சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
சிறார் இலக்கியத் திருவிழா 2025 திருப்பூரில் கல்வியாளர் சசிகலா பசுபதி தலைமையில் நடைபெற்றது
0
0
கதை சொல்லிகளின் சிறப்புரைகளாக நான்சி கோமகன்,
சரிதா ஜோ
சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி அரசப்பன், ஆனந்த குமார் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
0
சிறார் ஓவியக் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்கஅலமேலு திறந்து வைத்தார்
சிறார் நூல்கள் கண்காட்சியை மூத்த எழுத்தாளர் மதுராந்தகன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிரிஜா சுப்ரமணியன் , பாக்யலட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறாரின் கதை சொல்லல் ( ஆங்கிலம்/தமிழ் ) நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கு பெற்றனர்.
சிறார் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கல்வியாளர் பசுபதி, சமூகப் பணியாளர்கள் ஸ்டார் குமார், லீலா ஜகன் உள்ளிட்டோர் கல்ந்து கொண்டு சிறப்பித்தனர்.
0
நன்றியுரை : மோகன்ராஜ் மனோகரன், தமிழாசிரியர்
கனவு இலக்கிய அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது.
செய்தி : சுப்ரபாரதிமணியன், 9486101003
புகைப்படங்கள் : கதை சொல்லும் மாணவி / சிறப்புரை ஆற்ரிய நான்சி கோமகன்