சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
சுப்ரபாரதிமணியன்
NCBH புதிய நூல்கள் 1 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
1 வேர்களை இழக்கும் பூமி.. சுற்றுச்சூழல் கட்டுரைகள்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் சுப்ரபாரதிமணியனின் சமீபக் கட்டுரைகள் சொல்கின்றன.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் பற்றிய பார்வையையும் இவை தருகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரின் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன
27 நாவல்கள் உட்பட 115 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் -- சுற்றுச் சூழல் நூல்களின் வரிசையில் ஒரு கட்டுரை நூல் இது..
சுப்ரபாரதிமணியன் NCBH புதிய நூல்கள் 2
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
0 முகப்பறவையே எங்கு சென்றாய்.. திரைநாவல்
27 நாவல்கள் உட்பட 116 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் திரை நாவல் வரிசையில் ஒரு நாவல் இது.
நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரைக்கதைகள் உருவாகும்.. . அதே சமயம் திரைக்கதைகளிலிருந்து உருவாகும் திரைநாவல்கள் இன்னொரு வகை. அந்த வகையில் ஒரு நாவல் இது.
பெண்ணின் முக அழகும், உள்ளார்ந்த அக அழகும் வெளிப்படுமொரு இளம் பெண்ணின் கதையாகும் .