சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 30 டிசம்பர், 2011

















கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சுப்ரபாரதிமணியன்
இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது எதார்த்த நிலையில் நாம் இரண்டாம் நிலை இலட்சியமாகவே உள்ளது. எனவே கல்வி சார்பான கடமைகளை ஆற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய, கல்வி, பண்பாடு சார்பான அமைப்பினரும் ஒன்றிணைந்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இன்றைய உலகமய, தனியார் மய சூழலில் கல்விக் களத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி புரிதலை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் திருப்பூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள மத்திய அரிமா சங்க கட்டிடத்தில் 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விவாதத்தில் பேரா. கோச்சடை, நடேசன், கண.குறிஞ்சி, பொதியவெற்பன், நாகராஜன், பாண்டியராஜன், ஆறுமுகம், அய்யாவு, கண்ணன், அன்பரசு, பிரபாகரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை திரு மூர்த்தி அவர்கள் செய்திருந்தனர்.இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை 1) தொடக்கக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக, தரமாக, சமமாக வழங்குவது மக்களாட்சி அரசின் கடமை. இதில் எள்ளவும் தனியாரின் பங்களிப்பு தேவையில்லை. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் 2011 வலியுறுத்தும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழைக் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற விதி நீக்கப்படவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியும் நீக்கப்பட வேண்டும். மாறாக தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படவேண்டும். மேற்கண்ட திருத்தங்களை தமிழக அரசும் மத்திய அரசும் செய்ய வேண்டும்.2) உச்ச நீதிமன்றம் தீhப்;பளித்த பிறகும் இன்னும் சில தனியார் பள்ளிகள் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களை நடைபடுத்தவில்லை. மாறாக வேறு தனியார் நிறுவனங்களின் பாடநூல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதலாகப் புத்தகக் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தவறுகள் கல்வித் துறையின் தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும்.3) தாய்மொழி வழியிலேயே தரமான கல்வி வழங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஏற்கப்படவேண்டும்.4) தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் முறைகேடான வழியில் பொதுத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற வகைசெய்யப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார்பள்ளி மாணவர்கள் அதிக விழுக்காட்டினர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். உயர்கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பின் மூலம் தனியார் பள்ளிகளின் இத்தவறுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.5) அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.6) ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முழுநேர ஆசிரியர் பணியிடங்களாகவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாகவும் நிரப்பவேண்டும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதிகள் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்.7) தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள முப்பருவ முறை வரவேற்கத்தக்க மாற்றமாகும். மேலும் வருங்காலத்தில் இம்முறைக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. மேலும் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில், சமூக நீதி, மனித உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.8) மத்திய அரசு பாடத்திட்டத்தைப் (ஊடீளுஊ) பின்பற்றி புதிய தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சமச்சீர் கல்வியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இக்கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய அரசின் பாடத்திட்டமும் எத்தகைய வேறுபாடும் இல்லாததாக மாற்றப்படவேண்டும்.9) தேசிய இனம் – மொழி வழி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இருக்க வேண்டும். இக்கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்க கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.10) அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படவேண்டும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மாணவர்கள் மூலம் செய்ய வைப்பதை தடுக்கவும், சுகாதார சீர்கேடுகளைக் களையவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொ.பாண்டியராஜன்மதுரை. 3

வியாழன், 22 டிசம்பர், 2011

தண்ணீர் யுத்தம்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

காணாமல் போன உள்ளாடை

காணாமல் போன உள்ளாடை

சுப்ரபாரதிமணியன்



பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த பாலியல் வன்முறை பற்றியது. தொண்ணூறுகளில் வட இந்தியாவின் பல இடங்களில் பெண்கள் மீதான வன்முறை நடந்தது. புவனேஸ்வரில் மரியா என்ற கிறிஸ்துவ கன்னியாஸ்திரி

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் கர்ப்பமடைந்தார் அவரை தேவாலயத்தைச் சார்ந்தவர்கள் தனியே பிரித்து வைத்து குழந்தையை பெற்றெடுக்க செய்கின்றனர் “ஆயிரம் நாட்களும் ,ஒரு கனவும்” கோக கோலா தொழிற்ச்சாலை ஒன்றுக்காக பிளாச்சி மடா என்ற கிராமத்தில் தொடர்ந்து நீர் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்ட குடி தண்ணீர் பஞ்சம், விவசாய நிலங்கள் பாதிப்படைந்ததை விவரிக்கிறது. “சாருலதாவின் பாக்கி ” என்ற படம்

சத்யஜித்ரேயின் சாருலதா கதாபாத்திரம் இருவர் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

மறைந்த இயக்குனர் பத்மராஜனின் மூன்று கதைகளை மையமாகக் கொண்டு “கபாந்தகதி ” என்ற நீளமான குறும்படம் வெளிவந்திருக்கிறது. 45 வயதே இருந்து மறைந்த பத்மராஜனின் இழப்பு மலையாளத் திரைப்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இயல்பான காதலும் காமமும் கொண்ட இருவர் பற்றிய ஒரு கதை தன் காதல் மனைவியை மீறி அவளின் மகள் மீது காமம் கொள்ளும் ஒருவனின் கதை என்று மூன்று பத்மராஜனின் கதைகளை இணைத்து ” கபாந்தகதி ” என்ற பெயரில் கீதா ஒரு குறும்படம் வெளியிட்டிருக்கிறார். அம்மா, மகள், காதலன் உறவுகளைச் சித்தரிக்கும் இப்படத்தின் ஒரு பகுதி சிறப்பாக உருவாகியுள்ளது. வேலையில்லாத இளைஞனின் காம எண்ணங்களின் வெளிப்பாட்டை கவிதைவரிகளோடு விஸ்தாரமாக்கியிருகிறார் கீதா. ஆண்,பெண் உறவுகள் பற்றிய அலசலாக இப்படம் அமைந்திருக்கிறது. இயக்குனராய் விளங்கிய பத்மராஜனின் இலக்கிய படைப்புகள் சிலவை குறிப்பிடத்தக்கவை. இவரின் முதல் நாவல் “நட்சத்திரங்களின் காவல்” கேரளா சாகித்ய அகாதமியின் பரிசைப் பெற்றது. இவரின் இயக்கத்தில் ” ஓரிடத்து பயில்வான்”, “மூணாம் பக்கம்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1986 வரை அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து வந்த பத்மராஜனின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களைப் பற்றின வாழ்க்கையை பொதுவாக்கியவை. பரதனின் ” பிரளயம்”, “பெருவெளி அம்பலம்” போன்ற படங்களில் திரைக்கதையில் இடம் பெற்றிருந்தார். பரதனுடன் இணைந்து கலைப்படங்களின் தீவிரத்தை ஒரு பாதையாக்கியவர், விளிம்பு நிலை மனிதர்கள், பாலிய அனுபவங்கள், ஓரினச்சேர்க்கைப் பெண்களின் காதல் போன்றவற்றையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

1991-ல் இவர் இயக்கி வெளியிட்ட ” நிஜன் கந்தர்வன்” என்ற படம் தோல்வியடைந்து. அவரின் மனைவி ராஜலட்சுமி தனக்கு கனவில் வந்த ஒரு விடயம் பற்றி பத்மராஜனிடம் தெரிவித்திருக்கிறார். சிந்து புராணத்தை மையமாகக் கொண்ட ஒரு கதை அது. கந்தர்வன் பூமிக்கு வரும் போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டதாகும் அது. கதைப்படமாக்கும் போது கதாநாயகனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது படப்பிடிப்பில் கதாநாயகி மயங்கி விழுந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். படம் வெளியான போது அதன் திரையிடலை காண கோழிக்கோடு சென்ற பத்மராஜன் திடுமென மரணமடைந்தார். நிஜன் கந்தர்வன் படம் அவரின் வாழ்க்கை சூழலை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. முக்கிய படைப்பாளி மரணத்தை வெறும் ஒளியாக்கி மறைந்து விடச் செய்தது.

“90 செ.மீ “என்ற படம் நரனிபுழா சனவாசாங் இயக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது துணிகளைத் துவைத்துக் காயப் போடுகிறார். ஒரு எல்.ஐ.சி முகவர் வந்து போகிறார். கணவர் இருக்கும் போது வரச்சொல்கிறார் அவளின் சிறிய உள்ளாடை ஒன்று காணாமல் போகிறது. கணவனும் மனைவியும் தேடுகிறார்கள். புதிதாக ஒன்றை வாங்கிவந்து மாட்டிக்கொண்டு மனைவி வெளியே கிளம்ப வேண்டியிருக்கிறது. எலி தூக்கிப் போயிருக்கலாம் என்ற அனுமானத்தில் எலிப்பொறி பெட்டியொன்றையும் வாங்கி வருகிறார். அதுவும் திருடு போய்விடுகிறது. கணவன் இரவில் கண்விழித்துப் பார்க்கிறான் எதுவும் அகப்படவில்லை கணவனும் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இறுதியாகக் கணவன் ” உள்ளாடை உடுத்த வேண்டாம்” என்று மனைவிக்கு ஆணையிடுகிறான்.

“பந்தி போஜனம்” என்ற குறும்படம் கோவில்களில் தலித் பிரவேசம் போன்றவை பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச்சார்ந்த ஒருவன் பணக்கார உயர்சாதிகாரர் சாதிப்பெயரைச் சொல்லி திட்டிவிடுகிறார்.இது நீதிமன்றத்தில் வழக்காடுகிறது தலித்தான ஒரு பப்ளிக் பராசிகியூட்டர் இந்த வழக்கைக் கையாள்கிறார். ஒரு மேல் சாதி வழக்கறிஞர் பெண் உட்பட மூன்று பெண் வழக்கறிஞர்கள் அந்த பப்ளிக் பிரசிக்கியுட்டரை ” மடக்குவதை” தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஒரு நாள் மதிய வேளை உணவிற்கு வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். பப்ளிக் பிரசிக்கியுட்டர் தனது ஆண் உறவினர் உடன் வருகிறார். அவருக்கு பிடித்தமான மீன் மற்றும் அசைவ உணவுகளை மேல்சாதிப் பெண் விருந்து என்பதால் சாப்பிட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறாள். சாதியும், உணவு வகைகளும் அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்டிவிடுகிறது. நல்ல திருப்தியான விருந்து சாப்பிட்டதாக பப்ளிக் பிராசிக்யூட்டர் பெண் சொல்கிறாள். மாற்றாக அடுத்த விருந்தை அவள் வீட்டில் தரவேண்டும் என்றக் கட்டாயச் சிக்கல் அவள் மனதில் வருகிறது. ஓரளவு பப்ளிக் பிரசிக்கியுட்டரை “மடக்கி”"விட்டோம் என்ற நம்பிக்கையில் மற்ற மூன்று பெண் வழக்கறிஞர்களுக்கு வருகிறது. உயர்சாதிப் பெண் கட்டாயத்தால் தான் உண்ட அசைவ உணவை வாந்தியெடுக்கிறாள். வழக்கறிஞர்கள் நீதி மன்ற வளாக உணவு விடுதியிலேயே உணவு பற்றி பரிமாறிக் கொள்ளும் விடயங்கள் சுவாரஸ்யமானவை. தங்களின் சாதியமைப்பு, வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. பப்ளிக் பிரசிக்கியூட்டர் பெண் அசைவ உணவோ, தாழ்ந்த சாதிப் பெண் என்ற காரணத்தாலோதனியே தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அவர்களின் பேச்சில் தலித்களின் ஆலய பிரவேசம், சேரிகளில் நடபாட்டம் உட்பட பல சாதிப் பிரச்சனைகள் இடம்பெருகின்றன. உணவுப் பழக்கங்களை முன்வைத்து இந்த விசயங்கள் அலசப்படுவது சுவாரஸ்யத்தைத் தருகிறது. 2000 ஆண்டு கால தீண்டாமைக் கொடுமை அவர்களின் பேச்சில் குறுக்கிடுகிறது

கேரள குறும்படங்களில் முன்னனி நடிகர்கள் நடிப்பதும், பிரபலமான இயக்குனர்கள் இயக்குவதும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது, சமீபத்தில் சென்னையில் கமலஹாசன் நடத்திய ஒரு திரைக்கதைப் பட்டறையின் இறுதியில் சென்னையை மையமாக வைத்து 30 குறும்படங்கள் அவரின் மேற்பார்வையில் வெளிவரப்போவதாகவும், ஒரு குறும்படத்தை அவர் இயக்குவதாகவும் தகவல் தந்தார். பல குறும்படங்களின் வெளியீட்டு விழாக்கள் பிரபல தமிழ் இயக்குனர்கள் பங்கு பெறுகிறார்கள். நடத்தப்படும் குறும்படப் போட்டிகளுக்கு பிரபல இயக்குனர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள் என்பதே சிறு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது.