சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
Dinamalar Tiruppur
0
வளைகுடா, அரபு எமிரேட் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் கேரள மக்கள், சினிமாக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்'' என்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.சமீபத்தில், கேரளா, திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று திரும்பிய சுப்ரபாரதி மணியன், நம்முடன் பகிர்ந்தவை:
கேரளா, ஒரு கலாசார நகரம் என்பது, அனைவரும் அறிந்தது. ஆண்டுமுழுக்க அங்கு ஏதாவது ஒரு கலாசார நிகழ்வு நடந்துக் கொண்டே இருக்கும். சின்ன மாநிலமாக இருந்தாலும், கலை, கலாசாரம், சினிமா சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்தும், சிறந்த, 150 சினிமாக்கள் திரையிடப்பட்டன. இதில், மலையாள சினிமாக்கள், 10 இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில், 'அங்கம்மாள்' என்ற ஒரே ஒரு சினிமா மட்டுமே இடம் பெற்றிருந்தது. அந்த சினிமாவின் இயக்குனர், கேமரா மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலையாளிகள்; நடிகர்கள் மட்டுமே தமிழர்கள்.
கேரளாவை பொறுத்தவரை, திரைப்பட விழாக்களை, 10 நாள் நடத்துகின்றனர். ஒரு பாரம்பரிய விழாவாக, கொண்டாட்ட மனநிலையில் நடத்துகின்றனர். கோவாவில் மத்திய அரசின் சார்பில் நடந்த திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்து, 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில், 13 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; பெரும்பாலும் இளைஞர்களை அதிகளவில் பார்க்க முடிந்தது.
திரைப்பட விழாவில் கலாசார நடனம், சினிமா தொடர்புடைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கேரளாவை சேர்ந்த பலர் வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சின்ன மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்கின்றனர். கேரளாவில், ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்காகவே, சின்ன பட்ஜெட் படங்கள் அதிகளவில் தயாரிக்கின்றனர். ஆனால், தமிழில், 95 சினிமாக்கள், தியேட்டரில் திரையிடப்பட்ட பிறகே, ஓ.டி.டி.,க்கு வருகிறது.தமிழக சினிமா துறையிலும், சமீபகாலமாக, மாறுபட்ட கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வருகின்றன. இலக்கிய திருவிழா, கரிசல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துவது, வரவேற்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.