சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
The hidnu tamil feb 2025
முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும்
கற்பனையும் கருத்துரையும்: பிஜிலி நூல்
உண்மையைச் சரணடைதல் என்ற எளிய நம்பிக்கை தான். இஸ்லாமியத்தின் அடிப்படை அது பணிந்து நடக்க வற்புறுத்துகிறது என்கிறார் பிஜிலி
இஸ்லாம் ஒரு தத்துவமாகும். வாழ்க்கை முறையாகவும் பரவி அந்தந்த நாடுகளின் கலாச்சாரமும் பாதித்திருக்கிறது உள்ளூர் கலாச்சாரம் இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளை பாதிக்காத முறையில் பின்பற்றப்படுகிறது. வேறுபாடு இருக்குமானால் அது விலகிதாக உணரப்படும் சூழல்களை இந்த நூலில் சிறப்பாக சொல்கிறார். பிஜிலி.
சுற்றுச்சூழல் பொறியாளராக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து திருவனந்தபுரம் நகரில் வாழ்ந்து வருபவர். ஐந்து மொழிகளில் எழுதும் ஆர்வம் கொண்டவர். அவரின் சமீபத்தியக் கட்டுரைத்தொகுப்பு நூல் இது.
இஸ்லாமைக் கொள்ளாதவர்களும் புரிந்து கொண்டிருப்பது போன்று அது வெறும் மதம் மட்டும் அல்ல படைத்தவர்களிடமிருந்து படைக்கப்பட்டது திருக்குர்ஆன். இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் உண்மையின் குரலை சொல்வதற்காக இந்த நூலை பிஜிலி அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரத்தை கொண்டது என்ற கருத்து கற்பனையானது. இந்த கருத்தை கொண்டவர்கள் அதிகாரம் வைத்திருக்கிறார்கள் அவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று மனதில்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல தரவுகள் மூலம் சொல்கிறார்.
பேராசை தாகம் உருவாக்கியிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடைவதற்காக வழியாக இஸ்லாம் இருப்பதை பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். அந்த உண்மையை அறிந்து அடைய இந்த கட்டுரைகள் வழி காட்டுவதாக அமைத்திருக்கிறார். இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக எடுத்துரைக்கப்பட்டு தவறாக கணிக்கப்பட்டு இன்று இஸ்லாம் உட்படாத எல்லோராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். நாம் ஒன்று சேர்ந்து மனிதாபிமானத்தை புரிந்து கொள்ள முயல்வது சமூக வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை சொல்கிறார்
இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்கள் சரிவாகவேக் கிடக்கிறார்கள். பலரைக் கவரக்கூடிய உயர் சாதிக் கலாச்சாரம் பூர்வீக ஆதிக்கம் அவர்களை பாதித்திருக்கிறது என்பதை சொல்கிறார் ஆன்மீகம் லவுகீகமும் இஸ்லாமில் இணைபிரியாதவை இஸ்லாம் தான் மிகவும் பழமையான மதம் அதே நேரத்தில் இஸ்லாம் தான் மனிதனுக்கு ஏற்றதான நவீனமான மதம் என்றும் பல சர்ச்சைகளை இந்த நூல் எழுப்பி இருக்கிறது. முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும் என்பதற்கான நெறிமுறைகளையும் விளக்குகிறது இந்நூல்.அதை பிற மதத்தினரும் கைக்கொள்ளலாம் என்பதையும் இது சொல்கிறது
பிஜிலி அவர்கள் தமிழ், மலையாளம், உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் அறிந்தவர். தமிழில் அவ்வப்போது எழுதி வருகிறார் அவரின் ஐந்து தமிழ் நூல்களில் சமீபத்திய நூல் இது.
ரூபாய் 300/ 388 பக்கங்கள் சித்தார்த் பதிப்பகம் மதுரை 6 2 5020 8220550688
சுப்ரபாரதிமணியன்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB