சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 27 ஏப்ரல், 2019

சுப்ரபாரதிமணியன் : 16 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 65 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர்.    திருப்பூரில் வசித்து வருகிறார் . சாயத்திரை “ என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான தமிழக அரசின் பரிசு,, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது , சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “கதா விருது
          உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்
சுப்ரபாரதிமணியனின் நாவல்கள்:
==========================================
*    மற்றும் சிலர் 1987
*    சுடுமணல் 1990    ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது )
*    சாயத்திரை  1998  ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு 
     பெற்றது,  ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி
     மொழிகளில் வெளியாகியிருக்கிறது  )
*     பிணங்களின் முகங்கள் 2003  ( கோவை கஸ்தூரி சீனிவாசன்
                          பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) 
*     சமையலறைக் கலயங்கள்  2005
*     தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது )
*    ஓடும் நதி 2007  ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற
                                           விருது பெற்றது)
*   நீர்த்துளி 2011    ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது                                        சிறந்த நாவலுக்கு )

* நைரா ( உயிர்மை )
* தறிநாடா ( என்சிபிஎச்)
* புத்துமண்  ( உயிர்மை )
* நைரா ( என்சிபிஎச் )
*  கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம் , மலையாளத்தில் வெளிவந்துள்ளது)
*  முறிவு  - 2017 உயிர்மை ( ஆங்கிலத்தில்  வெளிவந்துள்ளது )
*  கடவுச்சீட்டு 2017 ( முன்னேற்றப் பதிப்பகம் )
*  ரேகை ( பொன்னுலகம் பதிப்பகம்  2018  )


தொகுப்பு நூல்கள்
*அசோகமித்ரன் 77 (அசோகமித்ரன்  பற்றியக் கட்டுரைகள்:அமிர்தா, 2010 ) 
* நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் ( 2012 என்சிபிஎச், 2000 கனவு  )
* அ.முத்துலிங்கம் பற்றிய இரு  நூல்கள் 1. பேட்டிகள், அவரின் படைப்புகள்  பற்றிய கட்டுரைகள் ( இரண்டும் கவின்கலை பதிப்ப்கம், சென்னை வெளியீடு 2016 ) 
* சுந்தரராமசாமி மலர் (சுந்தரராமசாமி பற்றிய பலரின் கட்டுரைகள் ,கனவு 1994)
* தற்கால மலையாளக் கவிதைகள் ( மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் கனவு 1994 )
* கனவு -25 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டப் படைப்புகள் ( காவ்யா, ரூ300 2012 )
* பெண்மை :மலேசியா பெண் எழுத்தாளர்களின் சில  சிறுகதைகள்

வாணி ஜெயம், மங்கள கவுரி ,யோகி ,ரஞ்சனி ,வே.ராஜேஸ்வரி ,சனா ஆதிராஜ் ,ஜெயந்தி கைலாசம் ,உதயகுமாரி கிருஷ்ணன் ,ஜோதி சுப்ரமணியம்              எஸ். பி பாமா., விமலாரெட்டி ஆகியோரின் சிறுகதைகள்
*.”ஓ.. சிங்கப்பூர் “
 சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சில சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள்
 .( ஷாநவாஸ், ரெ.பாண்டியன். சித்துராஜ் பொன் ராஜ், ஜெயந்தி சங்கர், மாதங்கி, மணிமாலா மதியழகன்  ஆகியோரின் சிறுகதைகள் மற்றும் இவர்கள் பற்றியக்கட்டுரைகளும் மற்றும் எம்கே குமார், அழகுநிலா படைப்புகள்  பற்றிய கட்டுரைகளும் )

( இரண்டும் வெளியீடு : கவிநிலா பதிப்பகம், திருப்பூர்  )
* அரசியல்வாதியும் புறாவும்
பன்னாட்டுக்கவிதைகள், இந்தியக் கவிதைகள்  2018 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, தொகுப்பும் வெளியீடு : கவிநிலா பதிப்பகம், திருப்பூர் , )
* படைப்பும், பகிர்வும் ( 2006 : காவ்யா; சுப்ரபாரதிமணியன்  நூல்கள்                                         பற்றிய மதிபீடுகள் )
* ஹைதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள்( 1990, காவ்யா )
* ஹைதராபாத் 400 ( 1992, காவ்யா )



subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  : & subrabharathimanianpalanisamy                                                                     blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

* மே    மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி..                     பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,


தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன் 
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
வரவேற்புரை :தோழர்  சண்முகம்
( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
மாமேதை  காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரை :
திண்டுக்கல் தோழர் சந்தானம்
*   நூல்கள் வெளியீடு :
சுப்ரபாரதிமணியன் “ மூன்று நதிகள் “ சிறுகதைத் தொகுப்பு
இரா.முத்து நாகு நாவல் “ சுளுந்தீ “
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “
கா சு. வேலாயுதம்  “ சிட்டு செல்போன் 2.0.  “கட்டுரைத் தொகுப்பு
* நூல்கள் அறிமுகம் .:   பேரா. சுந்தரம், மருத்துவர் முத்துசாமி,            பின்னல் “ சவுந்திரபாண்டியன், பொறியாளர் இரவிக்குமார். 
மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488

ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை   
( கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம்)
12/5/19 ஞாயிறு ,இடம் அறிவிக்கப்படும். கட்டணமில்லை . மதிய உணவு, தேனீர் வழங்கப்படும்... முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர் .
கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்: தோழர்கள் பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),                        இரா. சண்முகம் தலைவர் (99448 15107 )
நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.
செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),



உலகப் புத்தக தினம்
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 24ம் சந்திப்பு உலகப் புத்தக தினம் சார்ந்து செவ்வாய் மாலை வாழ்க வளமுடன் மையம், செரீப்காலனியில் நடைபெற்றது, நேசனல் சில்கஸ், நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார்.. உலகப் புத்தக தினம் உருவாக்கம், சேக்‌ஷ்பியர் பிறந்த தினமாக அமைவது,  மற்றும் புத்தக வாசிப்பு அனுபவங்களை  தமிழறிஞர் நீறணி பவள்க்குன்றன் , வெற்றிவேல், லக்‌ஷ்மணன் . ரெத்னம், சுப்ரபாரதிமணீயன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். உலக புவி தினத்தைய்யொட்டி சுப்ரபாரதி மணீயன் தன் “ தண்ணீர் யுத்தம் “ என்ற சுற்றுச்சூழல் நூல் எழுதிய அனுபவஙகளைப் பகிர்ந்து கொண்டார்.( உயிர்மை பதிப்பகம் வெளியீடு சென்னை).
 உலக புவி நாள் .. சுப்ரபாரதிமணியன்
சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான். எல்லோருக்குமான தண்ணீர்என்பது சுத்தமான குடிநீர் உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது.தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே செய்கின்றன.தண்ணீர் விற்பனைக்கல்ல என்று தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்கிற பணத்திற்கு பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்பதோடு ஒதுங்கிக் கொள்ள வாய்ப்புகள் வந்திருக்கின்றன.கழிவு நீரைச் சுத்திகரிக்கும் தொழில் என்பது வளர்ந்து வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்துக் குடிப்பது பலநாடுகளில் அமுலுக்கு வந்தாகி விட்டது. தண்ணீர் சார்ந்த் உரிமைகளை வாங்குதல், வணிகம், விற்றலில் முக்கியத்துவம் பற்றிய புதிய நடைமுறைகள் உலக அளவில் வந்து விட்டன.இருபது ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத்துறை இருந்தது போல தண்ணீர் சார்ந்த விசயங்களில் கடுமையான ஒழுங்குமுறைகள் கோரப்பட்டுக்கொண்டிருக்கின்றன..எந்த வியாபாரத்திலும் அடிப்படை நேர்மை, அறம் எதிர்பார்க்கப்பட்ட காலங்கள் உண்டு. நுகர்வும், பேராசையும் விசுவரூபம் எடுத்திருக்கும் நவீன உலகில் சூழலைச் சிதைக்கிற அறப்போராளிகள் வியாபாரத்தில் பெருகி விட்டார்கள்.. கார்ப்ப்ரேடுகள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு கொண்டு செயல் படுவதே பெரும் அறமாகக் கொண்டாடப்படுகிறது.ரபேல் ஊழல் பற்றி விஜயன் நூல்( பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு )மற்றும்   , திருப்பூர் கனவு இதழ் அறிமுகங்கள் நடந்தன. நேசனல் சீனிவாசன் நன்றி கூறினார்.

புத் 

வியாழன், 18 ஏப்ரல், 2019

முகமூடிகள் :மணீமாலா மதியழகன் சிறுகதைத் தொகுதி : சுப்ரபாரதிமணியன்
சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளில் பெரும்பாலும் ஊடாடி நிற்கும் அம்சங்களை 2 பிரிவுகளாகச் சொல்லலாம். 1.சிங்கப்பூருக்கு பணம் சம்பாதிப்பதற்காகவும் குடும்ப தேவைகளுக்காகவும் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்து  வாழும் தமிழர்களின் அனுபவங்கள். 2 அங்கேயே பிறந்து வளர்ந்து ஒருவகையில் பூர்வகுடிகள் உடன் சம்பந்தம் கொண்ட தமிழர்களுடைய அனுபவங்கள் .இந்த வகையில் மணிமாலா மதியழகன் அவர்களின் அனுபவங்கள் இரண்டாம் பிரிவைச் சார்ந்தது அதேசமயம் முதல் பிரிவுத் தமிழர்களின் அனுபவங்களையும் தன்னுள் வரித்துக் கொண்டு  இந்த அனுபவங்களை  கதைகளாக  எழுதி வருபவர்கள் பலர் .  அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்குப் போய் சிரமப்பட்டு தொடர்ப்பில் இருக்கும் அவர்களின் அனுபவங்களை முதல் கதையில் சொல்லியிருக்கிறார். அவனின் சம்பளம் வருவாயை எண்ணி வரும் தொலைபேசி அழைப்பை அவன் எதிர்கொள்ளும் விதம் நாகரீகமாக இல்லைதான் ஆனால் வேலை சார்ந்த பல பகிர்வுகள்,  பிரிவு சார்ந்த துயரங்கள் எல்லாம் அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதை கதை கூறுகிறது . வெடித்து கிளம்பிய பிறகு தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர போது அவன் தன்னை உணர்ந்து கொள்கிறான். அவன் நிலை என்ன என்பது  நமக்கு தெரிகிறது. ஒரு பெண்ணின் மீதான எரிச்சலின் ரூபத்தை ஒரு பெண்ணே உள்வாங்கி எழுதி இருப்பது தான் அக்கதையின் சிறப்பு என்று சொல்லலாம் . சில கதைகளில் .சில விசித்திரமான மனநிலை கொண்ட மனிதர்களையும் சந்திக்கிறோம். மகன் இறந்த பிறகு உடல்தானம் குறித்து வற்புறுத்துகிறார்கள் அதற்கு மறுக்கிறார் ஒரு தந்தை.  விதவையான நிலையில் ஒரு பெண் மீது செலுத்தப்படும் அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளாமல் மறுமணம் என்கிற அந்தஸ்தை ஒரு பெண் விசித்திரமாக மறுக்கிறாள் . அவளின் அனுபவம் இன்னொரு கோணம் அல்லவா.
.குடும்பத்தில் மனைவியின் அடாவடித்தனமும் நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருப்பதும் ஒரு கணவனின் பொறுமையை சோதிப்பதை ஒரு கதை சொல்கிறது .அவன் தன்னைத் தானே நொந்து கொண்டு இந்தியாவுக்கு போய்விடுவோம் என்ற மிரட்டலை தீர்மானமாக சொல்ல வேண்டியிருக்கிறது இதுபோல் விசித்திரமான பெண்களை பல கதைகளில் மணிமாலா அவர்கள் சொல்கிறார். இப்படி பெண்களைச் சித்திரப்பதற்கும் மன முதிர்ச்சி  வேண்டும் .நிகழ் கால சம்பவங்களை எடுத்துக்கொண்டு அதை புராண கதாபாத்திரங்களை கொண்டு நகர்த்துவதும் விமர்சிப்பதும் இரண்டு கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் கைபேசி தரும் தொல்லைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஒரு குடும்பத்தில் எப்படி சீரழிவை கொண்டு வருகிறது என்பதை ஒரு கதை சொல்கிறது .புராண கதாபாத்திரங்களும் மனிதர்களும் இயைந்து வருகிறார்கள்  இரண்டு கதைகளில்... இத்தொகுப்பில் பல கதைகள் உச்சபட்சமான நகைச்சுவை உணர்வோடு சொல்லப்பட்டிருக்கிறது டீபாய் என்ற கதையை ஒரு குறியீடாக கொண்டு ஒரு குடும்பச் சூழலில் பல்வேறு விதமான விஷயங்களை மனதில் கொள்ளலாம். இப்படி நகரம் சார்ந்த கதாபாத்திரங்களை நவீன வாழ்க்கையின் சிக்கலுக்கு கொண்டுவருவது அதிலும் குறிப்பாக கைபேசியின் உடைய வித்தைகளை பற்றி சொல்லுவது போன்றவை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை அம்சங்களை கொண்டிருக்கின்றன. இந்த கதைகளின் பொதுவான தளங்கள் பல விதங்களில் பல நிலையில் வெறும் இறுக்கத்தை தவிர்த்து இயல்பான சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச் செல்வது ஒருவகை பாணியாக இருக்கிறது. முகமூடிகள் என்ற கதை சிங்கப்பூர் வாழும் தமிழர்களின் முகமூடிகளை எடுத்து இயல்பான முகத்தை காட்டுவதாக இருக்கிறது .வயது முதிர்வு காரணமாக மறதி நிலை ஏற்படுவதை சொல்லும் ஒரு கதையில் சிங்கப்பூரின் ஒரு பகுதி காடாக இருப்பதை காடாக இருந்தது என்று ஒரு முதியவர் நினைவில்  கொண்டே பேசிகொண்டிருக்கிறார் . அதுபோல தமிழர்களில் இடம்பெயர்ந்த வாழ்க்கையில் இன்னல்களை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் கதை சூழலில் இயல்பான தமிழர்களின் அனுபவங்களை இக்கதைகள் கொண்டிருக்கிறன. மணிமாலா மதியழகன் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு எழுத்தாளர் அவரின் இந்த சிறிய தொகுப்பு 20 அம்சங்களை மையமாகக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் தமிழுக்கு நல்வரவாக இருப்பதன் இன்னொரு அடையாளம் இக்கதைகள்  ரூ 200, கரங்கள் பதிப்பகம், கோவை


கழிவு நீர் மேலாணமை:
சுப்ரபாரதிமணியன் குங்குமம் இதழில் வெளிவந்தது 4/19
நோட்டா கழிவு நீருக்கு... ஓட்டு சுத்திகரிப்பு நீருக்கு
நாம் குடிப்பது கழிவுநீர் தானே..! கழிவு நீர் மேலாணமை: :             சுப்ரபாரதிமணியன்
பருவமழை பெய்கிறது. தண்ணீரும் பாய்ந்து ஓடி ஆறு, குளம், குட்டை, ஏரிகளில் கலக்கிறது. ஆனாலும் அவற்றை குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. கார்ப்பரேட் கம்பனிகளால் கழிவு நீராக்கப்பட்ட நீரை சுத்திகரித்து குடிநீராகக் குடித்துக் கொண்டிருக்கிறோம்.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் முழுவதும் ஆறு, குளம் , குட்டை கால்வாய்கள் அனைத்திலும் நல்ல தண்ணீராகவே    இருந்தது. ஆனால் இன்றைக்கு  அனைத்தும் சாக்கடை நீராக மாற்றப்பட்டு விட்டது. இது எப்படி நடைபெற்றது. கழிவுநீர் மேலாண்மையைச் சரியாகச் செய்யாததே காரணம். நல்ல தண்ணீரில் மீன், தவளை, புழு, பூச்சி என் அனைத்தும் வாழ்ந்து தண்ணீரைச் சுத்தப்படுத்தின. ஆனால் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கழிவுநீரை நல்ல தண்ணீரில் கலந்து விட்டு நீர் வாழ் உயிரினங்களை அழித்து விட்டோம். சாக்கடையான கழிவு நீரை நிலத்தடியில் படிப்படியாக இறக்கி குடிப்பதற்கு தகுதியில்லாத நீராக மாற்றி விட்டோம். இன்றைக்கு தொழில்நுட்பம் என்ற பெயரில் சுத்திகரித்து குடித்து வருகிறோம்.,
நன்னீர் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், குட்டைகளும் சாக்கடை நீராக ஆக்கப்பட்டுவிட்டன. நிலத்தடி நீரை ஆழ்துறை கிணறுகள் அமைத்து உறிஞ்சுவதோடு அல்லாமல் நிரப்பரப்பில் ரசாயனங்களை தூவி குடிப்பதற்கு தகுதியில்லாத நீராக மாற்றிவிட்டோம். பின்னர் அந்த கழிவுநீரையே சுத்திகரித்து குடித்துக் கொண்டும் இருக்கிறோம். இதற்கெல்லாம் கழிவுநீர் மேலாண்மையை சரியாக செய்யாததே காரணம்.

சிங்கப்பூரில் திருப்பூர்காரர் ஒருவரைச் சந்தித்து உணவு விடுதி மேசையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைப் பார்த்தபடி அவர் சொன்னார்:
“ திருப்பூர்க்காரர்கள் சாயப்பட்டறை நீரை  , கழிவு நீரை இப்படி பாட்டிலில் அடைத்து குடிக்கும் காலம் பத்து ஆண்டுகளில் வந்தாலும் ஆச்சர்யமில்லை “ என்றார்.  திருப்பூரின் சாயம் சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினை, கழிவு நீர் மேலாண்மையில் அக்கறையில்லாதது குறித்த கோபத்தில் அவரின் வார்த்தைகள் என நினைத்தேன்.. சிங்கப்பூர் உணவு விடுதியில் உட்கார்ந்ததும் நம் ஊர் போல் தண்ணீர்  தர மாட்டார்கள் . தண்ணீ என்ன வேணும்  “ என்று கேட்பார்கள். மினரல் வாட்டரா, குளிர்பானமா, பீரா என்ற கேள்வி அதில் இருக்கும்.
இங்க இருக்கற மினரல் வாட்டர் அல்லது குடிக்கிற நீர் எங்க கழிவு நீரிலிலிருந்து தயாரிக்கப்பட்டது . எங்களின் 20 சதவீதம் குடிநீர் இப்படித்தான் கழிவு நீரிலிருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாய் மலேசியாவிலிருந்துதான்  சிங்கப்பூருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இங்கு வீட்டுக் கழிவு நீரை ஒன்றிணைத்து   கடலில் கலக்க வைத்து இவர்கள் எதிர்கொண்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தனி  “  என்றார். 
சிங்கப்பூரில் இருக்கும் பல பறவைகள் சரணாலயங்களுக்கும் காட்டுப்பகுதிகளுக்கும் சென்றால் அவர்கள் கழிவு நீர் மேலாண்மையில் அக்கறை கொண்டு  சக உயிரின்ங்களோடு எவ்வள்வு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பது தெரியும்
2030ல் இந்தியா குடிநீர் பற்றாக்குறை நாடாகும் போது கழிவுநீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது கட்டாயமாகிவிடும் . கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது கானல் நீர் போல் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
தொழில்நுட்பங்களும் , தேவையும் கழிவு நீரை சுத்தமாக்கி குடி நீராகவும் விவசாயத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் ய்யன்படுத்த உந்திக்கொண்டிருக்கின்றன. வீட்டுக்கழிவு நீரை ( கழிப்பறை, குளியலறை சமையலறை )  உண்டாகும் இடத்திலேயே மூடிய நிலையில் வைத்து நுண்ணுயிர்கள், பூஞ்சைகள், அவற்றின் நொதிகளைக் கொண்டு சுத்திகரிக்கும் உயிரிய தீர்வை தண்ணீர் பற்றாக்குறை உள்ள பல நாடுகள் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. நெருக்கடி சூழல்கள் நம்மையும் நெருக்குகின்றன் அதை நோக்கி.
திருப்பூர் நொய்யல் முதல் சென்னை சைதாப்பேட்டை பகுதி வரை தெளிந்த நீர் ஓடியதை குளிக்க, குடிநீருக்கென்று பயன்படுத்திய காலம் இருந்தது.  இன்று திருப்பூரின் நொய்யல் சாயப்பட்டறை கழிவுகளாலும் வீட்டு கழிவு நீர் பெருக்காலும் ஓடுகிறது. சைதாப்பேட்டயில் கழிவு நீரே கறுத்த சாக்கடையாக ஓடுகிறது.
நிலத்தடி நீரின் மாசு பாட்டால் நிலத்தடி நீரின் ருசி மாறிப்போய் விட்ட்து. குளோரின் கலந்த நீரே எல்லாருக்க்கும்  என்றாகிவிட்டது. கோவையின் அத்திக்கடவு நீரின் ருசி அதை ஓடும் தங்கம் என்று சொல்ல வைக்கும் . தங்கம் என்றாலே விலை உயர்வுதானே. தண்ணீருக்கும் இந்த விலை உயர்வு எப்போதும்தானே... அல்லது அல்லது.. நெல்லிக்காய் போட்டு வைத்த ருசியா
 திருச்செந்தூர் நாளிகிணற்று நீர் கடலின் அருகில் இருந்தாலும் உப்பு கரிக்காமல் ருசியுடன் இருப்பது  தமிழ்க்கடவுள் முருகனின் அருமை என்றார் என் மனைவி. ராமேஸ்வரத்தில் இருக்கும் 27 தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. அதற்கெல்லாம் காரணம் நிலத்தடி நீர் அந்தந்த இடத்தின் தன்மை, ருசியால் அமைந்திருப்பதுதான்.  இந்த அளவிலான நிலத்திற்கென்றான ருசி இன்று இல்லாமல் போய் விட்டதற்கு கழிவுநீர் நிலத்துள் சென்று கலப்பதேயாகும். முன்பெல்லாம் கழிவு நீரைத் தேக்க கண்மாய்கள் இருக்கும். இப்போது நதிகள் கழிவுகளின் ஓட்டமாகி விட்டது.திருப்பூரில் நொய்யலில் ஓடும் சாயப்பட்டறை நீரைத்தேக்க ஒரத்துப்பாளையம் அணை என்று ஒன்று வந்து ரொம்ப காலமாகிவிட்டது.
சாதாரண தொழில் நுட்பத்தில் கழிவு நீர் குடிநீராகி விடும்  அல்லது பயன்பாட்டிற்கான நீராகி விடும். . கழிவு நீர் தொட்டி அமைக்கையில் வாஸ்து பார்ப்பதில் உடன்பாடு இல்லாமல், தெற்குதான் சரி, கிழக்குதான் சரி என்று அது கட்டப்படாமல் இருக்கும் பல வீட்டுக்கதைகளும் உள்ளன.
     குடிநீர் பிரச்சினையின் முக்கிய சவால் இந்த் கழிவு நீர் தான். கழிவு நீர் மேலாணமை :இந்த பிரச்சினையைச் சுலபமாக்கிவிடும். கிராம்ம், ஊராட்சி, என்று ஆரம்பித்தால் போதும். சரி செய்து விடலாம். பாக்டீரியாக்கள் எதிலிருந்து உருவாகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். அவற்றை உருவாக்க எந்த ஆராய்ச்சிக்கூடமும் வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் குதிரையின் சாணத்தில் அந்த வகை பாக்டீரியாக்கள் தாமாகவே உருவாகும். பேசில்லஸ் பாக்டீரியாக்கள் அல்லது நொதிக்க வைக்கும் என்சைம்கள் தயார்
அவற்றை வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கழிவறை பேஸினுக்குள் போட்டு, தண்ணீர் ஊற்றிவிட்டால் அவை உள்ளே சென்றுவிடும்.
இன்னொருவர் சொன்னது அனுபவத்தில்  : அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை வெச்சு மண்புழு உரம் வரும் ..  செப்டிக் டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்ங்கிற பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விடலாம். இந்த பாக்டீரியா, மலத்தை சாப்பிடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். அவ்வளவு சுத்தமாக்கும்

சில மனித முயற்சிகள் இதன் சாதனைகளாக சமீபத்தில் நிற்கின்றன. இரண்டு உதாரணங்கள் கழிவு நீரை விவசாயத்திற்குப் ப்யன்படுத்தி வெற்றி கண்டிருப்பவர்கள் திருனெல்வேலி மாவட்டம் கீழ்ப்பாவூர் ஊராட்சியைச்சார்ந்த அதிசய புரம் மக்கள் . தமிழ்நாட்டின் முதன் முறையாக
வெற்றி பெற்ற இடம் அதிசயபுரம்.
 இன்னொன்று : தூத்துக்குடி கிருபை நகரைச்சார்ந்த ஜெல் ஜோசப் என்ற் ஓய்வு பெற்ற் 74 வயது அரசு ஊழியர். அவர் இதைச் சாதித்திருக்கிறார்
2030ல் இந்தியாகுடிநீர் பற்றாக்குறையாகும்  என்ற எச்சரிக்கையிலிருந்து விடுபட திருனெல்வேலி அதிசயபுரமும், தூத்துக்குடி கிருபை நகரும்   நம்பிக்கையாக நிற்கின்றன. ஓட்டளிப்போம் அதிசயபுரத்திற்கும் கிருபை நகருக்கும். 
குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கழிவு நீர் தொட்டிச் சுத்தீகரிப்பில் உயிர் இழந்தவர்கள் தமிழகத்திலேயே  ஆயிரக்கணக்கான பேர். அவர்களுக்கும் அஞ்சலியாகவாவது நோட்டா கழிவு நீருக்கு... ஓட்டு சுத்திகரிப்பு நீருக்கு. என்று கோஷம் போடலாம்.
  .. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com

Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003