சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 2 பிப்ரவரி, 2023

“ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் :: பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று ” இலங்கையில் போர்க்காலங்களில் பதுங்கு குழிகள் ஈழத் தமிழர்களில் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. .ஈழத் தமிழர்களின் உயிர் காத்த வீடு பதுங்கு குழி என்று சொல்லலாம் . பதுங்கு குழிக்கு போவதற்கு முன்னால் எல்லோரையும் வா வா என்று அழைக்கபடியே ஓடுவோம் .அங்கு ,நாய் ,பூனை, ஆடு மாடு ,கோழிகளும் பதுங்கிக் கொள்ளும் ,மாடுகள் உள்ளே போக முடியாத நிலையில் பதுங்கு குழி வாசலில் தலைகளை மட்டும் உள்ளே விட்டவாறு கத்திக் கொண்டே இருக்கும் வீதிகள் , பாடசாலைகள் , சந்தைகள், மருத்துவமனைகள்,கோவில்கள் என்று பதுங்கு குழிகள் இல்லாத இடமே இருக்கவில்லை .விமான சத்தம் அருகில் கேட்டதும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொண்டு கட்டிப்பிடித்துக் கொள்வோம் அந்தப் பதுங்கு குழிக்குள் .. விமானம் போய்விட்டது என்று சொன்னதன் பிறகு பிடிகளை தளர்த்திக் கொள்வோம் ..அதன் பின்னர்தான் யார் யாரை கட்டிப்பிடித்தார் என்று தெரியும் ..அந்த விமானத்தின் சத்தத்தில் அதிர்வில் ஆண் பெண் வயது வேறுபாடு இன்றி அவர்களுக்கு தெரியாமல் மலம் சலம் கழித்து இருப்பார்கள். ..விமானம் போனபின்பு நாற்றம் வருது , நாற்றம் வருது என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் எங்கிருந்து வருது என்று யாருக்கும் தெரியாது ,வெளியே வந்ததன் பின்தான் தெரியும், அவரவர் உடம்பிலிருந்து தான் நாற்றம் என்று . இந்த சூழலிலும் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட பின்னர் எதை தள்ளி போட முடியும் என்ற சூழலில் போர் தாக்குதல்களும் மக்களுக்கு பழகிப் போகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு வேலைகளை செய்ய மக்களும் பழகிக் கொண்டார்கள் . இந்த பதுங்கு குழு வாழ்க்கையோடு தான் நாங்கள் எல்லாம் கல்வி கற்க வேண்டி இருந்தது .கல்வி மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் அவசியம்” கூட்டத்திற்கு மக்கள் மாமன்ற தலைவர் சி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் ..உடுமலை சார்ந்த தோழன் ராசா ,இயல் .கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் .இன்சூரன்ஸ் குமார் அவர்கள் கனவு விருதை உடுமலை இளைய பாரதி அவர்களுக்கு வழங்கினார் . . முன்னதாக நாதன் ரகுநாதன் , ஆனந்தன் , தங்கவேல் ஆகியோர் பங்கு பெற்ற வழக்காடு மன்றம் சிறப்பாக நடைபெற்றது “ எல்லா காலங்களிலும் கல்வி மனிதர்களுக்கு அவசியம் என்பதை காலம் உணர்த்திக் கொண்டே இருக் கிறது “ என்று உடுமலை சார்ந்த பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பேசினார் . திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகமும் , உடுமலை இளைய பாரதி அவர்களின் 15 ஆவது குறும்பட வெளியிடும், அவருக்கு கனவு விருது அளிப்பதும் நடைபெற்றது அப்போது கொடுப்பினை எழுதிய ” உயிர் காற்று ”, உடுமலை இளைய பாரதி எழுதிய கவிதைகள் , சுப்ரபாதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த ” பெயிண்ட் பிரஷ் 000 “ ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது.. சுப்ரபாதிமணியனின் நூலை தூரியை சின்னராஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து ஓவியருடைய உலகங்கள் பற்றி விரிவாக பேசினார் ..உடுமலை தோழர் ராசா அவர்களின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி பேசினார் இந்த விழாவில் உடுமலை பெண் எழுத்தாளர் கொடுப்பனை அவர்கள் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் ..அவர் இலங்கையில் இருந்த போது போர் சூழல் மோசமாக இருந்ததை அவர் உரையில் குறிப்பிட்டார் ::
திருப்பூர் சக்தி விருது 2023 இவ்வாண்டிற்கான பெண் எழுத்தாளர்கள் நூல்களுக்கான “சக்தி விருது”க்கு 2019ம் ஆண்டு முதல் வெளிவந்த எல்லாவகை நூல்களின் இரண்டு பிரதிகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கக் கடைசி தேதி : பிப்ரவரி 28 , 2023 முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம் சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் 641 604 ( 95008 17499 / 99940 79600 ) (வரவேற்கும்..திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் / திருப்பூர் மக்கள் மாமன்றம் / கனவு )
சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : முன்னுரை என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது என்றால் அது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான் என்பது ஞாபகம் வருகிறது. அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த சமயம் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் சிங்கப்பூரின் தமிழ் முரசு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர்கள் என்னிடம் ஒரு நேர்காணலை கண்டு அதை அந்த பத்திரிகையின் ஞாயிறு மலரில் வெளியிட்டு இருந்தார். அப்போது அது கவனம் பெற்ற ஒரு நேர்காணலாக அமைந்தது. அதற்கு பின்னால் பல நண்பர்கள், பல இதழ்கள் நேர்காணல்கள் செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் முறையாக நான் தொகுக்கவில்லை. இப்போது இந்த தொகுப்பு முயற்சியில் பொன் குமார் அவர்கள் ஈடுபட்டு ஒத்துழைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நண்பர்களுடன் உரையாடல் தன்மையில் இந்த பேட்டிகள் அமைந்திருக்கின்றன இந்த பதில்கள் எல்லாம் முறையாக எழுத்து வடிவத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் தீவிரமான சிந்தனைகளுக்கு வடிவமைத்து கொண்டு சென்றிருக்கும். ஆனால் அப்போது எதேச்சையாக மனதில் வரும் சிந்தனைகளை பேட்டியின் மூலம் சொன்னதால் பல சமயங்களில் அதெல்லாம் திருப்திகரமாக அமையவில்லை. ஆனாலும் என் சிந்தனைகள் அந்தந்த நேரத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விஷயமாக இந்த நேர்காணல்கள் இருந்திருக்கின்றன. அப்படித்தான் பாலு சத்யா அவர்கள் அமிருதா இதழுகாக எடுத்த நேர்காணலும் வர்ண புகைப்படங்களும் என் மனதில் அப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில எளிமையான நேர்காணல்கள் இந்த தொகுப்பில் இருக்கின்றன. என் படைப்புலகம் பற்றியும், என் தனிப்பட்ட இலக்கிய முயற்சிகள் பற்றியும் சில விவரங்களை தெரிந்து கொள்ள இந்த நேர்காணல்கள் பயன்படலாம், சுப்ரபாதிமணியன், திருப்பூர் பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது.பயணம் மனிதர்களைப் பிணைத்திருக்கிறது. கடலும் மலையும் நாடும் கண்டமும் பிரித்தாலும் உலகம் என்பது ஒன்றுதான். அத்தகைய உலகத்தில் வாழும் மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. பயணங்கள் வாழ்வில் வியப்பையும், காதலையும் உருவாக்கும். தேவைகளுக்காக மட்டும் பயணம் செய்யாது மன நிம்மதிக்காக இயற்கையை ரசிக்கவும் பயணங்களை மேற்கொண்டு வாழ்வில் இன்புறுவோமாக! 0
திசையொன்று நாவல் பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயறகை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்க உதவும் தருணங்களும் கொண்டது இந்நாவல். Uyirmei Chennai rs 150
சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : தொகுப்பில் சிங்கப்பூர் நகரம் மெல்ல இருட்ட துவங்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒழுங்கமைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உணவு விடுதிக்கு வந்து விடுமாறு திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார். நண்பர் ரெ. பாண்டியன் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணில். ரெ.பாண்டியன் அவர்கள் என்னுடன் வர முடியாத சூழலில் இருந்தார். அவர் அந்த உணவு விடுதிக்கு செல்வதற்கான பேருந்து அடையாளத்தையும் வழியையும் சொல்லித் தந்தார் .வழியை விசாரித்து பக்கத்தில் இருந்த ஒரு மலர் கடையை பார்த்தபடி அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நா. முத்துசாமி அவர்களின் கூத்து பட்டறை நாடகம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி அவர்களும் அரவிந்தன் அவர்களும் வந்திருந்தார்கள் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நாடகவியலாளர் இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழ் முரசுக்கு பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். உணவு விடுதியில் வெளியில் போடப்பட்டிருந்த மேசைகளை பார்த்துக் கொண்டு அவற்றின் ஒழுங்கமைப்பை ரசித்துக்கொண்டு அந்த இடத்தின் உள்ளே நுழைகிறேன். உயரமான சுவர்கள், அதன் கூரை எல்லாவற்றையும் உட்கொண்டது போல் அமைதியாக இருந்தது. பச்சை நிற சட்டையும் நீல நிற பேண்டும் சிவப்பு நிற டையும் அணிந்த அந்த உணவு விடுதியின் பணியாளர்கள் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்து அங்கிருந்து நாற்காலி ஒன்றில் உட்கார ஆசைப்பட்டேன். அந்த நாற்காலி நல்ல அழுத்தமான மர வர்ணத்தை பூச்சாகக் கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று சின்ன சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. கனிமொழி அவர்கள் உள்பகுதியில் இருந்து வந்து என்னை வரவேற்றார். அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட போது மிகவும் சவுரியமாக உணர்ந்து அடுத்த பக்கம் இருக்கும் சாலையைப் பார்க்க சில வாகனங்கள் கண்களில் பட்டன. சிறு பொம்மை போல பல கார்கள் விரைந்து போனது. பல வாகனங்களின் இரைச்சலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது அதனால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று இன்னொரு பகுதிக்கு சென்ற போது சாலை நடமாட்டம் எனச் செல்லும் வாகனங்கள் இல்லாமல் சவுரியமாக இருந்தது. தமிழ் முரசு பத்திரிக்கை நிறுவனம் பற்றியும் தமிழ் முரசு பத்திரிக்கை சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்க்கையில் எப்படி முக்கியமான ஒரு பத்திரிக்கையாக, செய்தி ஊடகமாக இருக்கிறது என்பதையும் அவர் சொன்னார். அந்த பத்திரிகை பணி தனக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்று சொன்னார். வழங்கப்பட்ட தேநீருக்கு சர்க்கரை கட்டிகளை எடுத்து போட்டுக் கொண்டேன். ஆனால் இனிப்பு சுவை போதவில்லை அதே அளவு தான் கனிமொழி அவர்களும் சக்கரைக்கட்டிகளை போட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த இனிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும். நான் மீண்டும் ஒரு சக்கரைக்கட்டியைப் போட்டுக் கொண்டேன். அவர் அதை பார்த்து தேநீர் சுவையாக இருக்கிறது அல்லவா என்றார். நான் இப்போது இன்னொரு சக்கரைக்கட்டையை போட்டுக் கொண்டதால் சுவை வந்து விட்டதால் ஆம் என்றேன். ( முன்பொரு முறை திருப்பூர் காலச்சுவடு நிகழ்ச்சியொன்றுக்கு வந்த போது இரவு உணவை கட்சிக்காரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் உணவை வெகு அளவோடு எடுத்துக் கொண்டதையும் தேநீருக்காக சர்க்கரையை வெகுக் குறைவாகப் பயன்படுத்தியதும் கூட நினைவில் இருந்தது ) எங்கள் நேர்காணல் தொடங்கியது
