சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010
=================================

* க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது ரூ 15,000

* சிற்பி இலக்கியப் பரிசு ரூ 5,000


கவிதைப் படைப்புகளை, தொகுப்புகளை அனுப்ப வேண்டிய‌
முகவரி:



க‌விஞ‌ர் சிற்பி அற‌க்க‌ட்ட‌ளை,

106 ( 50 ) அழ‌க‌ப்பா குடிய‌மைப்பு,

பொள்ளாச்சி : 642 001.

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

சாகித்திய அகாதமி

கவிதை குழாம்; வத்தலகுண்டு
=============================

வ‌த்தலகுண்டு சி சு செல்லப்பா, ராஜம் அய்யர், ராமையா போன்ற இலக்கிய முன்னோடிகளையும், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திர தியாகிகளையும் நினைவு கொள்ளச் செய்யும் ஊராகும். சிறப்பு தன்மை வாய்ந்த ஊரில் சாகித்ய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுப்ரமணிய சிவா வீட்டைத் தேடிப்போனால் யாரும் அடையாள‌ம் காட்ட மறுக்கிறார்கள். நினவிடம் என்று எதுவும் இல்லை. புது வீடு முளைத்திருக்கிறது. செல்லப்பா வீட்டை நினைவு கொள்ளும் அவரின் உறவினர்கள் ஆறுதல் தந்தார்கள். ராஜம் அய்யரின் நினைவாய் ஒரு கல்வெட்டு இருந்தது. இலக்கிய முன்னோடிகளின் ஊரில் அவர்களை அடையாளம் காட்ட ஆளில்லை. வருத்தமாக இருந்தது.
சுப்ரபாரதிமணியன் நவீன தமிழ்க் கவிதையை அடையாளப்படுத்தும் வகையில் இரு கவிஞர்களைப் பற்றிய கட்டுரையை வாசித்தார்.1 சிற்பி பாலசுப்ரமணியன். மூத்த கவிழஞர் என்ற வகையில் மரபும், புதுமையும் இணைந்த முயற்சிகளை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைதொகுப்பை முன் வைத்து விளக்கினார். இளைய கவிஞர் என்ற முறையில் சூரிய நிலாவின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து நவீன அம்சங்களை எடுத்துரைத்தார்.தென்மண்டல செயலாளர் இளங்கோவன் சாகித்திய அக்கதமியின் ஒருமைப்பாட்டு பணியை பல் வேறு நிகழ்ச்சிகளை முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார்.தங்கம் மூர்த்தி நவீன கவிதையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றி பேசினார். ஆனைவாரி ஆன்நதன் மரபுக் கவிதயின் பலம் பற்றி எடுத்துரைத்தார்.


கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை காவல் துறை அதிகாரியும் கவிஞருமான சின்னசாமி துவக்கிவைத்தார்.... 2000 ஆண்டு கால் மரபு கொண்ட தமிழ்க் கவிதையின் செழுமை பற்றி விள‌க்கினார். பழ‌மலை கவிஞ‌ர்களை அறிமுகப்படுத்தியும், தமிழ் சூழ‌லில் அரசியல் செலுத்தும் செல்வாக்கு பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர்கள் ரசூல், சக்தி ஜோதி, ரத்திகா, சுபமுகி, மயூரா ரத்தினசாமி. அம்சப்பிரியா,பழமலை,சாஜகான்,தங்கம் மூர்த்தி, யவனிகா சிரிராம்,அமிர்தம் சூர்யா , சுதிர் செந்தில் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.மனுஸ்யபுத்திரன் உடல் நல‌க் குறைவு காரணமாக கலந்து கொள்ள முடியவிலலை.கவிஞ‌ர்கள் சந்திப்பு மற்றும் கலந்திரையாடலுக்கான நல்ல களமாக வத்தலகுண்டு கவிஞர்கள் சந்திப்பு அமைந்திருந்தது.எழுத்தாளர்கள் காமுத்துரை, ஸ‌பி, வதிலை பிரபா, அல்லி உதயன், தாரகை போன்ற கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கவிதை நூல் வெளியீடு

கனவு - சமூக, கலை இலக்கிய, கலாச்சார அமைப்பு

- கவிதை நூல் வெளியீடு






சுபமுகியின் ‘இராசயன்பொடிக் கோலம்’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு ஞாயிறன்று மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. திரைப்படக் கலைஞர் அஜயன்பாலா நூலை வெளியிட, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் சுபமுகியின் கவிதை நூலை வழக்கறிஞர் ரவி அறிமுகப்படுத்திப் பேசினார். மத்திய அரிமா சங்கத் தலைவர் முருகசாமி தலைமை வகித்தார். அரிமா மாவட்ட தலைவர் சுதாமா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.





விழாவில் மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் ‘படுகளம்’ நாவலை சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்திப் பேசினார்.

விழாவில் ‘அஜயன்பாலா படைப்புலகு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ‘அஜயன்பாலாவின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மனிதர்கள்’ என்ற தலைப்பில் எஸ்.ஏ.பாலகிருஷ்ணன் பேசினார். ‘அஜயன் பாலாவின் திரைப்படக்கனவு’ என்ற தலைப்பில் தாண்டவக்கோன் உரையாற்றினார். ‘அஜயன்பாலாவின் புரட்சி நாயகர்கள்’ என்ற தலைப்பில் நிசார் முகமது உரையாற்றினார். அஜயன் பாலாவின் ‘கூட்ஸ் வண்டி’ என்ற வலைத்தளத்தைப் பற்றி முத்துசரவணன் உரையாற்றினார்.

தாய்த்தமிழ்ப் பள்ளித் தலைவர் முத்துசாமி, கவிஞர்கள் ஜோதி, சிவதாசன், நாடகக் கலைஞர் சாமி, வரலாற்று ஆய்வாளர் அனந்தகுமார், பத்திரிகையாளர் கே.எஸ், குறும்பட இயக்குனர்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஜெயபால் நன்றி தெரிவித்தார்.


செய்தி: K.ரவிக்குமார்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009