சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

நொய்யல் மீள சாத்தியங்கள் தெரிகின்றன நொய்யல் விழா கோவை திருப்பூர் பகுதியின் நொய்யல் நதிக்கரை, சமவெளியில் வாழக்கூடிய உங்களுக்கு ஒரு உறுத்தலானtது நொய்யல் விழா என்பது. அதில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவு மாசு அதனால அதை ஒட்டி நம்மளோட கலை பண்பாட்டு நிகழ்வுக்கு பெயர் வைப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆனால் ஆச்சரியமான பல விஷயங்கள் இருக்குது அண்மையில் சூலூர் பெரிய குளத்துல நடந்த இடத்துல ஒரு ஆய்வுல பழமையான அழிஞ்சு போயிருப்போம்ன்னு நம்புன உயிரினங்கள், நன்னீர்ல வாழக்கூடிய அதிக வகை மீன் உயிரினங்கள் வந்து இப்போதும் இருக்குது அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அது வந்து இன்னும் இதன் தன்மை வந்து மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு முன்னாடி வரைக்கும் இருக்கு. இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நதி பாயும் இடத்துக்கு முன்பாக வரைக்கும் நொய்யால வந்து பழையபடி மாசற்ற திறமையோடு மாற்ற முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்குது மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதன் கிழக்குப் பகுதியில் வந்து அங்கிருந்து பாத்தீங்கன்னா, அது வந்து ஈரோடு மாவட்டத்துல நுழையக்கூடிய பகுதிகளில் ஒரு ரெண்டு ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய நீரில் காரத் தன்மையும் அமிலத்தன்மையும் அதில் கலந்து இருக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த உப்புகளையும் நீக்கும் பணி என்கிறது மிகப்பெரிய சவால். அந்த சவாலை வந்து முன்பைக்காட்டிலும் இப்போ வந்து இன்னும் நிறைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்துகிட்டு இருக்கிறதுனால அதை செய்து ஒரு எதிர்காலத்தில் வெற்றிகரமாக்க ம்முடியும். 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி மாசற்ற ஒரு நதி, கடந்த 16 ஆண்டுகளாக ஓரளவு மாசு குறைந்திருக்கிறது அதை தீர்ப்பு வந்து 16 ஆண்டுகள் ஆகுது கிட்டத்தட்ட இன்னொரு பத்து வருடங்களில் வந்து முழுமையான மாற்றத்தை வந்து அடைய முடியும் என்பது ஒரு நம்பிக்கை.. பெரிய நம்பிக்கை இது . இந்த நொய்யல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கம் சார்ந்த விஷயங்களை வந்து உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சுற்றுசூழல் போராளி நண்பர் ஒருவருடனான உரையாடலில்…