சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 29 செப்டம்பர், 2016

களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு

களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு : சேவ் இயக்க்குனர் ஆ.அலோசியஸ்         ( சேவ் கூட்டமைப்பு , திருப்பூர்) தலைமை வகித்தார். வியாகுலமேரி வரவேற்றார் .
சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை நூலை வெளியிட்டார்.
அவர் பேசியது: குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில்  பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் குழந்தைகளை தொழிலாளிகளாக்காதீர்கள். வெளிநாடுகளில் குழந்தைகள் முழு ஆளுமையுடன் வளர்கிறார்கள். வாழ்கிறார்கள், குழந்தை ஆளுமை முழு வாழ்வின் ஆதாரம்.  அறிவு பள்ளிப் படிப்பில் மட்டும்  இல்லை . பொது புத்தக வாசிப்பில் இருக்கிறது.அனுபவத்தில் இருக்கிறது.பயிற்சியை தொழிலாளச் செய்தால் அது தீமை.குழந்தைகளைத் தொழிலாளிகளாகும் பெற்றோர் அடிப்படை உரிமையில் கைவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்கள் அவர்களை பிறகு வன்முறைகளாக்குகிறது.அது வேண்டாம்..குழந்தைகளாகவே வளர விடுங்கள்.

நூலைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் பேசியது: கல்வி உரிமைச்சட்டம் ,கட்டாயக்கல்வித்திட்டம், மாவட்ட நிர்வாகங்களின் கெடுபிடி  ஆகியவை தொழில்நகரங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் பீகார், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் நகரங்களில் இருக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் அடிப்படை மொழி சிக்கல் காரணமாகப் பள்ளிக்கல்விக்குப் செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்.குழந்தைத் தொழிலாளர்களாக அவர்கள் மாறும் அவலம் இருக்கிறது. இந்த அவலம் புதிய தேசிய கல்விக் கொள்கையால் அதிகரிக்கும். அதில் உள்ள அய்ந்தாம் வகுப்பிற்குப் பிறகு தேர்வும் அதில் தேர்ச்சி பெறாதவர்கள் கட்டாயத் தொழில்கல்விக்கு அனுப்புவதும் குழந்தைகளின் கல்வியை தடைசெய்யும். சமஸ்கிருத திணிப்பும், மாநில பட்டியலில் இருந்து கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதும் இன்னும் சாதாரண மக்களுக்கு கல்வியை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளது. சேவ் கூட்டமைப்பு சார்ந்த பலர் உரையாற்றினர் .கருப்பசாமி நன்றி கூறினார்.
களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “  நூல் வெளியீடு : சேவ் கூட்டமைப்பு , திருப்பூர் ( 98422 13011 )



ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல்

வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி.......                                            .ப்ரதிபா ஜெயச்சந்திரன்,  பாண்டிச்சேரி