சுப்ரபாரதி மணியன் நேர்காணல் கேள்விகள் மிலோ ராட் பாவிச் அவர்களுக்கானது... ( செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு இப்படி பதில் சொல்லி இருக்கிறேன் ) * உங்களுடைய செயல்கள், எதிர்வினைகள் எல்லாம் ஒரு குழந்தையினுடையது போலவே இருந்தன என்பதை கவனித்திருக்கிறேன் மிக முக்கியமான எழுத்தாளர் நீங்கள் என்ற உணர்வையே அவை தரவில்லை உண்மைதான் நான் பெரும்பாலும் சாமானிய மனிதனாகவே இருக்கவும், வழி காட்டவும் விரும்புகிறேன் அப்படித்தான் நான் குழந்தைகளுடன் கூட பழகுகிறேன். எங்கள் வீதியில் உள்ள குழந்தைகளை என் வீட்டிற்கு வாரம் ஒரு முறை அழைத்து கதை சொல்லவும், ,ஓவியங்கள் வரையவும், சிற்றுண்டி சாப்பிடவும் என்று இப்பொழுது பொழுதைக் கழிப்பது உட்பட பலவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை மறப்பதற்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதற்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் அப்படியே தான் நானும் இருக்க விரும்புகிறேன். * நீங்கள் ஏற்கனவே எழுதிய புத்தகங்கள் நீங்கள் மேலும் தொடர்ந்து எழுவதை தடுக்கின்றனவா அப்படி என்றும் ஒன்றும் இல்லை. ஆனால் பழைய புத்தகத்திலிருந்து மீண்டு நான் வெளிவர விரும்புகிறேன் திருப்பூரை பற்றி எழுதுகிற போது என் பழைய புத்தகங்கள் எப்படியோ இடைசஞ்சல்கள் ஆகி விடுகின்றன அவற்றை தான் தவிர்க்கவே விரும்புகிறேன் அவை என்னை தொடர்ந்து வருகின்றன. எழுதத் தடுப்பதில்லை ஆனால் வேறு களத்திற்கு போக தூண்டுகிறது * ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமும் முடிவும் இருக்கும்போது செவ்வியில் வழக்கில் உள்ள தொடக்கம் மற்றும் முடிவு பற்றிய கருத்தாக்கத்தை ஒடுக்குகிறோமோ, கைவிடுகிறோமா எல்லா படைப்புக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமோ முடிவோ இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும் அது எப்படி முடிய வேண்டும் என்பதற்கான சுதந்திரங்கள் அந்த படைப்பு மையத்தில் தான் இருக்கின்றது *ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரே முடிவு தான் சாத்தியம் என நம்புகிறீர்களா? அப்படி எதுவும் இல்லை தொடங்கும் போது நான் வேறொரு மனிதன். முடிக்கும் போது வேறொரு மனிதனாக இருக்கிறபோது எப்படி ஒரே முடிவு சாதகமானதாக இருக்கும் . * இருப்பினும் சொல்கிறோம் பிறப்பிலிருந்து தொடங்கும் எதுவும் மரணத்தில் முடிகிறது என்று. ஆமாம் எல்லாம் பிறப்பிலிருந்து தொடங்கி மரணத்தில் முடிகிறதா ஒரு வழிப்பாதை தான் ஆனால் அதையே நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மரணம் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தான் நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. • நம் வாழ்வின் கசப்பான நிதர்சனங்களை ஏற்று போராடும் ஆயுதமாக பேண்டஸியை கூறலாமா பேண்டஸி என்பது ஒருவகை தப்பித்தல் தான். அப்படியும் கூறிக் கொள்ளலாம் * உங்கள் பார்வையில் ஒருவர் உன்னதத்தை அடைய எந்த உண்மையை நோக்கி பயணப்பட வேண்டும் எதார்த்தமாக இருப்பது ,மனசாட்சியுடன் இருப்பது, உணர்வுடன் இருப்பது ஆகியவை உண்மையை நோக்கிய பயணத்தில் சரியாக இருக்கும். * பயம் நம்மை படைப்பாற்றலை நோக்கி இட்டு செல்கிறதா பதட்டம் இட்டு செல்கிறது என்று சொல்லலாம். பதட்டம் பயத்தை கொண்டு வந்து விடுகிறது. அதனால் பயமோ பதட்டமோ நிலை கொள்ளாமையும் படைப்பாற்றலை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்லலாம் * உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பயம் ஏதாவது இருக்கிறதா நம்மை பற்றி ஏதாவது அவதூறுகள் வந்து விடுமோ. அப்படி நம்முடைய செயலும் சொல்லோ அமைந்து விடக்கூடாது என்ற பயம் தான் • நீங்கள் வியந்த முதல் எழுத்தாளரை உங்களுக்கு நினைவு இருக்கிறதா • நான் பார்த்து உயர்ந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவருடைய உருவம், மேடையில் அவர் பேசுகிற தோரணை இதுதான் அவரை நினைக்க வைத்தது * உங்கள் எழுத்து நடைக்கு இந்த வாய்வழி பாரம்பரியம் எந்த அளவுக்கு முக்கியமாக அமைந்தது பெரும்பாலும் வாய்வழி பாரம்பரியம் மற்றும் சொல்லாடல்களில் பாரம்பரியம் என்பது என்னை பொறுத்தவரையில் பலவீனமாக தான் இருக்கிறது. என் கொங்கு பகுதி பேச்சையே நான் ஒழுங்காக உருவாக்கிக் கொண்டு பதிவு செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன் * உங்களைத் தூங்க வைக்கும் அளவிற்கு எழுதும் எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா இருக்கிறார்கள். வாக்கியங்கள் புரியாமல் அவற்றின் ஒருங்கிணைப்பு ஒரு அர்த்தத்திற்கு கொண்டு செல்லாமல் எழுதும் நவீன எழுத்தாளர்களை வாசிக்க முயன்று அப்படித்தான் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். *ஒரு எழுத்து பிரதி எப்போது ஒரு வாசகனை அலுப்படையச் செய்கிறது வாசகன் அந்த எழுத்தாளருடைய பிரதி சார்ந்த அனுபவங்களை எப்போது தானும் கண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும் அல்லது அந்த தளத்தில் அவன் சென்று இயங்குவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் அப்படி இருக்கிற போது பிரதி வாசகனை அலுப்படைய வைக்காது. * அழகை பார்த்து எப்போதாவது அலுப்படைந்திருக்கிறீர்களா? இல்லை. அழகு என்பது புத்துணர்ச்சி ஊட்டுவது. அது ரசித்து மறந்து போவதல்ல. திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருப்பது * நீங்கள் எழுதும் போது வாசகனைப் பற்றி நினைப்பதுண்டா நிச்சயமாக இல்லை. என் எழுத்தில் என் அனுபவங்களும் உரையும் மொழியும் தான் முதன்மை படுகிறது. யாரை நோக்கி எழுதப்படுகிறது என்பதல்ல. * ஒருவர் எந்த காரியம் செய்தாலும் அதில் அவரை சிறப்பானவராக எது ஆக்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்களா? தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது மனசாட்சியுடன் இருப்பது உணர்வு ரீதியாக இயங்குவது இதுதான் சிறப்பாக்கும் என்று நினைக்கிறேன் • உங்கள் தேசத்தை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பல நாடுகளை சுற்றி பார்த்தவன் என்ற முறையில் நம் நாடும் மிக உயர்ந்த நாடுதான் இயற்கை வளமும் அழவும் கொண்டது தான். ஆனால ஊழலும் அதிகாரமும் பல்வேறு தளங்களில் செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது இதெல்லாம் இல்லாமல் நியாயமான வாழ்க்கையோடு கூடிய அணுகு முறையில் நம் நாட்டைப் போல அழகான நாடு வேறு இல்லை என்று தான் நினைக்கிறேன் • ஒரு பெரும் எழுத்தாளர் பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் • எழுத்தாளன் சூழலால் உருவாக்கப்படுகிறாள் அவன் பிறப்பதாக இருந்தால் அவன் யாரிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று தெரியவில்லை * ஒருவர் உங்களுடைய நாவல்களை படிக்கும்போது அவை ஒழுங்கமைக்கப்பட்ட மனம் கொண்ட ஒரு கணிதவியலாளரின் படைப்புகள் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றதே இருக்கலாம். காரணம் நான் அடிப்படையில் ஒரு கணிதவியல் மாணவன். முதுகலை கணிதம் படித்தவன். ஆகவே அப்படி ஒரு தோற்றம் வந்துவிடலாம். * பொதுவாக ஒரு எழுத்தாளர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் அவருடைய கடமை என்ன. உலகின் நிலவும் குழப்பங்களுக்கு ஒரு ஒழுங்கமைப்பை எந்த வகையிலும் அவர் பங்களிக்கிறாரா எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் மனசாட்சியாக எழுதுகிறார். அதன் மூலமாக நல்ல சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். சமூகத்தில் இருக்கிற ஒழுங்கமைப்பு என்பதில் அவர் அக்கறை கொண்டு செயல்படுகிறார். அந்த வகையில் தான் அவரை எழுத்தின் பயன்பாடு இருக்கிறது. * ஒரு நாவலை எழுதி முடிக்கு முன்பே அந்த நாவலைத் தொடர வேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா அப்படி பல சமயங்களில் அலுப்பு ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதை முடிப்பதில் தான் சவால் இருக்கிறது என்று தொடர் வேண்டி இருக்கிறது * கனவுகள் காண இயலாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா அப்படி என்றால் வாழ்க்கை இல்லாமல் தான் போகும். கனவு என்பது ஓரிரு விஷயங்கள் பற்றிய ஆசையாக இருக்கிறது ஆனால் நிஜமான கனவாக தூக்கத்தில் வந்து போகவே இந்த அர்த்தத்தில் இருப்பதில்லை • கனவு காணுதல் வாழ்க்கைக்கு அவசியமா தேவை • தேக்கத்திலிருந்து விடுபட கனவுகள் காண்பது தேவையாக இருக்கிறது அல்லது கனவில் இருந்து ஓடுவது தேவையாக இருக்கிறது. கனவில் இருந்து இன்னொரு கனவுக்கு ஓடுவது. பிறகு நிஜத்திற்கும். • நமது இருப்பின் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா • நம் இருப்பின் காரணம் இயற்கையாகவே நாம் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்பதால் தான். அந்த இருப்பை நியாயப்படுத்த நாம் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நாம் எதுவும் செய்கிறோம். நான் கொஞ்சம் எழுதுகிறேன். * உங்களுடைய பார்வையில் ஒரு மாபெரும் எழுத்து என்பது ஒரு மாபெரும் ஆன்மாவால் அல்லது ஒரு மாபெரும் மனத்தால் மட்டுமே எழுதப்படக்கூடியதா அப்படி மாபெரும் ஆன்மா, மாபெரும் மனிதன் என்று எதுவுமே இல்லை. நியாயத்துடன் எதார்த்தத்துடன் அவன் பதிவு விட போது அது மாபெரும் எழுத்தாக அமைந்து விடுகிறது * உங்கள் கூற்றின்படி ஒரு திறமையான எழுத்தாளரின் படைப்பை படித்து புரிந்து கொள்ள ஒரு வாசகன் திறமை மிக்கவனாக இருக்க வேண்டுமா ஆமாம் திறமை என்பது வாசிப்பு திறமை தான். வேறு மொழி சார்ந்த அல்லது அறிவு சார்ந்த திறமை என்று எதுவும் தேவையில்லை . * திறமை என்பதை நீங்கள் வரையறுத்துக் கூற முடியுமா. அதன் அளவுகோல் என்னவென்று நான் சொன்னது போல வாசிப்பும் தொடர்ந்து வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருப்பதும் அறிவு சார்ந்த தேடல்களும் என்று இந்த அளவுகோல்களை கொள்ளலாம் * எடுத்துருவில் வாசிப்போரா அல்லது செவி வழி கேட்க விரும்புவோரா யாரை நோக்கி உங்கள் படைப்புகளை செலுத்துகிறீர்கள் எழுத்தாளர் என்ற வகையில் என் எழுத்துக்களை வாசிப்பவரை நான் விரும்புகிறேன். ஆனால் செவி வழியாக தரும்போது அதை இன்னும் சரியான பதிவாக மனதில் இருந்து கொள்ளும். * ஒரு பெரும் கிரேக்க எழுத்தாளர் ஒருமுறை சொன்னார் நான் எனது கதையின் முடிவை கண்டறிய வேண்டும் அது நடந்து விட்டால் மற்றவை தாமாகவே ஒழுங்கமைந்து விடும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை நான் கதையை முடிவு கண்டடையாமல் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். சூழலும் அறிவும் நீள்கிற சம்பவங்களும் சுற்றி இருப்பவையும் என்னை முடிவை கண்டறிய வைக்கின்றன * நீங்கள் நாவல் எழுதும்போது முந்தைய நாள் நிறுத்தி இடத்திலிருந்து தான் துவங்குவீர்களா. ஆமாம் அப்படித்தான் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வேறு ஒரு இடத்தில இருந்து ஆரம்பித்து கொண்டு போய் எழுதுவது அதை வேறொரு வடிவ நாவலாக மாற்றலாம் ஆனால் அதற்கான வாசல்கள் எனக்கு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன் * ஒரு புத்தகம் சுவாசிக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அது எழுதுபவன் அனுபவிப்போடு செய்திருக்கலாம். ஆனால் வாசகன் அதை எப்படியோ படித்து முடிகிறபோது ஒரு புத்தகம் இயல்பாக இருக்கிறது உயிரோடு இருக்கிறது சுவாசிக்கிறது என்று சொல்லலாம். * திறமையற்ற வாசகர்கள் படிக்கும் போது ஒரு மாபெரும் எழுத்தாளர் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதா இருக்கிறது. திறமையற்ற வாசகர் அதை புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது அவன் வாசிப்பதில் அர்த்தமில்லை * இந்த புதிய தலைமுறை எந்த வகையில் வேறுபட்டது விதவிதமான எழுத்துக்களைத் தருகிறார்கள். வெவ்வேறு வகையான துறை சார்ந்த எழுத்துக்கள் வருகின்றன மலைக்க வைக்கும், பிரமிக்க வைக்கும் அனுபவங்களை எல்லாம் கொண்டு எழுதி இருக்கிறார்கள். * தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் வளர்ச்சியும் புத்தகங்களின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளதா அப்படித்தான் சொல்லலாம் ஆனால் புத்தகங்கள் வீழ்ச்சி அடையவில்லை என்று திரும்பத் திரும்ப நாம் உரத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் நாம் புத்தகங்கள் மத்தியில் இருக்கிறோம். அவற்றின் மத்தியில் இருந்து கொண்டு அவற்றை நாம் பழிக்க முடியாது. * உங்களுக்கு தீர்வு கிடைத்ததா என் படைப்பு தீர்வை நோக்கி நகர்கிறது. தீர்வை சமூகம் வழங்குகிறது அல்லது அரசியல்வாதி வழங்குகிறார் அரசியல்வாதி வழங்க நெடுங்காலம் தான் எடுத்துக் கொள்கிறது . * தற்போது உருமாற்றம் அடைந்து வரும் கலை வடிவங்கள் எவை கலை வடிவங்கள் தன்னைத்தானே மீறுவதும் உருமாற்றம் அடைவதும் சாதாரணம்தான்.. இலக்கியம் முதல் திரைப்படம் வரைக்கும் எல்லாம் வடிவளவில் உருமாற்றங்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. தொடர்ந்து அவை தங்களுடைய வடிவங்களை மாற்றிக் கொள்ளும் ( உன்னதம் ஜூலை 2017 இல் வெளிவந்த செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் சிறப்பதழில் அவருக்கு தொடுக்கப்பட்ட கேள்விகளை வைத்துக்கொண்டு நான் பதில் கொடுத்திருக்கிறேன்)
முதல் பேட்டி / சுப்ரபாரதி மணியன் . குழந்தைத் தொழில் எதிர்ப்பு சம்பந்தமாக ஒரு உலகப்பயணத்தை நோபல் பரிசு பெற்ற டெல்லி வாழ் சமூகப்போராளி கைலாஷ் சத்யார்த்தி அவர்களும், திண்டுக்கல் பால்பஸ்கரும் ஏற்பாடு செய்த போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அதற்காய் வெகு சிரமப்பட்டு நான் பணிபுரிந்து வந்தத் தொலைத்தொடர்புத்துறையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் அப்பயணம் அமையாததால் சிங்கப்பூர் சென்றேன். என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான். அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சிச் சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். ‘ கனிமொழி கருணாநிதி அவர்களின் நேர்காணலின் சூழல் விவரிக்கப்பட்டிருப்பது விசேசமாக அமைந்தது. செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்லி இருக்கிறேன் ஒரு பகுதியில் பேட்டி தொகுப்புரை: பொன். குமார் அன்புள்ளங்களுக்கு வணக்கம்! எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இலக்கிய உலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர் . கனவு என்னும் சிற்றிதழை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பவர். தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு படைப்புகள் மூலம் குரல் எழுப்பி வருபவர். சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதிலும் பெருமுனைப்பு கொண்டவர். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர். சுப்ரபாரதி மணியன் தன் இலக்கியப் பயண காலத்தில் பல்வேறு நேர்காணல்களைச் சந்தித்துள்ளார். பேட்டிகள் தந்துள்ளார். அவரின் நேர்காணல்கள்/ பேட்டிகள் இங்கு முதன்முறையாக ' புலி வாலை பிடித்த கதைகள்' என்னும் தலைப்பில் தொகுக்கப்படுகின்றன. எழுத்தாளரின் முதல் நேர்காணலை எடுத்தவர் கனிமொழி கருணாநிதி. சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழுக்கான நேர்காணல் இது. சிறியதாயிருந்தாலும் சிறப்பான நேர்காணல். கனவு இதழ் குறித்தே மூன்று கேள்விகள். கனவு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, கனவு எந்தளவு வெற்றிப் பெற்றது, கனவை எந்த திசையில் கொண்டு செல்லப்படுகிறது என கனவு இதழ் குறித்த பதில்களில் கனவு இதழ் மீதான அவரின் ஆர்வமும் இலட்சியமும் வெளிப்படுகிறது. கனவு இதழுக்காக தொடர்ந்து சந்திக்கும் பொருளாதார இழப்பை ஒருவித மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒரு தனி மனிதராக கனவு இதழைத் தொடர்ந்து நடத்தி வருவது அவரின் இலட்சியப் பிடிப்பைக் காட்டுகிறது. ' எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா?' என்றொரு கேள்வியை எழுப்பியுள்ளது புதுப்புனல். இது சுப்ரபாரதி மணியனுக்கான கேள்வி மட்டுமல்ல. எல்லா எழுத்தாளருக்குமானது. இதற்கான பதிலை மிக விரிவாகக் கூறியுள்ளார். " ஒற்றைக் குரலாகத்தான் எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின அவதானிப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல் தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன் தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க முடியாதவர்களின் குரலாக அவன் வெளிப்படுகிறான் என்பது இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது " என பதிலளித்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமையை உணர்த்தியுள்ளார். இது அனைத்து எழுத்தாளர்களின் குரலாக ஒலித்துள்ளது. கோடுகள் இதழிலான நேர்காணல் மிக நீளமானது. மற்றும் விரிவானது. ஓர் எழுத்தாளர் என்பதையும், இலக்கியம் என்பதையும் தாண்டி கேட்கப்பட்ட ஒரு கேள்வி" சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது எதற்காக?". இட ஒதுக்கீட்டை ஓர் அம்சம் என்று குறிப்பிட்டவர் இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பதற்கான ஒரு அளவுகோல் தான் என சரியான பதில் தந்து சமூக நீதி குறித்து தன் பார்வையை தீர்க்கமாக தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நாவல்களில் பெரும்பாலும் திருப்பூர் களமாக இருக்கும். திருப்பூர் மக்கள் பாத்திங்களாக இருப்பர். இது குறித்து ஒரு கேள்வியை பேசும் புதிய சக்தி எஸ். செந்தில்குமார் எழுப்பியதற்கு சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதும் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதுமே காரணம் என்கிறார். படைப்புகள் மூலம் பேசப்பட்டதாலே ஓரளவு வெற்றியும் கிட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்கள் கொள்கையில் கடை பிடித்தல், மனித உரிமை பிரச்சனைகளாக மாறியது, நலத்திட்டங்கள் உருவானவை ஆகியவை படைப்பின் மூலம் கிடைத்த வெற்றி என்கிறார். இனிய உதயம் இதழுக்காக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனை நேர்கண்டவர் பொன். குமார். ' ஒரு படைப்பாளியின் இலட்சியம் விருது பெறுவதா? மக்களிடம் கொண்டு படைப்புகளை சேர்ப்பதா?' என்னும் கேள்விக்கு ' வாசகனிடம் படைப்புகள் கொண்டு சேர்ப்பதில் தான் படைப்பாளியின் லட்சியம் இருக்க வேண்டும்' என்று ஒரு தெளிவான பதிலைக் கூறியுள்ளார். ஒரு படைப்பாளியின் இலட்சியம் என்ன என்பதை, எதுவாக இருக்க வேண்டும் என்பதை படைப்பாளர்களுக்கு உணர்த்தியுள்ளார். இலக்கியம் சோறு போடுமா என்றொரு கேள்வி எல்லோரிடமும் உண்டு. இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலருக்கே இலக்கியம் சோறு போடுகிறது. இதை கருத்தில் கொண்டு அம்ருதா இதழுக்காக நேர்கண்ட பாலு சத்யா தொடுத்த வினாவிற்கு " வணிக எழுத்தை மட்டும் நம்பி வாழலாம். பரபரப்பான மலின ரசனையுடன் செய்யப்படும் விசயங்கள் விற்பனையாகும். தீவிர எழுத்து சோறு போடாது. புலி வாலை பிடித்த கதைதான். நிராகரிப்பின் வலியும் தீவிரமாய் எழுதுகிறவனை மனநோயாளிக்கும்" என தீவிரமாய் எழுதும் எழுத்தாளனின் நிலையைத் தெரிவித்துள்ளார். வணிக எழுத்தே சோறு போடும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளார். தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் புலி வாலை பிடித்தவர்கள் என்று தானும் புலி வாலை பிடித்த ஓர் எழுத்தாளரே என்கிறார். ஓர் எழுத்தாளனின் மன அழுத்தங்களை, மன உணர்வுகளை, மன வலிகளை, கடந்து வந்த கடும்பாதைகளை வெளிப்படுத்த நேர்காணல்கள் ஒரு நல்ல வாய்ப்பு. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தான் எதிர்கொண்ட கேள்விகளை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தன்னையும் தன் வாழ்வையும் தன் படைப்புகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். ஓர் எழுத்தாளன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த முடியாததை, எழுத்தில் சொல்ல முடியாததை நேர்காணல்கள் கொண்டு வருகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் படைப்புலகம் தாண்டி அவரின் வாழ்வுலகத்தைக் காட்டுகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் நேர்காணல்கள் என்பவை படைப்புக்கு சமம் என்கிறார். இத்தொகுப்பிற்கு மிக பொருத்தமாக ” புலி வாலை பிடித்த கதைகள்” என தலைப்பிட்டுள்ளார். ஒரு நிராகரிப்பின் வலி தெரிகிறது. அனைத்து நேர்காணல்களையும் வாசிக்கும் போது எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வாழ்வைக் கூறும் ஒரு படைப்பாகவே உள்ளன. விருதுகளுக்காக படைக்காமல் சமூகத்திற்காக படைத்திடும் சுப்ரபாரதி மணியனுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். அ. மார்க்ஸ் நேர்காணல்கள், த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், ஆ. சிவசுப்ரமணியன் நேர்காணல்கள், அ. முத்துலிங்கம் நேர்காணல்கள், ச. தமிழ்ச் செல்வன் நேர்காணல்கள், அ. ராமசாமி நேர்காணல்கள், மாலன் நேர்காணல்கள், எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், நாஞ்சில் நாடன் நேர்காணல்கள், சாரு நிவேதா நேர்காணல்கள், அப்பணசாமி நேர்காணல்கள், பாவண்ணன் நேர்காணல்கள், ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள், ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள், அழகிய பெரியவன் நேர்காணல்கள், சுரேஷ் குமார் இந்திர ஜித் நேர்காணல்கள், ஷோபா சக்தி நேர்காணல்கள், சேரன் நேர்காணல்கள், புகழேந்தி நேர்காணல்கள் என வாழும் படைப்பாளிகளின் நேர்காணல்கள் பல வந்துள்ளன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் புலி வாலை பிடித்த கதைகள் என்னும் இந்நேர்காணல்கள் தொகுப்பு மிக தாமதமாகவே வருகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நேர்காணல்களை தொகுத்து ஒரு தொகுப்பாக்கி வழங்க ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார். பெருமையாக இருக்கிறது. அதற்காக அவருக்கு என் நன்றி. பதிப்பகத்திற்கும் வாசித்து விமர்சிக்கும் தங்களுக்கும் நன்றி. என்றும் அன்புடன் பொன். குமார் 21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742 Kaavya books rs 120
Tamil hindu article பாலியல் சமத்துவம் / இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்.. சுப்ரபாரதிமணியன் நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக பெண்மணி ஒருவர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் பொருட்களை வாங்கிக் குவித்த பின்னால் பணம் செலுத்துவதற்காக அவர் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து, நிறைய ரூபாய் நோட்டுகளை சேர்த்து பதட்டமாக இருந்தார். பணம் குறைவாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவரை அணுகி எதற்கு இப்படி ரூபாய் நோட்டுகளை தேடி அலுத்துப் போகிறீர்கள். ஜி பேயில் அனுப்ப வேண்டியது தானே என்றேன். ” எனக்கு ஜி பே கணக்கு இல்லை. என் ஏடிஎம் கார்டு கூட என் கணவரிடம் தான் நெடுங்காலமாக உள்ளது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ மின்மையின் அடிப்படையில் இருக்கின்றன. ” . நீ ஒழுங்கா இருந்தா எதுக்கு இதெல்லாம் நடக்குது. நீ இப்படி எல்லாம் டிரஸ் போடணுமா, எதுக்கு ராத்திரில கண்ட நேரத்தில் வெளியே போவது “ என்பது தான் இது சார்ந்து வைக்கப்படுகிற புகாரின் மீது எதிர் வினையாக இருக்கிறது. எது நடந்தாலும் அது பற்றிய பதிவுகள் காவல்துறையிடமோ அல்லது அரசு சார்ந்த நிறுவன புகார் பட்டியலில் 75 சதவீதம் அவை பதிவு செய்யப்படுவதில்லை. குடும்பத்தின் கட்டுமானம், குடும்பத்தின் அமைதி கருதி அவை பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யும் புகார்கள் தாண்டி பின்னரும் வேறு செயல்பாடுகள் இல்லாமல் முடங்கி போயிருக்கிறார்கள். பெண்கள் கணவரிடமிருந்து ஏடிஎம் பெற இயலுவதில்லை பல சமயம்.ஒரு அரசு அலுவலர் பெண் கூடத் தயங்குகிறார். தன் மீறல் சார்ந்து. கணவர் அடித்தால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவர் அடிப்பது கூட நல்லதுக்கு தான் என்று நம்பும் பெண்கள் ஏகதேசம் இன்றும் இருக்கிறார்கள். வீட்டிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளியிலும் பெண்களுக்கான அவமதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே சூப்பர் மார்க்கெட்டில் அன்று பார்த்த சக ஊழியர் பெண் நோக்கி இன்னொரு ஆண் சைகை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவரை கொச்சைப்படுத்துகிற விஷயம் என்பது தான் எனக்கு புரிந்தது.. இவ்வாறு மனரீதியாக துன்புறுத்தல்களும், சைகை மூலமாக சொல்லுவதும், பிறரைப் பற்றி தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதும், கேலியாக புனைப்பெயரை வைத்துக்கொண்டு அழைப்பதும்., தேவையில்லாத செய்திகள் சொல்வதும், வசவுகள் மூலமாக வேலை செய்யாமல் முடக்குவதும் பெண்கள் மத்தியிலும் ஆண்கள் செய்யக்கூடிய அதிகார தொனி தான் தென்படுகிறது. . வேலைக்கு போகாதே, கெட்டுப் போகாதே என்று சொல்கிற பழைய தலைமுறையும் என்றும் இருக்கிறது, வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன மதவாதிப் பெரியோர்கள் கூட இருக்கிறார்கள். நாங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோம். அதோடு சரி என்னுடைய பங்களிப்பு குடும்பத்தில் முடிந்து விடுகிறது என்கிறார்கள். ஏன் இவையெல்லாம் புகார் செய்யப்படுவதில்லை என்ற கேள்விக்கு ” படிச்சிருந்தா தெரியும். தைரியம் வரும் அதனால எங்க குழந்தைகளை படிக்க வைக்கிறோம் “ என்று சொல்கிற பெண்கள் இருக்கிறார்கள். . கமலஹாசன் தேவர்மகன் திரைக்காட்சியில் சொல்வது போல இதெல்லாம் வேண்டாம்பா. புள்ள குட்டிகளை படிக்க வையுங்கள் என்பதைப் போலத்தான் கடைசியாக அந்த பெண்மணிகள் சொல்லிப் போகிறார்கள். ஆனால் வெளியே போகாதே என்று கட்டுப்படுத்திய காலங்கள் போய், வெளியே போய் பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்று சந்தித்து விட்டு வா என்று சொல்லும் புதிய தலைமுறை பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.. இவருடைய உரிமைகளும் பேச்சும் 33% பஞ்சாயத்து வரைக்கும் தான் வந்திருக்கிறது. 50 சதவீதம் என்று சொன்னதெல்லாம் இன்னும் சட்டமாக கூட முறைப்படுத்தப்படவில்லை. சட்டப்படுத்துகிற இடங்களில் அதற்காக வைத்திருக்கிற குழுக்களின் சம்பிரதாயமாகவே நடக்கிறது, பாலியல் புகாரோ பாலியல் சமத்துவம் பற்றிப் பேசுகிற பெரும்பான்மையானக் குழுக்கள் கூட சம்பிரதாயமாக நடந்து கொள்கின்றன. ஒரு குழுவின் அறிக்கை தருவதற்காக தயாரிக்கப்படுகிற விஷயங்களில் கையெழுத்து போடுகிறவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்,” வா. ஒரு காபி சாப்பிடு, கையெழுத்து போட்டு போ ”என்ற ரீதியில் தான் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன, மற்றபடி அறிக்கை தயார் தான். சமீபத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று பாலியல் பாதிப்புக்கு உள்ளானது. அந்த குழந்தையின் பதற்றத்தை அம்மா தெரிந்து கொண்டார். புகார் அளித்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த குழந்தை ..ஆனால் மருத்துவர், காவல்துறை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் எல்லாமே அந்த குழந்தையின் கற்பனை அது என்று சொல்லி நிராகரித்தார்கள். எந்த நிலையிலும் இதை ஒரு வழக்காக மாற்றுவது என்பதிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தையின் கற்பனை அது என்று எல்லோரும் வாதித்து அந்த குழந்தையின் அம்மாவை நிராகரித்தார்கள். அந்த பெண்மணி காயப்பட்டு போய் ஒதுங்கிக் கொண்டார். திருமணங்களில் பெண்களும் மெட்டி போடுகிறார்கள் ஆண்களும் மெட்டி போடுகிறார்கள். ஆனால் பெண்கள் போடும் மெட்டி காலம் முழுக்க காலில் இருக்க வேண்டி இருக்கிறது. ஆண்கள் போடும் மெட்டி சடங்குகளுக்காக இருக்கிறது. திருமணச் சடங்குகள் முடிந்து அவை கழட்டி எறியப்படும். அப்படித்தான் பாலின சமத்துவம் சார்ந்த கேள்விகள் கூட அலட்சியப்படுத்தப்படும். நம் தமிழ் கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிற போது பெண்களை நோக்கி சகி சகி என்ற வார்த்தைகளை சொல்வார்கள். சகியே என்று அழைப்பார்கள். இப்போது அரசாங்கம் சகி என்ற பெயரில் தான் பாலின சமத்துவம் சார்ந்த உதவும் எண் 181 என்று நிறுவி இருக்கிறது.. இன்னொருவர் இப்படித்தான் ஒரு சகி என்பது பற்றி ஒரு கவிதை எழுதி காண்பித்தார். குரூரமாக இருந்தது “ கூட்டுப் பாலியல் புகார் தர காவல் நிலைக்குச் சென்றாள் அந்த கன்னி. காவல் நிலையத்தில் இருப்பவர்கள் அவள் மேல் தொடுத்தது கூட்டு பாலியல் தாக்குதல்” SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் : சுப்ரபாரதிமணியன் இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளை கொண்டது. இந்த எண்ணங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படைப்பாளிகளின் படைப்புகளை ஆங்கிலம் மூலம் மொழிபெயர்க்க போது நான் உணர்ந்தேன் சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலான குழுவில் பணியாற்றினேன். அப்போது சாகித்ய அகாடமிக்காக இரண்டு நூல்களை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிராந்திய செயலாளராக இருந்த இளங்கோவன் அவர்கள் என்னை மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளச் சொன்னார். ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு படைப்பாளிகளுக்கு மொழிபெயர்ப்புக்காக படைப்புகளை ஒதுக்கீடு செய்யும் பணியின் போது என்னையும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடச் சொன்னார் அப்படி நான் சாகித்ய அகாடமிற்காக எடுத்துக் கொள்ள முதல் நூல் ஒடிய எழுத்தாளரான ஜே பி தாஸ் என்பவரின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ .ஜே பிதாஸ் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லியில் அப்போது இருந்து கொண்டிருந்தார். அவரின் ஒடியக் கதைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் ஒடிய கலாச்சார அம்சங்களும், தொன்மங்களும், மக்களின் நம்பிக்கைகளும் அவை மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி தனித்து விளங்குவதை கண்டேன். எனவே அந்தக் கதைகளை மொழி பெயர்க்கிற போது அந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. கடவுள் நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ மக்கள் சார்ந்த தொன்மக்கதைகளோ என பல பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக அவை இருந்தால் கூட பல சமயங்களில் அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மை இருப்பதை அந்த ஒடிய கதைகளை மொழிபெயர்க்கும் போது அறிந்து கொண்டேன். அதற்கு பின்னால் நான் மொழி பெயர்த்தது ” பூமியின் பாடல்கள்” என்ற சாகித்ய அகடமி வெளியிட்ட நூல், வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு . வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களுடைய கதைகளினுடைய அம்சங்களை கவனிக்கிற போது அவை பல சமயங்களில் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போல தென்படும். மலைப்பகுதிகளும் இயற்கை வளங்களும் கொண்ட வடகிழக்கு இந்திய பகுதி சார்ந்த கதைகள் அவர்களின் பிரத்தியேக வாழ்க்கையை சொல்வதை கனிம வளங்களும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை சம்பந்தமான இடங்களும் என்று உள் வாங்கினேன். அதனோடு மக்களுடைய வாழ்க்கையையும் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடக்கூடாது என்ற அக்கறையில் அவற்றை பாதுகாக்கும் ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் போராளி குழுக்களும் அவர்களுடைய பிரிவினைகளும் ஒற்றுமையும் பல சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. பின்னால் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு நான் சென்றிருந்தபோது நான் மொழி பெயர்த்த அந்த கதைகள் சார்ந்த மனிதர்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தக் கதைகளை நான் இன்னும் ஒரு முறை திரும்ப வாசித்த போது அவற்றின் தீவிர தன்மையும் உண்மை தன்மையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பிலும் நான் மூலப்படைப்பைப் போல பல சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எழுதி முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எங்கள் திருப்பூர் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரமாக இருக்கிறது. பின்னலாடை துறை மூலமாக இந்த 50,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த துறை சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுக்க இருந்து வரும் கல்வித்துறை சார்ந்தவர்களாலும் ஜவுளித்துறை சார்ந்தவர்களாலும் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்பட்ட ஒரு நூல் நெதர்லாந்து சார்ந்த சில ஆய்வாளர்கள் நடத்திய பின்னலாடை துறை சார்ந்த ஆய்வு ” நிட்டட் டுகெதர்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை நான் ” பின்னலின் பின்னல்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தேன். சுமார் 400 பக்கம் கொண்ட அந்த ஆய்வில் திருப்பூர் சார்ந்த தொழிலார்களின் நிலைமை, பெண்களுடைய வேலை அமைப்பு, சாயப்பட்டறை தொழில் மாசுபடுத்தி இருப்பது உட்பட பல விஷயங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை நான் கண்டுகொண்டேன். அப்போதுதான் திருப்பூர் சார்ந்து இயங்கும் தன்னார்வ குழுக்கள் மற்றும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையை போராட்டங்களில் மூலம் பதிவு செய்யும் தொழிற்சங்கங்கள் இவற்றினுடைய போக்குகளும் நடவடிக்கைகளும் சரியாக அறிந்து கொள்ள முடிந்தது. விஜயவாடாவில் நடக்கும் கவிதை திருவிழாக்களில் பல ஆண்டுகள் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவற்றை முன் நின்று நடத்தியவர் திருமதி பத்மாஜா ஐயங்கார் என்பவர்.தமிழர். பாடி என்று அவரை செல்லமாக அழைப்பார்கள். அந்த பெயரில் தான் அவரும் ஆங்கிலத்தில் எழுதுவார் .அவர் விஜயவாடாவில் அந்த கவிதை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துவார். உலகம் முழுக்க இருந்து கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து 500 பக்கங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் புத்தகமாக வெளியிடுவார். அந்த புத்தகத்தில் அவரவர் மொழி சார்ந்தப் பிரதிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு பிரதிகளையும் அதே நூலில் வைத்திருப்பார்கள். பெரிய முயற்சியாக பல ஆண்டுகள் அந்த திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஓர் ஆண்டில் அப்போதைய ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு தமிழ் தெலுங்கு கவிதை உலகம் பற்றியும் இந்திய கவிதையை பற்றியும் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. பல வெளிநாட்டுக் கவிஞர்களின் அரிய உரைகளையும் கேட்டிருக்கிறேன். அந்த கவிதை திருவிழாவில் நான் ஆண்டுதோறும் ஒடிய கவிஞர் சுப்ன பெஹரா என்பவரை சந்திக்கிற வழக்கம். அப்படித்தான் ஓராண்டில் அவரின் ஒரு கவிதை தொகுப்பை பெற்றிருந்தேன். அதை ” அகதி முகாமில் ஓர் இரவு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன். அதேபோல இன்னொரு ஆண்டு அதே ஓடிய பிரதேசத்தைச் சார்ந்த சங்கரா ஜெனே என்பவருடைய ” கான்சிபூரின் நிலவு “ என்ற நூலை தமிழுக்கு மொழி பெயர்த்து இருந்தேன். ஒரு இரண்டுமே நல்ல அனுபவங்கள். அந்த விஜயவாடா கவிதைத் திருவிழா ஆகட்டும், சாகித்திய அகடாமி நிகழ்ச்சிக்காக வெவ்வேறு ஊர்களுக்கு நான் செல்கிற போதும் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் படைப்புகளுடன் உறவாடுகிற போது அவற்றில் மூழ்கி இருக்கிற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பின்னால் பன்னாட்டு கவிதைகள் 2016/ 2017 என்ற தலைப்புகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருக்கிறேன் என்னுடைய படைப்புகளில் சுமார் 20 படைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. சுற்றுச்சூழல் சார்ந்த என் படைப்புகளில் என் மூன்று நாவல்களும், 12 கட்டுரை நூல்களும் அடங்கும். ஆகவே தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த என் மனம் அது சார்ந்த பல பிரச்சனைகளைக் கொண்ட கட்டுரைகளையும் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறது. அப்படித்தான் இன்றைக்கு உலகை ஆட்டிக் கொண்டிருக்கும் உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து நான் மொழிபெயடுத்த கட்டுரைகள் ” போப் சூழலில் மற்றும் பிற கட்டுரைகள்” என்ற தலைப்பில் நான் ஒரு நூலாக கொண்டு வந்தேன் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை சென்ற போது அங்கு லாபியா அஞ்சும் என்ற ஒரு இளம் கல்லூரி மாணவி மற்றும் பெண் கவிஞரை சந்திக்க நேர்ந்தது அவருடைய ஒரு கவிதை தொகுப்பை நான் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அறையில் தங்கியிருந்த போது தினந்தோறும் ஒரு கவிதை என்ற வகையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து சார்ஜா புத்தகக் கண்காட்சி முடிகிற சமயத்தில் ஒரு தொகுப்பை முடித்து வைத்திருந்தேன். அதுதான் பின்னால் ” பேசாத.. “ என்ற தலைப்பில் திருப்பூர் கவிநிலா பதிப்பகம் ஒரு புத்தகமாக கொண்டு வந்தது. சென்றாண்டு 2021 இல் மீண்டும் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது துபாயில் தங்கி இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மெலடி என்பவர் ஒரு ஆங்கில கவிதை தொகுப்பை எனக்கு பரிசளித்தார் .அவர் ஒரு மலையாள கவிஞர் பத்திரிகையாளர். தினமும் கிடைத்த ஓய்வில் துபாய் கவிஞரின் அந்த கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தேன் “ புலம்பெயர் மணல் துகள்கள்” என்ற தலைப்பில் அந்த நூல் பின்னால் வெளிவந்தது. அந்த நூலில் இடம் பெயர்ந்து வாழும் இந்திய மக்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அவர்களுடைய உணர்வுகள் பற்றியும் கவிதைகளின் அனுபவங்களை மொழிபெயர்த்து இருந்தேன் . சாகித்ய அகாடமின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியவை. அப்போதெல்லாம் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் கவிதைகளை பெற்று உடனே மொழிபெயர்க்கிற ஒரு வேலை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். அந்த கவிதைகளை நான் “ அரசியல்வாதியும் புறாவும்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன் பல்வேறு அரசியல் கருத்துக்கள் சார்ந்த விஷயங்கள் நம் இந்திய சமூகத்தை பாதிப்பதை அந்த தொகுப்பில் நான் அடையாளம் கண்டு கொண்டேன். பெண்கள் உரிமைகள் சார்ந்தும், பாலின வேற்றுமை சார்ந்தும் பல்வேறு கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் இந்தியாவில் நடைபெற்ற அந்த வகை கருத்தரங்குகளில் மட்டுமல்லாமல் பாலின வேறுபாடு சார்ந்த இரண்டு சர்வதேச கருத்துகளில் வங்காள தேசத்தின் டாக்காவில் நடைபெற்றவையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை பல்வேறு கட்டுரைகளாக எழுதி இருந்தால் கூட நான் பெண்கள் உரிமை சார்ந்த ஒரு நூலை மொழிபெயர்க்கிற வாய்ப்பை ஒரு தன்னார்வ குழு அமைப்பாளர் திலகா அவர்கள் ஒருமுறை அளித்தார். அது சர்வதேச தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட பெண் உரிமைகள் சம்பந்தமான ஒரு நூலாகும். அந்த நூலை ” பெண்களும் தொழிற்சங்கங்களும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு இருக்கிறேன் அந்த நூலில் பாலின வேறுபாடு காரணமாக சுரண்டப்படும் பெண்களும் அவர்களுக்கான நிலையும் உலக அளவில் எப்படி இருக்கிறது வெளிநாட்டுத் துறைகளில் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்த பல எண்ணங்களின் பிரதிபலிப்பாக அந்த நூல் வெளி வந்திருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கிற வாய்ப்பின் போது அங்கு வாங்கும்பல நூல்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன் சமீபத்தில் வெளிவந்த என்னுடைய மொழிபெயர்ப்பு நூல் ” பெயிண்டிங் பிரஸ் நம்பர் 000 “. பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சு சஜித் அவர்கள் ஒரு பிரபலமான பதிப்பகத்தின் முக்கிய நிர்வாகியாக பணிபுரிகிறவர் அவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறவர். அவர் ஆங்கிலத்தில் எழுதின பல படைப்புகளை படித்து இருக்கிறேன் ஒருமுறை நானும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ப.கா. பொன்னுசாமியும் பாலக்காட்டிற்கு சென்றிருந்தோம். பாலக்காட்டில் பிரபல எழுத்தாளர் அமரர் ஓ வி விஜயன் அவர்களுடைய நினைவு இல்லத்திற்கு சென்று விட்டு அவருடைய படைப்புகள் பற்றி பல்வேறு பரிமாணங்னைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்பிய போது பாலக்காட்டில் அஞ்சு சஜித் அவர்களைச் சந்தித்தேன். அவர் கொடுத்த அந்த நாவலின் ஆங்கில பதிப்பை பாலக்காட்டில் இருந்து நான் திருப்பூர் வருவதற்குள் படித்து முடித்து விட்டேன். அதை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஓவியர் ஒருவரின் உலகத்தை பற்றி அந்த நாவல் சொன்னது. நரபலிகள் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்து இயங்குகிற ஒரு சமூகத்தில் அதை தன்னுடைய படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிற ஒரு ஓவியனுக்கு ஏற்படுகிற சிரமங்களும் அனுபவங்களும் பின்னால் அவர் காணாமல் போவதும் அவரைத் தேடி அவருடைய மகன் சென்னையில் அவர் வசித்த பகுதிகளில் சென்று அலைவதுமான அனுபவங்களை அந்த நாவல் கொண்டிருந்தது. என் மொழிபெயர்ப்பு பணியில் என் படைப்பிலக்கியத்தின் அம்சங்கள் அவற்றை மொழி பெயர்க்க எனக்கு உதவி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்குவது போலவே மொழிபெயர்ப்பையும் உருவாக்கும் தன்மையை நான் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்திய மற்றும் சர்வதேச கலாச்சார அம்சங்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு பணியாக மற்றும் ஆங்கில வழியில் அந்த மொழி சார்ந்த நுணுக்கங்களை பிரதிபலிக்கும் தன்மையை இந்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு படைப்புகளின் மொழியாக்கமும் என்னை தொடர்ந்து இந்த துறையில் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
