சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 மே, 2014

வருகைப்பதிவு

வருகைப்பதிவு

சுப்ரபாரதிமணியன்

                                                                                                      
“எத்தனை முறை
உற்றுப்பார்த்தாலும்
மறுபக்கம்
காட்டுவதில்லை
கண்ணாடி ”
கவிஞர் – கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின் பாணியாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
காக்கிக் சட்டைக்குள் மனிதாபிமானம் இருக்கிறது.ஈர நெஞ்சம் இருக்கிறது. காக்கிக் சட்டைப்பணியில், பயிற்சியில் மனதைத் தொட்ட அனுபவங்கள் கவிதைகளாய் மிளிர்கிறது. அம்மாவின் பெயர் பொறித்த தட்டு போன்ற கவிதைகளில் இது பட்டென வெளிப்படுகிறது. இன்னும் நெகிழ்ச்சியாகவும் சொல்லியிருக்கலாம் என்று பட்டது.
நினைவுகளில் அமிழ்ந்து போகிறவையும் உண்டு.. இவரின் அரைக்கால் சட்டை அணிந்த பள்ளிப்பருவம் முதல் வளர்த்தவர்களின் நினைவுகள் வரை எல்லாம் சுற்றி சுற்றி வரும் கொசுக்கள் போல் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. காலிபாட்டில் போன்ற உருவகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சொல்லாமல் விடுவதை விட எல்லாவற்றையும் சொல்லி விடுவதை பாணியாகவும் கொண்டிருக்கிறார். வெளிப்படையாகவும்., அதிகமும் சொல்லாமல் விடுவதுதான் கவிதைக்கு அழகாகும் . ஹைக்குவாய், சென்டிரியுவாய் பல மின்னல்களும், தெறிப்புகளும் தென்படுகின்றன.
“ என்னிடம் சொல்லு, எப்போதாவது
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில்
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம்
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய்.
( நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 – 1983) – ரொமானியா )
நொண்டி நொண்டி நடக்கிறபடி இவருக்கு அமைந்த பல அனுபவங்கள் கவிதைத் தெறிப்புகளாய் இத்தொகுப்பில் அமைந்துள்ளன. நொண்டி நடந்தபடியே வாழ்க்கைக்குள்ளூம், கவிதைக்குள்ளும் இவர் நடக்க நெடும் பாதை இருக்கிறது.

சுப்ரபாரதிமணியன்
( ரோஜர் –ஜனனன் பிரபு கவிதைகள், இடையன் இடைச்சி பதிப்பகம், திருப்பூர் ரூ 80, )

செவ்வாய், 20 மே, 2014

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

கோவை திருமூர்த்தி
சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.
அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில், சில நண்பர்கள் கேட்டார்களாம். “எப்படி சிறுவர்களின் / குழந்தைகளின் நிலைக்கு இறங்கி எழுத முடிகிறது” என்று, “உண்மையில் குழந்தைகள்தான் மேல்நிலையில் இருக்கின்றனர், நாம்தான் நம் சமூகத்தின் தாக்கத்தினால் கீழே இருக்கிறோம். அவர்கள் நிலைக்கு உயர்வது சாதாரண விசயம் அல்ல” என்று பதில் கூறினாராம்.
அனைவரும் எட்டவியலாத அந்த உயரத்தை சுப்ரபாரதிமணியன் வட்டார மொழியின் துணையோடு லாவகமாக எட்டி இருக்கிறார் என்பதை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.
அரசிளங்குமரி படத்தில் எம்.ஜி.ஆர் ஆறு மாதக் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு “சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளுடா” என்ற பட்டுக்கோட்டையின் பாடலைப் பாடுவார்.
சமூகவியல், இயக்கவியல், மார்க்சியம் ஆகியவற்றை அந்த ஆறுமாதக் குழந்தைக்குக் கூறுவார். குழந்தையிடம் கூறுவதுபோல் பெரியவர்களுக்குக் கூறும் இந்த உத்தியை சுப்ரபாரதிமணியன் வேறு கோணத்தில் கையாண்டு இருக்கிறார்.
இவரின் கதைகள் பெரியவர்கள் சிறுவர்களுக்குக் கூறுவதாக இல்லாமல் சிறுவர்கள் பெரியவர்களுக்குக் கூறி வழிநடத்துவதுபோல் அமைந்திருக்கின்றன. உண்மையில் சமகாலம் அப்படித்தான் உள்ளதா? ஆய்வுக்குரியது..
நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கற்றவர்கள் வாழ்க்கைக்கான கல்வியைப் பெற்றிருந்தார்கள், (அதில் சில குறைபாடுகள் இருக்கலாம்) சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், இலக்கியம், மனிதநேயம், அரசியல் நேர்மை, உண்மை, நாணயம் பற்றிய ஏதோ ஒரு பார்வையும் சிந்தனையும் இருந்தது.
அண்மைக்காலங்களில் குறிப்பாக +2 போன்ற நிலைவந்தபோது அதிலும் குறிப்பாக உலகமயச்சூழலில், கல்வி, பிழைப்புக்கான கல்வியாக மாறிப்போனது. பழைய எஸ்எஸ்எல்சி காலத்தில் நண்பனாக இருந்தவன் +2வில் போட்டியாளனாக மாறிவிட்டான். சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், இலக்கியம் சார்ந்த அறிவு அவசியம் அற்றதாகிவிட்டது.
நாம் வாழும் சமூகத்தை இயற்கையை, இலக்கியத்தை, அரசியலை, சுற்றுச்சூழலை, நேர்மையை, சகமனிதர்களை நேசித்து வந்த ஒரு மனிதன் தன் கண்முன்னே இளையசமுதாயம் எந்தவிதமான சமூக உணர்வும் இன்றி திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆவேசம் அடைகிறது. அந்த ஆவேசம் விவேகம் நிறைந்த கதைகளாய் வடிகின்றன.ங
இந்தக் கதைகளில் மகன்கள் தந்தையர்களுக்குச் சொல்லுகின்ற செய்திகள், உண்மையில் நொய்யலை நதியாக அனுபவித்தவர்கள், சாக்கடையாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நதியின் தூய்மையைக் கூறும் ஏக்கங்கள்தாம்.
மரம் நடுவிழாத் தலைவர் அமைச்சரிடம் கூறினார், “இந்த இடம் மிகவும் ராசியான இடம், இங்கேயே மரம் நடுங்கள்”
“எப்படி ராசியானது என்கிறீர்கள்?”
“இதுவரை பதினேழு அமைச்சர்கள் இதே இடத்தில்தான் நட்டார்கள்”
நட்ட மரங்களை விட வெட்டப்பட்ட மரங்களே அதிகம்.
பாரம்பரிய நகரத்தை விடுங்கள். புதிய குடியிப்புகள் அமைக்கும்போது பூங்காவுக்கும், பொதுஇடமாகவும் 40% ஒதுக்கீடு செய்ய வேண்டுமே. மொத்தத்தில் நகரத்தின் பரப்பளவில் 40 சதம் பூங்காவாகவும் பொது இடமாகவும் மாறி இருக்கவேண்டிய அந்த இடங்கள் என்னவாயின என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது “பசுமைப்பூங்கா” என்ற கதை.
குடி, சூது, உயிர்க்கொலை ஆகிய சமூகக் கேடுகள் சங்கமிக்கும் இடமாக சேவல்கட்டு இருப்பதை “பந்தயம்” வெளிச்சம் போடுகிறது.
குடி சமூக அந்தஸ்த்தின் ஒரு குறியீடாகவம், சேவல்கட்டு அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு விளையாட்டாகவும் மாற்றம் பெற்றுவிட்ட இத்தருணத்தில் இந்தக் கதை குடிக்கும், சூதுக்கும், உயிர்க்கொலைக்கும் எதிரான சிந்தனை கொண்ட மனங்களை கொஞ்சம் இதமாகவும் வருடிச் செல்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும், அறிவுகளையும் இணைத்துச் செல்கின்றன இக்கதைகள்.
( பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள் ரூ 5/ வெளியீடு: கனவு, திருப்பூர் )

வியாழன், 15 மே, 2014

“ மிளிர்கல் “

கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்
ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் சமூக ஆய்வுத்துறையின் அனுபவங்களைக் கொண்ட முறைப்படுத்தலில் இவை அலசல்கள், உரையாடல்கள் , எதிர்வினைகள் என்று முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஆவணப்படத்தயாரிப்பு சார்ந்த அனுபவ விசயங்கள் அப்படம் தயாரிப்பில் சாத்தியமாகாத போது நாவலின் வெளிப்பாடு என்ற வகையில்லாமல் பதிவாகி ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. எந்த அனுபத்தையும் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதில் படைப்பாளிக்கு சாத்தியமில்லை.அது எப்படியாயினும் வெளிப்பட்டு விடும். ரோடு மூவி அம்சங்களைப் போல, டாக்கு நாவல் அம்சங்களைப்போல் இப்படி வடிவமைந்திருக்கிறது இரா. முருகவேளிடம்.
கண் முன்னான அனுபவங்களை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வள்வு முக்கியம் வேர்களைத் தேடிப்போவது என்றத் தேடலும் கூட இதில் உள்ளது.. இதன் அடிநாதமாய் கட்டிடங்களை மீறி மண்ணின் ஆன்மாவைக் கண்டுணர்கிற அனுபவங்களை இதில் தேடுகிறார். மதுரையை எரித்தபின் கண்ணகி போன பாதையைத் தேடிப்போய் கண்ணகி கோவிலையும் அடைந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். . சிலப்ப்திகாரம் நடந்ததாக்க் கூறப்படும் இடங்களைக்கூட. . இதில் முக்கியமானவர்களாய் முல்லை, நவீன் போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் தென்படுகிறார்கள், முருகவேளின் அரசியல் ரீதியான அனுபவங்கள், அனுதாபிகளின் கலந்துரையாடல்கள், பேச்சுத்தொனி அம்சங்கள் இணைந்து வருகின்றன.
கொங்குமண்டல்த்தின் மாணிக்க மரகத ரத்தினக்கற்களின் வணிகம் உலகமயமாக்கலில் விரிவடைந்து அது பெரும் முதலாளிகளின் கைகளுக்குள் சென்றடைவதைக் காட்டுகிறார். தமிழினப்பெருமை படிமமாய் இறுக்கிக் கொள்கிறது. இது குறித்தத் தகவல்கள் ஆய்வுகளாய் ஆய்வு மாணவர்களுக்கு புதையல் புதையலாக இதில் கொட்டிக்கிடக்கின்றன. ஆவணப்படக்குழு பூம்புகாரிலிருந்து காவிரிக்கரையோரமாக ஸ்ரீரங்கம் , கொடுங்காநல்லூர் என்று பயணித்து கண்ணகி கோவில் இருக்கும் கேரள எல்லைக்குள்ளும் நீள்கிறது. இந்தப்பயணம் நாவலை வெவ்வேறு அடுக்குகளாக ஆக்கியிருக்கிறது.தங்குமிடங்களும் வழிப்போக்கர்களின் உரையாடல்களும் ஒரு அடுக்காக நீள்கிறது. இன்னொரு அடுக்காக பொதுவுடமைச்சார்ந்த தோழர்களின் விவாதங்கள் சமகால அரசியலோடு இயைந்து போகிறது. இன்னொரு அடுக்கு சிலப்பதிகாரத்தில் தோய்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் கதை காங்கேயம் கல்லாக மாறும் உலகளவிலான வியாபாரம் இன்னொரு அடுக்காகிறது. ( இந்த வியாபாரத்தின் உட்சபட்சமான உதாரணமாக இரத்தினக்கல்லால் நகை இல்லாத ஒரு வீடு கூட இன்றைய அமெரிக்கவில் இல்லை என்பது மிக் முக்கியம் ). மனித உணர்வுகளின் மோதலும் வாழ்வும் எதிர்பார்க்கிற சாதாரண வாசகனுக்கு இந்த வடிவ அளவிலும் சொல்லப்பட்ட விசயங்களின் தொனியிலும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
கொங்கு நாட்டுப்பகுதிகளில் திருப்பூர் அருகிலான காங்கேயம், சிவன்மலை போன்றவற்றில் தெலுங்கு பேசும் ஜங்கமர் எனப்படுவோர் கற்களைக்குலத்தொழிலாகச் செய்வதும், கற்களைத் தேடி அலைகிற மனிதர்களின் அவஸ்தையும், பேராசை காரணமாக மனம் பித்தாகிப் போவதும் நடக்கிறது.அதிலும் கிருஷ்ணசாமி போன்றோரின் ஆசையும் அலைச்சலும் அவர்களை வெவ்வேறு விரக்தி நிலைக்குக் கொண்டுச் செல்கிறது. ஆள் கடத்தும் வித்தைக்கும் கொண்டு செல்கிறது.பட்டை தீட்டும் தொழிலில் அவர்களின் நுரையீரல்களை சிலிக்கா பொடி தின்று விட்டதால் உயிரை விட்டவர்களைப் பற்றிய விபரங்களும் இதில் உண்டு. சமூக மதிப்பீடுகளுக்கு பதிலாக தனிமனித மதிப்பீடுகளை உருவாக்கும் மனிதர்களும் இதில் தென்படுகிறார்கள். கண்ணகி கொங்கர் செல்வி என அழைக்கப்பெறும் காரணம் பற்றிய அலசல்கள், கண்ணகி மீனாட்சியா, ஆதிகுடிப்பெண்ணா என்பது முதற்கொண்டு பிதாகாரஸ் தேற்றங்கள வரை பல அலசல்கள் உண்டு.காடுகளில் நிறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்கள், வர்க்க உணர்வு கொண்ட மக்கள், கெரில்லா முதுகுப்பை தாங்கி இடையறாது நகர்ந்து கொண்டிருப்போம் என்று தான் செய்த கற்பனை இப்போது எப்ப்டி நடக்கிறது என்ற அலசல்களில் சுவாரஸ்யம் நிறைந்திருக்கிறது. . புரட்சியைத்தவிர வேறெதையும் யோசிக்காத புரட்சிகர இயந்திரங்கள் என்னவானார்கள் என்ற அலசலும் உள்ளது.ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறோம் இந்த மண்ணையும் மக்களையும் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்வோம். என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற அரசியல் செயல்பாட்டாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஆவணப்படத் தயாரிப்பை மீறி செய்ய வேண்டியவை பற்றிய அக்கறையும் இதில் உள்ளது. “ எந்தச் சிலம்பைக் கொண்டு மாணிக்கப் பரல்களைக் கொண்டு , கண்ணகி நீதியை நிலைநாட்டினாளோ அதேமாணிக்கம் இப்போது ஏழை மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதைக்காட்ட வேண்டாமா.. இந்தப்பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை முகங்களை காட்ட வேண்டாமா பல ஆயிரம் மக்கள் வாழ்வை நிலங்களை இழப்பதற்கான சூழல் இருக்கும் போது மக்களுக்காகச் செயல்படுபவர்கள் வேட்டையாடப்படும் போது ஆவணப்படம் எடுப்பதைவிட வேறு வேலைகள் இருப்பதும் ” சொல்லப்படுகிறது. புகாரிலிருந்து கொடுங்கலூர் வரை லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் எதற்காக கண்ணகியை நினைவில் வைத்திருக்கிறார்களோ அத நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டியதாக அந்த ஆவணப்படமும் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் உணர்ந்திருக்கிறார்கள். அநீதிக்கெதிரான எல்லா போராட்டங்களிலும் கண்ணகி இருக்க வேண்டிய அவசியம் பற்றிய பார்வை முடிவாய் முன் வைக்கப்படுகிறது.. இதை உள்வாங்கிக் கொண்ட முல்லையும் ஒரு உக்கிர தேவதையாக மாறும் வித்தையை இந்நாவல் காட்டுகிறது. முல்லைப் போல் பலர் மாறும் வித்தையை இந்நாவலைப்போல் பல்வேறு போராட்டங்களும் உருவாக்குவதை தெரிந்து கொள்ளலாம்..அதுதான் இந்நாவலை எழுதிய முருகவேளின் தொடர்ந்த சிந்தனைப்போக்கும், இயக்க செயல்பாடுகளும் என்றைக்கும் உணர்த்தும் விசயங்களாக இருக்கின்றன..
நவீனத்துவம் உருவாக்கியிருக்கும் குறுகிய நாவல் வடிவத்தை இது போன்ற நாவல்கள் உடைத்து விட்டன என்று கூடச் சொல்லலாம்.நாவல்களின் பேசுபொருள் சார்ந்து அதிகம் யோசிக்கிற போது இவ்வகை வடிவங்கள் பற்றியும் யோசித்துபார்க்கலாம். வடிவப்போதாமை என்பது நவீனத்துவ அழ்கியலுக்கு உரிய மனநிலையாகக் கூடப்பார்க்கலாம்.என்று தோன்றுகிறது.இலக்கிய வடிவம் என்பது வாசக மனநிலை உருவாக்கிக் கொள்ளும் ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது. வடிவங்களைப் பற்றி பல சமயங்களில் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.அனுபவம் அது தரும் விளைவு, எதிர்வினை ஆகியவற்றின் மையத்தில் இருந்து கொஞ்சம் கற்பனையை ஓட விடும். பந்தயக்காரனைப் போல ரொம்ப தூரம் கடக்க முடியாது. அப்படித்தான் இந்த பயண அனுபவங்களை முருகவேள் கொஞ்சம் ஓடிப் பார்க்கிற தூரத்தில் சென்று கடந்து காட்டுகிறார்.வாழ்க்கை சிக்கல்களும் பன்முகத்தன்மையும் கொண்டதாய் இருப்பதில் எல்லாம் நிரம்பி வழிகிறதாய் இருக்கிறது. அனைத்தையும் வரலாற்றின் முன் நிறுத்திப் பார்ப்பதுதான் அவரின் கடமையாக நினைக்கிறார்.சிதறிக்கிடக்கிறத் தோற்றத்தின் வழியாக நோக்கமும் தரிசனமும் உருவாகிவிடுவதைக்காட்டுகிறார்.இதில் தலையிடுகிற குறுக்கீடு இதைச் சொல்வதில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.வடிவ முத்திரையில் திருப்பதிப்படாதவர்கள் இதை நீள்கதை என்றும் சொல்லிக்கொள்ளலாம்.செய்யுள் நாவல், நாடக நாவல் என்றெல்லாம் அறிமுகமாகிற போது இந்த நாவலின் வடிவமும் குறுக்கீடு செய்யாததே. இரா. முருகவேள் “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” , “எரியும் பனிக்காடு”, தூக்கிலிடுபவரின் குறிப்புகள் “ ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். “ நாளி” என்ற் ஆதிவாசிகள் பற்றிய ஆவணப்பட்த்தின் இயக்குனர், “ கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்/ என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் “ போன்ற நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
( மிளிர்கல் – இரா.முருகவேளின் நாவல், ரூ 200, பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 9486641586

புதன், 7 மே, 2014

சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை -வண்ணங்களின் விபரீதம்

சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை -வண்ணங்களின் விபரீதம்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰½

வெளியீடு: எதிர்
இரண்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 2013
விலை ரூபாய்: 195
பக்கங்கள்: 208
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


திரை என்பது கண்களை மறைப்பது; எதையும் பார்க்கவிடாமல் செய்வது. சாயம் என்ற திரை நம் அனைவரின் கண்களையும் மறைத்துவிடுகிறது. எனவே புறச்சூழலில் ஏற்படும் மாறுதல்களில் நாம் கவனம் கொள்ளாமல், கடிவாளம் கட்டிய குதிரையாக, வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதையே குறியாகக் கொண்டு வாழ்கிறோம். நமக்கும் நம் வாழ்வுக்கும் உற்சாகம் தரும் என நாம் கருதும் வண்ணங்கள் நம்மைச் சீரழித்துப் புதை குழியில் தள்ளிக்கொண்டிருப்பதை நாம் கண்ணிருந்தும் குருடராக பாராமல் இருக்கிறோம். அதிலிருந்து தப்பிக்க சற்றேனும் பொது நோக்கும், பொறுப்புணர்வும், நேசமும், உடையவர்களாக நாம் நடந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை.

தொழில் வளரும்போது ஒரு நகரத்தின் மாற்றம் என்பதைத் தவிர்க்க முடியாது. நம்மையும் மீறி நகரம் பிரம்மாண்டமாய் வளர்ந்து விடுகிறது. எனவே அது சுற்றுச்சூழல் சீர்கேடு எனும் தன் கரங்களால் நம்மை விழுங்கத் தயாராகிவிடுகிறது. புதுத் தொழில்கள் எழும்போது பழைய தொழில்கள் நசிந்துபோவதும், அர்த்தமிழந்து போவதும் ஒரு சமூகத்தில் இயல்பாய் நடக்கும் விசயங்கள்தாம். ஆனால் அவை மிக வன்மையாக, வேகமாக தனி மனிதனிடம் மட்டுமின்றி, சமூக, கலாச்சாரத்திடையேயும் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்திவிடுகின்றன என்பதை நுட்பமான அவதானிப்புகள் மூலம் புனையப்பட்ட நாவல்தான் சாயத்திரை.

திருப்பூர் நகரை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் மனித வாழ்வுக்கு ஆதாரமான நொய்யல் ஆறு சாயங்களால் நிரம்பிவிடுகிறது. வீதிகளில் சாக்கடையெங்கும் சாயம் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிணற்று நீரில் சாயத்தண்ணீர்தான் வருகிறது. நகரத்தில் ஒரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தும் மறுபக்கம் இருக்கும் சிறிது தண்ணீரையும் சாயங்களால் மாசுபடுத்துவது நமக்கு ஏற்புடையதாய் இருக்கும் அவலம் நாவலில் துயரத்துடன் வெளிப்படுகிறது. வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மாபெரும் அரக்கனாக உருக்கொண்டு மொத்த நகரத்தையும் விழுங்கத் துடிப்பதான சித்திரம் நாவலை வாசிக்கும்போது மனதில் எழுகிறது. எனவே இது ஒரு நகரத்தின் கதையாக மட்டுமல்லாது இதுபோல் உலகெங்கும் இருக்கும் பல நகரங்களின் கதையாகவும் நாவல் வியாபிக்கிறது. 

படிக்கச் சிரமம் தராத சரளமான நடையில் அமைந்த நாவல். நாவலின் அத்தியாயங்கள் சிறியனவே ஆதலால் நாவல் காட்சிகளுக்குக் காட்சி வேகவேகமாக தாவித்தாவி செல்கிறது. சுப்ரபாரதிமணியனுக்கு மினுங்கும், மின்னும் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் போலும். பக்கத்திற்கு ஒருமுறையேனும் அந்த வார்த்தை வந்துகொண்டே இருக்கிறது. நாவலின் பக்கங்களைச் சற்றே குறைத்திருந்தால் நாவல் செறிவாக இருந்திருக்கும். திருப்பூர் நகரை அறிந்தவர்களைவிட அறியாதவர்களுக்கு இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம் வேறானதாக இருக்கும்.

நாவலில் வரும் செஸ் விளையாட்டும், செட்டியார் பாத்திரமும் ஒரு குறியீடு. செஸ் ஆட்டத்தில் காய்கள் வெட்டுப்படுவது போன்று மனிதர்கள் எல்லோரும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் வெட்டுப்படுவார்கள். அதில் ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய் என்று யாரும் விதிவிலக்கல்ல. இனி இந்த மண்ணில் மனிதர்கள் எவ்வாறு இருக்கப்போகிறார்கள் என்பதற்கு செட்டியார் பாத்திரம் அத்தாட்சியாக இருக்கிறது. உடலநலம் கெட்டு, உறவுகள் அவரைவிட்டுச் சென்ற பின்னால் அவர் படும் சிரமத்தைப்போலவே, ஆரோக்கியமான தண்ணீர், காற்று, உணவு ஆகியவை நம்மைவிட்டு விலகிவிடும்போது நமக்கு நேரப்போவது அவரின் கதிதான் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

நிரந்தர வேலையின்றி அவ்வப்போது கனவுகளில் சஞ்சரிக்கும் பக்தவச்சலம், தொழில் நசிவுற்றதால் பாதிப்படையும் சாமியப்பன், வேலையின்றி வெறும் கம்பனியை காவல் காக்கும் நாகன், பக்தவச்சலத்துடன் உறவுகொண்ட ஜோதிமணி, சாயத்தினால் உடம்பு முழுதும் புண்ணாகிப்போன வேலுச்சாமி என்று பல பாத்திரங்கள் நாவலில் உலாவருகிறார்கள். வண்ணங்கள் அவர்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடியிருக்கிறது என்பதை நாவலின் வாசிப்பில் நாம் உணர்கிறோம். 

தன் கையில் கிடைத்திருக்கும் மிகப்பெரும் பொக்கிஷத்தைக் கூழாங்கல்லாக அறியும் நிலையிலேயே மனிதன் இருக்கிறான். இயற்கையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஏனோ அவன் மறந்துவிடுகிறான். எனவே அவன் செய்யும் எல்லா கெடுதல்களையும் இயற்கை சீர் செய்ய முயற்சிக்கிறது. அதனாலேயே அது சீற்றம் கொண்டு தண்ணீர், நெருப்பு ஆகியவற்றின் மூலம் மனிதன் செய்த தவறுகளை முற்றாக அழித்து, மீண்டும் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து உருவாக்க முயற்சிக்கிறது. நாவலின் கடைசியில் வரும் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்துவது அதைத்தான். தன்னை அழிக்கும் மனிதர்களை அழிப்பதின் மூலமாகவே தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை இயற்கை உணர்ந்திருக்கிறது. 

சாயங்கள் துணிக்கு வண்ணங்கள் சேர்க்கலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கு? அவற்றால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மனிதனின் வாழ்வில் எத்தகைய வண்ணத்தைச் சேர்க்க முடியும்? வண்ணங்களுக்காக ஒரு சமூகம் அழிந்துபடுவது பரிதாபத்திற்குரியது. வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டுமல்ல அவற்றின் பின்னால், மண்ணையும், காற்றையும், நீரையும் பாழாக்கும் எத்தனையோ விசயங்கள் உள்ளன என்பதை அறியும்போது, வண்ண உடைகளை விரும்பும் நம் மனத்தின் மீது குற்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதவாறு நாவல் அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாது என்றாலும் நாம் சர்வசாதாரணமாக அவற்றைப் புறங்கையால் உதறித் தள்ளிவிட்டுச் சென்றுகொண்டுதான் இருப்போம் என்பதும் நிதர்சனமான உண்மை. மனசாட்சியின் குரல் கேட்காதபடி நம் காதுகள் எப்போதோ செவிடாகிவிட்டன. எனவே இவற்றின் விளைவுகளை நம் வருங்காலச் சந்ததியினர் அனுபவிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/05/blog-post.html#sthash.5J2DFfpw.dpuf

செவ்வாய், 6 மே, 2014

வண்டிப்பாதை ” நாவல்

கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்
கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டது என்பதை பலமாகவும், பலவீனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். சொல்லும் விதத்தில் நூற்றுக்கணக்கான தொன்மங்கள் விரவிக் கிடக்கின்றன. கம்மங்கதிரை ஊதிஊதி தின்று கொண்டே நடந்து போகிற சுகானுபமாய் வாய்த்தது.
கரட்டுப்பாளையம் ஜக்கம்மாவின் சாவு மீதான சாபம் அந்த ஊரை பீடித்திருக்கிறது.கன்னிமார் ஒடைக்கரையில் அவள் செத்துப் போனாள். கணவனின் கொலைவெறித்தாக்குதலில் இறந்து போனவளை கல்லைக்கட்டி கிணற்றில் போட்டு செத்துப்போனதாய் காட்டுகிறார்கள். அவள் சாவில் சந்தேகம் கொண்ட அவளின் அப்பா போடும் சாபம் அந்த ஊரை அலைக்கழிக்கிறது. அந்த சாபத்தின் விளைவுகள் பின் தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.
வண்டிக்காரன் மகளான சின்னத்தாயின் வாழ்க்கையும் இது போல் புதைக்குழிக்குள் போய்விடுகிறது. சின்னத்தாயியின் மாமன் மாயபாண்டி அவளைக்கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்யத் திட்டமிடுகிறான.வீடு தீக்கிரையாகிறது. பெரியகுடுமபத்து மனச்சிதைவு ஆறுமுகத்திற்குத் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. மாயபாண்டியால அதுவும் தடைபடுகிறது. அவன் அப்பா ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நட்க்க வேண்டும் என்று மூன்றாம் தாரமாய் கட்டிக் கொள்கிறார். குலதெய்வம் கோவிலுக்கு ஆற்றில் இறங்கிப்போகிறவர் செத்துப் போகிறார். கன்னிகழியாமலே அவள் விதவையாகிறாள். வண்டியோட்டியும், அரப்பு உருவப்போயும் சித்தப்பா அரவணைப்பிலும் வாழ்கிறாள். கட்டின ஊர் குளம் பலி இல்லாமல் வீணாகிப் போகிறதைத் தடுக்க ஏதோவகையில் பலியாகிறாள்.
ஜக்கம்மா, சின்னதாயிற்குமிடையிலான பல ஆண்டுகால கொங்கு மக்களின் வாழ்க்கை குதிரையின் வேகத்தோடு ஓடுகிறது.
இதற்கிடையில் எத்தனோ மனிதர்கள் வாழ்க்கை சொல்லப்பட்டு விடுகிறது. “ பாப்பாத்தி “ குதிரைக்காரனான குதிரையோட்டத்திலும் ஈட்டி எறிதலிலும் வீரனான வெள்ளியங்கிரி, மலையண்டியூர் பொம்மி நாயக்கர், அவரின் சாவல் கட்டு சாகசம், கரட்டுப்பாளையம் மலையன் பொந்தப்பனுவன், கோம்பேறி மூக்கன், மாயபாண்டி போல் பல கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பேய்ப்புளியமரம், மலைக்கோட்டை, ஆறுகள் ஊர்களைக் காக்கின்றன. அடிபட்ட புலி, ஆட்டுக்கிடை, சோளக்குழி, பனை உடும்பு, கல்லுக்கோட்டை போன்றவை மனிதர்களைப் போலவே உயிருடன் உலாவுகின்றன. பிலவங்க வருச தை மாதமோ, இலையுதிர்காலமோ, கீலக வருச சித்திரை மாதமோ காலமும் வெளியும் இணைந்தபடி படிமங்களாகியிருகின்றன.
திருடுவதும் கொள்ளையடிப்பதும் தொழிலாகவும் சாகசமாகவும் ஆகியிருக்கிறது. திருட்டு அறம் போற்றப்படுகீறது.
வெள்ளியங்கிரி பதவி இறக்கம் செய்யப்பட்டு செல்லாக்காசாகிறான்.குளத்தைக் கட்டி முடித்திருந்தால் ஊருக்கு வறட்சி வந்திருக்காது என்று சொல்லப்படுகிறது அவன் குளத்தை முடிக்கும் வேலையில் ஈடுபடாமல்தான் போனான், வெள்ளியங்கிரிக்கு அருக்காணி மேல் ஈர்ப்பு இருந்தது. சின்னத்தாயி பஞ்சம் பிழைக்க வரும் போது அவளுடன் மையல் உருவாகிறது. ” பஞ்சம் பிழைக்க அகதியா தேடி வந்தவங்ககிட்ட பலவந்தமா கட்டிக்கத் தயாரான்னு கேக்கறது முறையல்ல. குளத்து வழிப்பறிக்கூட்டமும், வேலை முடியற வரைக்கும் நீ அவள ஓரக்கண்ணுல கூடப் பாக்கக் கூடாது. சொல்லுக்கு மீறி நடந்தா குளம் பகுதியோட நிக்கும் ” கொள்ளையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை செய்கிற சமூகமும் இருந்து கொண்டே இருக்கிறது, ஆட்டையும் மாட்டையும் பொன்னையும் பொருளையும் அபகரித்து வந்த கட்டக்குத்தன் கூட்டம் பொண்ணைத் தூக்கி வரும் விபரீதங்களும் நடக்கிறது. மாயப்பாண்டி சின்னத்தாயியை தூக்கிக் கொண்டு போக செய்யும் சாசகங்கள் விறுவிறுப்பானவை. ஆனால் அவன் சின்னத்தாயின் பார்வையில் இப்படித்தான் சாபம் கொண்டவனாகிறான். அவன் செத்துக்கிடக்கிற போது சின்னத்தாயி இப்படிச் சொல்கிறாள் : ” இதுதானுங்க என்னோட தாய் மாமக்காரன் மாயப்பாண்டி. என்னோட துயரத்துக்கும் சின்னய்யனோட மரணத்துக்கும் மூலகாரணமே இந்த ஆளுத்தானுங்க ” அறுத்தவ மறு கடு கட்டும் பழக்கம் இதுவரை இல்லாதைச் சுட்டிக் காட்டி சின்னத்தாயின் வாழ்க்கையும் வெறுமையில் கழிகிறது. குளம் போன்ற பொதுக்காரியங்கள் என்றைக்கும் பெயரை நிலைக்க வைக்கும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவரவர் பூமியை அவரவர் அனுபவிக்கட்டும் பாரம்பர்யமாக அதில் உழைக்கும் ஆள்காரர்கள் அனுபவிக்கட்டும் என்பது பரவலாக்கப்படுகிறது. அசலூர்காரர்கள் அனுபவிக்கக் கூடாது ஆளில்லாத ஊர் அழிந்து போகும் என்பது உண்மையாகக் கூடாதென்று நிர்பந்தங்கள் பலரின் வாழ்கையை வேறு கோணத்திலும் பார்க்கச் செய்கிறது.:
கொங்கு நாட்டு மனிதர்களின் மானமுள்ள வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கொங்கு நாட்டு பகுதியின் ஒரு பகுதிகால சரித்திரத்தை நாவல் குமரகேசன் அவர் கேள்விப்பட்ட வாய் மொழிக்கதைகள் வாயிலாக இதில் முன் வைத்துள்ளார். கொங்கு நாட்டுச் சரித்திரம் பழம்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் அவ்வளவாய் பெறப்பட்டதில்லை என்ற குறை இருக்கிறது. கிடைத்துள்ள வரையில் ஏறத்தாள கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிகிறது என்கிறார்கள். கி.பி 250 வரை… கொங்கு நாட்டின் பழைய சரித்திரம் சங்க இலக்கிய நூல்கள் மூலம் அதிகம் பெறப்பட்டிருக்கிறது.நாவல் குமார கேசன் தான் எடுத்துக் கொண்ட காலப்பகுதி கொங்கு மக்களின் பயிர்த்தொழில், கைத்தொழில், வணிகம், தொன்மக்கதைகள் என்று விரவி இந்நாவலை நிறைத்திருக்கிறார். மண்ணோடும் மனிதர்களோடும் வெகு நேசிப்பு கொண்ட மனிதரால் மட்டுமே இவ்வளவு நுணுக்கமாக சதையும் நகமுமாய கொங்கு மனிதர்களை அந்தக்காலத்துப் பின்னணியுடன் படைக்க முடியும். சமகால கொங்கு மனிதர்களைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டியவர் அதே உள்ளுணர்வுடன் சரித்திர கால மனிதர்களையும் நடமாட விட்டுப் பதிவு செய்திருப்பது இந்நாவலில் வரும் தலைமுறைகளுக்கான குளம் வெட்டுவதற்கு ஒப்பாகும்.
சுப்ரபாரதிமணியன்

சனி, 3 மே, 2014

பொலிவு



புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி  தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு  பொம்பளைக்கு  புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’

சிந்தாமணி சொல்வதைக் கேட்டு  ருக்குமணி  ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன்  பார்பபது போல் நின்றிருந்தாள்அவள் ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தவள்  மாதிரி சொன்னாள் . “ இதை விட  ஒரு பொம்பளைக்கு  வேறெ என்ன வேண்டியிருக்கும்’. வானம் நீலத்தைக் குறைத்துக் கொண்டு பல்லிளித்த்து.

தாய்த்தமிழ்ப் பள்ளி  முக்கு திரும்புகிறவரைக்கும்   அந்த  நாற்பது வயது ஆணும், பெண்ணும் போவதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்தாமணி.
அன்றைக்கு பந்த். சாயப்பட்டறை   மூடலை  எதிர்த்து பந்த். வீதியில் வேடிக்கை பார்த்த்க் கொண்டிருந்தனர்எதிர் வேப்பமரம் எல்லா வகைச் சோர்வையும் போக்கி விடுவது போல் காற்றைத் வீதியில் தாட்டிக் கொண்டிருந்த்து. சிந்தாமணி  தலை திரும்பிய போது அந்தப் பரவசம் குறைந்து நோயாளித்தன்மையுடன் அவள் முகம் மாறி விட்டது.
*****************
2.


சிந்தாமணியைப் பார்த்த முதல் கணத்திலேயே அவள் நோயாளிதான் என்று  தீர்மானித்திருந்தாள் ருக்மணிவெளுத்துப் போயிருந்தது முகம், ஒரு வகை  மஞ்சள் தன்மை வந்திருந்தது. ஏதாவது நோயா என்று கேட்க வேண்டும்  போலிருந்தது. கேட்கவில்லை. தவறாக நினைத்துக்கொள்ள்வார்களோ என்ற பயம் இருந்தது.

ருக்மணி சிந்தாமணியை பார்த்த முதல் கணத்தில்  எதுவும்  பேசமுடியாதவள் போல்தான் நின்றாள். தண்ணீர் என்று கேட்டாதாக  எண்ணம் நீராவி போல் மேலெழுந்து கொண்டிருந்தது. ஆனால் சிந்தாமணி  நோய்த்தன்மை மிகுந்த முகச் சோர்வை மீறி  என்ன என்று உரக்கத்தான்  கேட்டு விட்டாள். “ குடிக்கத் தண்ணீ வேணும்


எங்க வேலை செய்யற பொம்பளை.. கட்டட ஆளா”                          .
இல்லீங்க. எதுத்த பனியன் கம்பனி.”
கம்பனியில தண்ணீ கூட வெக்கறதில்லையா.. அசோக்குமார் கிட்ட  சொல்றன்

பரபரத்தபடி சென்னாள் ருக்மணி: “ வேண்டாங்க.   இப்போ டீ டைம்கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு. அதுதா. “

3.

அசோக்குமாருக்கு என்ன. மினரல் வாட்டரா வாங்கிப் போடலாம்.   ரெண்டுக்கு நாலு கேனா வாங்கிப் போட வேண்டியதுதானே ‘’
இருக்குங்க டீ டைம் .அதுதா. கூட்டமா இருக்கு.
செரி.. இரு தர்ரன். என்னமோ கட்ட்ட வேலை செய்யற பொம்பள மாதிரி  இருந்துச்சு. வெயில்ல கருத்துக் கெடக்கறே. பனியன் கம்பனிக்குள்ள பேன்  இல்லையா. அசோக்குமார்கிட்ட சொல்லணுமா  ’
அதெல்லா இருக்குதுங்க.   வேலை அசதிதா
இரவில் பஸ் பயணம்.தூக்கம் வேறு இல்லை. சோர்வாகத்தான் இருந்தது  அவளுக்கு. ஒரு நல்ல தூக்கம் போட்டால் போதும். எல்லாம் சரியாகி விடும்நல்ல  குளியலும் , கொஞ்சம் பவுடரும் நல்ல முகப்பொலிவைக் கொண்டு   வந்து விடும். இன்றைக்கு இதெல்லாம் அவளுக்கு வாய்க்கவில்லை.

அவசரஅசரமாக வந்து இறங்கியவுடன் பேருந்து நிலையத்திலேயே    பல்  துலக்கி முகம் கழுவி பாண்டியன் நகர் பேருந்து பிடித்து வந்து விட்டாள்.


மோகனப்பிரியா இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.   வீட்டு  எண் 2635 என்று வந்து விட்டது . மோகனப்பிரியா விலாசத்தில் 2624  என்றிருந்த்து. பத்து வீடுகளுக்குள் தான்ஆனால் கண்டு பிடிப்பது சிரமம்  என்றபடி அலைந்து திரிந்தவளுக்கு சலித்துப் போய்விட்டது. கிரிஜாகூட  அவள் கொடுத்த முகவரியில் இந்திரா நகர் என்றிருந்தது. பாண்டியன்

4.

நகருக்குப் பக்கத்தில்தான் இந்திரா நகர் என்றார்கள். போகலாமா என்ற  யோசிப்பு வந்த்த்து ருக்மணிக்குஎதற்கும் இன்னும் நாலு வீடு கேட்டு  விடலாம் என்று வீடு போன்ற முகப்பு இருந்த இடத்தில் நின்றாள்.

உள்ளிருந்து வந்தவன்என்ன ..  பனியன் கம்பனி வேலைக்கு யாராச்சும்   சொன்னாங்களா.  ‘’”  திணறியபடி   தொண்டை கரகரத்து குரலைச் செருமிக்  கொண்டாள். அதற்குள் அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான். “ சரின்னா  உள்ளற போயி கூட்டற வழியப் பாரு.”
எதுவும் பேசாதவள் இதற்காகக் காத்திருந்தவள் போல்  உள்ளே சென்று  முகப்பு அறையின்மூலையில் சீமாரைத் தேட ஆரம்பித்தாள்வேலை   தேடித்தான்  ஊரைவிட்டு இங்கு  வந்தது. மோகன்ப்பிரியாவையோ,

கிரிஜாவையோ பார்த்தாலும் அவர்கள்  இது மாதிரி ஏதேனும் ஒரு  வேலையைத்தான் வாங்கித்தர முடியும். அவளின்   கையிலிருந்த பை நழுவி  மூலையில்  பதுங்கிக் கொண்டது. அப்படித்தான் அவளின் முதல் நாள்  பனியன் கம்பனியில் ஆரம்பித்தது.

சிந்தாமணி கொடுத்த சொம்பிலிருந்த நீர்  கடைவாயில் வழிந்து  ருக்குமணியின் ஜாக்கெட்டை  நனைத்தது.அது சற்றே அழுக்கேறி ஒரு வித வாசத்தையும் கிளப்பியது.

எந்த  ஊர் தண்ணீங்க
.
5.


ஒரு நாளைக்கு மேட்டுப்பாளையம் அத்திக்கடவுன்னு வரும். இன்னோரு  நாளைக்கு பவானித் தண்ணீ வரும். இன்னும் வேணுமா

போதுங்க . சுருளி ஊத்து தண்ணி குடிச்சு வளர்ந்தது. புதுசா ருசியா  இருந்துச்சு. ’


எல்லாம் குளோரினோ  கெமிக்கலோ போட்டு வர்ரதுதா. அந்த ருசிதா.”

சிந்தாமணி காலிச் சொம்புடன்  திரும்பும் போது  என்ன்ங்க என்றாள்
ருக்மணி. “ இந்தப் பையை இங்க வச்சிட்டுப் போகுட்டுங்களா. ‘

பைல என்ன ..”

ரெண்டு சேலையும் . ஜாக்கெட்டும், பாவடைந்தா.’

செரி., அந்த மூலையில போட்டுட்டுப் போ. அப்புறம் வந்து

எடுத்துக்கிவியலே.”

ராத்திரி வேலை முடிஞ்சதும் வந்து எடுத்துக்கறேங்க..”

இரவு எழு மணிக்கு வேலை முடிந்து வந்தபோது கேட்டருகில் தண்ணீர்


நிரம்பி இருந்த மினரல் வாட்டர் கேனை  நின்றபடியே காலால் தள்ள

முயற்சித்துக் கொண்டிருந்தாள் சிந்தாமணி.. மினரல்வாட்டர் கேன் நகர

மறுத்தபடி நின்ற இடத்திலேயே திமிறிக் கொண்டிருந்தது.

நாசுமாப் போன மளிகைக்கடக்காரன் கேட்டுக்கு உள்ள வெச்சுட்டுப்

போயிருக்கலாம். இங்க வெச்சுட்டுப்போயிட்டான். இதை யாரு உள்ள எடுத்து



6.

வைக்கறதாமா. ஆம்பளெ வெற  ஊர்ல்  இல்லே

நான் வேண்ணா எடுத்து வச்சுக்கறனம்மா..”


வீட்டு சமையல்  அறையில்    ஸ்டுல் ஒன்றின் மேல் இருந்த

காலி கேனைப்பார்த்தாள் ருக்மணி. “ ஊத்திருட்டுங்களா

செரி.. செரி . இல்லீன்னா. அதுக்கும் ஒரு ஆளைத்தேடணும்.  ‘

மினரல்வாட்டரை நிரப்பியபின்  சிந்தாமணி சொம்பில் தண்ணீரைப் பிடித்து

நிதானமாய் வாயில் ஊற்றி தாகம் தீர்த்துக் கொண்டாள். “ தண்ணீ வேணுமா..

குடி.. சுருளி தீர்த்தம் தண்ணீ குடுச்சு வளந்தவள்ளன்னு சொன்னே.

எல்லாத்தையும் விட இதுல ருசி அதிகம்.. கெமிக்கல்தா. . நாக்கு

அடிமையாயிருச்சு.”

ருக்மணியின் பார்வையில் வாஸ்பேசினில்  இருந்த அழுக்குப் பாத்திரங்கள்

தென்பட்டன.கரப்பான் பூச்சியொன்று நெளிந்து ஓடியது. அழுக்கு வாசம்

நாசியை எட்டுவதாயிருந்த்துஅதெல்லா வேற.. குவிஞ்சு கெடக்கு.

ய்யாருஇருக்கா இதெல்லா சுத்தம் பண்றதுக்கு..”


வாஸ்பேசின் பக்கம் நகர்ந்தாள் ருக்மணி.விறுவிறிவென்று கரப்பான் பூச்சிகள்

நகர்ந்தன.


கொஞ்சம்         தேய்ச்சு குடுக்கறியா. பணம் வேண்ணா  தர்ரன்.தப்பா நெனைக்க மாட்டேன்  ”




7.
ருக்மணி விறுவிறுவென்று பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள். ஒரு

வகை புளிப்பு நாற்றம் கிளம்பிக் கொண்டிருந்தது. வியர்வை கன்னத்தில்

குறுகுறுவென ஓடி நகர்ந்தது.


இரண்டு பேர்த்துக்கு உப்புமா பண்ணீர்லாமாதண்ணீர் வடிந்த

வாணலியை எடுத்துக் கொண்டபடி சிந்தாமணி கேட்டாள்.


வீட்டுக்கார்க்கும், உங்களுக்குமா


இல்லே உனக்கும்  எனக்கும்தான். அந்த மனுசன் எப்ப வருவாரோ. அவர்

வேலை அப்பிடி


உப்புமா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போதுவீடு ரொம்ப தூரமாஎன்று

கேட்டாள் சிந்தாமணி. பையை  எடுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து

தாரைதாரையாய் கண்ணீர் வழிந்தது. “ வீட்டுலே பிரச்சினையம்மா.

வந்துட்டன். எங்க ஊர்க்காரிக ரெண்டு பேர்த்து அட்ரஸ்கொண்டு வந்தேன் .

கண்டு புடிக்க முடியலேகாலையில கம்பனிக்குள்ள புகுந்தது. வேற

ஒண்ணையும் யோசிக்க முடியலே. நீங்க பத்து பாத்திரம் கழுவி

தரச்சொன்னதும் பொழுது போயிருச்சு. இந்னேரத்துக்கு அப்புறம் எங்க

போயித் தேடறதுஉங்க வீட்டு மொட்டை மாடியில

படுத்துக்கட்டுமா.காலையிலே அவங்களெ தேடிப் போயர்ரேன்.”



8.


அடிபாதகி.. ஒத்தையிலெதா காலையில இருந்து அல்லாடிட்டு இருக்கறே.

புருசனோட சண்டை போட்டுட்டு  வந்துட்டையா.’


ஆமாமா. அந்தாளு பண்ற இம்சைக்கு அளவில்லாமெப் போச்சு. அதுதா

கெளம்பிட்டன்.’

குழந்தைக இல்லையா. ‘


அதுக்கெல்லா குடுப்பினை அந்தாளுகிட்ட இல்லம்மா. ‘


சரி மொட்டை மாடியில படுக்காதே. வெயில் காலம் நல்லா இருந்தாலும்

பாதுகாப்பில்லெ. காம்பவுண்டுக்குள்ள ரெண்டு போர்சன் வாடகைக்குன்னு

கட்டி வுட்டிருந்தா என்க்கு பாதுகாப்பாச்சும் இருந்திருக்கும்

முன் கேட்டுக்கு பக்கத்தில் ஒரு மறைவான இடத்தில் பழைய பாய்

ஒன்றைப் போட்டு  தூங்க ஆரம்பித்து விட்டாள்  ருக்மணி. சிந்தாமணி தூங்க

ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தபின் அவசரமாய் போய் குளியல்

போட்டுக் கொண்டதில் நிம்மதியான தூக்கம் வந்து விட்டது அவளுக்கு.


அடுத்த நாள் காலையில் எழுந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்து

விட்டாள். தூங்கி எழுந்த  சிந்தாமணி முன் வாசல் ஒதுக்கம் பார்த்து  செரி

காபி போட்டுத் தர்ரேன் என்று உபசரித்தாள்.


சிந்தாமணியின் கணவன் மூன்று நாட்களுக்குப் பின் வந்தவன் வீட்டைப்


9.

பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் போலஎன்ன புதுசா

வேலைக்காரிங்க  கெடச்சிருக்காங்களா ‘’ என்றான். ருக்மணி நாலு நாளாய்

கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகள், துணி துவக்க ,

சமைக்க உதவுவது பற்றிச் சொன்னாள்.


பனியன் கம்பனிக்கே ஆள் கெடைக்காதப்போ நமக்கு வேலைக்கு  ஆள்

கெடச்சிருவாங்களா


புது ஆளு. எதுக்கு சிரமம். ஜாக்கிரதையாவே இரு . ‘


வேலைதானே வாங்கறன். படுக்கையெல்லா  கதவைச் சாத்திட்டு கேட்டு

பக்கத்தில பழைய பாயிலதா.”


பிரச்சினை வராமெ இருந்தாச் செரி.”


ருக்மணி உற்சாகமாகத்தான் இருப்பதாய் தோன்றியது  சிந்தாமணிக்கு.

சிந்தாமணி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளுக்குப் பிறகு செய்த

ஆபரேசன் ஒன்றில் ஏதோ சிரமம் ஏற்பட முடங்கிப்போய் விட்டாள். வீட்டு

வேலை கூட செய்ய முடிவதில்லை. கணவன் ஊரில் இருக்கும்

நாளென்றால்  கணவனின் உதவி இருக்கும்வேலைக்காரிகள் யாரும்

நிலைக்கவில்லை.கணவன் இல்லாத நாட்களில் எடுப்புச் சாப்பாடோ, ஒரு

வேளை சமையலோ போதும் என்றாகிவிடும் அவளுக்கு. சிந்தாமணியும்

10.

ருக்மணி பற்றித் துருவி எதையும் கேட்கவில்லை. வீட்டு வேலைக்கு ஒரு

ஆள்  கிடைத்த்து  என்ற அளவில் போதும், வெவ்வேறு விசயங்களை

விசாரித்துக் கொண்டு எதற்கு சங்கடம் என்று விட்டு விட்டாள். நாற்பது

வயது ருக்மணிக்கு. “ அனுபவிக்க வேண்டிய வயசிலே இப்பிடி அனாதையா

கெடக்குறேஎன்று மட்டும் ஓரிரு முறை சொல்லி அங்கலாயித்துக்

கொண்டாள்  சிந்தாமணி.


சுற்றி கட்டப்பட்ட  காம்பவுண்டும்  பாதுகாப்பாக இருப்பதாக ருக்மணியும்


சொல்லிக் கொண்டிருந்தாள்.அடுத்த வீடுகள் தங்களை மறைத்துக் கொண்டு

யானை போல் நின்றிருந்தன.

ஒரு நாள்  சமையலறையிலிருந்த வாணலி ஓட்டை விழுந்து

விட்டதாகச் சொல்லி வீட்டிற்கு வெளியே காமபவுண்டுக்குள் இருக்கும்

பூட்டிய  அறைக்குள் தேடச் சொன்னாள் சிந்தாமணி. அந்த அறை பற்றி

ருக்மணியும் கேட்கவில்லை. திறந்த போது அதில் தட்டு முட்டுச்

சாமான்களும் பாத்திரங்களும் இருப்பது தெரிந்தது. “ ஒதுக்கி வெச்சா ஒரு

ஆள் தாராளமாகத் தூங்கலாம் போலஎன்றாள் ருக்மணி. அன்றைக்கு இரவு

சிந்தாமணி ருக்மணிக்கு அந்த அறையைத் திறந்து விட்டாள். அவள் கணவன்

வீட்டிலிருந்தான்.

காலையிலதா   சொன்னே. நானும் யோசிச்சுப் பாத்தேன். கேட்டுக்குப்


11.

பக்கம் படுக்கறது  அவ்வளவு பாதுகாப்பிலே. அந்த ரூம்மே ஒழிச்சிசுப்

போட்டுட்டு  படுத்துக்க.. “




மகனிடமே,மோ, மகளிடமோ தொலைபேசியில் பேசும் போது

சிந்தாமணி உற்சாகமாய் இருப்பதாய் சொன்னாள். ஓரளவு உடல் நலம்

தேறியிருப்பது   மாதிரியும் இருப்பதாகச்  சொன்னதை ருக்மணி கேட்டாள்.

ருக்மணி உதவி செய்வது பற்றிச் சொல்லவில்லை.


அந்த ரூம் எனக்கு ரொம்பவும் புடிக்கும் ருக்மணி. இந்த வீடு கட்ட

ஆரம்பிச்சப்போ அந்த சின்ன ரூம்தா மொதல்லே கட்டுனோம். சிமெண்ட்

மூட்டைக்கு, சாமான்க போடறதுக்குன்னு. சின்னதா ஒரு கட்டல் அங்க

இருந்துச்சு. அதுல நாங்க இருந்தப்போ  இருந்த சுகம் சொல்லி மாளாது.

அவ்வளவு சந்தோசமா இருந்துருக்கறம். அது ஒரு காலம். . எப்பவாச்சும்

அந்த ரூமைத் தொறந்துட்டு அவர்கிட்ட இங்க இருந்த கட்டில்பத்தி ஞாபகம்

இருக்கான்னு கேட்டிருக்கன். அவர் ஒண்ணும் கண்டுகிட்டதில்லே. எனக்கு

சங்கடமா இருக்கும் “  அதை பல முறைச் சொல்லி விட்டாள்.ருக்மணி

நமுட்டுச் சிரிபை உதிர்த்து விட்டுப்போவாள் அவள் சொல்கிற போதேல்லாம்.

அவள் கணவன் வேலை காரணமாக வீட்டில் இரண்டு மூன்று நாள் இருந்து

விட்டு பத்து நாட்கள் காணாமல் போய்விடுவான். அப்போதெல்லாம் வந்து



12.

போகும் உறவினர் தவிர  ருக்மணியே பெரிய துணையாக இருந்தாள்.” அவர்

வேலை அப்படி . சீக்கிரம் அதை தலை மூழ்கிவிடுவார் என்றும் சொல்வாள்


.” பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு. அம்பதும்

ஆச்சு . இனி என்ன வேண்டிக் கெடக்கு. போதும்ன்னு அவர் கூடச்

சொல்வார். ஆனாலும் மாப்பிளை மாதிரி திரியிறார். அவர் வேலை அப்பிடி.

நான் ஒண்ணும் அவருக்குப் பிரயோஜனம் இல்லாத மாதிரி நோயாளி ஜீவனா


கெடக்கேன் அவர் வேலை என்ன என்று  ருக்மணி கேட்டதில்லை. அவர்

ருக்மணியிடம் வெளி ஊருக்குக் கிளம்பும் போதெல்லாம்  ” அம்மாவுக்கு

மாத்திரைக மாத்திரம் கரைக்கிட்டா குடுத்துரு. அது போதும்என்பார்.

அவ்வளவுதான் பேச்சு.

***********




அன்றைக்கு பனியன் கம்பனிகள் மூடப்பட்டிருந்தன..

சாயப்பட்டறைகளை மொத்தமாய் மூட நீதிமன்றம் ஆணையிட்டுருந்ததை

எதிர்த்து ஒரு நாள் பந்த்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத சாயப்பட்டறைகள்  அவ்வப்போது மூடப்படுவது திறப்பதும் சகஜம். இந்த தரம் அப்படியில்லாமல் முழுச்சாய் மூடப்பட உத்தரவு.

கேட்டோரத்தில்  நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தனர்  சிந்தாமணியும், ருக்மணியும்.


நீ வந்து ஒரு மாசத்திலெ நிலமெ எவ்வளவு மோசமாயிருச்சு பாரேன்.



13.

நிலமிமை சீராகும்ன்னு தோணலே. ஊரே காலின்னு பேசிக்கறாங்க.

சாயப்பட்டறைக மொத்தமா மூடிட்டா அவ்வளவுதான்னு சொல்றாங்க. “


கவலையுடன் தான்  படுக்கச் சென்றாள் ருக்மணி.நாலு நாளாய்

சிந்தாமணியின் கணவன்  வீட்டிலிருந்தான். மோகனப்பிரியாவையும்,

கிரிஜாவையும் தேடிப்போய் பார்க்கலாமா என்றிருந்தது ருக்மணிக்கு..ஊரே

காலியாகும் போது எதற்கு அவர்களைப் போய் பார்த்துக் கொண்டு என்ற

நினைப்பும் வந்தது.


********



ரொம்ப நேரம் தூங்கி விட்டது போலிருந்தது சிந்தாமணிக்கு. மாத்திரை


எண்ணிக்கை அதிகமாயிருக்குமோ, அல்லது வீரியமான புது மாத்திரையோ

என்றிருந்தது. வாசலில் பெரிதாக எட்டுப்புள்ளிக்கோலம்

விரிந்திருந்தது.ருக்மணிதான் போட்டிருப்பாள். ருக்மணி தலைக்கு குளித்து

பொலிவுடன் இருந்தாள்நல்ல சேலையும், முகப்பூச்சும் அவளை

தேவதையாக்கிவிடும் என்ற நினைப்பு வந்தபோது தொண்டையில் ஏதோ

கசப்பாய் இறங்குவது போலிருந்தது.


காபி தயாரித்து கணவனிடம் தந்த போது அவன் முகம் நன்கு தூங்கி எழுந்த


14.

பொலிவுடன் மிளிர்ந்திருந்ததைக் கண்டாள்.அவனையே வெறித்துப் பார்த்தாள்.

அவன் பார்வைத்தவிர்த்து விட்டு  தொலைக்காட்சி  அலைவரிசையை

மாற்றுவதில் மும்முரமாக இருந்தான். இனி ருக்மணியை   வீட்டில்

வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று முதல் முறையாக யோசிப்பு

வந்தது. அதைத்தான் அன்றைக்கு நாள் முழுக்க  யோசித்துக்கொண்டிருந்தாள்.


*********


பக்கத்து வீட்டு விஜயா    ஊர் முழுக்க பனியன் கம்பனிகள்

மூடப்பட்டிருந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.அவள் பேசப் பேச் அழுகை வந்து விட்டது. குரல் தளதளத்து விட்ட்துவெயில் தாழ்ந்து

ஒருவகை காற்று மெல்ல ஊடுருவிச் சென்றது.
அழுக்கடைந்த

வீட்டு  முன்வாசல் பற்றியும் பேச்சு வந்தது. அசோக்குமார் கம்பனியும்

மூடிக்கிடந்தது. ருக்மணி இருந்திருந்தால் இது மாதிரி   வாசல் குப்பையாய்



இருந்திருக்காது என்றாள்.விஜயா






ஊரே காலிபண்டீட்டு போகுது.   பனியன் தொழில் சீராகணுமில்லே.

ருக்மணியும் கெளம்பிட்டா. வேலையில்லாமெ வேத்து ஊர்லே எப்பிடி




15.

கெடக்கறதுன்னுஎன்று சிந்தாமணியும் அவள் பங்கிற்குச் சொன்னாள்.

ருக்மணியை   கடைசியாகப் பார்த்தபோது அவள் முகம் இருந்த பொலிவு

பொறாமையைக் கிளப்பிக் கொண்டிருந்தது  இன்னும் சிந்தாமணிக்குள்..





சுப்ரபாரதிமணியன்.,
8/2635 பாண்டியன் நகர்.,
திருப்பூர் 641 602.