    செந்திலின் முகத்தில் பஞ்சு    பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி  இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “  சாயத்திரை  “ போன்ற நட்சத்திர நாவல்.
 கதை சொல்லியின் மொழி எந்த இட்த்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி.
  கதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் கம்பனிகளின் வாசலுக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்றக் கேள்விக்கான பதில்கள் நாவலெங்கும் ஆங்காங்கே யதார்த்தமான விவரணையில் கதாபாத்திரங்களின் மொழியில் சொல்லப்படுவதும் அந்த வாழ்வில் அவர்கள் இழந்து போன் சுகங்களும் அவ்வாழ்கையில் கதாபாத்திரங்கள் ஒருவிதமான தப்பித்தலை உணர்வது போலும். இவ்வாழ்வின் சிக்கலான இண்டு இடுக்குகளையும் சொல்வதுடன் பெண்களின் அவலமான நிலையும் தாய்க்கும் மகளுக்கும் மறைப்பு ஒரு கவசமாக மாறி விடுவதும் , கம்பெனியில் ஆண்களின் சிறுசிறு தொடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனம் நினைத்தபோதிலும் தொடுதலின் சுகத்தில் காலூன்றி விடும் ஒரு தன்னிலைச் சிக்கல் சார்ந்த பெண்களின் வாழ்வும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இடையிடையே சொல்லப்படும் அம்மா சொன்ன கதை, ஆசிரியர் சொன்ன கதை, தொலைக்காட்சி சொன்ன கதை போன்ற இவையாவும் தங்கள் வாழ்வை பனியன் கம்பெனிகளில் தொலைத்த சிறுவர்களின் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவேளைகளாக மிஞ்சிப் போய்விடுகின்றன.  அல்லது அவை தங்கள் வாழ்வில் நினைவு கூரத்தக்க அகவய நிகழ்வுகளின் படிமங்களாக மாறி கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளின் இடையே வேர் விட்டு நீட்டும் சிறிய பசிய இலைகளாக நிற்கின்றன புதிய உத்தி.... .. அடுத்து
1. அம்மாவின் புடவை வாசனை முக்கை இழுத்துக் கொள்ளச் செய்த்து
2. குடித்தால் சிவப்பாகி விடலாம் என்ற சிறுவர்களின் கற்பனை
3. தேவடியாக்கீரை என்ற பெயர் இருப்பதையும் அம்மா சொன்னபோது ரொம்பவும் வெட்கமாக இருந்த்து கனகுவுக்கு.
4.என்ன சமாதானம் வேண்டியிருக்கு. இனிமேல் சிகரெட்டெல்லா குடிக்க மாட்டேன்னு சத்தியமா பண்ணனும். போடா.. த்லையைக் குனிந்து கொண்டு சொன்னான் செந்தில் .
போன்ற வரிகள் சிறியவர்கள் எனக்கணித்து விடமுடியாதபடிக்கு வாசிப்போடு வளர்ந்து விடும் சிறுவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் பெரியவர்களானாலும் தாங்கள் இன்னும் சிறுவர்களே என சட்டென நிஜத்தைத் தழுவும் கணங்கள்.ஞாயிறுகளில் அவர்கள் விளையாட முடியாமல் போகையில் அவர்களுடன் நம்மையும் மனம் கனக்கச் செய்யும். சிறுவர்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டு பனியன் கம்பெனிகள் என்னும் பிணக்கிடங்கினுள் அவர்கள் தள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பணம், கனகுவின் அப்பாவின் வார்த்தைகளில் “ உன்னப் படிக்க வெக்காமெ உன்னெ சம்பாதிக்கச் சொல்லி செலவு பண்ரம் பாரு அது திருட்டுப் பணமில்லாமெ என்னடா.. கள்ளப்பணம்”  போன்ற வரிகள் ஒளிக்கீற்றுகளாக, யதார்த்தம் சார்ந்த தீர்வுகளையும்  முன் வைக்கின்றன என்ற வகையில்                        பிணங்களின் முகங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது    
( 250 பக்கங்கள் ரூ200 . நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை  – 98..)



WATER PROBLEM :  Chudumanal : Subrabharathimanian’s Novel

Chudumanal portrays the vicissitudes of a lower middle class family, perhaps lower than lowest middle  class family , and its values when politicians let loose terror. The  emotional fissures are never healed.It is  not as if the terror. The emotional  fissures are never healed. It is not as if the terror  is restricted to one region: it has its own back lashes and ecohoes in the neighbouring regions iften to unheard of diemensions. The common man  already with his burdensome inherited false values , suffers most.

Subrabharathimanian, the novelist discreetly mentions the conflagration as “ water crisis “ or “ water problem “ . When politicians refuse to accept, much less obey the judgements of the courts of law, that we ourselves established, and resort to violence , what ensues is chaos. Chudumanal is the chaos of many families.
  Is exodus possible when the minorites are threatened? When they pour in from neighbouring countries , we give them the status of refugees. What about the internal  refugees who are pushed from one state to another ? A son ( of the soil ?) of language ? ) becomes a refuge to his parents. Strange ? Sadly true.
The novelist examines this issue in terms of four characters –Mahendran, his parents ( inadequately employed ) father and chronically ill mother , Kandaswami and amodaran.
The novelists  technique in handing issues and characters is stunningly original  and unbelievably simple.  He keeps off emotion and indulges mainly in visual writing. He creates beautiful visuals from flies, falling leaves , bus stands , bus seat to mention only a few. Th e contents of the visuals are double edged.; touch the finest chords in your heart even as the sense are bombarded.
 He twenty four chapters in a little over a hundred pages are the best visuals texts that this reviewer  has read in recent times. One chapter doesnot  seem to lead on to the other but when you put down the novel, you realise how cunningly they are liked. A spectacular craftsmanship, indeed . All the time, the author imposes upon himself severe restraint burying verbosity, like seeing faded colour   slides of gruesome murder , even when you are a prime witness.
The novelist doesnot imitate  anyone. Only Asokamithrans  Karainda Nizhlgal can stand in any relation to this work. It comes as an irony that the politicians in several states, which they are incabable of solving issues, show themselves adepts in creating more and more new problems as if they feed them.
 The  Last  chapter leaves you breathless. Must  language and water  unite or divide?  Will some one in the Sahitya Akademy care to read this  meaningful, relevant and important work of our time ? The cover design is very telling of the contents. Very rarely does this happen.
( The Hindu., 7/12/1993 – S.Gopalie )


களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு :
சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை
சுப்ரபாரதிமணியன்.,சி.ஆர். ரவீந்திரன்.,                                                                     ஆ.அலோசியஸ்
28/9/16 காலை 11 மணி  . மணியம் கிளாசிக் விடுதி, குமரன் சாலை, திருப்பூர் ..வருக..
நூல் வெளியீடு : சேவ் கூட்டமைப்பு , திருப்பூர் ( 98422 13011 )
From kuviyam.com
திருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதிமணியன், கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், நூல் மதிப்புரைகள் என பல படைப்புகளை அளித்தவர். இவரது கனவுஇலக்கியச் சிற்றிதழ் 1987 முதல் வெளிவருகிறது. திருப்பூரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். கதா விருது, தமிழக அரசு சிறந்த நாவல் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். பல்வேறு மொழிகளில் இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்பட ஆய்வாளர். இவரது தெளிவான விமர்சனக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 11 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் என 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
**************************************************************
இவரது புதுப் பழக்கம் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.

பஸ் இரைச்சலுடன் வந்து நின்றது. புழுதியை அலட்சியப்படுத்தியபடி இறங்கினர். தினத்திற்கு ஒரு தரம் மட்டுமே வரும் பஸ். ஏறவும் நிறையக் கூட்டமிருந்தது. ஆலமரத்துப் பின்புறத்திலிருந்து பரபரப்பாய் ஓடி வந்தாள் ஈஸ்வரி. அய்யபஸ்ஸு.. என்று வாய் விட்டுச் சொன்னாள்.
ஈஸ்வரிக்கு பஸ் ஒரு வேடிக்கை.

பள்ளிக்கூட நாட்களில் சரியாகக் கணக்கு பாட நேரத்தில்தான் வரும். கணக்கு வாத்தியார் வேடிக்கை பார்க்க அனுமதிக்க மாட்டார். எனவே, விடுமுறை நாட்களில் இன்னும் சில வாண்டுகளுடன் இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ் வருவதை வேடிக்கை பார்ப்பது ஒரு ஆனந்தம். ஆரன் அடி மாமா ..என்று ஓட்டுனுரைப் பார்த்துக் கேட்பதும்  அந்த ஒலி கேட்டு மகிழ்வதும் சிலசமயம் நடக்கும்.

இரண்டு நாட்கள் முன்பு, மூன்று கூடைகளுடனும் ஒரு பெரிய பாத்திரத்துடனும் ஒரு பெண்மணி பஸ்ஸில் வந்து இறங்கி நின்றுகொண்டு இருந்தாள். ஈஸ்வரியையும் அவள் சகாக்களையும் பார்த்து இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். இவர்களே இல்லத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஆளுக்கு ஒரு பொருளைத் தூக்கிகொண்டு இல்லம் நோக்கிச் செல்கையில், எவ்வளவு நாளாக அவர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி மட்டும் கடந்த விசாழன்வந்து சேர்ந்தவள் என்று தெரியவருகிறது, ‘நீங்களெல்லாம் அனாதைகளா?’ என்றும் கேட்டுவிட்டு, தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமும் அடைந்தாள் அந்தப் பெண்மணி.

ஈஸ்வரிக்கு அக்காவும் பாவாவும் உண்டு. ஈஸ்வரியையும் அவள் அக்காவையும் வளர்த்த மாமா, அந்த அக்காவை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டாராம் , அதனை மறுத்து பாவாவை மணமுடிக்க, ஈஸ்வரியை வளர்க்க மாமாவோ பாவாவோ முன்வரவில்லை. வேறு வழியின்றி அனாதை என்று சொல்லி அக்காவே ஈஸ்வரியை இல்லத்தில் சேர்த்துவிட்டாள்.  இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஜெபம் சொல்லவும் சரியாக சிலுவை போடுவதற்கும், சிஸ்டர், பிரதர் என்று விளிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டாள் ஈஸ்வரி.

அந்தப் பெண்மணி கொண்டு வந்த இனிப்புகளும் பழங்களும் அனைவருக்கும் கிட்டின. சிஸ்டர் அவளுக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.

இன்றும் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஈஸ்வரி, யாரும் வராததால் பஸ் பின்னால் டுர்ர்என்று ஓடிக் களைக்கிறாள். சிவப்பு நந்தியாவட்டைப் பூக்கள், பிள்ளையார், வண்ணத்துப் பூச்சி என்று வேடிக்கை பார்த்த ஈஸ்வரி ஆலமரத்தடியிலே கண்ணயர்ந்து விடுகிறாள்.

விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூடவந்த இல்லத்து நண்பர்கள் யாரையும் காணவில்லை. ஜெப நேரமும் அதனை அடுத்த உணவு நேரமும் கடந்திருக்குமா என்றும் தெரியவுமில்லை. ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளையும், செம்மறியாட்டு மந்தையையும் வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள். மாமா வீட்டில் இருந்தபோது விடுமுறை நாட்களில் அக்கா காட்டன் ஆபீசிலிருந்து திரும்பும்வரை இப்படி அலைந்து திரிவதுதானே வழக்கம்.
இல்லம் அடைகிறாள். கைவைத்து மெல்லக் கேட்டைத் திறந்து போகிறாள்

எல்லோரும் சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருந்தார்கள். தட்டில் சாதம் விழுந்திருந்தது. அவளை யே எல்லோரும் பார்த்தார்கள்.
பிரதர் சார்லஸ் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். கேட்டை மறுபடியும் மூடுகையில் அவர் நகர்ந்து வருவது ஈஸ்வரிக்குத் தெரிந்தது, அவர் வெகு சீக்கிரம் அவள் அருகில் வந்து நின்றார்.

ஜெபத்துக்கு வராமே எங்க போயிருந்தே…?
வெளியே…”
அவள் சொல்லச் சொல்ல அவள் முகத்தில் அறை விழுந்தது.
ஜெபத்துக்கு இல்லாமே வெளிய கேட்குதோ…”

கோணிக்கொண்டு வந்த அழுகையுடன் தினமும் போறதுதானே பிரதர். ஜெபம்தா புதுசுஎன்றாள் சிதைந்த குரலில்.
என்று முடிகிறது.
***********************************************************************
செகந்தரபாத்தில் பணிபுரிந்த நாட்களில் வெளிவந்த தொலைந்துபோன கோப்புகள்முதலிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டவை. டாலர் சிட்டிஎன்று அறியப்படும் திருப்பூர் வாழ்க்கை பனியன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகளையும் , சமுதாயச் சிக்கல்களையும், சுற்றுப்புற சூழல் பாதிப்புகளையும் தனது கதைகள், கட்டுரைகள் நாவல்கள் மூலம் பேசி வருபவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தல், பெண்கள் சுரண்டப்படும் சுமங்கலிதிட்ட எதிர்ப்பு என சமூகக் களப்பணியிலும் முன் நிற்பவர்.
இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் சில : ஓடும் நதி, மற்றும் சிலர், சாயத்திரை, நீர்த்துளி, புத்துமண்.

