சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 30 டிசம்பர், 2008

"உயிர் எழுத்து" ஓராண்டு பயணம்




சுப்ரபாரதிமணியன்
---------------------



படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் "உயிர் எழுத்து" கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.


வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை "இன்லெண்ட் லெட்டர்" சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் 'இன்லெண்ட் லெட்டர்' வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் 'இன்லெண்ட் லெட்டர்' கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் "இன்லெண்ட் லெட்டரில்" எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.

அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து "போஸ்ட் கார்ட்" கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் "ஹைதராபாத் பக்கம்" என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் " உயிர் எழுத்து " கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.


இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.


உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.



( - சென்னையில் நடைபெற்ற "உயிர் எழுத்து" முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)


விழாவில் 8 புதிய நூல்கள்

வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,

கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,

நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

" உயிர் எழுத்து " திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1

ஓடும்நதி

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் " " படைப்புலகம்

கீரனூர் ஜாகிர்ராஜா




தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

======================================================================

இலக்கியப் போட்டி 2008

அறிவிப்பு
---------


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்

இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008

=======================================================

வென்றோர்கள்

===========

சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:


நவீனம்

சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)
******************************

சிறுகதை

மதுரா (போதி மரக்காடு)


கவிதை நூல்

நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)

மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)


நாடக நூல்

பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)

கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)


கட்டுரை நூல்

சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)

தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)


சிறப்புப் பரிசுகள்:

--------------------

கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)

முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)

முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)


தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)

எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)


அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)

வாய்மை நாதன் (நாலி)


எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)

இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)



இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி

பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

======================================================================

செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001

9442138856

======================================================================

=issundarakannan7@gmail.com

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:





சுப்ரபாரதிமணியனின் " ஓடும்நதி " படைப்புலகம்


கீரனூர் ஜாகிர்ராஜா
-----------------



தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11