காவ்யா சண்முகசுந்தரம் 70 --- சுப்ரபாரதிமணியன் ” 35 ஆண்டுகளாக சுப்ரபாரதிமணியன் என் நண்பராக இருக்கிறார் அவர் எந்த சமயத்திலும் என்னிடம் சண்டை போட்டது இல்லை ” என்று காவியா சண்முகசுந்தரம் அவர்கள் பல சமயங்களில் சிலரிடம் அறிமுகப்படுத்தும் போதும் பேச்சின் போதும் சொல்வார் . அவரிடம் சிறிது சிறிதாய் முரண்பட்டாலும் நடைமுறை எதார்த்தத்தில் அவருடன் சண்டை போடுவதற்கான எந்த சந்தர்ப்பங்களும் எனக்கு அமையவில்லை .காரணம் அவர் தொடர்ந்து இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தன் ஓய்வு வாழ்க்கையில் கூட ஓய்வின்றி பதிப்பகத் துறையில் இயங்கி புதியவர்களையும் கண்டுகொள்ளாதவர்களையும் அடையாளப்படுத்தி முன்னிலைப்படுத்துவதில் உள்ள அவரின் பெரும் உழைப்பு என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவது. அவர் என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ மாறுதடம் “ என்ற தொகுப்பை வெளியிட்டார். அதற்கு முன் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் அவர்கள் அப்பா என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் .அதில் சுஜாதா எழுதிய ஒரு நீண்ட முன்னுரை பலரின் கவனித்துக் உரியதாக இருந்தது. பாவண்ணன் அவர்கள் மூலம் அறிமுகமான காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் மாறுதடம் நூலை அழகாக பதித்திருந்தார் .பெண்களுக்கு நீல நிற சேலைகள் வெகுவாகப் படிக்கும் .அந்த அட்டை முழுக்க அழுத்தமான நீல நிறத்தில் இருந்தது .அதில் ஒரு தடம் எங்கோ சென்று முடிவது போல் ஓவியம் இருந்தது .அதன் பின்னால் சுமார் இருபது நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார் அத்தனையும் அவரின் உழைப்பால் முடிந்திருக்கிறது. அதுவும் என் சிறுகதைகளில் மொத்த தொகுப்பாக இரண்டு பாகங்களை கொண்டு வந்திருப்பது ஒரு முக்கிய சாதனை. முதல் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தது .அவற்றை சந்தைப்படுத்துவதிலும் அவர் ஆர்வம் எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி பெரும் தொகுப்புகளை கொண்டு வருவதில் அவருக்கு ஆர்வம் சமீபமாய் வந்திருக்கிறது. எனது சிறுகதைகளை அப்படித்தான் கொண்டுவரலாம் என்ற ஆலோசனையை சொன்னார். 10 ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு பெரிய தொகுப்பை இரண்டாம் பாகமா கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருடைய நினைவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது இவ்வாண்டில் .. என் சாயத்திரை நாவலின் முதல் பதிப்பை அவர்தான் வெளியிட்டார் அது தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான அந்த ஆண்டின் பரிசை பெற்றது. அதை தவிர ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற மொழிகளிலும் வெளிவந்தது .அவர் வெளியிட்ட பல நூல்களை நான் பின்னால் வேறு பதிப்பகங்கள் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறேன் .அப்போதெல்லாம் அவரை சம்மதம் குறித்து அணுகி ஒப்புதல் பெற வேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை .நான் இயல்பாக வேறு பதிப்பகத்திற்கு தந்துவிடுவேன். அதை அவர் அறிந்திருந்தால் கூட அதுபற்றி எதிர்மறையாக எதுவும் சொன்னதில்லை . அந்த வகையில் பல நூல்கள் முதல் பதிப்பாக அவரின் பதிப்பகம் மூலம் வெளிவந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. புனைவு இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக நாவலில் எண்பதுகளிலேயே சில அழுத்தமான தடங்களை அவர் பதித்திருக்கிறார் அவரின் நாவல்கள் குடும்பச்சூழல் மற்றும் இந்திய குடும்ப உறவுகளின் பொதுவான அமைப்பாக அமைந்திருக்கின்றன .அவை பெருமளவில் கல்லூரி பாடத் திட்டங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. திருப்பூரில் நடைபெற்ற ஒரு ஆப்பிரிக்க திரைப்பட விழாவிற்கு துவக்க விழாவிற்கு வந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் காவியா சண்முகசுந்தரத்தின் நாவல்களை சிலாகித்து என்னிடம் சொல்லி அவற்றை படமாக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வாழும் காலத்தில் அதெல்லாம் நடந்ததில்லை .அப்போது அந்த நாவலின் காட்சி படிமங்கள் எப்படி திரைப்படங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு அவர் எழுதியிருக்கிறார் என்பதை பாலுமகேந்திரா அவர்கள் என்னிடம் விளக்கியபோது நான் மகிழ்ச்சியை விட அந்த காலகட்டத்தில் பொறாமையே பட்டிருக்கிறேன். இந்த வார்த்தைகளை அவரின் நாவல்கள் குறித்து பல உதவி இயக்குனர்கள் என்னிடம் கதை விவாதங்களின் போது விவரித்திருக்கிறார்கள் . அவருடனானச் சந்திப்புகள் நல்ல உரையாடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. அவரைச் சந்தித்து திரும்பும் போது எப்போதும் வருத்தத் தொனி தென்பட்டதில்லை. சற்றே மகிழ்வும் ஆறுதலும் தொற்றிக் கொள்வது பெரிய பாக்யம்தான் சமீப ஆண்டுகளில் அவர் நாட்டுப்புறவியல் இலக்கியங்களில் பெரும் அக்கறை கொண்டு பெரியத் தொகுப்புகளை எல்லாம் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சார்ந்த நாட்டுப்புறவியல் சார்ந்த விஷயங்களை ஆய்ந்து கட்டுரைகளாகவும் பாடல்களை சேகரிக்கும் பணியின் நிறைவாகவும் வெளியிட்டிருக்கிறார் .நாட்டுப்புறவியல் சார்ந்து பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை குண்டு குண்டான புத்தகங்களாக கூட கொண்டுவந்திருக்கிறார். அவரின் வயதை தாண்டிய, மீறிய உழைப்பு . அவரின் இன்னொரு முகம் நாட்டுப்புறவியலில் அம்சங்களை எழுத்து பதிவுகளாக கொண்டுவருவதில் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார் .நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும் , நல்ல படைப்பாளிகள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பது அவரின் விருப்பமான பிரார்த்தனையாகவும் இருந்திருக்கிறது . அவரின் பிரார்த்தனை அவரது நாட்டுப்புற தெய்வங்களிடம் -ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாக இருப்பதை உள்ளூர உணர்ந்திருகிறேன் ” . நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் அவர்கள் மவுனம் காத்தால், அவர்களை இழித்தும் பழித்தும், அவர்களது மவுனம் குத்தலாக்கப் பேசப்படுகிறதே தவிர வேறு எதனைப் பற்றியும் எவரும் வாய்திறப்பதில்லை. காதைக்கிழிக்கும் இந்தக் காட்டுக் கூச்சலின் நடுவே, படைப்பாளிகள் அவர்கள் மதித்துப் போற்றுகின்ற சிந்தனை மற்றும் வெளிப்பாடுகளையும் தனியொரு பாதையாக முன்னெடுத்துச்செல்ல இனிமேலும் இயலுமென நம்பமுடியவில்லை. ஓட்டமாக ஓடும் வரலாற்றிலிருந்தும் விலகி நிற்கும் சாத்தியமென்பது இதுவரையிலும் அதிகமோ, குறைவோ இயன்றேயிருக்கிறது. நிகழ்வுகளோடு உடன்பாடில்லாத எவரானாலும் பொதுவாக மவுனமாகிவிடுகின்றனர்; அல்லது வேறு எதையேனும் பேசுகின்றனர். இன்று, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கிறது: மவுனம் என்பதற்கு `எதிர்ப்பு` என்னும் புதிய பொருள் சூட்டப்பட்டுள்ளது. விலகியிருக்கும் அல்லது முடிவெடுத்த தருணமே அதனை ஒரு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதென்று கருதி, தண்டிக்கப்படுவதோ அல்லது பாராட்டப்படுவதோ நிகழ்வதுடன் கலைஞர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் அதில் ஈடுபட்டவர்களாக மாறிவிடுகின்றனர். மேலும், இதில் ஈடுபடுதல்` (involved) என்பது வெறுமனே `செயல்பட்டவர்` (committed) என்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானதெனத் தெரிகிறது. உண்மையில் இது கலைஞனின் வெறும் தன்னார்வச் செயல்பாடு என்பதல்ல, மாறாக கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டிய இராணுவப் பணி போன்றது. இன்று எல்லாக் கலைஞர்களும் காலத்தின் கப்பலில் ஏறிவிட்டுள்ளனர். அவர்களது கப்பல் அழுகிய மீன்களால் துர்நாற்றமடைந்திருப்பதை உணர்ந்தாலும், உண்மையில் அங்கே தேவைக்கு அதிகமான கொடுங்கோல் மேற்பார்வையாளர்கள் இருப்பதை, எல்லாவற்றிலும் மோசமாக, அவர்கள் நிகழ்போக்குக்குத் தடையாக இருப்பதைத் தெரிந்தாலும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு ஒதுங்கிக்கிடக்கவேண்டியிருக்கிறது. நாம் கடலுக்குள் திசை தடுமாறித் தத்தளிக்கும் கப்பல்களாக அலைகிறோம். கலைஞர்கள், மற்ற எல்லோரையும் போலவே இறந்துவிடாமலிருக்க முடிந்தால், துடுப்புகளை ஏந்தவேண்டும் – அதாவது, உயிரோடு வாழ்வதையும், படைப்பதையும் தொடரவேண்டும். “ என்ற ஆல்பெர் காம்யுவின் கட்டுரையின் சில விசயங்கள் அவ்வப்போது அவரைப்பற்றி நினைக்கிற போது மனதில் வரும் . நான் பெரும்பாலும் அவருடன் கலந்து கொள்ளும் புத்தக வெளியீடுகளில் அவர் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் அந்த படைப்புகளை பற்றி அறிமுகம் செய்பவராக இருந்திருக்கிறார். அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆழமான அறிவையும் சிந்தனைகளையும் தெரிந்து கொள்ள எந்த சந்தர்ப்பங்களும் அமைந்ததில்லை .அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த நூல்கள் அதற்கு ஏதுவாக இருந்தாலும் அவருடைய குரலிலும் உரையிலும் அந்த அம்சங்களை கேட்டு உணர முடியாதபடி சூழல்கள் அமைந்துவிட்டன .ஆனால் அந்த துறையில் அவர் பதிப்பித்த நூல்கள் அவரின் சாதனைகளைட் சொல்லும்..சமீபமாய் நூல்களின் குறைந்த விற்பனையும் அல்லது பரபரப்பு இல்லாத தன்மையும் இருந்தாலும் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் .புது இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார் .அவரின் பழைய நண்பர்களின் நூல்களையெல்லாம் பதிக்கிறார் .அவற்றிற்கு வெளியீட்டு விழாவும் நடத்துகிறார் .ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்த முயற்சிகள் எந்தவிதத்திலும் தளரவில்லை. அவரின் குடும்ப சூழலில் இந்த முயற்சிகள் தேவை இல்லாததாகவும் ஓய்வற்ற வாழ்க்கையை தந்து இருப்பதையும் நான் அறிந்திருக்கிறேன் .ஆனால் எழுத்திலும் பதிப்பக துறையிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முத்திரையை அவர் எந்த கணத்திலும் இழக்கத் தயாராக இல்லை. அதை அவர் தொடர்ந்து தன் மனதில் கொண்டு தன் வாழ்க்கையின் நேரங்களை செலவழித்து வருகிறார் .அவரின் முயற்சியில் காவியா இதழ் கூட ஏதேனும் ஒரு வகையில் மைல்கல் ஆகும் அதற்கான படைப்புகள் சேகரிப்பு , அவற்றின் பக்கங்களை நிரப்புவதில் நேரத்தை செலவிடுதல் என்பதெல்லாம் அவருக்கு சமீப ஆண்டுகளில் முக்கிய வேலையாக போய்விட்டது .ஆனாலும் தளராமல் காவியா இதழைக் கொண்டு வருகிறார் .காவியா மூலமாக அவர் முன்பு நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை உரைகளாக தருவது பின்னர் அவற்றை எழுத்து வடிவாக்குவது என்பவை சற்று பின்னடைவு அடைந்துள்ளன. ஆனால் அவரின் அலைச்சலால் இது சாத்தியமில்லாமல் போய் இருப்பதாக தோன்றுகிறது. தமிழ் சாகித்ய அகாதமியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒருவர் அவரைப் பற்றின ஒரு பேச்சின்போது நான் ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கின்ற காலத்தில் அவருக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கும் என்பதை சொன்னார் .ஆனால் அது நிறைவேறவில்லை அதனால் அதற்கு முழு தகுதியும் அவரின் படைப்புகளின் தீவிரமாக தன்மையும் நாட்டுப்புறவியலிலும் வெளிப்பட்டிருக்கிறது அவர் தொடர்ந்து பதிப்பகத்தின் மூலமும் இயங்கி வருவதால் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஆறுதல் தருகிறது. அந்த ஆறுதலை எப்போதும் அவர் என்னைப் போன்றவர்களூக்குத் தரவேண்டும் ... ReplyForward
10 திரைக்கதைகள் ( இரண்டாம் பாகம் ) சுப்ரபாரதிமணியன் 2 திரைக்கதைகள் நூல்கள் திரைக் கலைக்கும், இலக்கியத்திற்கும் இடையிலான பொருத்தப்பாடுகளையும், வேறுபாடுகளையும் உணர முடிந்தவன் என்கிற முறையிலும் ; திரைக் கலைக்கும் இலக்கியத்திற்கும் பாலம் சமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவன் என்ற முறையிலும் ; எனக்கென்றொரு பார்வைக் கோணம் இருக்கிறது அவ்வகையில் இந்த நூல் நல்ல முயற்சி.. இயக்குனர் தங்கம் 10 திரைக்கதைகள் ( இரண்டாம் பாகம் ) சுப்ரபாரதிமணியன் SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
சிங்கப்பூர் இலக்கியம் : சுப்ரபாரதி மணியன் 49வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க புத்தக அரங்கமும் இடம் பெற்று இருந்தது அந்த அரங்கத்தில் ஹேமா அவர்களின் வாழைமர நோட்டு என்ற நூலை முன்வைத்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ” காரிகாவனம் “ என்ற சிங்கப்பூர் வாழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து நான் ஒரு நூலை காவ்யா பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கிறேன் .அதைத்தவிர ” ஓ.. சிங்கப்பூர் ”என்ற தலைப்பில் அங்கு வசிக்கும் நவாஸ், குமார் உட்பட பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதியத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். சிங்கப்பூர் இலக்கியத்தின் முக்கிய கூறுகளாக அந்த எழுத்தாளர்களின் வேராக இருக்கிற தமிழ்நாட்டு மண்ணின் உறவுகள் பற்றியும் பாசப்பிணைப்பு ஏக்கம் பற்றியும் பல்வேறு கதைகளை நாம் பார்க்கலாம் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த சூழலின் அனுபவங்களை பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஒருவகையில் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையில் கூட அவர்களின் ஆர்வங்களை எடுத்துக் கொள்ளலாம். திருப்பூரில் சக்தி விருது என்று ஒரு விருது ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு தரப்படுகிறது. அந்த விருதை சிங்கப்பூரைச் சார்ந்த மணிமாலா மதியழகன் முதல் ஹேமா வரை பலர் பெற்றிருக்கிறார்கள. அந்த திருப்பூர் சக்தி விருது பெற்ற நூல் தான் ” வாழை மர நோட்டுகள் ” என்ற ஹேமா அவர்களின் கட்டுரை நூலாகும் படைப்பிலக்கியத்தில் நுழைகிற பல பேர் கவிதையிலிருந்து உரைநடைக்கு செல்வார்கள் ஆனால் இவர் சிறுகதையிலிருந்து கட்டுரை போன்ற வடிவங்களுக்கும் வந்திருக்கிறார் என்பது முக்கியமாக இருக்கிறது.. சிறுகதை போன்ற முயற்சி விளக்கத்தில் இருந்து பதிவு எழுத்து வகைகள் என்பதற்கு இந்த நூல் மூலம் ஹேமா அவர்கள் வந்திருக்கிறார்கள். 2018 திரு சீரங்கன் டைம்ஸ் இதழில் அவர் ” இரைச்சல் “ என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது ஜெல்லி என்ற ஒரு பெண்ணும் அவளைச் சுற்றிய சூழலும் பற்றி அமைந்த கதை. மாயக்குரலில் அவளுக்கு தென்படும் பல விஷயங்களை அந்த கதையில் அலசி இருக்கிறார். அந்த மாயக்குரல் சிங்கப்பூரில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றிய பல்வேறு சம்பவங்களை தேடுவதற்கு ஹேமா அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது ஆதாரத்தையும், வரலாற்று பதிவுகளையும் மையமாக கொண்ட படைப்புகளை தேட வைத்து இருக்கிறது. வரலாற்றை உணர்வாய் செய்வதும் வரலாற்றை மீட்டு வாசகர்களுக்கு நினைவு படுத்துவதும் அவருக்கு தேவை என்று பட்டிருக்கிறது வரலாற்றை திரும்பத் திரும்ப இன்றைய இளைஞர்கள் மத்தியில் பேசப்பட வேண்டி இருக்கிறது. படைப்புகளாகத் தர வேண்டி இருக்கிறது. மறந்து விடுதல் மக்கள் இயல்பு ஞாபகப்படுத்துவது எழுத்தாளன் கடமை என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் சிங்கப்பூரின் சரித்திரத்தில் ஒரு பகுதியை ஹேமா அவர்கள் இந்த புத்தகத்தில் ஞாபகப்படுத்துகிறார். 1931 ஜப்பான் சீனாவிற்குள் ஊடருகிறது. சிங்கப்பூரில் இருக்கிற சீனர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிதி திரட்டியும் அனுப்புகிறார்கள்.. இந்த நிலையில் 1942 முதல் சுமார் நான்கு ஆண்டுகள் ஜப்பானியரின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பு சிங்கப்பூர் மக்களை எப்படி சிரமப்படுத்தி இருக்கிறது என்பதை இந்த புத்தகம் சொல்கிறது .தாய்லாந்து மற்றும் வடக்கு மலேயா கரைகளில் வந்திறங்கிய ஜப்பான் வீரர்கள் மிதிவண்டியின் மூலமாக சிங்கப்பூர் நகரத்திற்கு செல்கிறார்கள்.. வெடி குண்டு தாக்குதல் நடைபெறுகிறது.. தீயில் பல கட்டடங்கள், வீடுகள் எரிகின்றன. மருத்துவமனைகளும் இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்காகின்றன.. மருத்துவமனையில் இருக்கிற நோயாளிகள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் அப்படி சிரமப்படுகிற ஒரு மருத்துவமனை சார்ந்த நோயாளிகளை வெளியில் கூட்டி செல்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும், பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தனியே கூட்டிச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள்..நாஜிக்கள் விஷவாயுக்களை செலுத்தி கொள்வதைப் போல கொல்லப்படுகிறார்கள். முக்கிய நீர் தேக்கங்கள் மாசுபடுகின்றன. அங்கே பிணங்கள் கிடக்கின்றன சாலைகளில் புதைக்கப்படாத பிணங்கள் கிடக்கின்றன. கேத்தா என்ற 16 மாடி கட்டிடம் அப்போது பிரசித்தி பெற்றது. ஜப்பான் கொடி அங்கே ஏற்றப்படுகிறது. அந்த சமயத்தில் சீனப் புத்தாண்டு வருகிறது. வழக்கமான புத்தாண்டு என்றால் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் போர் ஆக்கிரமிப்பு சூழலில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க இயலவில்லை. வீட்டில் இருக்கும் துண்டு துணியை வெட்டி அவற்றில் சிவப்பு வட்டம் போட்டு தங்களின் நாட்டு கொடி எது என்று இருக்கிற அபிமானத்தை வெளிப்படுத்துகிறார்கள். ” எங்களுக்கு உங்கள் மீது பகையில்லை கீழ்படிய தயாராக உள்ளோம் “ என்று குறிப்பிடுகிறார்கள். போர் கைதிகளாக பிடிக்கப்படுபவர்கள். சிரமப்படுத்தப்படுகிறார்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சரியான உணவு இல்லை சயாம் பர்மா ரயில் பாதை கட்டுமானத்திற்காக அதில் பல இந்தியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரில் உணவு பொருட்களுக்கு தடை இருக்கிறது. உள்நாட்டு உணவு போதிய அளவில்லை. இருக்கிற உணவுப் பொருட்களையும் ஜப்பானியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். உணவு பஞ்சம் வந்துவிடுகிறது. கள்ள சந்தையில் மக்கள் உணவு பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு மூட்டை விலை 200 வெள்ளிக்கு கூட போய் விடுகிறது. இந்த நிலையில் பணம் பற்றாக்குறை ஏற்படுகிற போது ஜப்பானியர்கள் பணம் அச்சிட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வாழை மர நோட்டுகளை பணமாக அச்சிடுகிறார்கள். ஆரம்பத்தில் அதில் வரிசை எண்கள் இடுகிறார்கள். பின்னால் அந்த வரிசை எண்களும் இல்லாமல் வாழை மர நோட்டுகள் வருகின்றன. கள்ளச் சந்தையில் டாலர் மதிப்பு உயர்கிறது. ஜப்பானியருடைய வாழை மர நோட்டுக்கு மதிப்புக்கு குறைகிறது. சிறு பொருளை வாங்கக்கூட பை நிறைய கை நிறைய பண நோட்டுகளை எடுத்துச் செல்கிறார்கள் பணத்தை விட சம்பளமாக கொடுத்த உணவு பொருட்களுக்கு மதிப்பு இருக்கிறது. உணவு பொருட்கள் திருடப்படுகின்றன பல மணி நேரம் வரிசையில் நின்று உணவு பொருட்களை பெறுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் 20 கட்டி அரிசி சுண்ணாம்பு கலந்து வழங்கப்படு.ம் ஆனால் அதுவே பின்னால் குறைக்கப்படுகிறது. உணவு பிரச்சினை வருவதால் வீடுகளில் செடிகள், தாவரங்கள் காய்கறிகளை வளர்க்கச் சொல்லி அரசாங்கமே சொல்கிறது. குறைந்த விலையில் விதைகளை தருகிறார்கள். பள்ளிகளில், கைதிகளின் முகாம்களில் இதுபோல செடிகள் நடப்படுகின்றன, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை சீக்கிரம் வளரும் என்பதால் அவற்றை வளர்க்க முன்னுரிமை தரப்படுகிறது. சோளம் நிலக்கடலை கலந்த ரொட்டியை சாப்பிட வேண்டியிருக்கிறது. வளர்கின்ற செடியில் இருக்கிற கிழங்கை பிடுங்கி செடியை மட்டுமே நட்டு விட்டு போகிற மாதிரி பல விஷயங்களும் நடக்கின்றன. ரொட்டியின் மூலப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. சோளம் கேழ்வரகு இவற்றை வைத்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள் அரசாங்கம் தருகிற நூடுல்ஸ் சிவப்பு பனை எண்ணெய் வாசனை உடன் இருக்கிறது. அதை தண்ணீரில் அலசி வெயில் காய வைத்து தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. புதிய குடியேற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை அழித்து தற்காலிக சாலைகள், வீடுகள் ஏற்படுத்தப்படுகின்றன எண்ணெய், சோப்பு பால் போன்ற பொருட்களும் உணவு பொருட்களும் தாமாகவே வளர்த்து,செய்து கொள்ளும் வேலையை மக்கள் கற்றுக் கொள்கிறார்கள், மீன், வாத்து, கோழி போன்றவை வளர்க்கக் கற்றுக் கொள்கிறார்கள். வீட்டு தோட்டங்கள் மக்களுக்கு பயன்படுகின்றன. ( இந்த சமயத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் தடைகள் ஏற்பட்ட போது கியூபாவில் மாடி விட்டு தோட்டங்களும் வீட்டு தோட்டங்களும் அமைக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.) ஜப்பானியருக்கு எதிராக சிங்கப்பூர் கொரில்லாப் படை பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறது. உணவுகளை எடுத்துச் செல்கிறது. இருவருக்கும் மத்தியில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உணவும் பரிமாறி கொள்ளப்படுகிறது. அங்குள்ள பெண்கள் விலை மாதர்களாக ஆக்கப்பட்டு ஜப்பானிய வீரர்களால் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்லறை தோட்டம் என்பது கூட இல்லை. அப்போதுதான் அந்த விலை மாதர்களில் சில நிர்வாகிகள் ஒரு கல்லறை தோட்டத்தை அமைக்கிறார்கள் .அதில் இறந்து போன ஜப்பான் வீரர்களின் அஸ்தியும் வைக்கப்படுகிறது. 1951 இல் ஜப்பான் சிங்கப்பூர் அமைதி ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஜப்பானியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைகின்றன. சூதாட்ட கூடம் அமைக்கப்படுவதும் பல பூங்காக்கள் பாலியல் விடுதிகளாக மாற்றப்படுவதும் நடக்கிறது. பல மனநல மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அங்கு இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பும் என்ன என்பதை பற்றி ஹேமா அவர்கள் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். 1945 செப்டம்பர் 2ம் தேதி நேச நாடுகள் மத்தியில் ஜப்பான் சரணடைகிறது. ஆனால் சிங்கப்பூரை மீட்டெடுக்க முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகள் நடக்கிறது .இந்த காலகட்ட விஷயங்களை சுமார் 20 கட்டுரைகளாக ஹேமா அவர்கள் சிராங்கூன் டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறார். அதுதான் அவருடைய முதல் புத்தகமாகவும் அமைகிறது. சிங்கப்பூர் இலக்கிய பரிசுகள் பலவற்றை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தேசிய போட்டிகளில் கவிதை சார்ந்து இயங்கி பாராட்டை பெறுகிறார். கணையாழி, கனலி, தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றி எழுதுகிற ஹேமா அவர்கள் ஜப்பான் சார்ந்த பல்வேறு படைப்புகளையும் பின்னர் முன் வைத்திருக்கிறார். ஜப்பான் ஆலயங்கள், செரிமலர்கள், மரங்கள் உட்பட ஜப்பானியரின் வாழ்வியலை பற்றியும் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்நிய மனிதர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கிற சிங்கப்பூர் மனிதர்களின் சித்திரங்கள் முக்கியமானவை ” உறுதுயர்” என்ற ஒரு சிறுகதையில் அவரின் நுணுக்கமான விவரிப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன.. டச்சுக்காரர்களில் வருகையால் நடந்த வரலாற்றை மாற்றங்களையும் ஒரு சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறார். இவரின் சிங்கப்பூர் பொன்விழா சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற ”ஒளி தேடும் விட்டில் பூச்சி” என்ற கதையும் முக்கியமானது. இந்த கதைகளில் அவர் இளைய தலைமுறை சார்ந்தவர்களை, குழந்தைகளுடைய இயல்பை நுணுக்கமாக விவரத்திருக்கிறார் இந்த நுணுக்கமான விவரிப்புக்கள் ஹேமா அவர்களின் இந்த புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கிற விதமாக அமைந்த ஹேமா அவர்களின் இந்த கட்டுரை தொகுப்பு சிங்கப்பூர் சரித்திரத்தின் ஒரு பகுதியை துல்லியமாக சித்தரிக்கிறது. அவரின் புனைவு எழுத்துக்களின் மத்தியில் இதுவும் முக்கியமாகிறது சுப்ரபாரதி மணியன் ( சென்னை 49 வது புத்தக கண்காட்சியில் பேசியது )
கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 2ம் தேதி வரை (இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் ) இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை. இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று இந்த ஓவியக் கண்காட்சியை யூத் ராஜ் ( ஐ ஏ எஸ் பயிற்சியாளர் ) துவக்கி வைத்தார். ஓவியர் தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு சி.சுப்ரமணியம் அவர்கள் ” செந்தமிழ் ஓவியக் கலைஞர்” என்ற பட்டத்தினை வழங்கினார். இக்கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு வகித்தார் தலைமை வகித்தார் : சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம் 0 புதிய நூல்கள் அறிமுகம் நடந்தது. 0 திருப்பூர் மோகன் ராஜின் “இனிப்பு சாப்பிடுங்க. சர்க்கரை நோயை வெல்லுங்க” 0 சுப்ரபாரதிமணியனின் “ திரைப்படம் என்னும் சுவாசம் “ 0 கோவை ஆண்ட்ரூசின் “ பசுமை நினைவுகள் “ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. • கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம் ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலக்கிய சங்கமம் • 22/1/23 ஞாயிறு காலை 10 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் • ஓவியர் தூரிகை சின்னராஜ் வழங்கும் • கொங்கு பகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி 0 புதிய நூல்கள் அறிமுகம் 0 திருப்பூர் மோகன் ராஜின் “இனிப்பு சாப்பிடுங்க. சர்க்கரை நோயை வெல்லுங்க” 0 சுப்ரபாரதிமணியனின் “ திரைப்படம் என்னும் சுவாசம் “ 0 கோவை ஆண்ட்ரூசின் “ பசுமை நினைவுகள் “ • பட்டிமன்றம் (திருப்பூர் மக்கள் மாமன்றம் நிர்வாகிகள் ) • தலைமை: சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம் • வருக • கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம்
Kanavu109 issue ஓவிய அனுபவம் நாய்ப்பால் : தூரிகை சின்னராசு நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றும் நண்பர் ந. செல்வன் எனக்கு திருப்பூர் கனவு இலக்கிய குறும்பட விருது விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர். அவர் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் ஓவியக்கலையை பயின்றவர் ஓவியக்கலையின் துணைக்கலையான ஒளிப்பட கலையை தனது வாழ்நாள் பயணமாக தொடர்ச்சியாக இன்றளவும் தொடர்ந்து வரும் அவர் எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் என்னை வரைய தூண்டி வா.. வா...என்று அழைக்கும். அண்மையில் அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது புகைப்படம் சார்ந்த பல புத்தகங்கள் எழுதி முடித்திருந்தார். அவருடைய நிழல் சலனங்கள் மற்றும் இருட்டறை வெளிச்சங்கள் ஆகிய இரண்டு ஆவண படங்களும் புகைப்படம் சார்ந்து ஆழமாக பேசப்பட்டவை. ஒரு ஓவியர் ஒளிப்பட கலைஞராகவும் இருந்து அவரே ஒரு ஆவணப்படத்தை இயக்கினால் அது எவ்வளவு நேர்த்தியாக வரும் என்பதை நமது திரைத் துறையில் ஆகச் சிறந்த ஆளுமைகள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்பீல் பெர்க் என்கிற உலக கலைஞனின் சினிமா தொடங்கி ஜப்பானின் அகிரா குர சேவா மற்றும் இந்திய திரை ஆளுமையான சத்தியஜித்ரே வும் இதில் அடக்கம். தமிழ்நாட்டில் உள்ள பல திரைப்படக்கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்கள் அடிப்படையில் ஓவியர்களே. குறிப்பாக சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று வெளிவந்த பல்வேறு ஆகச் சிறந்த ஓவியர்கள் என்று மிகப்பெரிய அளவில் திரைப்படத்துறையில் தங்களது முத்திரைகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓவியர்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்களாக வும் கவிஞர் வாலி அனுராதா ரமணன் போன்றவர்கள் எல்லாம் ஓவியத்தை அடிப்படை பாடமாக படித்தவர்களே. அந்த வரிசையில் நெய்வேலி செல்வம் அவர்கள் ஓவியம் படித்திருந்தாலும் அவர் ஒளிப்படம் எடுப்பதில் ஒரு படத்தை ஓவியமாகவே எடுத்து விடுகிறார். அத்தகைய சில படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருப்பூர் கனவு விருது விழாவிற்கு வந்த பொழுது நான் அவரிடம் அனுமதி வாங்கி ஐந்து ஒளிப்படங்களை ஓவியம் ஆக்க முற்பட்டேன். அதன் பிறகு அதை கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலைமையத்தில் கலை மையத்தில் ஓவிய கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினேன். இந்த ஐந்து படங்களில் குறிப்பாக இங்கே நான் வெளியிட்டுள்ள நாய்ப்பால் என்கிற இந்த ஓவியம் நெய்வேலி செல்வத்தின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு நான் வரையப்பட்டது. எனது ஓவிய கோடுகளுக்கு உயிரோட்டமாக இருந்தவை உணர்வு பூர்வமான இந்த நாய் பால் என்கிற இந்த நாய் குடும்பத்தின் புகைப்படம் தான். உலக தாய்ப்பால் தினத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றியும் நிறைய விளம்பரங்கள் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்த அந்த வேலையில் தாய்ப்பால் மகத்துவம் குறித்து தொலைக்காட்சி விளம்பரமும், இந்த நாய் புகைப்படமும் என்னை வெகுவாக பாதித்தது. நெய்வேலி செல்வம் அவர்களின் இந்த குறிப்பிட்ட புகைப்படத்தை நான் ஓவியம் ஆக்கும் பொழுது மில்லி மீட்டர் மில்லி மீட்டராக கோடுகளை வரைய முற்பட்ட போது தனது எலும்பும் தோலுமான வறுமையின் உச்சத்தில் இருக்கும் இந்த நாயின் மடியில் தான் ஈன்ற நான்கு குட்டிகளும் முட்டி முட்டி பால் அருந்தும் காட்சி அதன் தொடர்ச்சியாக, அந்த தாய் நாயின் முகத்தில் கண்ணை மூடிக்கொண்டு தன் மன மகிழ்ச்சியை ஈன்ற குழந்தைகளுக்கு பாசமாக தன்னிடம் பால் பருக வாய்ப்பு கிடைத்ததை மனதார நினைத்து கண்ணை மூடி ரசிக்கும் அந்த தாய் பாச உணர்வை இந்த ஓவியம் நான் வரைந்த அந்த நாய்த் தாயின் முகத்தில் ஒவ்வொரு கோடுகளிலும் அனுபவிக்க முடிந்தது. ஒரு ஓவியம் உருவான கதையில் இன்றைய சமூக சிந்தனையும் வெளிப்பட்டதை நான் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் என் புகைப்பட ஓவிய நண்பர் நெய்வேலி செல்வம் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது உயிர் பெற்ற என் புகைப்படம் ஓவியமாக உலா வருகிறது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று தெரிவித்தார். எனவே நாம் வரையும் ஒரு நாய் படம் கூட நமக்கு சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தும் சிந்தனைகளை வழங்கி வர ஏதுவாய் நமது வரைதலுக்கான காட்சி கருப்பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த நாய் பால் என்கிற ஓவியத்தை முடிக்கும் போது தான் தெரிந்து கொண்டேன். தற்பொழுது ஒவ்வொரு தெரு நாய்களை உற்றுப் பார்க்கும் பொழுதெல்லாம் என் நினைவுக்கு வருவது உலக தாய்ப்பால் தினமும் இந்த நா(தா)ய்ப்பால் ஓவியமும் தான். என் ஓவிய அனுபவத்தில் சிறந்த ஓவியங்களில் ஒன்று இது.