சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 டிசம்பர், 2016

"கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே"
------------------------------------------------------------
கோவை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் : கருத்தரங்கில் பேசியது.                         -  சுப்ரபாரதிமணியன்
------------------------------------------------------
              
"கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே" என்ற
 சார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்தப் பிரச்சினைகளை எழுத்தாளன் தான் ஊடுருவிப்பார்க்கவேண்டியிருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பணமாற்றங்களும்  மனிதனின் முன்னேற்றத்திற்கானதல்லாமல் சுய சிதைவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை என் சொந்த ஊரின் மக்களின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறது. . அந்தச் சிதைவு தரும் கண்ணோட்டம் அபத்தம் சூன்யம் என்று வாழ்க்கை பற்றி வழக்கமான சொற்களாலேயே இறுதியில் புரிந்து கொள்ளப்படுகிறது. கடவுள் இருக்கிற உலகு என்று இதை  பெரும்பான்மையான உழைக்கும் மனிதனும் நம்புகிறான்.
நிச்சயமற்றதான வாழ்வில் மனிதனின் இருத்தலுக்கு இருக்கும் ஏதோ அர்த்தத்தை சின்ன வட்டங்களுக்கும் அடைத்துக் கொள்கிறான்.எந்த வித அர்த்தமும் இல்லாத உலகில்  கடவுள் பற்றின கருத்துக்கள் கொஞ்சம் பிடிமானதாய் தற்காலிகமாய் இருக்கிறது கொஞ்ச காலம்.சமூகத்தையும்  ம்னிதனையும் மாற்றி அமைக்க்க் கூடிய தத்துவ விசாரங்களோ  அறிவியல் தேடல்களோ பாடத்திட்டத்தோடு நின்று விடுகின்றன அந்தப்பாடத்திட்டங்களுக்கு கூட கட்டுப்பாடு என்பது போல் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளி ஆக்கிவிடுகிறோம் எங்கள் ஊரில். .எந்த உலகம் மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ அது அவனிடமிருந்து உழைப்பிலும் வாழ்வதிலும் அந்நியப்பட்டு நிற்கிறது. அர்த்தமற்ற உலகம். அர்த்தத்தைத் தேடும் மனித மனம் தடுமாறிக்கொண்டே இருக்கிறது.இந்தத் தடுமாற்றம்தான்  ஒரே ஒரு தீவிரமானப் பிரச்சினை தற்கொலையில் சென்று முடிவதுதான் வாழக்கையில் ஏதோ கணத்தில்  நம்புகிறான். அந்த தற்கொலைக்குமுன்பாக கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிற ஆசையில் நாட்களைக் கடத்துகிறன்.

 மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட.... யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.
அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.   
ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறதுஎன்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
*



.விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விழா : கோவை
இலக்கியக் கருத்தரங்கம் : என் பதில் 1

தனிமனிதப்போராட்டங்கள் பற்றிய நாவல்களைச் சொல்லமுடியுமா..
என் “ புத்துமண் “ நாவலையே நான் சட்டென நினைவுக்கு வருவதால் சொல்கிறேன். என் திருப்பூர் சூழலில் அதை புரிந்து கொள்ளுங்கள் என்று விளக்கினேன்.

 புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------
குளத்துமீனாகவிரும்புமாபாத்திரத்துமீன்?
ஜெயந்தி சங்கர்
-----------------------------------------------------------------------


பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.
முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோதபுதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாகவாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.
சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பலஉவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(.30) 'வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்' என்கிறார். 'துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது' (.27) என்றஇன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.
'மேலேயிருந்துவெளிச்சம்பரப்பிஅதுகீழேவருவதற்குள்களைத்துப்போய்விடுகிறமாதிரிவெளிச்சம்பலகீனமாகவேஇருந்தது' (.14) என்பதுபோலமிகச்சிலஇடங்களில்உவமையாகஇல்லாமல்உருவகமாகவேஆக்கியிருந்தால்அழகுகூடியிருக்கும்எனப்பட்டது.
ஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம்இதோ(.27) -
ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, 'கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவே' என்கிறதுஅது.’
உலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.
வெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.
சந்தேகமேஇல்லாமல்பரவலானகவனம்பெறவேண்டியநாவல்புத்துமண்.

புத்துமண்நாவல்
ஆசிரியர்சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014
பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00

 * விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விழா : கோவை
இலக்கியக் கருத்தரங்கம் : என் பதில் 2

* ராசு நல்லபெருமாள், தீபம் பார்த்தசாரதி போன்றோரின்  போராட்டமையமான நாவல்களுக்குப் பிறகு அது போல் நாவல்கள் வருவதில்லையே..
* என் பதில்: சாகித்ய அகாதமி தமிழ் இலக்கிய வரலாறு என்று ஒரு நூல் போட்டிருக்கிறார்கள். அதில் மு.வ நாவல்கள் வரையே இருக்கும். அது மாதிரி உள்ளது உங்கள் கருத்து .இதை மையமாகக் கொண்ட சில கொங்குப்பகுதி எழுத்தாளர்களின் சமீப நாவல்களைச் சொல்கிறேன். கரூர்புலியூர் முருகேசனின் உடல் ஆயுதம், முருகவேளின் முகிலினி , பாரதிநாதனின் தறியுடன், வந்தேறிகள், செல்லமுத்து குப்புசாமியின் கிராமிய சாதிய முரண்போராட்டங்கள் நாவல், என் நெசவாளர் போராட்ட நாவல் தறிநாடா, போன்றவை உடனே நினைவுக்கு வருகிறது.


 * 


செவ்வாய், 6 டிசம்பர், 2016

சுப்ரபாரதிமணியனின் சமீப நூல்கள்:

* நைரா  - சுப்ரபாரதிமணியனின்  நாவல். ( நைரா- நைஜீரிய  ரூபாய் )

உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது. (  வெளியீடு : என்சிபிஎச், சென்னை பக்கங்கள் 190, ரூ 150 )

* கோமணம் நாவல் (. (  வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 120, ரூ80 )
பாதயாத்திரை என்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி . அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல    சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார். குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதிமணியனின் அனுபவங்கள் 

* சிவப்புப் பட்டியல் ( அழியும் உயிரினங்கள் பற்றி) . (  வெளியீடு : என்சிபிஎச், சென்னை பக்கங்கள் 80, ரூ 65 )



கனவு   : இலக்கிய நிகழ்வு


4/12/16 ஞாயிறு மதியம் 3 மணி முதல் சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம்   வீதி, திருப்பூரில் நடைபெற்றது.கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்.

- பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி  கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார்.  பேராசிரியர் செல்வி ஏற்புரையில் தமிழகப்பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார்.

நூல்கள் அறிமுகம்:
சேவ் வெளியிட்ட களவாடப்பட்ட குழந்தைப்பருவம்   ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ) ,சுப்ரபாரதிமணியனின்  சிவப்புப் பட்டியல் “ ( அழியும் உயிரினங்கள்) பற்றியது ) அண்டனூர் சுராவின் ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.          

              “ கறுப்புப்பணமும்  பொதுமக்களின் கஷ்டங்களும் “ என்பது பற்றி அருணாசலம் பேசினார்.

திருப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழா பற்றி விரிவாகப்பேசினார் சுப்ரபாரதிமணியன். சமூக யதார்தத்திற்கு மாறாக கலைப்படைப்புகள்  எழுப்பும்  தார்மீகக் கேள்விகளை இத்திரைப்பட விழாவும்  எழுப்பியது.. வரலாற்றுக் கலாச்சாரத்தோடு இணைந்த சர்வதேச மனிதனாக மாற்றும் முயற்சியில் இப்படங்கள் அமைந்திருந்தன.  “ என்றார். தமிழர்களின் வாழ்க்கையை பிராஞ்ச் தேசத்தில் எடுத்துக்காட்டிய தீபன் படம் பற்றி எடுத்துரைத்தார். தீபன் என்ற பிரான்ஸ் தேசத்துப்படம் இலங்கையிலிருந்து  அகதியாகசெல்லும் ஒரு பெண் ( யாழினி )  தன்னோடு குடும்பம் என்று காட்டி ஒரு ஆணையும் ஒரு குழந்தையையும் கூட்டிச் சென்று  பிரான்சிற்குச் சென்று அவலப்படுவதைச் சொன்னது.  இலங்கையின்  போர்ச்சூழலை விட்டு விலக ஆசைப்பட்டிருந்தாலும் பிரான்ஸில் காணப்படும் போதைப்பொருள் கடத்துகிறவர்களின் மத்தியலான யாழினியின் வாழ்க்கை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறின  சிவதாசனின்  ( எழுத்தாளர் ஷோபாசக்தி இப்பாத்திரத்தில்)   மனச்சிரமங்களோடு சொல்லியது. மூன்று பேரும் குடும்பமில்லை . ஆனால் ஒரே குடும்பமாக காட்டிக் கொள்ளும் சூழலில் இரு பெண்களின் நிலை இதில். தமிழ் வசனங்கள், பல தமிழ்ப்பாடல் வரிகள் பெரும்பான்மையாக இடம்பெற்று இத்திரைப்படவிழாவில் தமிழ்ப்படம் இல்லாதக் குறையைப் போக்கியது எனலாம்.இலங்கையிலோ பிரான்ஸிலோ அந்நியப்பட்டுப்போன  மனிதர்களை காட்டியது.      பேராசிரியர் செல்வியின் குறும்படங்களின் வெளிப்பாட்டுத்தன்மை குறித்து துருவன் பாலா பேசினார்.  அவரின் குறும்படங்கள் திரையிடப்பட்டன                                                              


- பேராசிரியர் செல்வியின் படைப்புலகம் ( கோவை செல்வியின் இரு குறும்படங்கள் , மூன்று நூல்கள் ) பற்றி  கோவை சுபசெல்வி விரிவாகப்பேசினார்.  ஏற்புரையில் தமிழகப் பெண் இலக்கியவாதிகளூடே பெண்ணியத்தின் நிலை பற்றிப் பேசினார். சேவ் வெளியிட்ட களவாடப்பட்ட குழந்தைப்பருவம்   ( குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் நூல் பர்றிய அபிப்ராயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில்  பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் குழந்தைகளை தொழிலாளிகளாக்காதீர்கள். வெளிநாடுகளில் குழந்தைகள் முழு ஆளுமையுடன் வளர்கிறார்கள். வாழ்கிறார்கள், குழந்தை ஆளுமை முழு வாழ்வின் ஆதாரம்.  அறிவு பள்ளிப் படிப்பில் மட்டும்  இல்லை . பொது புத்தக வாசிப்பில் இருக்கிறது.அனுபவத்தில் இருக்கிறது.பயிற்சியை தொழிலாளச் செய்தால் அது தீமை.குழந்தைகளைத் தொழிலாளிகளாகும் பெற்றோர் அடிப்படை உரிமையில் கைவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்கள் அவர்களை பிறகு வன்முறைகளாக்குகிறது.அது வேண்டாம்..குழந்தைகளாகவே வளர விடுங்கள் என்றக்கருத்து வலியுறுத்தப்பட்டது. .

..(ஒருங்கிணைப்பு ஜோதி 90255 26279 , மனோகர் 81242 83081 )





வியாழன், 1 டிசம்பர், 2016

வெளிவந்துள்ளது
Sumangali ---       
A novel on Sumangali scheme victims
Subrabharathi Manian
Translated from Tamil
by P.RAMGOPAL



SUBRABHARATHI MANIAN has been writing short stories, Noveletts and Novels with care and concern for the mariginalised for whom existence itself is a battle they have to fight daily against the merciless forces of society.  Through a careful blending of monologues and dialogues he carves his characters with a rare degree of dexterity. 
Mr. Manian has won many awards including the prestigious ‘Katha’ award for the best short story writer from the President of India.  And Best novelist award from Tamil Nadu Government fir Sayathirai novel and it has been translated in English, Hindi, Malayalam, Bengali,Kannada. Two more his novels translated in English .He has published more than 200 hundred short stories, ten short story collections and quite a few novels., 14 novels.  His latest short story collection, Gugaikalin Nizalil  was released on 28th  August, 2016, at the Coimbatore Book Fair. His stories have been translated into many Indian languages, English and Hungarian. His books are prescribed as text books in various universities.  He is also the editor of the Tamil literary magazine, ‘Kanavu’ since 1987.He  has published 50 books in total including 14 novels.
The novel, Sumangali talks about the pathetic condition of girls caught in the Sumangali scheme of the Mills in Tamilnadu. The greatness of this novel lies not in its portrayal of the misery of these girls but in its description of how the heroine, Muthulakshmi, comes out of her misery with a strong will that radiates optimism. Instead of brooding and bemoaning over her pathetic condition, she accepts it, adjusts herself to it and finally achieves a rare and enviable state of contentment.  This little girl’s life is not only something to be wondered at but is also something from which we all have to learn a handful of lessons.
P.Ramgopal is a retired Associate Professor of English. He is interested in translating books, both literary and non literary, from English to Tamil and vice versa. He has translated Mr. Bava Chelladurai’s book 19 D.M. Saron from English to Tamil. Mr. Bava’s short story The Pain (vali)) translated by him has appeared in Sahitya Akademi’s Journal, Indian Litreature (May/June 2013).  Mr.Ramgopal has recently translated three books on Science from English to Tamil. These have been published as a series under the title, Tell Me… by Sapna Book House, Coimbatore . His wife, Prof. K. Chandra, has co-authored these books. He signs his blog, kattapai as liniraa and his e-mail id is proframgopal@gmail.com




செவ்வாய், 29 நவம்பர், 2016

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) 

சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன.
சுப்ரபாரதிமணியனின் கோமணம்நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன் நாவல் கோமணம்வெளியீடு · .மற்றும் படைப்பரங்கம்..
 “ தினசரி யாத்திரை-நடை பயணம் - உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாதயாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம், இப்போது தமிழ்நாட்டில் பல கோவில்களின் விசேசங்களையொட்டி   ஆன்மீக பக்தர்கள் பக்தி யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது பழனி கோவிலுக்கு தைப்பூச சமயத்தில்  நடைபெறும் பாத யாத்திரை. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்று கேரளாவிலிருந்தும் பலர் அவ்வகைப் பயணம் மேற்கொள்கிறார்கள்.வெளிநாட்டினரும் கூட.
அப்படி பழனி பாத யாத்திரையின் போது நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்களை இந்நாவல் சொல்கிறது. பனியன் தொழிலாளர்கள், பனியன் உற்பத்தி செய்யும் சிலர், பலதரப்பட்ட பெண்கள், இளைஞர்கள் என்று பலர் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்.வெவ்வேறு வகையான சடங்குகள் தொன்மக் கதைகள் , பக்தி சார்ந்த நம்பிக்கைகள், சிறுசிறு சடங்குகள் என்று நான்கு நாட்கள் பக்திப் பயணத்தை இந்நாவல் விவரிக்கிறது. என்றார் சுப்ரபாரதிமணியன்

கோவை இலக்கியச் சந்திப்பின் 73 ஆம் நிகழ்வின் முக்கிய நிகழ்வு 27 .11.2016 ஞாயிறு காலை இடம் -சப்னா புக் ஹவுஸ் வடகோவை சிந்தாமணி அருகில் கோவை கோமணம் ( பெற 94867 32652 )

வரவேற்புரை- புவியரசு அய்யா
தொகுப்பு - இளஞ்சேரல் அவர்கள்
சுப்ரபாரதி மணியன் அவர்களின் 'கோவணம்' நாவல் வெளியீடு.
கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்' நூல் அறிமுகம் - கவிஞர் அகிலா.
கண்மணி ராசா முகம்மது அவர்களின் 'நீங்கள் அறையவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை' நூல் அறிமுகம் - பிர்தௌஸ் ராஜகுமாரன்
ஏற்புரை - கண்மணி ராசா முகம்மது அவர்கள்
கோவணம் நாவல் குறித்தும் திருப்பூர் திரைப்பட விழா குறித்தும் சுப்ரபாரதி மணியன் அவர்கள்.
பாலசுப்ரமணியம் பொன்ராஜ் அவர்களின் 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' நூல் அறிமுகம் - ஸ்ரீபதி பத்பநாபா
அண்டனூர் சுரா அவர்களின் 'சிறுகதைகள்' நூல் அறிமுகம் - அம்சப்ரியா
ஏற்புரை - அண்டனூர் சுரா
நன்றியுரை - பொன் இளவேனில்

சனி, 26 நவம்பர், 2016

புத்துமண் (நாவல்)  சுப்ரபாரதிமணியன் ( உயிர்மை ,சென்னை )

 மதிப்புரை       கி.நாச்சிமுத்து



  கி.நாச்சிமுத்து  ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு,





                   சாயத்திரை பிணங்களின்முகங்கள் போன்றநாவல்கள் தண்ணீர்யுத்தம் குப்பைஉலகம் மேகவெடிப்பு நீர்ப்பாலை போன்றகட்டுரைத்தொகுப்புகள் மூலம்சுற்றுச்சூழல்பற்றியஅக்கறைகொண்டபடைப்பாளியாகமுத்திரைபதித்தஇலக்கியப்படைப்பாளியும்இதழாசிரியருமாகியசுப்பிரபாரதிமணியன்திருப்பூர்என்றஉலகமயமாதல்என்றஇராட்சதன்உருமாற்றிய   திருப்பூர்என்றஅழுக்குபுரியின்மனசாட்சியாகவலம்வருபவர் .

                        தனிமனிதவாழ்விலும்சமுகவாழ்விலும்ஊரின்வாழ்விலும்நாள்தோறும்நடந்தேறும்அவலங்களின்சாட்சியாகத்தன்னைவரித்துக்கொண்டுநிறைந்தசமுகஉணர்வோடுசமுகப்போராளியாகவிளங்கிவரும்எழுத்தாளரானசுப்ரபாரதிமணியனுடையஇலக்கியப்பணிகால்நூற்றாண்டிற்குமேற்பட்டது.அவருடையகைத்துணைபோன்றுஅவர்கொண்டுவரும்கனவுஇதழ்தமிழ்ச்சிற்றிதழ்இலக்கியவரலாற்றில்தனித்துப்பேசப்படக்கூடியது.ஒருதனிமனிதன்இயக்கம்போலஅதைப்பொருளாதாரஇலாபநட்டம்பார்க்காமல்நடத்திவருகிறசாகசம்நம்மைவியப்படையவைக்கிறது.

            அவருடையபடைப்பில்அண்மையில்வெளிவந்ததறிநாடாவும்புத்துமண்ணும்குறிப்பிடத்தக்கவை.

            புத்துமண்மணியன்என்றசமுகஆர்வலர்போராளியைமையமாகக்கொண்டுபின்னப்பட்டுள்ளது.இதில்தொழிலாளர்சுரண்டல்,சுற்றுச்சூழல்சுரண்டல்,சாதியஆதிக்கவெறியின்அட்டகாசம்,வறண்டுபோனமனிதாபிமானம்முதலியவற்றின்வெளிப்பாடுகளைஇலக்கியமாகப்பார்க்கலாம்.இதில்கதையைப்பிசிருபிசிராகச்சொல்லியிருக்கிறார்.இதுஇன்றையசமுதாயஆர்வலருடையஉடைபட்டவாழ்வின்பிரதிபலிப்புபோலஇருக்கிறது.இன்றையபோராளிஅரசின்அடக்குமுறைஆதிக்கசக்திகளின்வெறியாட்டம்இவற்றிற்குஇடையேதன்உடலையும்உயிரையும்பணயம்வைத்துத்தான்போராட்டத்தைமுன்னெடுத்துச்செல்லமுடியும்என்பதைமறைமுகமாகச்சொல்கிறது.இதுஒருவகையில்பாதிஆசிரியரின்வாழ்வனுபவத்திலிருந்துஉருவானவைஎன்பதைப்படிப்பவர்எவரும்எளிதில்புரிந்துகொள்ளமுடியும்.

                        இடதுசாரிச்சிந்தனை,நாத்திகப்பகுத்தறிவு,சமுகசமத்துவஉணர்வுஇவையேஇன்றையநல்லஅறிவுவாதியின்அடையாளம்.இந்தஅடையாளத்துடன்கதையின்தலைவனைப்படைத்திருப்பதுமிகவும்நுட்பமானது.அப்படிவாழும்போதுதன்பகுத்தறிவுடன்ஒத்துப்போகஇயலாதபெண்குலத்தின்நெருக்கடியைத்தன்மகள்தான்காட்டியபகுத்தறிவுவழியில்நடைபோடமுடியாமல்சமகாலவாழ்வின்நெருக்கடிகளால்அலைப்புறுவதைப்படைப்பதன்மூலம்மிகஅழகாகக்காட்டியிருப்பதுசுப்பிரபாரதிமணியன்படைப்பின்வெற்றிஎனலாம்.

            மாதாகோயிலைஎரிப்பதுதலித்துகளின்சமத்துவப்போராட்டத்தைகொலைமூலம்பழிதீர்த்துக்கொள்கிறஆதிக்கசக்திகளின்அறுவறுக்கத்தக்கசெயல்கள்இந்தநாவலில்வெளிப்படையாகச்செய்திபோலச்சொல்லிநம்மனங்களில்புயலைக்கிளப்புகிறார்.சுற்றுச்சூழலைநச்சாக்கும்பணப்பேய்களின்ஈவிரக்கமற்றஅறிவீனமானசெயல்,சுமங்கலித்திட்டம்என்றபெயரில்ஏழைகளைச்சுரண்டும்கொத்தடிமைஈனம்,இரசாயனக்கழிவுமூலம்ஆறுமுதலியவற்றைநஞ்சாக்கும்தன்னலவெறி,நைஜீரியாபோன்றுவெளிநாட்டுமக்களால்ஏற்படும்விபரீதங்கள்மேலாளராகத்திருப்பூர்வந்தசிங்களவன்திமிர்ப்பேச்சுஆராய்ச்சிக்குவழிகாட்டும்ஆசிரியர்களின்கொழுப்புத்தனமானபேயாட்டம்என்றுதிருப்பூர்தன்பணக்காரப்பகட்டின்இன்னொருகோரமுகத்தைக்காட்டும்போதுபோதுமடாஇந்தமுன்னேற்றம்,இப்படியும்ஈட்டவேண்டுமாஇந்தசெல்வத்தைஎன்றேஓலமிடத்தோன்றுகிறது.

கதைசிலஇடங்களில்படர்க்கைவருணனையாகவும்சிலஇடங்களில்மணியனின்மனைவிசிவரஞ்சனிமகள்தேனம்மைஆய்வுமாணவிஜுலியாஎன்றபாத்திரத்தன்மைக்கூற்றுகளாகவும்அமைகின்றது.சிலஇடங்களில்சுற்றுச்சூழல்ஆர்வலர்ஜீவானந்தம்அவர்கள்கடிதமும்கதையைநகர்த்துகிறது.இன்னும்வீடும்உடலும்கூடப்பேசுகின்றன.உயில்சாசனம்குறுஞ்செய்திகள்உள்ளுர்க்குற்றச்செய்திகள்என்றுகதைக்குக்கிடைப்பவைஎல்லாம்உரமாகின்றன.இதுதமிழ்நாவல்எழுத்தில்புதுமையாகஉள்ளது.

மொத்தத்தில்கதைசொல்லும்போதுஒருகோட்டுச்சித்திரம்போலத்தான்பாத்திரங்கள்துலங்குகின்றன.இன்னும்கொஞ்சம்வண்ணம்தீட்டியிருக்கலாமோஎன்றுதோன்றுகிறது.இருப்பினும்நம்மைஉறக்கத்தைக்கெடுக்கிறபகுதிகள்நாவல்வாசகரிடம்ஏற்படுத்திவிடுகிறதுஎன்பதுஇந்நாவலின்வெற்றிஎன்றுசொல்லலாம்.

நாவலில்ஜோடனைகள்இல்லை.இயல்பாகவரும்உவமைகள்(போர்வைஅவர்எடுத்தவாக்கில்சிதைந்துவல்லுறவுசெய்யப்பட்டபெண்ணைப்போலக்கிடந்ததுபக் 1,பொங்கிவரும்பால்சட்டெனப்பாத்திரத்தின்மேல்பகுதியில்நுரையெனநழுவிப்போவதுபோல்சட்டைஉரிந்துகிடந்தது. பக் 10,சிதைந்துபோன முட்டைபோலஉடம்புகலகலத்துவிட்டது பக்.80)வருணனைகள்(13)துணுக்குச்செய்திகள்(கோபத்தைநெருப்பாகஇளைஞன்சாதுவுக்குஉணர்த்துவதுபக்.22),பொருத்தமானஅடைகள் (தீண்டாமைக்குஉதவும்பிளாஸ்டிக்கோப்பைகள்பக். 60புளிமரங்களின்அணிவகுப்பு பக்98)போன்றவைநாவல்பொருளின்ஆடம்பரமற்றயதார்த்ததிற்குஇணங்கஅமைகின்றன.அத்தியாயத்தலைப்புகளில்அமையும்பழங்குடிமக்களின்குரல்களில்சொல்லப்பட்டிருக்கும்மேற்கோள்கள்இந்தநாவலுக்குஇணையானஒருகதையைகோட்டோவியமாகச்சொல்வதுபோலஉள்ளது.

சுற்றுச்சூழல்ஆர்வலராகஇருப்பவர்சமுகப்போராளியாகவும்இடதுசாரிக்கொள்கையாளராகவும்நாத்திகப்பகுத்தறிவுவாதியாகவும்விடுதலைச்சிந்தனையாளராகவும்மட்டுமேஇருக்கமுடியும்என்றஉண்மையைஇந்நாவல்உணர்த்துகிறது.

அளவில்சிறியதாகஇருந்தாலும்இந்நாவல்எழுப்பும்காரம்நம்மைவேகச்செய்கிறது.இதைத்தந்தசுப்ரபாரதிமணியனுக்குநம்தலைமுறைகளின்வணக்கம்.

இந்தஇடத்தில்சுற்றுச்சூழல்பற்றியசிலமாற்றுச்சிந்தனைகளைவெளியிடுவதுபொருத்தம்எனநினைக்கிறேன். சுற்றுச்சூழல்மாசூட்டுகின்றவற்றில்தொழிற்சாலைஆலைக்கழிவுமுக்கியஇடம்பெறுகிறதுஎன்பதில்ஐயமில்லை.முன்னேற்றம்வளர்ச்சிஎன்பதற்குநாம்கொடுக்கிறவிலையோபெரிது.அதைவிடமனிதனைப்போன்றநாசகாரக்கும்பல்வேறுயாரும்இல்லை.மக்கள்தொகைகட்டுக்கடங்காமல்போனால்இந்தஉலகம்தாங்காது .சுற்றுச்சூழல்தாங்காது.முதலில்இதைநாம்கட்டுப்படுத்தவேண்டும்.இதில்இன்னும்தீவிரம்வேண்டும்

அடுத்ததுநலக்கேடுஇன்றிக்குப்பைகொட்டாதுசுற்றுப்புறத்தின்தூய்மையைக்கெடுக்காதுமக்களைவாழப்பழக்கவேண்டும்.ஆற்றிற்குப்போதல்குளத்திற்குப்போதல்கொல்லைக்குப்போதல்வெளிக்குப்போதல்என்றசொற்றொடர்கள்தமிழர்கள்சுற்றுப்புறச்சூழல்உணர்வோசுகாதாரஉணர்வோஇன்றிஅழுக்கோடுவாழ்ந்தபண்பாட்டினர்எனபதைக்காட்டுகிறது.சங்கஇலக்கியத்தில்காட்டுவழிநடந்தவர்கள்காட்டில்சாப்பாட்டுப்பொதிகளைஅப்படியேஇன்றைக்குபிளாஸ்டிக்பைகளைப்போடுவதுபோலப்போட்டுச்சென்றார்கள்என்பதைஇலக்கியம்காட்டுகிறது.அப்படிப்போட்டசோற்றுப்பொட்டலப்பொதிகள்காற்றில்பறந்துஒலிஎழுப்பும்போதுதன்பெண்மான்குரல்எனக்கருதிஆண்மான்விளிபயிற்றியதாம்.

உறுகண்மழவர்உருள்கீண்டிட்ட
ஆறுசெல்மாக்கள்சோறுபொதிவெண்குடை
கனைவிசைக்கடுவளிஎடுத்தலின், துணைசெத்து
வெருள்ஏறுபயிரும்ஆங்கண்,
கருமுகமுசுவின்கானத்தானே.(அகம் 121 .12 -16)

பட்டினப்பாலையில்அட்டில்சாலைசோற்றுக்கழிவுநீரைத்தெருவில்ஆறுபோல்விட்டுஅதுஏறுபொருதுசேறாகிப்தேரோடிப்புழுதிகிளம்பிநீறாடியகளிறுகள்போலக்கட்டடங்கள்மாசடைந்தனவாம்.

புகழ்நிலைஇயமொழிவளர,
வறநிலைஇயவகனட்டிற்,
சோறுவாக்கியகொழுங்கஞ்சி,
யாறுபோலப்பரந்தொழுகி,
யேறுபொரச்சேறாகித்,
தேரோடத்துகள்கெழுமி,
நீராடியகளிறுபோல,
வேறுபட்டவினையோவத்து,
வெண்கோயின்மாசூட்டும் (பட்டினப்பாலை 42-50)
இதைப்புலவன்செழுமையின்அடையாளமாகக்காட்டுகிறான்.நாமோதமிழர்கள்இரண்டாயிரம்ஆண்டுகளாகச்சுற்றுப்புறத்தைப்பேணியஇலட்சணத்தைக்காட்டுகின்றனஇந்தஇலக்கியப்பதிவுகள்பாருங்கள்என்கிறோம்.
                        அதுபோலவேசுற்றுலாஎன்பதைநாம்ஊக்குவிக்கவேண்டியதில்லை.அப்படியேஇருந்தாலும்சுற்றுச்சூழலுக்குஊறுவிளைவிக்கஇயலாதகடுமையானகட்டுப்பாடுகளைவிதித்துநடைமுறைப்படுத்தலாம்.சுற்றுச்சூழல்என்பதுவணிகர்கள்பயனடைகிறதுறை.அவர்கள்அந்தநோக்கில்தான்அதைஊக்குவிப்பார்கள்.ஆனால்அதுகடுமையானசுற்றுச்சூழல்விதிக்குட்பட்டேநடைபெறவேண்டும்.சமயச்சுற்றுலாவுக்கும்இதுபொருந்தும்.தீர்த்தயாத்திரைஎன்றபெயரில்ஆண்டாண்டாகநாம்செய்தசுற்றுப்புறநாசம்சொல்லிமுடியாது.அதற்கும்நாம்கட்டுப்பாடுகள்கொண்டுவரவேண்டும்.கங்கையைக்காவிரியைபொருநையைநொய்யலைக்கூவத்தைச்சீரழிக்கும்நாம்சுற்றுச்சூழல்நாசகாரிகளின்தலைமக்கள்அல்லவா?
            அதுபோன்றேஅணைக்கட்டுகள்கட்டிஆற்றின்இயற்கைநீர்ஓழுக்கைநிறுத்திநாகைகீழ்த்தஞ்சைபோன்றஆற்றின்கடைமடைப்பகுதிகளைப்பாலைவனமாக்குதல்ஆறுகளைஇணைத்தல்என்றமுன்னேற்றப்பாசாங்கல்இயற்கையைச்சிதைத்தல்போன்றவற்றையும்கட்டுக்குள்கொண்டுவரவேண்டும். அளவுக்குமீறியசெயற்கைஉரங்கள்பூச்சிகொல்லிகள்பயன்படுத்துதல்மரபுமாற்றப்பயிர்கள்இன்னும்மீதேன்வாயுத்திட்டம்நியூட்டிரினோதிட்டம்அணுக்கழிவைக்கொட்டும்திட்டம்ஆகியவற்றையும்பார்க்கவேண்டும். இதைஅறிவியல்கண்கொண்டுபார்த்துத்தீர்வுகள்காணுவதுபோலவேகழிவறைகட்டிப்பயன்படுத்தும்தனிமனிதசுகாதாரம்சுற்றுச்சூழல்தூய்மைநேர்த்திபோன்றவற்றிலும்அறிவியல்அணுகுமுறைகளைப்பயன்படுதவேண்டும்.முன்னேற்றத்தைத்தடுக்காமல்சுற்றுச்சூழலையும்பாதுகாக்கும்முறைகளைஇன்றையஅறிவியல்கட்டாயம்தரும்.சந்திதெருப்பெருக்கும்சாத்திரம்கற்போம்என்றபாரதியின்குரலுக்குச்செவிமடுப்போம்.சுப்ரபாரதிமணியன்தட்டிஎழுப்பும்மனச்சாட்சியின்குரலுக்கும்செவிகொடுப்போம்.          


            கி.நாச்சிமுத்து


ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு, மத்திய ப