சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
. தமிழகம் முதல்வருக்கு கோரிக்கை: சுப்ரபாரதிமணியன்
1. நகரங்களில் மற்றும் பிற ஊர்களில் நடைபெறும் நூலக விழாக்களில் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு பங்களிப்பும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்
2. நூலாக வாசகர் வட்ட குழுக்களில் அம்பது சதவீதம் எழுத்தாளர்கள் இடம் பெற வேண்டும்
சமீபத்தில் நூலக வார விழா நடந்து முடிந்தது அதில் இடம்பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் அதிர்ச்சிகரமாக இருக்கும்.அதில்எழுத்தாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எழுத்தாளர்களை நூல்கள் நூலகங்ளில் இருக்கும். பிறர் எடுத்து படிப்பார்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அங்கு நடைபெறும் கூட்டங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற மாட்டார்கள்
சாதாரண தேனீர் செலவுக்கு பணம் கொடுக்கும் தொழில் பிரமுகர்கள் இலக்கிய வள்ளல்களாக அந்த கூட்டங்களில் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் எழுதும் பொன்மொழிகள் கவிதைகள் என சொல்லப்படும் தத்துவ கொட்டேசன் மூலம் அவர்கள் நூல் சிறந்த எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.
நூலகர்கள் அந்தப் பகுதியில் எழுத்தாளர்களை அழைப்பதில்லை. அவர்களின் நூல்களைப் படிப்பதில்லை சரியாக அறிந்து கொள்வதே இல்லை இந்த நிலையில் நடக்கும் நூலக விழாக்கள் திருப்திகரமாக இல்லை
மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, உள்ளூர் படைப்பாளியின் பங்களிப்பையும் வலியுறுத்தும் தமிழக அரசு இந்த விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் இதை நூலகப் பொதுத்துறை கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 116 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 110 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை
நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள்
நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB