சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

ஹைகூ நக்கீரன் சுப்ரபாரதி மணியன், திருப்பூர் இயற்கையுடன் இயைந்த வாழ்வு, உலகின் பருவ நிலைகள், சமூக சிந்தனைகள், அவலம், மனிதநேயம், அரசியல், என தமிழ் ஹைக்கூ கவிதைகள் சிக்ரங்களைத் தொட்டு வருகின்றன. திருப்பூர் வாழ் ஹைகூ கவிஞர் கரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஹைகூ கவிதைகள் மட்டுமே எழுதுகிறார். எனவே ஹைகூ கவிஞர் என்ற சிறப்புப்பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் இரண்டாம் ஹைகூ கவிதைகள் தொகுப்பு இது, அவரின் வயதில் மூத்தவர் ( 65 ஐ எட்டுகிறார் ), பனியன் கம்பனியின் 12 மணி நேர வேலையைத் தாண்டி அவர் கவிதை உலகில் இருந்து கொண்டேயிருக்கிறார் என்பது சாதனையாகும். ஜப்பானிய விதிப்படி 5,7,5 கொண்டது என்றாலும் தமிழில் வார்த்தைச் சுருக்கமுடன் வியப்பையும் அதிர்வையும் வெளிப்படுத்தும் ஹைக்கூ கவிதைகளே பலராலும் எழுதப்படுகின்றன. ஜப்பானிய இலக்கண வரம்புகளை உடைத்தெறிந்து எழுதப்பட்ட பல தமிழ் ஹைக்கூ கவிதைகள் காலத்தை வெல்லும் ஹைக்கூ கவிதைகளாக விளங்குகின்றன எனவே ஹைக்கூ கவிதைகள் தனியே வலம் வருகின்றன. வரம்பும், இலக்கணமும் கொண்டு. அதை சரியாகக் கணக்கிடுவதில் வல்லவர். பொதுவாக, சிறப்பாக இருக்கிறதென்று நான் பாராட்டும் சில ஹைக்கூ கவிதைகளை எடுத்துக் கொண்டு அவற்றில் இருக்கும் வடிவ , கட்டமைப்பு தவறுகள் பற்றிச் சுட்டிக்காடும்போது நானும் அசந்து வியந்து பார்த்திருக்கிறேன். அவர் எழுதிய ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்கும். அவற்றின் உதாரணம் இவை. நக்கீரப்பார்வைக்கு தப்பாதவை. உங்கள் பார்வையிலிருந்தும் தப்பக்கூடாதவை. என்றும் கவிதையாய் சிந்தனையில் வாழ்பவர், வாழ்த்துக்கள்