சிறுகதைகளில் சில:- ஆழம், தொலைந்துபோன கோப்புகள், ஒலைக்கீற்று, அரேபியக் கிராமம், கைகுலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்.
இணையத்தில் கிடைக்கும் ஒரு கதை : ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்-

எஸ் கே என்
                                         கனவு 82ம் இதழ் வெளிவந்துள்ளது.
சிறுகதைகள்: கம்மாளன்,கனவுப்ரியன்,லினிரா
கவிதைகள்: ப்ரதிபா ஜெயச்சந்திரன், மு.ஆனந்தன், வீரபாலன்,வெ.வெங்கடாசலம்,
திரைப்படக்கட்டுரைகள்: ஆல்பா, சுப்ரபாரதிமணியன்
விலைரூ 10 ; 9486101003

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அழகு நிலாவின் ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பு

ஜீரோஸ் ஈஸ்ட்லிருந்து மெரினாபேக்குக்கு ஒரு பயணம்
                                                    சுப்ரபாரதிமணியன்

  கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்ட்து. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்த்து. அதில் என் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில் ஒன்று. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்ன்ணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்ல்லாம். 2012ல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன் பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது ஓ.. மலேசியா என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல் இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் மாலு “( உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய பால் மரக்காட்டினிலே நாவல்   மலேசியப்பின்னணி நாவல் ஆகும். ஓ.. மலேசியா ““ மாலு ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச் சிறுகதைகள் குகைகளின் நிழலில் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்ன்ணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன்.
அழகு நிலாவின் ஆறஞ்சு  சிறுகதைத் தொகுப்பு அப்படி சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை முழுமையாகக்கொண்ட கதைகள் என்று நினைத்தேன். ஆனால் அதில் உள்ள ஒரு மகாபாரத கதை அந்த முத்திரையை நழுவ விட்டு விட்டது. அடுத்தத் தொகுப்பில் அந்த முத்திரையை அழகுநிலா அழுத்தமாகப் பதிக்கவேண்டும்.
ஆனால் சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை இத்தொகுப்பு பதிவு செய்திருக்கின்றது என்பது முக்கியமே.வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள், வேலை நிமித்தமாய் சிரமங்கள், சொந்த ஊர் போகிற கனவு, சொந்த ஊரில் செத்துப்போகிறவர்கள் பற்றிய நினைவு ஏக்கங்கள், கஷ்டம் வரும்போது உதவும் பக்கத்து வீட்டு மனிதர்கள் , பக்கத்து வீட்டு அறியாத மனிதர்கள் , பூனை முதற்கொண்டு பிராணிகள் போன்றவற்றை கூர்ந்து கவனித்து கதைகளாக்கியிருக்கிறார்.  பள்ளிக்குழந்தைகளின் விரோதமான மன நிலை பற்றி ஒரு கதை பேசுகிறது. இந்தோனிசியா வேலைக்காரப் பெண்ணின் மீது கொண்ட கோபமும் அது சட்டென ஏதோவொரு கணத்தில் மறைவதும் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.  வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள்  பணத்தை சம்பாதித்து என்னவாகப்போகிறது என்று அங்கலாயித்துக் கொள்கிறார்கள்.  பூனை ஒன்று விபத்தில் சிக்கிக் கொள்ள  அந்நியமாகவே இருக்கிற பக்கத்து வீடுகள் ஒன்று சேருகின்றன. அம்மாவின் மரணத்திற்குப் பின் தனிமையில் வாடும் அப்பாவிற்கு ஒரு பூனை நண்பனாவதை வீட்டில் இருப்பவர்கள் கண்டு கொள்கிறார்கள். அம்மாவை அதிகம் கண்டு கொள்ளாதவன் சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்த பின் அம்மாவின் முக்கியத்துவத்தை உணர்கிறான். இப்படி பல கதைகள் . அசட்டுத்தனமான காதல் . அசட்டுத்தனமான அனுபவங்கள் . புது மலர்கள் கட்டுபவளுக்கு ஏற்படும் அசட்டுத்தனத்தை ஒரு கதையில் சொல்கிறார்.சிங்கப்பூர் சூழல்-  குடும்பம்  , வேலை, பக்கத்து வீடுகள், தொடர்வண்டி பிரயாண அனுபவங்கள் என்று கதைகள். எளிமையான வெளிப்பாட்டில்  அதிகம் சிரம்ப்படுத்தாத நடையில் விசயங்களைச் சொல்லிப்போகிறார். எளிமையாக உள்வாங்கிக் கொள்ளும் அனுபவங்களாய் இருக்கின்றன.பெண்களின் பிரச்னைகளை அந்தப்பார்வையிலேயே சொல்லியிருப்பதும் நன்று.
( தங்கமீன்கள் பதிப்பக வெளியீடு, சிங்கப்பூர் )
Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com.www.rpsubrabharathimanian.blogspot
களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு :

சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை
சுப்ரபாரதிமணியன்.,சி.ஆர். ரவீந்திரன்.,                                                                     ஆ.அலோசியஸ்
28/9/16 காலை 11 மணி  . மணியம் கிளாசிக் விடுதி, குமரன் சாலை, திருப்பூர் ..வருக..

