சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 24 ஜூலை, 2012

திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

சுப்ரபாரதிமணியன்

Share

தமிழில்: சுப்ரபாரதிமணியன்
1.
அரசியல்வாதியும் புறாவும்
ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும்
அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர்
வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது.
அரசியல்வாதி சொன்னார்:
“ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ
அது என் அரசியல்”
புறா மீண்டும் சொன்னது:
“நான் என் இறக்கைகளை அடித்தபடி
வானில் பறப்பேன்””
அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான்.

புறா பறக்க இயலாமல் மெளனமானது.
இப்போது வெள்ளைப்புறா
அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது.

  • ரகு லைசாங்கதம் (மணிப்பூரி)

2.காந்தியும், ரோபோவும்
நீண்ட காலத்திற்கு முன்
நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார்
அதன் வாய் ஒரே நிமிடத்தில்
ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும்
பாலாபாஜி பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார்
பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும்
விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்:
ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன்

தில்லி செங்கோட்டையில்
வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும்
கழுதைகள் கத்துகின்றன.
வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை
துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள்.

இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்:
பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம்,
புது புத்தரை வைக்க.
மகிழ்ச்சியுடன் கத்தினேன்:
“வாழ்க பாரதம், வாழ்க”” -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)
3.கடல் கவிதைகள்

1. கப்பல்கள் பயணிக்கின்றன
இரவுகளின் தடுமாறும் திசைகளில்
தாறுமாறான விதிகளின் வழியில்.
கரை தெரியாது பார்வையில்,
எனினும் பயணித்தபடி.

கயிறு கட்டிய பொம்மை
கயிரே சூத்ரதாரி.
அதன் வழியைத் தீர்மானிக்க
கப்பலுக்குத் தடுப்புண்டு.

இறுகிய காரையும், நீரும் அலசி
பலகை மீது
பொன்னான ஜாத்ரா
வர்ணங்களின் சிதிலமும்
இசை, நடனம், விருப்பு வெறுப்பு
இணைந்த இனிப்புப் பண்டம்.

ஒருவனே சூத்ரதாரி
கடலின் அதிகாரத்தை எதிர்ப்பவன்
வெற்றிவரை தோல்வி மீண்டும் மீண்டும்

வாழ்க்கையின் நிர்பந்தங்களை
அவனே நின்று சமாளித்து
ஒவ்வொரு நிலையிலும்
வாழ்க்கை
மரணத்தை ஜெயித்து..

2.
அம்மா மாதவிடாய் பிறகு மறுபடியும்
புதுப் பிறப்பிற்குக் காத்திருக்கிறாள்
பிறகு வாழ்க்கையின் பயணம்,
கடல் வழி காற்றுபோல்
அம்மாவின் முலைப்பாலை
அமிர்தமாய் சுவைக்கும் குழந்தைபோல்
சுறாவளியில் சிக்கியும்.

தாயும் மகனும் சேர்ந்து
கனவுப் பயணம் போல
கடல் வழிகளாகின்றன.
ஒவ்வொரு மூச்சிழைப்பையும் பிடித்து
கடல் பயணம் தொடர்ந்து..
வாழ்க்கையின் சந்தோஷம் கடலாய்
துக்கமூட்டைகளைக் களைந்து
சுகங்களைத் தந்தபடி.

துக்கங்களில் சரணடைந்து

ஒருவன் புத்தனாகிறான்.

கடல் விந்தைகளுக்கு
யாராக இருப்பினும்
அவன் சரணடைந்து
கடல் பயண
உச்ச சந்தோஷத்தைக் கொள்ளுதலாய்…

  • நிங்கப்ப முதேனூர்(கன்னடம்)

4.மாய துணி

பல வர்ண நூல்களால் எனது தறியில் நெய்கிறேன்
என் துணி சொல்கிறது.
என் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் காயம் என.
இன்று நான் புதிதாக ஏதாவது நெய்ய விரும்புகிறேன்.
பூக்கள், பறவைகள், ரகசியமான வனம், வசந்தம்
நதிகள், மலைகள்.
நான் தீவுகளை நெய்ய விரும்புகிறேன்
கடல், நட்சத்திரங்கள் மின்னும் வானம்
எனது துணி உலகைப் பிரதிபலிக்க விரும்புகிறதா?

பூமியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்
மூன்றில் ஒரு பாகமே நிலம்
என் மாய துணி மாய வடிவமைப்புகளால் வளர்கிறது.

மரத்தில் செய்யப்பட்ட கூரிய நாடாவால் நெய்கிறேன்
இந்த நாடாவை தங்களைக் காத்துக் கொள்ள
எனது மூத்தப்பாட்டிகள் ஒரு காலத்தில் போராடியிருக்கிறார்கள்
“ரூமா” தறி நாடாவைக் கையில் வைத்துக்கொண்டு
கெட்ட்தை அழித்து சுத்தமான உலகிற்காக
இப்போது மீண்டும் எழுச்சி கொள்ளும் காலம்.
வினோத வர்ண நூல்
இனம், பிரதேசம், நம்பிக்கை என்று.
இந்த “ரூமா””வால் விரிவான மாயத்துணியை நெய்யட்டுமா.
புது உலகில் அன்பு,அமைதியுடன்
வினோதத் துணி விரியும்
போர்வீர்ர்களின் தலைமுறைகள் அடையாளத்தை
தாய் மண்ணிற்காக மலைகளின் மகள் தொடர்கிறாள்.

  • க்ரைரி மோக் சவுத்ரி ( மோக்)


5.ஒலி


இன்னொரு ஜன்னலையும் திறந்தேன்
திடுமென உணர்ந்தேன்
அன்றைய தினங்களின் போகுல் மலரின் வாசனை
என் நாசியைத் தொட்ட்தைப் போல்
எங்கிருந்தோ காட்டின் ஒலி
மெதுவாய் வந்து தொட்ட்து என்னை.
இன்னும் அதி உணர்கிரேன்.
நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் வழியில்
வீதியின் வளைவில்
உன்னை நான் தாண்டி வந்ததைப்போல்.
ஒரு இதமான மதிய வேளை ஓய்வாக
அமர்ந்திருந்தது என் அருகே.
உனக்காகக் காத்திருந்தது.
வாசலில்
உதிர்ந்த இலைகள் ஏதோ சொல்ல விரும்பியது
சிறு புல்லிடம்.

  • தேபா பிரசாத் தாலூக்தார் (அசாமி)

6.பிரிவினை

எங்கும் ரத்தத்தின் நிறம் ஒன்றே
எங்கும் கண்ணீரும், வியர்வை ருசியும் ஒன்றே
எங்கும் பசியின் கதறல் ஒன்றே
ஆனால் நாம் ஒன்றல்ல.

எழுத்து

பாறையில் மழையால எழுதினேன்

மகிழ்ச்சியாய் படித்தேன்

சூரிய ஒளியும் அதுவே.

காந்தீயம்

நான் காந்தீயத்தை மிகவும் நேசிக்கிறேன்

அது அய்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டாய்

இருந்தால் இன்னும்.

மயிலம்மா

பிளாச்சிமடா வீரநாயகி

இறந்துவிட்டாள்

கொகோ கோலா நிறுவனங்கள்

நெகிழி போல எப்போதைக்கும்

  • ஹரிதாஸ் பாலகிருஷ்ணன் (மலையாளம்)

7.வளர்ச்சியின் மறுபுறம்

நீங்கள் யாராக இருப்பினும் வணக்கங்கள்.

எங்கள் நலம் பற்றி விசாரித்ததற்கு ஆயிரம் வணக்கங்கள்

சாகச நவீன வளர்ச்சியின் புரட்சி பற்றியும்.

வனங்களிலிருந்து எங்களை விலக்கி விட்டீர்கள்

வனத்துறையினரின் உதவியுடன்.

பசுமை வாழ்க்கையைத் திருடி கொண்டு விட்டீர்கள்

பசுமைப் புரட்சி என்ற பெயரால்.

பசுமைப் புரட்சி என்றதில்

பாலை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நீல புரட்சி என்ற பெயரில்

எங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டீர்கள்

தொழில் புரட்சி என்ற பெயரில்

எங்கள் கரங்களை வெட்டினீர்கள்

ஆணைகளுக்கு அஸ்திவாரங்களாக

எங்கள் இரத்தத்தை ஊற்றி அமைத்தீர்கள்

பல வர்ண கண்ணாடிகளையும்

பல கொடிகளையும் தந்தீர்கள்.

உங்களின் புதிய ஆயுதங்களின் பலத்தை

பரிசோதித்தீர்கள்.

எங்கள் நிலத்தை, நீரை, வானத்தை, காற்றை

அபகரித்தீர்கள்.

இன்னும் உங்கள் அணு வெடிப்புகளால்

எங்களையும்.

ஒவ்வொரு படியிலும் கரங்களையும் உருவாக்கினீர்கள்.

முதுகெலும்பை முறித்து சாய்ந்திருக்க செய்தீர்கள்.

சார், மேடம்

நீங்கள் யாராக இருந்தாலும்

நாங்கள் மனிதப் பிறவிகள்

எங்கள் மனிதப் பிறவிகளால் வாழ விடுங்கள்

இயற்கையின் மடியில்

ஓற்றுமையுடன் மனிதப் பிறவிகளாய் வாழ்வோம்

எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ விடுங்கள்

எங்கள் சாவை நாங்கள் எதிர்கொள்ள விடுங்கள்

  • கே.எஸ். ரமணா (தெலுங்கு)

subrabharathi@gmail.com

CHAYATHIRAI

Translation of Subrabharathimanian’s Tamil Novel CHAYATHIRAI by P.Raja. Pub: B.R.Publishing Corporation [ A Division of BRPC (India) ltd. 4222/1, Ansari Road, Darya Ganj, New Delhi-110002. Ed; Ppxiv+196; Price : Rs.200. -

English enjoys its status as an international language, so naturally has a wider circle of readers. Hence the necessity for translations. And as long as there are translations, there will always be a problem on how to use English in a native situation. Sometimes the whole exercise could suffer or even go through a “cultural shock”. But not When it is left to the deft hands of master-story teller P.Raja. He has used his craft with full force while translating “Chayathirai”. The book in his hand remains relevant and poignant to the end, and he brings us as close as one could possibly get to the original. In “Chayathirai”, Subrabharathimanian has given a testimony to what global industrialisation is doing to the poorer sections of our society. The ‘fabric’ of our simple world as we know it is breaking down. This tapestry is maintained during the entire course of the book. With no solid story time, the reader is continuously waiting for it to happen; but it never does. Only instances appear. This in a lesser novel would have irked the reader. Here it has only enhanced anticipation and the subtley of the “little stories” gives one the much needed fulfillment. The reader is taken back some years to when the magnificent river Noeyal had children romping about it in its pure waters, then rudely brought back to the present where a new “chemical” life causes its destruction.

Modern society – read foreign invasion – offers nothing in return for what it takes. According to their dictate no compromise is necessary when they strive for perfection in their material world. Instead they leave behind squalor, hatred, loneliness, destruction and ultimately death. The writer has anticipated the inevitable disfiguration of our pure, ethnic life in the face of greed. The protagonists all meet death in a gruesome manner. Though they are forced to embrace death, they seem to be harbouring the morbid within them, by the vey nature of their existence. Bhaktavatchalam experiences depths of despair- much like our unemployed youth – and yet reaches his own heights of joy through Jothimani . Chettiyar hangs himself in sheer desperation while Sundari too takes her life at the end of a rope. The road to self – destruction is inevitable in the tide of filth, deprivation and poverty against which the characters play out the drama of life. The lines of the book not only leap out to us narrating the end of the town, but seems like a parable of the destruction of the universe. While peeping into the working conditions around the machines used for stitching banians and the procedure of dying, the atmosphere is agonizingly dark and dreary with no real “colour” to brighten up life save the destructive colours of the dyes, so instrumental in “death” of not only human life but the whole environment, the water drinking, why even the air they breathe. The mental status each character so vividly depicted, helps us to feel the hostile conditions in which they live, reminiscent of the squalor suffocates Oliver Twist in Fagin’s Den.

Even in the process of restricting his comparison of exploiting capitalists to a game of chess, the writer has explored the “pawns” and “kings” in the chequered game of hiera which wreck havoc on lesser mortals, without actually brings it out in the open. This had indeed transcended the novel into the realm of a true path – breaker, in revealing to us the “systems” we are forced to live with. When we sacrifice the peace of our life at the altar of commercialism, and pepper that superstitions a la goddess Saundi Amman, the bond between nature and man is lost.

As opposed to the usual exodus from village to city, this art novel throws light on what takes place if the need of a city ( foreboding if it its foreign) is thrust upon the village. If this is the ultimate aim of the writer, he has indeed succeeded in bringing us face to face with the forces that be, in transporting us to dark side of human insensitivity and makes us want to be about a new society deplete of all forms of destruction cement the bond between nature and man.

Sent by: subrabharathi@gmail.com

புதன், 18 ஜூலை, 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
PERSATUAN PENULIS PENULIS TAMIL MALAYSIA




தமிழ் நாவல் கருத்தரங்கம்
===========================

28/7/12 , 29/7/12 சனி, ஞாயிறு
Hotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia

நாவல் அனுபவம்: உரை
சுப்ரபாரதிமணியன்

பிற உரைகள்: முனைவர் ரெ.கார்த்திகேசு
முனைவர் சபாபதி
முனைவர் கிருஸ்ணன்
நிறைவுரை: பி.ராஜேந்திரன்
( தலைவர், மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் )
தொடர்புக்கு: rajlaavan__83@yahoo.com
______________________________________________

புதன், 11 ஜூலை, 2012

கோவை இலக்கியச் சந்திப்பு

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. ஜுன் மாத நிகழ்வு நரசிம்மலுநாயுடு நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்த்து..

கோவையில் இதழியலின் முன்னோடியாக இருந்தவர் நரசிம்மலுநாயுடு. பயண இலக்கியங்களில் முத்திரை பதித்தவர். அரிய நூல்களைப் பதிப்பித்தவர்.எண்ணிக்கையில் அவர் பதிப்பித்தவை நூற்றுக்கு மேல் இருக்கும். கோவை கிழாரின் நூல்கள் வெளிவர உத்வேகமாக இருந்தவர்.கோவையின் சிறுவாணி குடிநீரின் மூலத்தைக்கண்டு பிடித்து அது கோவை நகர மக்களுக்குக் கிடைக்க்க மூலமாக இருந்தவர். கலாநிதி என்ற பெயரிலான முதல் அச்சுக்கூடம், ஆங்கிலேயருடன் சேர்ந்து அவரை இயக்குனராகக் கொண்ட முதல் மில் ஆகியவை கோவையில் நிறுவப்பட்டிருக்கிறது.அவரால் கட்டப்பட்ட டவுன்ஹால் அருகில் இருக்கும் விக்டோரியாவின் நினைவான விக்டோரியா ஹால் அந்தக் காலக் கட்டிடக்கலைக்கு அத்தாட்சியாக விளங்குவது. முதல் பொது நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அவர் பெயரிலான அப்பள்ளியில் இருமுறை சாகித்யா அகாதமி பரிசு பெற்ற புவியரசு, நாவலாசிரியர் சி.ஆர். ரவீந்திரன், கவிஞர் இரணியன் போன்றோர் பணி புரிந்திருக்கிறார்கள். பள்ளி வளாக வகுப்பறை ஒன்று இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு களமாக இருந்தது.

பிர்தொஸ் இராஜகுமாரனின், “ போன்சாய் மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பை ( உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியீடு ) ஜி.தேவி விமர்சனம் செய்தார். தேவி அவர்கள் பெண்தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றிய பல்வேறு ஆய்வுகளையும் களப்பணியையும் நடத்தியவர். மாதர் சங்க பொறுப்புகளில் வழி நடத்திக் கொண்டிருப்பவர். பிர்தொஸ் ராஜகுமாரனின் கதைகள் முஸ்லீம் சமூகத்தின் மூடுண்ட பகுதிகளை வெளிச்சமிடுகின்றன.முஸ்லீம் குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை கொண்டு கேள்விகளை எழுப்புகின்றன. பென்களின் மனமுறிவு சாதாரணமாகும் சூழல்களை முன் நிறுத்துகின்றன். இலக்கிய வாதிகளின் போலி முகங்களை அடையாளம் காட்டுகின்றன். முஸ்லீம் சமூக மத நிர்வாகிகளின் ஊழலை அம்பலப்படுத்துகின்றன. அவை பற்றிய அபிப்பிராயங்களில் அவர் முகம் தட்டுப்படுகிறது. முஸ்லீம் சமூகம் பற்றிய நுணுக்கமான பதிவுகளை அவர் அச்சமூகத்தில் இருப்பதால் வெளிப்படுத்த அவருக்கான வாய்ப்புகளை இன்னும் விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

பொன்.இளவேனில் சுப்ரபாரதிமணியனின் “ மந்திரச்சிமிழ்’” கவிதைத் தொகுப்பை ( காவ்யா பதிப்பகம் சென்னை வெளியீடு ) விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டார். சாதாரணத் தொழிலாளிகளின் வாழ்நிலையும், பெண்கள் மீதான கரிசனமும், சுற்றுலா குறிப்பு அனுபவங்களும், சுற்றுச்சூழல் பதிவுகளும் இடம்பெற்றிருப்பதை கவிதைகளை எடுத்து வாசித்துக் காட்டினார்.


7 நாவல்கள், குறுநாவல்கள் , கட்டுரைத்தொகுப்புகள் , திரைப்படக்கட்டுரைத் தொகுப்புகள், பயண அனுபவ நூல்கள்,நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 35 நூல்கள் வெளிவந்துள்ளன. இது அவரின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.இதற்கு முன் அவரின் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்ததில்லை..ஆரம்பத்தில் கவிதைப்படைப்புகளின் மூலம் படைப்புலகிற்கு வந்தவர்.

சமூகமும் அதன் செயல்பாடுகளும் ஏற்படுத்தும் மன அவஸ்தைகளின் வெளிப்பாடாகவும், இருப்பின் சிதைவையும், வெளி உலகத்தின் நிர்ப்பந்தங்களையும், அவற்றின் எதிர்வினையாகவும் இக்கவிதைகளைக் கொள்ளலாம். இக்கவிதைகள் எளிமையானச் சொற்களுடனும், படிமங்களின் பாரத்தாலும், அனுபவங்களின் திரட்சையாலும் மூச்சுத்திணற வைக்கின்றன. காட்சிகளின் விவரிப்பும், படைப்பாக்க ரசவாத்தின் சூட்சுமமும் பெரும் வெளியாய் விரிகின்றன.அடிமைத்தளத்திலிருந்து வெளீயாகும் முனகல்கள் விடுதலைக்கான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. கதறலும், காதலும், அன்பின் வலிமையும், சுதந்திரமாய் பறத்தலும் என்று விரிகின்றன. அவரின் புனைகதைகளின் அம்சங்களை இவற்றிலும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தாலும் அதன் கச்சாப்பொருட்களிலிருந்து அவரால் விலக்கிக் கொள்ள முடியாதபடி இக்கவிதைகளின் மறுவாசிப்பு அமைந்துள்ளது. கவிதை மூலம் மொழி சார்ந்த பயிற்சி, புதிய பிரக்ஞைக்கான தளம், அனுபவப் பகிர்வு, தொடரும் வாசகனின் நுண்ணியப் பார்வைக்கான சவால் என்று இக்கவிதைகளை சுப்ரபாரதிமணியன் இத்தொகுப்பை வடிவமைத்துள்ளார்.


சுப்ரபாரதிமணியனின் சமீபத்திய , எட்டாவது நாவலான “ நீர்த்துளி “

( உயிர்மை பதிப்பக வெளியீடு, சென்னை) பற்றிய விமர்சன உரையாக தஞ்சை நெருஞ்சி இலக்கிய அமைப்பைச் சார்ந்த எழுத்தாளரும், கடற்குதிரை பதிப்பக நிர்வாகியுமான முத்தமிழ் விரும்பி பேச்சை அமைத்திருந்தார். பிதொஸ்ராஜகுமாரன் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய முஸ்லீம் சமூகம் பற்றிய பதிவுகளை நீர்த்துளி நாவலின் சிக்கந்தர், லியாகத் அலி பாத்திரங்கள் பிரதிபலித்திருக்கின்றன.திருப்பூரைச் சார்ந்த உதிரி மனிதர்களின் வாழ்நிலையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்என்றார்.

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. நீதிமன்றத்தீர்ப்பை ஒட்டி திருப்பூர் சாயப்பட்டறைகளின் மூடலுக்கு பின் தொழில் நகரம் சந்திக்கும் பிரச்சினைகள் விளிம்பு நிலை பனியன் கம்பனி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சொல்லப்பட்டிருக்கிறது.சாயத்திரை நாவல் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டு விட்ட ஒரு தொழில் நகரம் ஒரு விதப்பூச்சுடன் மினுங்குவதை காட்டியவர். இந்த நாவலில் சுற்றுச்சூழல் பாதிப்பு மனித உரிமைப்பிரச்சினையாகி சாயப்பட்டறைகள் மூடப்படுதலையும் அதனால் அவதியுறும் தொழிலாளர்கள் பற்றியும் சக மனிதர்களின் அனுபவங்கள் வழியே விவரிக்கிறது, இடம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்கிறது. தனித்து வாழும் உதிரி மக்களின் வாழ்க்கை சமகால அரசியலுடன் பேசப்படுகிறது. பலமான உரையாடல் தளங்கள்..சிறு சிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்து போகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.



கோவை ஞானி நீர்த்துளி பற்றி பேசினார். திருப்பூர் என்ற வணிக நகரம் தன் இயல்புகளை இழந்து சிதைவுகளின் படிமமாகி வருவதை சுப்ரபாரதிமணியன் சாயத்திரை., பிணங்களின் முகங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, சமையலறைக்கலயங்கள் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை க்லைவடிவங்களாக்கியுள்ளார்.இச்சிதைவு தவிர்க்க இய்லாதது. மனிதத்தை நிராகரிக்கும் எந்த சமூகமும் இச்சிதைவை சந்தித்தே தீரும், அதை எழுத்தில் கொண்டு வருவதில் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்றார்.

இளஞ்சேரலின் கட்டுரை கோவையில் சுரேஷ் குமார் இந்திரஜித்தைக் கொண்டு “ அருவி” அமைப்பு நடத்திய “ புனைவின் மொழி “ என்ற தலைப்பிலான நிகழ்வு பற்றிய சுவாரஸ்மானக் கட்டுரையாக அமைந்திருந்த்து. பிதொஸ்ராஜகுமாரன் ஏற்புரையில் முஸ்லிம் சமூகம் பற்றிய ஒளிவு மறைவற்ற பதிவுகளுக்கு தன் குடும்பம் ஊக்குவிப்பதால் இன்னும் தீவிரமாக இயங்க வழி பிறந்திருகிறது என்றார். சுப்ரபாரதிமணியன் தன் ஏற்புரையில் “ நீர்த்துளி “ நாவலின் பின்புலம் பற்ரி விரிவாகப் பேசினார்.உலக்மயமாக்கலில் இடம்பெயரும் மக்களின் புகலிடமாக திருப்பூர் உள்ளது.அதில் ஒற்றைப் பெற்றோரின் பங்கும் அவர்களின் பாலியல் சுதந்திரமும் உளவியல் சிக்கல்களுக்குக் கொண்டு செல்கிறது. கலாச்சார கட்டுடைப்பு என்பது பல தளங்களில் நிகழ்ந்தாலும் அது குற்ற உணர்வின் மேலிடலாக இருக்கிறது. தொழிற்சங்க உணர்வை இழந்த நவீன தொழிலாளி கொத்தடிமையாக இருக்கிறான். சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட அவன் சமூகப்பாதுகாப்பற்ற மனிதனாக அகதியாகத் திரிகிறான். சாயப்பட்டறைளின் மூடும் நீதிமன்ற தீர்ப்பு பொருளாதார சிக்கல்லளூடே அவனை மன நோயாளியாகுவதை சுலபமாகப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இணைந்து வாழ ஆசைப்படும் திருமண முறிவில் இருக்கும் ஒரு பெண், திருமணமாகாத் ஒரு ஆணுடன் இணைந்து வாழ்தலை சட்டம் அனுமதித்தாலும் சமூகம் பார்க்கும் பார்வையின் கோணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறது. ஊடாக சுற்றுசுழல் குறித்த இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மனித உரிமைப்பிரச்சினையாக வடிவெடுத்திருக்கின்றன என்றார்.

விவாதங்களில் யுகமாயினி சித்தன், நாவலாசிரியர் மா.நடராசன், பொதிகைச் சித்தர், கலை இலக்கியப் பெருமன்றம் பா.ரமணி , சிறுதுளி ஜெயராமன் உட்பட பலர் பங்கு பெற்றனர்.


செய்தி: சாமக்கோடாங்கி ரவி

கனடா வாழ் எழுத்தாளர்

அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” இலக்கிய வட்டம் அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் ரூ 4,000 பகிர்ந்து அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. திருவாளர்கள்:

1. மு.இராமநாதன், சென்னை

2. சைலபதி, சென்னை

3. நா.அனுராதா, மதுரை

4..சுமதிராம், கோவை

5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி

6. பிரபாகர், தக்கலை, கன்னியாகுமரி

-------------------------------------------------------------------------

கனவு, 25 ஆம் ஆண்டில்.......68 ஆம் இதழ் வெளிவந்திருக்கிறது

” கனவு “ காலாண்டிதழ்: ஆண்டுச் சந்தா ரூ 100., ஆயுள் சந்தா ரூ 1000.

-------------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்