங்க முடியாத படி செய்துவிட்டன.
மின் மயானம் சென்று. திரும்புகிறவர்கள் அவசியம் சாம்பலைக் கேட்கிறார்கள் வீட்டு சடங்குகளுக்கும் பின்னால் அதை நதிகளில் கரைக்கவும் தேவையாக இருக்கின்றது. பல நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக அந்த சாம்பல் இருக்கிறது .ஆனால் அப்படி பிணங்களின் சாம்பலை நதிகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பற்றியும் பல விஷயங்கள் உள்ளன. எப்படி இருந்தாலும் பிணங்களை அடக்கம் செய்வதற்கான கல்லறைத் தோட்டங்கள் குறைந்து விட்டன பல பழைய கல்லறை தோட்டங்களை இடித்து விட்டு அங்கேயே மீண்டும் மீண்டும் படங்களை புதைக்கிறார்கள். இதெல்லாம் தேவையா என்று பெரும்பான்மையோர் மின் மயானத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆனால் பிணங்களை எரிப்பதில் மற்றும் புதைப்பதில் உள்ள சுற்றுச்சூழல் சிக்கல்கள் நம்மை சிரமப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
. இப்போது இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிணங்களை அடக்கம் செய்யும் முறை பற்றி கேட்டு கீற்று இணையதளத்தில் வந்த செய்தி ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவிலும் இதுபோன்று பிணங்களை அடக்கம் செய்யும் முறைகள் வந்தால் ஆறுதலாக இருக்கும். வெட்டியான்களைத் தேடி போக வேண்டாம். ஒரு கைப்பிடி சாம்பல் வேண்டும் என்று சில ஊழியரிடம் கெஞ்ச வேண்டாம். சாவுச் சடங்குகள் இன்னும் கொஞ்சம் சுலபமாகி விடும் பிணங்களை மண்ணிலிருந்து போக்குவதற்கு.
இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.
சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை.. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன.
ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
"சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் கூறுகிறார்.
1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் “ஆண்டுகள் கணக்கில்” என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது.
வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது.
0
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.
0
கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில் இவ்வாண்டில் சிறப்பு விருது சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அம்பை, லோகமாதேவி, க. ரத்னம் உள்ளிட்டோர் இவ்வாண்டில் விருது பெறுகிறார்கள். பத்து லட்சம் ரூபாய் விருதுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.வாழ்த்துக்கள்.
-நற்பவி வாசகர் வட்டம், பாண்டியன் நகர், திருப்பூர்
0
தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.
தமிழின் வளம் தமிழர் நலம் என்னும் நோக்கோடு கோயம்புத்தூரைச் சார்ந்த கல்வியாளர் மருத்துவர் பழனி நல்லசாமி கோயம்புத்தூரில் 2013ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாள் தொடங்கிய தமிழ்த் தொண்டு நிறுவனம் இதுவாகும்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கமாக,
• இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சந்திப்புகளை நடத்துதல்
• தமிழ் நூல் வெளியீடு
• சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவருக்கு ஆண்டு தோறும் விருது வழங்குதல்[1][2]
27/12 /25 காலை இந்த விருது விழா நடைபெறுகிறது. சிற்பி 90 விழாவின் ஒரு பகுதியாகவும் இதில் இடம் பெருகிறது. தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
செவ்வாய், 11 நவம்பர், 2025
ரோஜா முத்தையா நூலகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி
திருவாளர்கள் ஆர் பாலகிருஷ்ணன் நடிகர் சிவகுமார் உட்பட பல கலந்து கொண்டார்கள்
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் முன்னெடுப்பில் நடந்த இந்த கூட்டத்தில் ரோஜா முத்தையா நூலகத்தின் கட்டிட வளர்ச்சிக்காக நிதி கோரப்பட்டது
வணிக நிறுவனங்கள் சார்ந்த பெரியவர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் 40 கோடியில் உருவாக்குவது இந்த மையம்
கோவை பேரூர் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
சு.வேணுகோபால்.சுப்ரபாரதிமணியன். காசு வேலாயுதம் பாரதியார் பல்கலைக்கழக முனைவர் சித்ரா போன்றவரும் கலந்து கொண்டார்கள்
கட்டிட நிதிக்கு முதல் தவணையாக ஈரோடு சக்தி மசாலா 25 லட்சம்
நடிகர் சிவகுமார் 10 லட்சம்
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் 10 லட்சமும் வழங்க ஒப்புதல் தந்தனர் மற்றும் இதற்கு கீழே உள்ள தொகையை பலர் வழங்கினார்கள் பலர்அறிவித்தார்கள்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு,[2] 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.[3]
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில்[4] இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது. மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ. கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. 1994இல்[5] தொடங்கப்பட்ட இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது.[6]
நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[7]
நூலகம்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகும், இது மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்நூலகம் ஒரு தனித்துவமான தொகுப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் ஒரு மாதிரி நூலகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோஜா முத்தையாவின் ஒரு சிறிய தொகுப்பாக, நூலகம் இப்போது 3,00,000 நூல்களைக் கொண்டுள்ளது, மேலும் வரலாற்று காப்பகத்தை தொடர்ந்து பாதுகாத்து விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா செட்டியாரின் முன்னோடி முயற்சிகளில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது .[8] முத்தையா ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் பழங்கால புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார். மற்றும் 1950 இல் பழங்கால தமிழ் இலக்கியங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1992 இல் அவர் இறக்கும் போது, இந்தத் தொகுப்பில் தமிழில் கிட்டத்தட்ட 1,00,000 நூல்கள் இருந்தன, அதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பல இலக்கியங்கள் இருந்தன. நூலகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மதிப்புமிக்க உள்ளடக்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துக்கொண்டு சிகாகோ பல்கலைக்கழகம் 1994 இல் முழு தொகுப்பையும் வாங்கியது. இருப்பினும், நூலகம் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், ஒரு ஆராய்ச்சி நூலகத்தின் கருவை உருவாக்குவதற்கு இந்த தொகுப்பு தமிழகத்தில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் முத்திரைகளின் இந்த அரிய தொகுப்பை பராமரிக்கிறது.
தொகுப்புக்கள்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள பரந்த தொகுப்பு தமிழ் அச்சு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பாகும், இது 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நூல்களைக் கொண்டுள்ளது, 1804 இல் வெளியிடப்பட்ட 'காந்தரந்ததி' என்ற தலைப்புள்ள ஒரு நூல் இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது.. மொழி மற்றும் இலக்கியம், சுதேச மருத்துவம், மதம், நாட்டுப்புறவியல், பிரபலமான கலாச்சாரம், இயற்பியல், காந்திய ஆய்வுகள், பெண்கள் ஆய்வுகள் மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. திருமண அழைப்பிதழ்கள் மற்றும் தனியார் கடிதங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புதான் மற்ற நூலகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து தமிழுக்கு ஒரு தொன்மை மொழியின் அந்தஸ்து வழங்கப்படுவதையும், உலகளவில் அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ் பேசுவதையும் கருத்தில் கொண்டு, நூலக ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக தன்னை முன்வைக்கிறது.
மனித வளம்
[தொகு]
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை (ஆர்.எம்.ஆர்.எல்.டி) சிந்து அல்லது ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2007 ஜனவரியில் சிந்து ஆராய்ச்சி மையத்தை (ஐ.ஆர்.சி) நிறுவியது. சிந்து எழுத்துகளில் நன்கு அறியப்பட்ட ஆராய்ச்சியாளரான ஐராவதம் மகாதேவன்[9] தனது ஆயுட்காலம் வரை இந்த மையத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார். இது இந்த துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் அனைத்து நேர்மையான அறிஞர்களுக்கும் திறந்திருக்கும்.[10]
Subrabharathimanian Endownment Talk in Gandhigramam Univercity, Madurai
Talk on works of va keera by Tamil manavalan in December
Novel .. குமரி : எழுத்தாளரும் இயக்குனருமான கீரா
1
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த நாவல் வியப்பூட்டுகிறது. நம்மிடம் இப்போது இல்லாதுபோன அலங்கு என்கிற நாய் இனம், பலவிதமான யாளிகளான மகர (ஆடு) யாளி, சிம்ம யாளி, யானை யாளி பற்றிய இந்த நாவலில் வரும் விவரணைகள், அழிந்துபோன டைனோசர்கள், சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் விலங்கு, நற்றினையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன ஜப்பானியர்கள் உருவகப்படுத்துகிற டிராகன் ஆகியவைபோல, தமிழ் இலக்கியங்கள் பேசுகிற யாளிகள் கற்பனை மிருகமா அல்லது அப்படி ஒரு விலங்கு வாழ்ந்து அழிந்துவிட்டதா? வரலாற்றின் மீதான புனைவுகள் மிக அவசியமான ஒன்று. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சேர சோழ பாண்டியர்கள் மீதான புனைவுகளுக்கே பழக்கப்பட்ட நமக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளின் மீதான புனைவு என்ற வகையில் ‘குமரி’ மிகவும் அவசியமான ஒன்று. -கரன் கார்க்கி
2
எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய நண்பர்கள் ஆனோம். என்னிடம் அவர் சொன்ன கதைகள், சம்பவங்களை வைத்தே குறைந்தது மூன்று செறிவான புதிய கதைக்களன் கொண்ட பெரிய நாவல்களை அவர் இந்நேரம் எழுதியிருக்க முடியும். சினிமாவும், சினிமா எடுப்பதற்கான கடுமையான பிரயத்தனமும் மட்டும் அவரது படைப்புகள் முற்றிய நாட்களில் பெரும்பகுதி எடுத்துக்கொண்டது உண்மை. ஆனாலும் அவருக்குள் இருக்கும் தீவிர படைப்பாளியை அவ்வப்போது சிறுகதைகளாக வெளிபடுத்தினார்.தமிழு, நிறமற்றவளின் கண்கள், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஒரு சைக்கிளின் கதை போன்ற அவரது கதைகள் யதார்த்த தளத்தில் அமைந்த துள்ளிய காட்சி சித்திரிப்பை அளித்து தெரிந்த விளம்புநிலை மக்களின் தெரியாத வாழ்க்கையை கூறின. கதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் அவர் மெனக்கெடவில்லை. பின்னர் நண்பர்களின் தொடர்ந்து நச்சரிப்பும், யாவரும் பதிப்பக ஜீவகரிகாலன்,வேல்கண்ணன் போன்ற நண்பர்களின் தொடர் முயற்சியால் மோகினி என்ற பெயரில் தொகுப்பு 2017 ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளிவந்து பரவலான கவனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் அவரது படப்பிடிப்புகள், கதை விவாதம், லொகேஷன் பார்க்க போதல் என்று சினிமா அவரின் பெரும்நேரத்தை எடுத்துக் கொண்டது. அவருடன் இரவு நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பெரிய நாவலான ‘’குமரி’’ குறித்து என்னிடம் விவாதிப்பார். அதன் காட்சிகளை கேட்கும் போது, ‘’ விரைவில் எழுதி முடியுங்க தோழர், நீங்க சொல்லும் போதே விரைவில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’’ என்பேன். ஒரு சிறிய புன்னைகையை பதிலாக கொடுப்பார். யாவரும் சிறுகதை போட்டியில் கொரனோ காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக அவரது ‘’ சதுரங்க வட்டம்’’ தேர்வு பெற்றது. பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறந்த கதை இது. விரைவில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து யாவரும் பதிப்பகம் புத்தகமாக கொண்டு வர இருக்கிறது. அந்த தொகுப்பில்‘’ சதுரங்க வட்டம்’’ இடம் பெறுகிறது. போன வருட(2020) கொரனோ லாக் டவுனில் குறுநாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து இருப்பதாக கூறினார். அதுதான் ‘’பாரி ஆட்டம்’’ குறுநாவல்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2021இல் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சியில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரவலான வாசகர்களால் விரும்பியும் வாங்கப்பட்டது. முக்கியமாக திரைப்படத் துறையை சேர்ந்த பல நண்பர்கள் வாங்கிப் போனார்கள். கதைப்போக்கில் அமைந்திருந்த ஒருவகையான திரில்லர் தொனி அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் வெகுஜன நாவல் வகைமைக்குள் பாரி ஆட்டத்தை சேர்க்க இயலாது. தீவிரமான மன உணர்வுகளை அளிக்கும் வாழ்க்கை முறையையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார். பின் நவீனத்துவம் கொடுத்திருக்கும் கதை சொல்லலின் சுகந்திரம், கதையின்றி கதை மொழிதல், சில வரிகளில் ஒரு கதாபாத்திரங்களை வரையறுத்தல், தேவையற்ற விளக்க உரைகளை தவிர்த்தல் ஆகிய நுட்பங்கள் அனைத்தும் பாரி ஆட்டத்தில் துணிந்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார் வ,கீரா. இந்த நுட்பங்கள் எதுவும் வாசகனை உறுத்தாமல் சீரான கதை சொல்லலால் தடையின்றி வாசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் குறுநாவல் வடிவத்தில் தான் அதிகமும் சாதனைகள் நிகழ்த்திருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தி.ஜானகிராமனின் அடி, அசோகமித்திரனின் இன்று, கி.ராஜாநாராயணனின் கிடை, ஆர்.சண்முகசுந்திரத்தின் அறுவடை , லாசாராவின் புத்ர, வண்ணநிலவனின் கம்பாநதி, ஜெயமோகனின் டார்த்தீனியம், சு. வேணுகோபாலின் கூந்தப்பனை போன்று இன்னும் பல வரிசையில் உள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்( நீல. பத்மநாபனின் தமிழ்மொழி பெயர்ப்பு) மலையாள மொழிபெயர்ப்பு என்றாலும் குறுநாவலின் உச்சபட்ச சாதனைக்கும் வடிவத்துக்கும் துல்லியமான எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
போன வருடம் குற்றப் பின்னனியில் அமைந்த இரண்டு குறுநாவல்களை படித்தேன். ஒன்று சீரியல் கில்லரை( தொடர் கொலைகாரன்) யாரென்று கண்டுபிடிக்கும் வகையில் அமைந்த நந்தன் ஸ்ரீதரனின் படுகளக் காதை, அவரின் திரைக்கதை ஒன்றை குறுநாவல் வடிவில் மாற்றி எழுதியிருந்தார். ஒரு மனிதனின் வாழும் சூழல் எவ்விதம் குற்றப் பின்னணியில் சிக்க வைக்கிறது என்பதை மெல்லிய நீரோட்டமாக எழுதியிருந்த என்.ஸ்ரீராமின் அத்திமரச்சாலை. இந்த இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது பாரி ஆட்டம்.
முப்பது வருடங்களுக்கு முன் நடக்கும் யாரும் சொன்னாலும் நம்ப முடியாத கிராமிய கதை, இன்னொருபுறம் சமகாலத்தில் கொடைக்கானலில் வயதுப்பெண்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் பற்றி எந்த துப்பும் கவலர்களுக்கு கிடைக்காமல் அலைகிறார்கள். இவ்வாறு இரண்டு கால கட்டங்களில் கதை சொல்லப்பட்டு ரயில் பாதையின் இரு வேறு தண்டவாளங்கள் இணைவது கதையின் முடிவை நோக்கி கோர்த்திருக்கிறார் கீரா. கடந்த காலத்தின் கதைக்கு வாய்மொழி கதைமொழியின் கூறல் முறையையும், நிகழ்காலத்தின் கதைக்கு விறுவிறுப்பான மர்மநாவலின் கூறல் முறையையும் பயன்படுத்தி எழுதியிருக்கிறார் கீரா. ஆனால் கதாபாத்திரங்களின் மன ஒட்டத்தை மிக துல்லியமாக சித்தரித்து எழுதியிருப்பது நாவலை மிகுந்த நம்பகத் தன்மைக்குள் கொண்டுவந்து விடுகிறது.
மாச்சாப்பு, வெள்ளையன், மாரியாயி என்ற மூவரை மையமாக வைத்து கடந்த கால கதை நகர்கிறது. சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் அண்ணன், தம்பிகள். மழை வந்தால் விவசாயம், இல்லையென்றால் ஆடுகளை மேய்த்து அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். அண்ணனுக்கு எந்த இடத்திலும் பெண் அமையவில்லை. அதனால் தம்பி வெள்ளையனுக்கு திருமணம் செய்துவிட முடிவெடுக்கிறான். ஆனால் தம்பி வெள்ளையன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான், சில சம்பவங்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் மாரியாயியை மணந்து கொள்ளும் சூழல் வருகிறது. ஊரார் கேலி பேசினாலும் மாரியாயி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரையும் தீர்க்கமான முடிவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். குடிசை வீட்டின் கூரையை மாற்றி, அவர்கள் நிலத்தில் கடன் வாங்கி கிணறு தோண்டி, அறுவடை செய்து புகுந்த வீட்டை கரை ஏற்றிவிடுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் மகிழ்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டம் தனது மகன் படக்கூடாது என தங்களின் வசதிக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். செட்டிக்குளம் என்ற கிராமத்தில் இந்தக்கதை நடக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராமிய வாழ்வை அப்படியே அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு இரு ஆண்களை திருமணம் செய்யமுடியும் என்கிற இடத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலை மிகுந்த துல்லியத்துடன் எழுதியிருக்கிறார். மாரியாயி அவளின் அம்மா எடுக்கும் முடிவுகளும் அதை இயற்கையாக நகர்த்தி சென்ற விதமும் எழுத்தாளனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இப்படி நிகழுமா? என்கிற போது நிகழும், நிகழ்த்திருக்கிறது என்று ஒரு கதையை நம்பகத் தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் நிலத்தில் கிணறு வெட்ட நீர்ப்பிடிப்பு பார்க்க வரும் சன்னாசி, துண்டில் தேங்காயை போட்டு முறுக்கிக் கொண்டு பார்க்கிறார். அந்த நிலத்தில் இருக்கிற கரையான் புற்று தான் நீரை கண்டுபிடித்து தருகிற வித்வான் என்கிறார். கிணறு தொண்டி நீர் கசிய ஆரம்பித்ததும் மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டு முதல் நீரை அருந்தக் கொடுப்பது போன்ற மறைந்து போன அல்லது மறந்து போன நாட்டுப்புற சடங்குகள் அனைத்தையும் நுட்பமான விவரணைகள் மூலம் நினைவுபடுத்தியிருக்கிறார் கீரா.
நிகழ்காலத்தில் நடைபெறும் கதையில் கொடைக்கானலில் தொடர்ந்து இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்குகளை விசாரிக்கும் இளம் ஆய்வாளன் கார்த்திக் எந்த துப்பும் சரியான முறையில் கிடைக்காமல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேலதிகாரிகளிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். சினிமாவுக்கு முயற்சி செய்து தோற்று வேறுவழியில்லாமல் கொலையுண்டவர்களை காவலர் தரப்பின் சாட்சிகளுக்குக்காக படம் பிடிக்கும் முருகனின் கதையும் சொல்லப்படுகிறது. இப்படி நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைத்து விளையாடும் ஆட்டத்தை பாரி ஆட்டம்(கிராமங்களில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டு) குறுநாவலில் அந்த விளையாட்டைப் போலவே குற்றங்களின் தோற்றுவாயை துல்லியமாக சொல்லியிருக்கிறார் கீரா.
பொதுவாக குறுநாவல் எழுத்தாளருக்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வடிவம்! சிறுகதைக்குரிய வேகமும், நாவலுக்குரிய களமும், சிக்கலும் இருந்தாக வேண்டும். ஆனால் நாவலுக்குரிய இடம், பக்கங்கள் இங்கு இருக்காது. 70, 80 பக்கங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும். இதை எந்த நுட்பமும் குறையாமல் எண்பது பக்கங்களில் அனாசயமாக சாதித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வ.கீரா. மிக புதிய களம், நுட்பமான விவரணைகள், இரு விதமான கதை சொல்லல் என ஒரே அமர்வில் படிக்க வைத்து புதிய அனுபவத்தை தருகிறது பாரி ஆட்டம் குறுநாவல். இந்தப் பிரதி இன்னும் இவரிடம் இருந்து வீரியமான படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கிறது.
– விஜய் மகேந்திரன்
நூலாசிரியர் குறித்து:
1.
கீரா திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ‘’பச்சை என்கிற காத்து’’, ‘’மெர்லின்’’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ள கீரா, சமீபத்தில் ''பற'' என்னும் திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான சமூத்திரக்கனியை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு இயக்கிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதைகளை தொகுத்து “மோகினி” எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை யாவரும் பதிப்பகம் 2016- ஆம் ஆண்டு வெளியிட்டது.
'கலகம் - தேசிய கலை இலக்கியத்தடம்' என்ற அமைப்பை ஆரம்பித்து பல எழுத்தாளர்களின் சிறந்த புத்தகங்களுக்கு கூட்டங்கள் நடத்தியுள்ளார். கலகம் விருதுகளையும் வருடந்தோறும் பல்வேறு கலை, இலக்கிய சமூக தளங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கி வருகிறார்.
0
3
கீரா முதலில் கிராமப்புற நாடகமான பச்சை எங்கிரா காத்து (2012) இல் புதுமுகங்கள் முன்னணி வேடத்தில் நடித்தார். படத்தின் தயாரிப்பின் போது, அவர் படத்தின் அறிமுக நடிகை சரண்யாவுக்கு தேவதை என்ற மேடைப் பெயரைக் கொடுத்தார். [ 1 ] 2010களின் பிற்பகுதியில், கீரா சமுத்திரக்கனி தலைமையிலான கௌரவக் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட எட்டுத்திக்கும் பரா (2020) என்ற சமூக நாடகத் திரைப்படத்தில் பணியாற்றினார். இந்தத் திரைப்படம் மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது மற்றும் COVID-19 தொற்றுநோய் ஊரடங்கை ஏற்படுத்துவதற்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இறுதிப் படங்களில் ஒன்றாகும் . [ 2 ] [ 3 ]
டிசம்பர் 2018 இல், முன்னாள் நடிகர்-அரசியல்வாதி எம்.ஜி.ராமச்சந்திரனின் தூரத்து உறவினரான ஜூனியர் எம்.ஜி.ஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் குறவன் என்ற திட்டத்தில் தான் பணியாற்றி வருவதாக கீரா அறிவித்தார் . பழங்குடி ஆர்வலர்களின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த திட்டம் இரும்பன் (2023) என்ற பெயரில் தொடர்ந்தது. படத்தின் வெளியீட்டின் போது, கீராவின் பெயர் விளம்பர சுவரொட்டிகளில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டது, இதனால் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், பணம் செலுத்தப்படாததாகவும் அவர் குற்றம் சாட்டினார். [ 4 ] [ 5 ]
ஜனவரி 2023 இல், தனது அடுத்த திட்டத்திற்கு "வீமன்" என்று பெயரிடப்படும் என்று அறிவித்தார் , இது யானைப் பாகன்கள் பற்றிய ஒரு கதை.
திரைப்படவியல்
[ திருத்து ]
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2012 பச்சை எங்கிரா காத்து
2018 மெர்லின்
2020 எட்டுத்திக்கும் பாரா
2023 இரும்பன்
Thirai kathi
உடுமலை வட்டாரத்தில் ஜீலை மாதத் தொல்லியல் பயணம்: சுப்ரபாரதிமணியன்
1. சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது.
2. . கிராம வாழ்க்கை பற்றிய ஏக்கம் தொடர்கிறது . மாயையல்ல அது.
3. பயணம் எப்போதும் ஆசுவாசம்தான்
0 ஐவர்மலை.
பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்ர்களையும் உள்ளடக்கியது..
0
சமணர்கள் தங்கியிருந்த அயிரமலையை பிள்ளைமார் எல்லாம் சேர்ந்து பஞ்ச பாண்டவரை குறிக்கும்
ஐவர் மலை என்றும்
திரௌபதி அம்மன் கோயில் என்றும் மாற்றிவிட்டனர்.perur jayaraman
ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.
சங்ககாலம்
ஐயூர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். முடம் பட்டிருந்த இந்தப் புலவர் உறையூர் வேந்தன் கிள்ளி வளவனைக் காணச் செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனைக் கண்டார். வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் எனக் கேட்ட புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். [1] ஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட தான்தோன்றிமலை வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
தல வரலாறு
வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுவதால் இம்மலை ஐவர் மலை எனப் பெயர்பெற்றதாக கூறுகின்றனர். போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.
தல சிறப்பு
1. ஐவர்மலை தலத்தில் சூரியபுஷ்கரிணி,சந்திர புஷ்கரிணிகளின் அமைப்பு சிறப்பானது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்து கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக நம்புகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
2. மற்றொரு சிறப்பு உச்சிப்பிள்ளையார் சன்னதியில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
3. ஐவர் மலை தலத்தில் விநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
4. பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் துவாபரயுகத்தில் இங்கு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.
தலபெருமை
1. போகர் பழனி மலைகோவிலில் உள்ள முருகனை இந்த மலையில் தங்கியிருந்து உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் எந்த ஆதாரமுமில்லை. ஐவர்மலை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
2. நாராயணபரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றை கட்டுகிறார். நாராயணபரதேசி மட்டும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள். மற்றும் அவர் சீடர் பத்மநாபா களஞ்சிகாட்டில் முக்தியடைந்துள்ளார்கள்.
3. பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா, போன்றவற்றை கற்பித்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இங்கு பெரியசாமிக்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. பெரியசாமியின் ஒரே சீடர் பெருமாள்சாமி குடும்பத்துடன் ஐவர் மலையில் வசிக்கிறார்.
4. இப்போது இம்மலையில் யோகா, தியானம் ஆகியவற்றை யாரும் சொல்லித் தரவில்லை. தற்போது இங்கு சாந்தலிங்கம் என்ற இளந்துறவியும் பயனர் யோகிசிவம் ஆக இருவர் மட்டும் உள்ளனர்.
5. இம்மலையின் மேற்கு பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
6. கூன் பாண்டியன் காலத்தில் துரத்தியரடியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார்கள். இதனை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
7. இடும்பன் சன்னதி பழனியைப்போலவே இங்கும் சிறப்பு.
8. ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூத தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
9. யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையை குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் சன்னதியில் விளங்கும் பஞ்சபூத அமைப்பு
[தொகு]
நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம்,
நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).
நெருப்பு -ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம்
காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் ஆடாது அணையாது.
ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.
பஞ்ச பூதங்களும் ஒன்று கூடும் ஆடி அமாவாசை வழிபாடு பஞ்சபூத தலங்களுக்கு போய் வந்த பலன் தரவல்லது.
wikkipiidiyaa
0
2..கொழுமம் தாண்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
]
இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொழுமம் என்னுமிடத்தில், அமராவதி ஆற்றின் தென்கரையில், அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் சங்கர ராமநல்லூர் என்றழைக்கப்பட்டது. குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது.அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கூறுவர். [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக தாண்டேசுவரர் உள்ளார். இவர் சோழீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரிய நாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மகாசிவராத்திரி பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]
அமைப்பு
சிதம்பரத்தில் உள்ளது போல நடராசர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். அவர் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காணப்படுகிறார். இந்த அமைப்பின் காரணமாக இத்தலம் தென் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. மூலவருக்கு இடது புறம் தனி சன்னதியில் இறைவி உள்ளார். அவருக்கு முன் ஜேஷ்டாதேவி, திருச்சுற்றில் சுந்தர விநாயகர், பால முருகன், அய்யப்பன், மகாவிஷ்ணு, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள், மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். கல் மண்டபம் போன்று காணப்படுகின்ற கருவறையின் பின்புறம் அக்னீசுவரர் சன்னதி உள்ளது.[1]
0
wikipidia
0
கணியூர் சொக்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கணியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[
இக்கோயிலில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
0
நாலு நாள் பயணம் . பல கோயில்கள், பல கல்வெட்டுகள்
சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது
நெசவுச் சிறுகதைகள் / சுப்ரபாரதிமணியன்
தொகுப்பாசிரியர் : பொன் குமார்
0
பொன் குமார் தொகுப்பு நூல்களின் சிகரம்.இந்த நூல் சிகரத்தில் ஒரு முத்து.
இதில் 18 முத்தான கதைகள் நெசவாளர் வாழ்வியலைச்சொல்லும் கதைகள். ஆர். சண்முகசுந்தரம் முதல், சுப்ரபாரதிமணியன், பல்லவி குமார் வரைக்கும்.
ஆர். சண்முகசுந்தரம் கதை:
பரிகாரம் ஜீவனம் : ஆர். சண்முகசுந்தரம் கொங்கு மண்ணின் மனிதர்களைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் சார்ந்த முதலியார் சமூகத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். இதுலயும் சென்னியப்ப முதலியார் என்ற நெசவாளர் பற்றிய கதை எழுதி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தினசரி நெசவு வேலைகள் பற்றி எழுதி இருக்கிறார் மனிதருடைய வாழ்க்கையில் தூக்கம் பாதிவாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்பார்கள் ஆனால் தூக்கம் இல்லாத இருந்தால் என்னவாக இருக்கும் என்று அந்த கதை முடிகிறது. சிறந்த கதை
வாழ்வுக்கே ஒரு நாள் என்ற ஒரு கதை தொமுசி ரகுநாதன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய பஞ்சும் பசியும் தமிழின் முதல் சோசலிச யதார்த்த வகை நாவல் என்பதாக உள்ளது இதில் உள்ள சுப்பையா முதலியார் என்ற ஒரு நெசவாளியை பற்றி கதையைச் சொல்கிறார். இவர் சேலையை விற்பவராக இருக்கிறார் ஆனால் அந்த சேலை தீபாவளி சமயத்தில் கூட சரியாக விற்பதில்லை ஆனாலும் அவர் மனைவியிடம் காட்டும் சிறு அன்பு என்பது எப்போதைக்குமானதாக இருக்கிறது.
சுப்ரபாரதி மணியனின் துண்டு துணி என்ற கதையில் சேலையில் நெய்கிற போது மிச்சமாகிற துண்டுத் துணியை பெண்கள் ஜாக்கெட்டாக பயன்படுத்துவார்கள் அல்லது அதை விற்று சினிமா பார்க்க பயன்படுத்துவார்கள். இந்த அனுபவம், ஒரு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களை பற்றி இந்த கதை சொல்கிறது
பார்வைகள் என்ற சுப்ரபாரதி மணியனின் கதையில் ரங்கசாமி என்ற நெசவாளர் பற்றி சொல்லப்படுகிறது. தங்களுடைய கூலி சார்ந்த போராட்டம் பெரிதாக ஆகும் என்று பயந்து அவர்கள் மனது நடுங்குவது பற்றிய சித்திரங்கள் இந்த கதையில் உள்ளன சுப்ரபாரதி மணியின் கீறல் கதையில் ஒரு கோயிலில் இருக்கும் வேலையில் வைக்கப்படும் பூஜைப் பொருட்களும் அதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளும் பற்றி பேசுகிறது.
மிச்சமிருக்கும் . ஒருவன் என்ற லட்சுமி சரவணகுமாரின் கதை சிப்ட் முறையில் நெசவு ரிசர்வ் செய்யும் தொழிலாளரைப் பற்றி, இருக்கிறது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான நெசவு தொழில் முறைகள் இருக்கின்றன .லட்சுமி சரவணகுமார் அவர் பகுதி நெசவாளர்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதில் வருகிற கூலி நெசவு செய்யும் ஒருவன் ஏழை. கூலி நெசவு செய்யும் ஒருவன் மீது மையம் கொள்ளும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆனால் அவன் ஊருக்கு விடுமுறையில் சென்றவன் திருமணமாகி வருவதும் அவனுக்கு அந்த நெசவுக்கொட்டகையில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அன்பளிப்பு தருவதும் என்று நெகிழ்ச்சியை தருகிற கதையாக இருக்கிறது.
வீதி சமைப்போர் என்ற வெண்ணிலாவின் கதையின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது. நெசவாளர்கள் பாவு போடுவதற்காக நிறைய நேரம் ஒதுக்குவார்கள் பலர் சேர்ந்து அதை செய்வார்கள் அப்படி பாவு போடுகிற நாளில் நடக்கிற விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார்
ஊடு பாபு என்ற கதையில் பாரவி அவர்கள் தஞ்சாவூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுகிறார் அதில் கஷ்ட ஜீவனம் நெசவாளர்களோடு இணைந்து வருகிறது. தேநீர் கடைக்காரர்கள் வாழ்க்கையும் . தேர் பார்க்க போக முடியாமல் இருக்கிற அவஸ்தையும் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
கஞ்சி தொட்டி கதையில் சேலம் வின்செண்ட் அவர்கள் சேலம் பகுதி மக்களுடைய வாழ்க்கையை சொல்லுகிறார். ஒரு பகுதி நெசவாளர்கள் கன்னடம் பேசுபவர்கள். இந்த கதையில் பல உரையாடல்கள் கன்னடத்திலேயே வருவது சிறப்பாக இருக்கிறது நெசவாளர் சமூகத்தின் கஷ்டங்கள் பற்றி நிறைய பேசுகிறார் கன்னட உரையாடல்களும் கன்னட பாடல்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக போராடவும் வேண்டி இருக்கிறது என்பதை இந்த கதையிலே வின்சென்ட் அவர்கள் சொல்கிறார்
பல்லவி குமார் கதை : உதிரும் கனவுகள்;
கேரளாவுக்கு வேலைக்காக கணவன் போகிறான். நெசவு தொழில் நசிந்து போய் இருக்கிற நேரம்.
வெளியூர் போன கணவனை காணவில்லை அவனை தேடிப்போன மனைவியின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன கணவனை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை என்று குழந்தைகளைக் காப்பாற்ற மனைவி ஒரு முடிவு எடுக்கிறாள். இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை மனதில் வருகிறது
நெசவாளர் குடியிருப்பு என்ற கதையில் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்ட இடங்கள் வாங்குகிறார்கள் அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளை சொல்லி இருக்கிறார் பா ராஜா.
ஜனநேசனின் கதையில் சிறுநீரகத்தை விற்று ஏமாந்து போகும் நெசவாளர்கள் சிலரின் அவலம்.
பாரதிநாதன் கதையில் நெசவாளியின் சினிமா கதாநாயகன் பற்றிய பிம்பம் உடைபடுவது பற்றியது. நல்ல கட்டுடைத்தல்.
பட்டுச்சேலை என்ற கதையில் காதலிக்காக பட்டு சேலையை நெய்கிறான் அவன். கல்யாண பட்டு சேலை ஆனால் காதல் நிறைவேறவில்லை நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சோகம் சொல்லப்பட்டிருக்கிறது
குலப்பெருமை என்ற கதை சீனிவாசன் எழுதியது கொரோனா காலகட்டத்தில் நெசவுத்தொழில் நசிந்து போய்விடுகிறது பலர் பல தொழிலுக்குப் போகிறார்கள் முடி வெட்டும் தொழிலை செய்யலாம் என்று ஒருவன் ஒருவன் நினைப்பது அவருடைய மன அவஸ்தையைச் சொல்லுகிற கதையாக இருக்கிறது.
அசோக் குமார், பல்லவி குமர் போன்றவருடைய நீண்ட கதைகளும் உள்ளன.
மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு என்று இதை சொல்லலாம்.
நெசவாளர்களுடைய வாழ்க்கை தமிழகத்தின் பல்வேறு பகுதி சார்ந்த அவர்களுடைய வாழ்க்கை, நடை முறையில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுவது பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றியும் சிறப்பானக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த தொகுப்பு.
இந்த தொகுப்பு போல் பல தொகுப்புகளை பொன்குமார் வெளியிட்டு வருகிறார். பணச் செலவு, உழைப்பு இதெல்லாம் பெரிய அளவில் தென்படுகிறது. அவர் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் இடவேண்டும் இந்த முயற்சிகளில் அவர் ஈடுபடுவதற்காகவே அவரை நாம் பாராட்ட வேண்டும்
( தொகுப்பாசிரியர் பொன் குமார்
வெளியீடு நிவேதா பதிப்பகம் ரூபாய் 240 )
சுப்ரபாரதிமணியன்
0
ஆட்டம் ATOM ஆவணப்பட விழா கோவையில்....
ஆட்டம் காண்கிறதா திருப்பூர் தொழில் உலகம்
சுமன் இயக்கிய திருப்பூரை பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதி மற்றும் பின்னலாடை சார்ந்த அதிபர்கள் புலம்பினார்கள். அழுது தீர்த்தார்கள் திருப்பூரில் இன்றைய நிலைமை பயம் தருகிறது. தொடர்ந்து தாறுமாக தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பருத்தி, நூல் விலை, அதன் காரணமாக செயற்கை இலை ஆடை உற்பத்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற மவுசு. அவை மலிவாக இருப்பதால் நுகர்வோர் அவற்றை அதிகம் வாங்குவது
மத்திய அரசின் தொழில் கொள்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பனியன் தொழில் வளர்ச்சி தொழிலாளர்கள் சிக்கல் என்று பலவற்றை இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
உள்நாட்டு வணிகம் என்பது அதன் தலைப்பு. இரண்டு உற்பத்தியாளர்கள் பணி தொழில் சிக்கல் பற்றி பேசுகிறார்கள் ஒருவர் செகண்ட் ஃபீஸ் சார்ந்த தொழில் நடத்துபவர் முதலாளியாக இருந்து பல லட்சம் சொத்துக்களை இந்த தொழிலில் சமீப காலத்திய போக்குகளால் இழந்தவர் ஒரு சிறு மளிகை கடை நடத்தி தன் குடும்பத்தை காப்பாற்றுவதாக சொல்கிறார். தன் மகன்களுக்கு பள்ளிக்கு பணம் கட்ட கூட பணமில்லாமல் தவிப்பதாகவும் நன்றாக இருந்த காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து இருப்பதையும் திருப்பூரில் நிலைமை மிக மோசமாக இருப்பதையும் சொல்லி அழுகிறார் அவர் அழுவதை பார்த்து அவருடைய குழந்தைகளும் கண்ணீர் விடுகின்றன. திருப்பூர் நிலைமை எப்போது மாறும் என்ற கனவு அவருடைய கண்ணீரில் கரைந்து இருப்பதை இந்த படம் காட்டுகிறது
திருப்பூரின் இந்த வியாபாரம் போக்கு அவ்வப்போது நிகழும் ஏறிம் இறங்கும். ஆனால் இறங்கி கொண்டிருக்கும் திருப்பூரில் தொழில்முகத்தை இவர்கள் அதிர்ச்சி சார்ந்த விஷயங்களால் நிரப்பி இருந்தார்கள் .இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தரவுகள் பல்வேறு நேர்காணல்கள் மூலமாக திருப்பூர் நிலையை சொல்லியிருந்தார்கள்
திருப்பூர் செயற்கைஇழை உற்பத்தி மூலம் புது சந்தை உருவாக்கி இருக்கிறது ஆனால் பருத்தி துணிகளின் புறக்கணிப்பு என்பது எல்லோர் மத்தியிலும்.. பீதியான செய்திகளை கிளப்பி இருப்பதை இந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது
இந்த திரைப்பட விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தூக்கி வைத்தார் நிறைவு விழாவில் ஆவணப்பட இயக்குனரும் ஜெமினி கணேசன் பேரனுமான அருண்வாடி மற்றும் பாண்டிச்சேரி ஆரோவில் இயற்கை காப்பாளர் சரவணன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பாரு கழகு இயக்கம் பாரதிதாசன், ஈரோடு சக்தி வேல் போன்றோர் கலந்து கொண்டார்கள் கோவை ரத்தனம் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆவணப்பட விழாவில் உலக தரத்தில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட்டன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ..சுப்ரபாரதி மணியன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)