குவியம்.காமிலிருந்து ..
---------------------------------

kuviyam.com
திருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதிமணியன், கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், நூல் மதிப்புரைகள் என பல படைப்புகளை அளித்தவர். இவரது கனவுஇலக்கியச் சிற்றிதழ் 1987 முதல் வெளிவருகிறது. திருப்பூரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். கதா விருது, தமிழக அரசு சிறந்த நாவல் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். பல்வேறு மொழிகளில் இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்பட ஆய்வாளர். இவரது தெளிவான விமர்சனக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 11 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் என 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
**************************************************************
இவரது புதுப் பழக்கம் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.

பஸ் இரைச்சலுடன் வந்து நின்றது. புழுதியை அலட்சியப்படுத்தியபடி இறங்கினர். தினத்திற்கு ஒரு தரம் மட்டுமே வரும் பஸ். ஏறவும் நிறையக் கூட்டமிருந்தது. ஆலமரத்துப் பின்புறத்திலிருந்து பரபரப்பாய் ஓடி வந்தாள் ஈஸ்வரி. அய்யபஸ்ஸு.. என்று வாய் விட்டுச் சொன்னாள்.
ஈஸ்வரிக்கு பஸ் ஒரு வேடிக்கை.

பள்ளிக்கூட நாட்களில் சரியாகக் கணக்கு பாட நேரத்தில்தான் வரும். கணக்கு வாத்தியார் வேடிக்கை பார்க்க அனுமதிக்க மாட்டார். எனவே, விடுமுறை நாட்களில் இன்னும் சில வாண்டுகளுடன் இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ் வருவதை வேடிக்கை பார்ப்பது ஒரு ஆனந்தம். ஆரன் அடி மாமா ..என்று ஓட்டுனுரைப் பார்த்துக் கேட்பதும்  அந்த ஒலி கேட்டு மகிழ்வதும் சிலசமயம் நடக்கும்.

இரண்டு நாட்கள் முன்பு, மூன்று கூடைகளுடனும் ஒரு பெரிய பாத்திரத்துடனும் ஒரு பெண்மணி பஸ்ஸில் வந்து இறங்கி நின்றுகொண்டு இருந்தாள். ஈஸ்வரியையும் அவள் சகாக்களையும் பார்த்து இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். இவர்களே இல்லத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஆளுக்கு ஒரு பொருளைத் தூக்கிகொண்டு இல்லம் நோக்கிச் செல்கையில், எவ்வளவு நாளாக அவர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி மட்டும் கடந்த விசாழன்வந்து சேர்ந்தவள் என்று தெரியவருகிறது, ‘நீங்களெல்லாம் அனாதைகளா?’ என்றும் கேட்டுவிட்டு, தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமும் அடைந்தாள் அந்தப் பெண்மணி.

ஈஸ்வரிக்கு அக்காவும் பாவாவும் உண்டு. ஈஸ்வரியையும் அவள் அக்காவையும் வளர்த்த மாமா, அந்த அக்காவை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டாராம் , அதனை மறுத்து பாவாவை மணமுடிக்க, ஈஸ்வரியை வளர்க்க மாமாவோ பாவாவோ முன்வரவில்லை. வேறு வழியின்றி அனாதை என்று சொல்லி அக்காவே ஈஸ்வரியை இல்லத்தில் சேர்த்துவிட்டாள்.  இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஜெபம் சொல்லவும் சரியாக சிலுவை போடுவதற்கும், சிஸ்டர், பிரதர் என்று விளிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டாள் ஈஸ்வரி.

அந்தப் பெண்மணி கொண்டு வந்த இனிப்புகளும் பழங்களும் அனைவருக்கும் கிட்டின. சிஸ்டர் அவளுக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.

