சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 9 ஜூன், 2019

கவியரசனின் பரிதவிப்பு நாவல் ; சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
கவியரசனின் இலக்கிய ஆர்வத்தை சங்கரன் கோவில் கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒரு தரம் சென்றிருந்த போது கண்டேன். என் நூல்கள் பற்றிய ஆய்வுக்கான கேள்விகளை நுணுக்கமாக  பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சி அடைந்தேன்..சில கவிதைகளை கனவு இதழிலும் பிரசுரித்திருந்தேன்
 காதல் மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்வு இயல்பானதாக இல்லாத போது  அவர்கள் வாழ்க்கை தாறுமாறானதாக அமைந்து விடுவது பற்றிய ஒரு குறுநாவல்  படித்தேன் .நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது. அதை பிரசுரிக்க ஆர்வம் கொண்டபோது பக்க அளவைப்பற்றிச் சொல்ல அதை உடனே விரிவாக்கி எழுதினார்,.  எளிமையானத் தோற்றம். அதன் பிரதிபலிப்பாய்  எழுத்திலும் எளிமை. எந்த நவீன விடயங்களுக்கும் ஆட்படாமல் தன் அனுபவ எல்லையை விரித்துச் செல்லும் பாங்கு போன்றவை நம்பிக்கையளித்தன.
பரிதவிப்பு நாவலைப் படித்த போது ஒரு மரணம் சார்ந்த சூழலிலிருந்து அது  விரிவடைவதைக்கண்டேன். தேச நலனுக்கான சாவு. பாதிக்கப்படும் குடும்பச் சூழல். தண்ணீரை உறிஞ்சி காசாக்குபவர்கள்.அதைத் தட்டிக் கேட்கிறவர்களுக்கு வரும் சிரமங்கள், சுகாதாரக் கேடுகள், திருப்பூருக்கு இடம் பெயரும் கிராம மக்கள் ..பூதாகரமானப்பார்வை கவியரசனுக்கு. ஒன்றை இழந்து ஒன்று விசுவரூபிக்கும் வாழ்க்கையின் பல கணங்கள். ஒரு நாவலாசிரியனின் பார்வையாய் ஒன்றின் மீது ஒன்றாய் படியும் வாழ்க்கையின் நிகழ்வுகள் , தரிசனங்கள் . நல்ல வாசிப்பிற்குரிய நாவலாக மிளிர நுணுக்கமான சித்தரிப்புகள் , அனுபவங்களை  கோர்த்துச் செல்லும் பாணீயில் நல்ல கதை சொல்லியாக மிளிர்கிறார். தளம் குறுநாவல் போன்றதாயினும் பல அடுக்குகளாய்த் தந்ஹ்டிருக்கிறார். கல்லூரி மாணவனாக, ஆய்வுக்காலத்திலேயே  ஒரு சரியான இலக்கியப்பார்வை  சார்ந்த இலக்குடன் கவியரசன் பயணப்படுவது பெரும் சாதனையாகவே படுகிறது. அதை குறுகிய காலத்தில் கவிதைகள், குறுநாவலகள் , நாவல் என்று தொடந்து படைப்பாக்கத்தில் இருக்கிறார். மகிழ்ச்சி தருகிறது .


உடைந்து போன ஒட்டாஞ்சில்லுகள் : மலர்வதியின் நாவல்
                        சுப்ரபாரதிமணியன்
குடும்பமாய் நிலைத்து நிற்க ஆசைப்படும் இரு பெண்களின் கதை. ஆனால் குடுமப அமைப்பைத் தகர்க்க எத்தனை சதிகள், துன்பங்கள்.ரமணி செய்த தவறு ஒருவனைக்காதலித்ததுதான். அவனால் கைவிடப்பட்ட போது  சூழ்நிலைகளால் அவள் விபச்சாரியாக்கப்பட்டாள்.மகள் காட்டுக்குட்டி என்ற குட்டி மணி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ரமணி ஆசைப்படுகிறாள்.அவளை அதிலிருந்து மீட்டெடுக்க நடக்கும் போராட்டங்களை அதிலும் குறிப்பாக உளவியல் சிரமங்களை இந்நாவல் சித்தரிக்கிறது. பல நாவல்களில், திரைப்படங்களில் சொல்லப்பட்ட கதை அதை மலர்வதி தன் கன்யாகுமரிப் பின்னணியில் நெஞ்சம் பதைக்க வைக்கிற அளவில் கரடுமுரடாய் சொல்கிறார்.
காட்டுக்குட்டி என்றால் அப்பன் பெயர் தெரியாமல் பிறக்கும் குழந்தை மீது சுமத்தப்படும் அவச்சொல்லாகும்.    வாலிப வயதைத் தொட்டாலும் அவள் எல்லோரின் பார்வையிலும் காட்டுக்குட்டிதான்.காலந்தோறும் அந்தப் பெயர்தான். அப்பெயரை மாற்ற அம்மா ரமணி  பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறாள்.ரமணி காதலனால் வஞ்சிக்கப்பட்டவள். அதன் பின்னுமிரண்டு ஆண்களை நம்பிப் போய் ஏமாந்தவள். உதிரி வேலை செய்யும் அப்பு என்பவன். யாராவது வயதானவர்கள் சாகக் கிடந்தால் அவர்களைப் பராமரிப்பது, தேவையானவர்களுக்கு உதவி செய்வது என்று இருப்பவன். அப்புகூட ரமணிக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கிறான்.ஆனால் ஆண் அதிகாரம் அவனையும் தூரத் துரத்துகிறது. ஆண்களின் உளவியலை மாற்றியும் இறுக்கமாகவும் வைத்திருக்கும்  சமூகம் இந்தப் பெண்கள் மீதும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்தி வருகிறது. அதன் தொடர் விளைவுகள் மனபிறழ்வு நிலைக்கு கூடக் கொண்டு சென்று விடும். அதிலிருந்தெல்லாம் ரமணி தப்பிக்கிறாள்.ரமணி அவள் வீட்டருகில் நிற்கும் ஒற்றை மரமாய் , சாட்சியாய் நின்று கொண்டே இருக்கிறாள். கொள்ளையடித்தும் ஊர் வாயில் விழுந்தும் இம்சிக்கும் ஒரு கும்பல் குட்டிமணியை அபகரிக்கப்பார்க்கிறதும். ரமணி மீண்டெழுவது முக்கியமாக இருக்கிறது.வெறும் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல் அவள் வாழ்க்கை அமையவில்லை. “ செத்தவன் குண்டி வடக்கையா தெற்கையா . அவனுக்குட் தெரியாது என்பது போல் அல்லாடும் வாழ்க்கையை விவரிக்கிறார்.
குட்டி மணி பாதிகிழவனுக்கு கூட திருமணம் செய்து வைக்க இயலாதபடி தனித்து விடப்பட்டவள்.ஒணந்து போன பொறகு எம்புடு வெள்ளம் ஊத்தினாலும் கொவுராது. நான் ஒண்ந்தாச்சி. ஒண்ந்த்து ஒணந்ததுதா. ஒரு பொட்டச்சி ஒண்ந்து போச்சுன்னா அவ மனசெக்கூட பேசாட்டா பிரகு அவ கூட பேச ஒக்காது. அவ தேகம் கூட அழுகிப் பெறகு ஒணந்து போகும்என்கிறாள்.க்ன்யாகுமரியின் பேச்சு வழக்கு பொது வாசகனைத் திண்டாட வைப்பதுதான். அதற்காய் பொதுமொழியில் இந்நாவலை மலர்வதியால் எழுதி விடமுடியாது.படிப்பவனுக்கு இருக்கும் சிரமங்கள் தொடர்ந்து பக்கங்கள் தூரப்போகும் போது சுலபமாகும்.புனைவுச்சம்பவங்களைத் தவிர்த்து மனமொழியின் மூலம் போராட்டம் சொல்லப்படுவது படிக்க சிரமம் தருகிறது.   ம்லர்வதி காட்டும் அடர்த மரக்கூட்டங்களும் நவுடக்கள்ளிச்செடிகளூமான ஊர்  பின்னால் கோவிலும் கட்டிடங்களும் , சத்திரமுமாக நிற்கிறது.மனிதர்கள் காட்சுசெடிகளின் இயல்பை மீறிக்கொண்டு இறுகியக் கட்ட்டங்களாக மாறிப்   போகிறார்கள்.
காந்தாரியாய் ( எரிக்கும் மிளகாய் ) துன்புறுத்தும் சம்பவங்கள் ரோசம்மா கிழவியின் .உறியை இறக்கிப் பாத்தா பழைய நாலாணத்துட்டு நான்கும்  ரெண்டு ரூபா நோட்டு ஒன்றும் அழுக்குப்பட்ட கைக்குட்டையும் இருப்பது போல்பழையதைக்     கிளரக்கிளர ஏதேதோ வந்து கொண்டே இருக்கின்றன ரமணியின் பூர்வீக வாழ்க்கையில் . அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறார் மலர்வதி.இதிகாசங்கள், தொன்மங்கள் , புராணங்கள் என்று எல்லாவற்றிலும் இப்படி பெண்கள் இருப்பு சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்கள் மீட்சி சார்ந்து யோசிக்காமல் நைந்து போகிறார்கள்.கடவுள், மதம், பக்தி என்பதெல்லாம் நெருக்கடிகளுக்குள் தொடர்ந்து தள்ளிக் கொண்டே இருக்கின்றன ரமணி அதிலிருந்து மீளப் போராடுவதை இந்நாவல் சொல்கிறது. ரம்ணி கேட்கும் கேள்விகள் முக்கியமானவை. கரடு முரடான  மொழி.  முட்களாய் பாவிய அனுபவங்கள்.ஊழ்வினை என்று சொல்லும் பதில்களுக்கு மத்தியில் ஒரு விடுதலைக்குரல் கேடப்தை உணர முடிகிறது.
( மலர்வதி வெளியீடு, ரூ 150 : பக்கங்கள் 250 / 9443514463)




ஞாயிறு, 2 ஜூன், 2019

                   பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல

 பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து  எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் , .சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில்  வழங்கப்பட்டன .


இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப்பதிப்பும் இன்றைய சூழலில் பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில் புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும்  இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன “ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சென்னை  அவர்கள்.
திருப்பூர் சக்தி  விருது 2019   -
                              திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   20  20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19  அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை..  விழா நடைபெற்றது .
 இவ்வாண்டு திருப்பூர் சக்தி  விருது 2019   விருது பெற்றோர் : உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , .கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர்இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் கமலதேவி  உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி,         வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்

தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் திருப்பூர் சக்தி  விருதுகளை  வழங்கினார் . * ஓவியக்கண்காட்சி இயற்கை ஓவியங்கள் “  மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி,   ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.
*   நூல் வெளியீடு :சுப்ரபாரதிமணியன் “  திருப்பூர் “ ( திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள்  தொகுப்பு - நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125  ) நூலினை கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர். : பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம், துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்
தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்