இன்றும் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஈஸ்வரி, யாரும் வராததால் பஸ் பின்னால் டுர்ர்என்று ஓடிக் களைக்கிறாள். சிவப்பு நந்தியாவட்டைப் பூக்கள், பிள்ளையார், வண்ணத்துப் பூச்சி என்று வேடிக்கை பார்த்த ஈஸ்வரி ஆலமரத்தடியிலே கண்ணயர்ந்து விடுகிறாள்.

விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூடவந்த இல்லத்து நண்பர்கள் யாரையும் காணவில்லை. ஜெப நேரமும் அதனை அடுத்த உணவு நேரமும் கடந்திருக்குமா என்றும் தெரியவுமில்லை. ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளையும், செம்மறியாட்டு மந்தையையும் வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள். மாமா வீட்டில் இருந்தபோது விடுமுறை நாட்களில் அக்கா காட்டன் ஆபீசிலிருந்து திரும்பும்வரை இப்படி அலைந்து திரிவதுதானே வழக்கம்.
இல்லம் அடைகிறாள். கைவைத்து மெல்லக் கேட்டைத் திறந்து போகிறாள்

எல்லோரும் சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருந்தார்கள். தட்டில் சாதம் விழுந்திருந்தது. அவளை யே எல்லோரும் பார்த்தார்கள்.
பிரதர் சார்லஸ் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். கேட்டை மறுபடியும் மூடுகையில் அவர் நகர்ந்து வருவது ஈஸ்வரிக்குத் தெரிந்தது, அவர் வெகு சீக்கிரம் அவள் அருகில் வந்து நின்றார்.

ஜெபத்துக்கு வராமே எங்க போயிருந்தே…?
வெளியே…”
அவள் சொல்லச் சொல்ல அவள் முகத்தில் அறை விழுந்தது.
ஜெபத்துக்கு இல்லாமே வெளிய கேட்குதோ…”

கோணிக்கொண்டு வந்த அழுகையுடன் தினமும் போறதுதானே பிரதர். ஜெபம்தா புதுசுஎன்றாள் சிதைந்த குரலில்.
என்று முடிகிறது.
***********************************************************************
செகந்தரபாத்தில் பணிபுரிந்த நாட்களில் வெளிவந்த தொலைந்துபோன கோப்புகள்முதலிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டவை. டாலர் சிட்டிஎன்று அறியப்படும் திருப்பூர் வாழ்க்கை பனியன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகளையும் , சமுதாயச் சிக்கல்களையும், சுற்றுப்புற சூழல் பாதிப்புகளையும் தனது கதைகள், கட்டுரைகள் நாவல்கள் மூலம் பேசி வருபவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தல், பெண்கள் சுரண்டப்படும் சுமங்கலிதிட்ட எதிர்ப்பு என சமூகக் களப்பணியிலும் முன் நிற்பவர்.
இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் சில : ஓடும் நதி, மற்றும் சிலர், சாயத்திரை, நீர்த்துளி, புத்துமண்.

சிறுகதைகளில் சில:- ஆழம், தொலைந்துபோன கோப்புகள், ஒலைக்கீற்று, அரேபியக் கிராமம், கைகுலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்.
இணையத்தில் கிடைக்கும் ஒரு கதை : ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்-

எஸ் கே என்

சனி, 10 செப்டம்பர், 2016

திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள் சங்கம்
* முதல் நாவல் அனுபவம் : மற்றும் சிலர் நாவல்
சுப்ரபாரதிமணியன் உரை
திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள் சங்கக் கூட்டம் : 11/9/16 மாலை 4 மணி முதல் 6மணி வரை  மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூர்.. வருக
( தொடர்புக்கு: முடியரசு 98422 44453 )

மற்றும் சிலர் நாவல் சில அபிப்ராயங்கள்
1. :  ஜெயந்தன்
மற்றும் சிலர் “  படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களுக்கு  இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின்   அனுபவங்களையும்  தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே  நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )



2. மற்றும் சிலர் : நாவல்  ஜெயமோகன்

நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம்  உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது  தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது  நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில்  ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன.  ஆற்றூர் ரவிவர்மாசார் நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி.  எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்  அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே.  சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87 

(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )



3. மற்றும் சிலர் : நாவல் :  நகுலன்

சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக   நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த  நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்ஒன்று.
(மற்றும் சிலர் :  டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )

( டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )