சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

அந்திமகாலத்தில் வெளிச்சக்கீற்றுகள் அந்திமம் :. ப. சகதேவன் நாவல் : சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதியை சேரந்த நாவலாசிரியர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார் இந்த நாவலின் தலைப்பு சொல்வது போலவே அவர் அந்திமத்தில் இருப்பதாக கருதுகிறார் .ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ..இந்த ஓய்வு வாழ்க்கையை கூடுதல் போனதாகவே கருதுகிறார் இந்த சூழலில் பெங்களூர் சார்ந்த அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் பற்றியும் கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை பற்றியும் இந்த நாவலில் எழுதியிருக்கிறார் . பெங்களூர் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கை இந்த நாவலின் பல பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன அதேபோல பெங்களூரில் வளர்ச்சியும் வளர்சிதை மாற்றங்களும் இணையாக வந்து செல்கின்றனர் சகாதேவன் எழுத்துக்களில் வழக்கமாக இருக்கும் கிண்டல் துளியும் சற்றே நகைச்சுவையும் நாவல் முழுக்க நகைக்க வைக்கின்றன இந்த கிண்டல் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் அதிகமாக இருக்கிறது .சக மனிதர்கள் மீதான நேசத்தை கூடிக்கொண்டே போகிறது ஒரு தனி மனித வாழ்க்கையின் விசாரமும் அவரின் குடும்பமும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன . கொங்கு மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து முதல் பெங்களூர் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து வரை பல்வேறு அனுபவங்களின் சித்தரிப்பு இந்த நாவல் தனிமனித ஆர்வலர்களால் நிறைந்த இந்த நாவல் பெங்களூர் வாழ் தமிழர்கள் பற்றிய வேறு வகையான சிக்கல்களையும் அடையாள நெருக்கடி நிலையையும் அதிகமாக பேசவில்லை .அந்நகரின் 50 ஆண்டுகாலம் சரித்திரத்தில் பல முக்கிய சம்பவங்கள் சில கோடுகளாக வரையப்பட்டிருக்கின்றன ஆனால் அவை மெலிதான கோடுகளாக இருக்கின்றன .தனிமனித வாழ்க்கையின் அனுபவங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன நாவலாசிரியர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமியின் பரிசு பெற்றவர் ஒரே ஒரு நாவல் மொழிபெயர்ப்பு செய்தார் .. இது ஒரே ஒரு நாவல் முயற்சி ஆகக்கூடாது . அவரின் படைப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும் அபூர்வமாக தென்படும் கட்டுரைகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகள் தொடர வேண்டும் அவர் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளில் இருக்கிறார் என்பதுவும் ஆறுதலை தருகிறது சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ( யாவரும் பதிப்பகம் வெளியீடு விலை ரூ 550) தொகுப்பாசிரியர் : ப.கண்ணையா அணுகுமுறை அறிஞர் என்ற அரிய பட்டத்தைப் பெற்றுள்ள நண்பர் ப.கண்ணையா அவர்கள், அப்பழுக்கற்ற தமிழ்த் தொண்டர். இலக்கிய இலக்கணங்களைக் கற்றுள்ள தமிழறிஞர்களிடம் இல்லாத தமிழ்ப் பற்று கொண்டவர் , நடத்துனராகத் தன் வாழ்க்கை முழுவதும் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளவிடற்கரியது. இன்றும் தொடர்கிறது. மாதந்தோறும் பல நிகழ்ச்சிகளைக் கொண்ட இலக்கியக் கூட்டத்தைத் தனித்து நின்று சிறப்பாக நடத்துகின்றவர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளையும் வளர்க்கின்ற பண்பாளர். ‘மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்ற பழமையான நூல் உட்பட பல அரிய நூல்களின் பயனை உணர்ந்து, தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்லுள்ளத்தோடு பெரும் பொருட் செலவில் மீண்டும் பதிப்பித்து வழங்கி வரும் பெருந்தகை ஆவார். அவர் உலகம் சுற்றும் வாலிபர். .பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருபவர். அவர் பயணம் செய்த நாடுகள், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, பினாங்க், லங்காவி, பாங்காக், பட்டயா, ஆங்காங், மக்காவ், கம்போடியா, பர்மா, அந்தமான், துபாய், ஷார்ஜா, சைனாவில் ஷங்காய், பீஜிங் ஆகியவை. தான் சென்ற நாடுகளோடு தமிழர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து தனக்குக் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ‘கடல் கடந்து வாழும் தமிழர்கள்’ என்ற நூலைத் தமிழுலகத்திற்குத் தந்துள்ளார். அஃது ஓர் அறிய முயற்சி! அது போல் இந்த நூலும் முக்கியமானத் தொகுப்பு நூலாகும். - தமிழமுதன்
அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா என்னுரை : அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களின் சீரிய முயற்சியால் பல நூல்கள் பதிப்பு பெறுகின்றன. அரிய நூல்களுக்கும் இந்தவகையில் பதிப்பு வாய்ப்புகள் ஏற்படுகின்றன அந்த வகையில் என்னுடைய இந்த நூலுக்கு அவர் ஆதரவு தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய நூல்கள் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றி ஓரளவுக்கு முழுமையான பார்வையைத் தரும் இவ்வகை தொகுப்பு கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் வெகுவாக பயன்படுவதாக இருக்கும். ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் அந்த படைப்புகளை தேடிப்பிடிக்க உதவி செய்வதாகும் அமையும். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டிற்கு ஆதரவுக்கரம் கொடுத்திருக்கிறார் . அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்கள்.. கட்டுரையாளர்கள், அவற்றை வெளியிட்ட இதழ்கள், மற்றும் அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பயில்கின்ற மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் அன்புடன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் Rs 160
கனவு வெளியீடு தீபன் என்ற தீவிரமானத் திருப்பூர் குரல் சுப்ரபாரதிமணியன் இளம் நண்பர் ரா. தீபன் அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதிலும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ண நடவடிக்கைகளும் கொண்டு நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர் .அதன் ஆதாரமாக மார்க்சிய தத்துவத்தின் மீது அக்கறை கொண்டு தத்துவார்த்த நூல்களை தொடர்ந்து படிக்கவும் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயலும் நடவடிக்கைகளும் கொண்டவர். அந்த வகையில் அவரின் எண்ண எழுச்சிகளை சிறு சிறு கவிதைகளாக அவ்வப்போது எழுதி வெளியிட்டிருக்கிறார்.. தொகுப்பாகவும்,பின்னர் அந்தக் கவிதைகள் ஒரு நூலாய் வந்திருக்கிறது .அதன் தொடர்ச்சியாக உரைநடைக்கும் நுழைந்தவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் .அந்தக் கதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது . வழக்கம் போல் அவரின் அக்கறை கவிதைகள் ஆனாலும், சிறுகதைகள் ஆனாலும் அது சாதாரண மக்கள் பற்றியதாகவே இருக்கிறது, அவர் எழுதும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளில் கூட விளிம்புநிலை மக்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கான விடுதலை பற்றியும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர் அந்த மாதிரியான திரைப்படங்களை தேடி பார்ப்பவர். குறும்படங்களும் வெளியிட்டுள்ளார் இந்த நூலில் கதை மாந்தர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள் .சாதிய, வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குகளும் சக மனிதனை எப்படி அந்நியப்படுத்துகிறது என்பது பற்றிய அக்கறை இந்தக் கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் சேரியில் வாழக்கூடிய ஒரு சாதாரண கழிவுநீர் சார்ந்த தொழிலை செய்யக்கூடிய ஒருவனைப் பற்றிய வாழ்க்கையையும் அவன் மனைவி காவேரியையும் ஒரு கதையில் பாத்திரங்களாக கொண்டுவந்திருக்கிறார் .ஆண்டான் அடிமை பிரச்சனை எப்படி ஊறிப் போயிருக்கிறது என்று அந்த கதையை ஆரம்பிக்கிறார் .கணவன் இறந்த போன பின்னால் அவள் மீது வைக்கிற பாலியல் சீண்டல்கள், தினசரி வாழ்க்கையை சிரமங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் .அவள் தற்காலிகமாக வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ரசாயன பொருட்கள் தலையில் கொட்டிப்போக பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் தொழிலாளர் சங்க தலைவர் அந்த நிறுவனத்திலிருந்து கொஞ்சம் பணம் பெற்று விலகிக் கொள்கிறார். அவர் மாறி மாறி வேலைக்கு முயல்கிறார் அவர் வேறு வேலை கூட செல்ல முடியாத சிரமங்களையும் கடைசியில் எல்லோரும் அலட்சியப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு செல்ல வேண்டிய நிலையும் சொல்லப்பட்டிருக்கிறது கணவனின் தொழில் சார்ந்த விஷயங்களும் அதேபோன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்வதும் எதேச்சையாக நிகழ்ந்ததாக இருந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அதுதான். ஒரு எழுத்தாளனின், கவிஞனின் முயற்சிகளில் அவன் ஏமாற்றப்படுவதை ஆட்டோ கவிஞர் என்ற கதையில் சொல்லியிருக்கிறார், எனக்கு தெரிந்த சில இலக்கியவாதிகளையும் அந்தக் கதைகளில் கண்டேன் தஸ்கான் என்ற கதையில் பழைய பொருள்களை சேகரிப்பதும் அதன் மூலமாக படுக்கையில் கிடக்கும் அம்மாவை காப்பாற்றுவதும் அவனுக்கு நிர்ப்பந்தமாக இருக்கிறது. அவனின் கனவு ஒரு சொந்த மிதிவண்டி. அது கூட கிடைப்பதில்லை .அம்மா இறந்து போகிறாள் கைகளில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக அவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி அவனிடமிருந்த மிதிவண்டி பறிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற விளிம்புநிலை மக்களின் ஆதாரமாக இருக்கிற சிறுசிறு விஷயங்களும் அவர்களை விட்டு நழுவிப் போவதை இது போன்ற கதைகளில் சொல்கிறார். பல கதைகளில் மருத்துவமனைகளில் விளிம்பு நிலை மக்கள் படும் சிரமங்களையும் அவர்களுக்கு சரியாக மருத்துவ உதவி கிடைக்காத விஷயத்தையும் விமர்சனமாக வைக்கிறார் .ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராசப்பன் பற்றி கூட இவரால் எழுத முடிகிறது. வேறு வேலை இல்லை. கொஞ்சம் சொத்து இருக்கிறது இந்த சொத்தை பிடுங்கிக் கொள்ள பெரிய கூட்டமே இருக்கிறது சொத்துடமை என்பது எல்லா பகுதியிலும் மனித உயிர்களை, உறவுகளை பிரிக்க விஷயமாக இருக்கிறது இந்த கதையிலும் அதுதான் ராசப்பனுக்கு நிகழ்கிறது அவன் சாதாரணமானவன் அவனை இன்னும் சாதாரணமானவன் என்று அலட்சியப்படுத்தும் சமூகமும் சொத்துரிமை பற்றிய கேள்வியும் இந்த கதைகளில் அடங்கியிருக்கிறது மண்டபம் போன்ற கதைகளில் இருக்கிற குறியீட்டுத் தன்மை மிக முக்கியமானது. மண்டபம் கதையில் நடக்கிற விஷயங்களை ஒரு கூட்டுக்குடும்பத்தில், பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிற ஒரு காம்பவுண்டில், கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ எங்குமே நடக்கக் கூடியதுதான் அதனால்தான் அதை ஒரு குறியீடு என்று சொன்னேன், அங்கு நடக்கின்ற வர்க்க முரண்பாடு விஷயங்கள், சாதிரீதியான சுரண்டல்கள் சாதி நிலையிலிருந்து சாதாரண மக்களை பார்ப்பது எல்லாம் சரியாக வெளிப்படுகிறது ஆனால் அவர்கள்தான் உழைப்பின் அடிப்படையாக இருப்பரைச் சிறப்பாக சொல்கிறார் .இந்த மண்டபம் போன்ற குறியீடுகளை இந்த கதைகளில் பலவற்றில் காணலாம். இவரின் பார்வையில் இன்றைய சுற்றுச்சூழல் கேடும் அதிலிருந்து மக்கள் மீள வேண்டிய அவசியமும் தொடர்ந்து காணப்படுகிறது அப்படித்தான் மரம் சார்ந்த ஒரு கதை .இயற்கை வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனிதர் ஒரு மரத்தினை பாதுகாக்க வேண்டிய எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது ஆனால் அந்த மரத்தை சுற்றி நடக்கிற சமூகவிரோத செயல்களை விரிவாகச் சொல்கிறார் .இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய மனிதன் இதுபோன்ற இயற்கை செல்வங்களை சுரண்டுவது, தவறாக பயன்படுத்துவது அடையாளமாக இந்த கதை செல்கிறது ரசாயனப் பொருட்களை ஊற்றி அந்த மரம் பட்டு போக செய்ய வைக்கிறார்கள் .இடி விழுந்து தீ பிடித்துக் கொள்கிறது இந்த நிலைய பார்க்க அவனுக்கு மனம் சிரமமாகி விடுகிறது சாவு வரைக்குமான பயத்தையும் கொடுத்திருக்கிறது. பெரும் நகரம் சார்ந்த கிராமிய வாழ்க்கை கதாபாத்திரங்களை இந்த சிறுகதைத் தொகுப்பில் நாம் காணலாம் அந்த மனிதர்களெல்லாம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அவருடைய பிரச்சனைகளை நாம் கூர்ந்து கவனிப்பது இல்லை ஆனால் தீபன் போன்ற எழுத்தாளர்கள் சமூக நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்மூலம் விளிம்புநிலை மக்கள் பற்றிய விடுதலைக் குரலை மெலிதாக எழுப்புகிறார்கள். இந்த முயற்சி முக்கியமானதாகத் தோன்றுகிறது காரணம் 12 மணி நேரம் /15 மணி நேரம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இவ்வகை மனிதர்களைக் கூர்ந்து பார்த்து அவர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அவரின் அக்கறை இது போன்ற படைப்புகளை தொடர்ந்து உருவாக்கும் வேகத்தைக் கொண்டிருக்கும் திருப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் படைப்பாளிகள் சிறப்பாக உருவாகிக் கொண்டிருப்பதின் அடையாளமாய் இன்றைய இளைய தலைமுறையில் தீபன் அவர்கள் விளங்குகிறார். அவரின் இன்னொரு அழுத்தமானத் தடமாக அவரின் சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன வாழ்த்துக்கள் சுப்ரபாரதிமணியன்
வாசிப்பனுபவம். #அந்நியர்கள் :#சுப்ரபாரதிமணியன் #எழுத்து_கவிதா வெளியீடு / கோவை பிரசன்னா சுபரபாரதிமணியன் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக எழுதிவருபவர். எழுத்தின் எல்லா வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்களிலும், அதை நாவல்களில், சிறுகதைகளில் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். சகமனிதர்களின் வாழ்க்கையை, அதன் அனைத்துவிதமான தாக்கங்களை இயல்பாக யதார்த்த நோக்கில் எழுதுபவர். இவரின் சாயத்திரை நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். நாம் காணப்போகும் இந்த #அந்நியர்கள் நாவல் "எழுத்து" இலக்கிய அமைப்பின் 2020 ஆண்டிற்கான "திருமதி சௌந்தரா கைலாசம் விருது" பெற்றது. நாவல் இவரின் பல கதைகளைப் போலவே திருப்பூரைக் கதைக்களமாகக் கொண்டது. வேலை தேடி வருவோரை வேண்டாம் என்று சொல்லாமல், இரு கரம் நீட்டி வரவேற்ற ஊர் திருப்பூர். கோவிட் சமயத்தில் இங்க வேலை செய்து, வடமாநிலங்கள் திரும்பியவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும். நாவலில் அது போல பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்து, திருப்பூர் வாழ் மக்களாகியவர்களின் அவஸ்தைகள், அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவைகளைப் பேசுகிறது. துளசி என்ற வடமாநிலப் பெண்ணைச் சுற்றி நகர்கிறது கதை. தன்னார்வலராக அந்தப் பெண் ஈடுபடும் நிகழ்வுகள், சந்திக்கும் பிரச்சினைகள், அவளைப் போல வந்து கஷ்டப்படும் பெண்களை காக்க முற்படுதல்கள், தன்னம்பிக்கை இல்லாமல் காதலித்து திடீரென்று ஓடிப்போகும் காதலன், பின்னர் தத்தளிக்கும் காதலி... சிறு பெண்களின் மீதான அத்து மீறல்கள்... இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து சரியான நிகழ்வுகளை புள்ளிகளாக வைத்து கோலம் தீட்டியுள்ளார் சுபரபாரதிமணியன். வண்ணக் கோலம் ஆகியிருக்கிறது. கதை முழுவதும் திருப்பூர் நகரம் வருகிறது. அதன் பனியன் கம்பெனி, அதில் வேலை செய்பவர்கள், முதலாளிகள் ரத்தமும் சதையுமாக வருகிறார்கள். பரிசுக்கு நியாயம் செய்யும் நாவல். -கோவை பிரசன்னா.
Kolusu issue april 2022 மகன் / சுப்ரபாரதிமணியன் மூலத்துறை ஆற்று நீரின் சலசலப்பு ரொம்ப தூரத்திற்கு கேட்டது அந்த ஓசையை கேட்டபடியே அவன் நகர்ந்து கொண்டிருந்தான் நஞ்சராயன் குளத்திற்கு ஒருதரம் சென்றிருந்தபோது பறவைகளின் வெவ்வேறு ஒலிகளை கேட்டு ரசிக்க முடிந்தது. கூட வந்திருந்த சின்னராஜ் கொஞ்ச நேரம் கண்களை மூடி இந்த ஓசையை கவனியுங்கள் என்றார். அதற்கு முன்னால் தட்டான், சிட்டுக்குருவி போன்றவைகளை காட்டி அவற்றின் ஒலி பற்றிச்சொன்னார் இப்போது கண்ணை மூடிக்கொண்டு இந்த பறவைகளின் ஓசைகளை கேளுங்கள் என்றார். கண்களை மூடிக்கொண்டு கேட்டபோது பல பறவைகளில் வினோதமான ஒலிகள் கேட்டன. ஒவ்வொன்றையும் பிரித்தறிய முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. காது இவ்வளவு துல்லியமாக வேலை செய்கிறதா என்றிருந்தது அவனுக்கு. இப்போது அவன் மூலதுறைக்கு வந்து இருந்தான் படகுத்துறைக்கு கொஞ்சம் படகுகள் வந்து கொண்டிருந்தன தூரமாய் ஆற்றின் கரையில் உட்கார்ந்து கொண்டு தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் தட்டுப்பட்டார்கள் . கொரானா காலத்தில் பள்ளிகள் சரியாக இயங்குவதில்லை அதனால் அவர்கள் இப்படி ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும் பல சமயம் வருமானம் தருவதாக இருக்கும். திருப்பூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பகுதி நேர வேலைகளை பின்னலாடை நிறுவனங்களில் செய்கிறவர்கள் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. பின்னலாடைத் தொழில் போல் மீன் பிடித்தல் ஒரு தொழிலாகிவிடுமா இவர்களுக்கு என்ற எண்ணம் மனதில் வந்தது. ஆற்றின் சலசலப்பை மனதில் வைத்துக் கொண்டு சென்றபோது புங்க மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று கண்ணில் பட்டது. அதில் சின்னான் என்று எழுதப்பட்டிருந்தது யோசிக்கையில் அவனுக்கு ஞாபகம் இருந்தது சின்னான் முகம். அந்த சின்னானை சில வருடங்களுக்கு முன்னால் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவனை சந்தித்தது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கும் வயதாகிவிட்டது. சின்னானுக்கும் வயதாகி இருக்கும். இந்த முறை கூட ஏதாவது நல்லதாய் மீன் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் ஆனால் சுத்தம் செய்து ஒரு நல்ல நெகிழிப் பையில் அதை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் மனைவியிடம் திட்டு வாங்க வேண்டும். சுத்தமாக கொண்டு சென்றால் அவள் சமைத்து தர வாய்ப்பிருக்கிறது நல்லவேளையாக அவன் இரட்டை சக்கர வாகனத்தில் வந்திருந்தான் பேருந்தில் செல்வதென்றால் பலரின் பார்வையில் மீன் பை தட்டுப்படும். யாராவது கேள்வி கேட்கக் கூடும் சிலருக்கு பிடிக்காமல் போய் மூக்கை நோண்டக்கூடும். இரட்டை சக்கர வாகன பயணம் என்பதால் இதெல்லாம் சிக்கல் இல்லை வெளியே இருக்கிற பெட்டியில் போட்டு விட்டால் போதும். அது பாட்டுக்குக் கிடக்கும். .ஆனால் தேனீர் சாப்பிட, சிறுநீர் கழிக்க என்று வண்டியை நிறுத்துகிற நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாயோ பூனையோ அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. அவற்றைத்துரத்தும் தைரியத்தையும் மந்தில் கொள்ளவேண்டும். தடிமனான வேப்பமரத்தின் கீழ் ஒரு சிமெண்ட் பெஞ்ச் இருந்தது. உட்கார்ந்தான். அப்போதுதான் அவனை கடந்து சென்ற அந்த மனிதனை சந்தித்த்து ஞாபகம். மீண்டும் மீண்டும் அவனின் பின்புறத்தைப் பார்த்தான். ஏனோ சின்னான் ஞாபகம் வந்தது வலது கையில் படகை உயர்த்தி தூக்கி தலைக்கு மேலாக வைத்துக்கொண்டு குடை பிடிப்பது போல அவர் சென்று கொண்டிருந்தார் அவன் நெருங்கி நீங்க சின்னானா என்று கேட்டான் ” ஆமாங்க அடையாளம் தெரியுதுங்களா ” ”ஆமா பத்து வருஷம் முன்னால வந்து பார்த்து இருக்கேன் பேசியிருக்கன். டக்குனு ஞாபகம் வந்தது” “ ஆமா” சின்னானின் கூடவே ஒரு நாய் பரபரவென்று நாக்கை தொங்கவிட்டபடி நகர்ந்துகொண்டிருந்தது “அப்புறம் எங்க போற ” “வழக்கமாக மீன் பிடிக்கிறதுக்குத்தான்” “ இந்த நாய் எதுக்கு” “ இதெல்லாம் சொல்லாதீங்க... நாய்ன்னு சொல்லாதீங்க” “ சரி இது எதுக்கு ..மீன் பிடித்தால் அதை கவ்வும். வாயில வச்சுக்கும் சிரமம்தான்.” “ அதெல்லாம் பண்ணாதுங்க .என் பையன் இது “ பையன் என்று நினைத்துதான் சின்னான் அதை வளர்த்து வந்தார். வீட்டில் அவன் முற்றத்துக்கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடக்கையில் பக்கத்தில் படுக்கும். அவர் எங்கு சென்றாலும் நிழல் போல் கூடவே இருக்கும். அது வீட்டுக்குள் சாதாரணமாக நடமாடுவது சின்னானின் மனைவிக்குப் பிடிக்காது. அவன் ஏதாவது பூஜை என்று படையல் போடும்போது கூட பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும். அவன் மனைவிக்கு அதெல்லாம் பிடிக்காமல் படையல் போடறப்போ இதெல்லாம் இருக்கக் கூடாது. என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டாள். சின்னானுடன் முயல் வேட்டைக்குப் போனாலும் மீன் பிடிக்கப் போனாலும் கூடவே இருக்கும். அநாவசியமாக எதிலும் வாய் வைக்காது. “ வேட்டைக்கைக்கு வருது . கூடவே இருக்கு, இங்க இருந்தா என்ன ” “ அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே வெச்சுக்க “ அதன் பின் அந்த நாயும் எல்லாம் புரிந்து கொண்டது போல்வீட்டிற்கு வெளியே இருக்க ஆரம்பித்தது “ என் பையனா நினைக்கறண்டி “ ” நினச்சுக்கோ. வீட்டுக்குள்ள வேண்டாம் ‘ அதன் பின் இரண்டு மாதங்கள் தான் அவள் உயிரோடு இருந்தாள். படுக்கையில் கிடந்து செத்துப் போனாள். “ பையனா பாத்துக்கிறீங்க“ “பையன்... ஆமாங்க என் பையன் தான் எனக்கு குழந்தைகள் இல்லை இதைத்தான் பையனா வளர்த்துட்டு இருக்கேன் என்ன சொன்னாலும் கேட்பான். நல்ல பையன்” 00
வடகிழக்கு இந்தியப் பயணம் :16 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு மாநில படுகொலைகளுக்கு தீர்வு எப்போது என்று அரசியல் சார்ந்த கருத்தாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள் இந்த கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன வடகிழக்கு இந்தியப் பகுதிகளைகளுக்கு சென்றபோது இந்த கேள்விகள் என்னை திரும்பத் திரும்ப துன்புறுத்தின. கோகிமா மாவட்டம் கீசாமில் நடந்த ஒரு சம்பவம் இந்த ஆண்டில் பெரிய பின்னடைவுகளைக்ட கொண்டு வந்தது அங்கு பழங்குடி மக்கள் ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் இந்தத் திருவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் மேகாலயா நாகாலாந்து மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வாகனத்தின் மீது ராணுவத்தின் சிறப்புப் படையினர் சந்தேகப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் சுமார் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் வேலைக்கு சென்ற சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் அந்த கிராம மக்கள் உறவினர்களை தேடி அலைந்த போது இறந்து போனவர்களின் உடல் ராணுவ வாகனத்தில் மறைக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்கள் இதன் காரணமாக கலவரம் ஏற்பட்டது. ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுமார் பத்து பேர் கொல்லப்பட்டார்கள் இந்த கொலைகளின் போது வழக்கம்போல் ஆயுதப்படைகள் அந்த வடகிழக்கு மாநிலங்களில் கொண்டு இருக்கிற சிறப்பு அதிகாரங்களையும் பயன்படுத்தினர் . அவை தீவிரமாகஅமல்படுத்தப்பட்டுள்ளது .இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ராணுவம் இந்த படுகொலையை செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது மாநிலததிற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் நாகாலாந்து மணிப்பூர் அருணாசலப் பிரதேசத்தில் மற்றும் அசாமில் சில பகுதிகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது .இந்த ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன .ஆனால் தொல்லை தரும் பகுதிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த சட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள். நாகாலாந்தில் 60 ஆண்டுகள் ஆகி போர்நிறுத்தம் செய்யப்பட்டும் 25 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த சட்டம் அமலில் உள்ளது பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன நாகாலாந்து பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண மக்கள் அமைப்பும் இந்த பகுதியில் பிரச்சினைகளை தொடர்ந்து தந்து கொண்டு வருகிறது இந்த நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கடைசி நாளன்று நாகாலாந்து மற்றும் தொந்தரவு உள்ள பகுதிகளில் ஆயுதப்படைகள் சட்டத்தை மறுபடியும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது இந்த சிறப்பு ஆயுதப் படைகளின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் அந்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன .இது வடகிழக்கு இந்தியாவில் அமைதி எப்போது திரும்பும் அந்த மாநில படுகொலைகளுக்கு எப்போது தீர்வு என்பதை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கின்றன இந்த பயணத்தின் போது மனதில் பட்ட இந்த கோரிக்கை சார்ந்த விஷயங்களும் கசப்பாகவே இருந்தன தொடர்ந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல் இருக்கிறது. அசாம் - மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.30/3/22 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை புதிய தலைமுறை செய்தி தந்துள்ளது. மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாமிற்கும் இடையே கடந்த 1972ஆம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை மேகாலயா அரசு உரிமை கோரியது. எனினும் அதற்கு அசாம் மாநில அரசு ஏற்க மறுத்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு மாநில அமைச்சர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு மாநில முதலமைச்சர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா இருவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் தெரிவித்து, அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே 884 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில், 6 பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த உடன்பாடு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் 70 சதவிகித எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரத்தில் இந்த வரலாற்று ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இனி வரும் மணிப்பூர், நாகாலாந்து பயணங்கள் இது குறித்த பல சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் என்று எண்ணுகிறேன் பயணங்கள் மகிழ்ச்சி தருபவை. மனிதனுக்கு பல சோர்வான அனுபவங்களிலிருந்து விடுதலை தருபவை. ஆனால் அந்த பகுதியில் நிலவும் ராணுவ அதிகாரமும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களும் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருக்கிறார்கள் .காட்டுத் தீயை போல இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது தீர்வு இல்லை என்பதுபோல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது அதை வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக எதிர் நோக்கியிருக்கிறார்கள்
வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை, ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து விட்டோம் ஒரு அருவியை தூர இருந்து ரசித்து விட்டு வர வேண்டும் .அருவியில் குளிக்க வாய்ப்பு கூட இருக்காது இதற்கு ஒரு நான்கு மணி நேர பயணம் என்ற கேள்வி வரும். அருவியை பார்க்கிற அனுபவம் தாண்டி அந்த நான்கு மணிநரம் பேருந்திலோ வேறு வாகனத்திலோ பயணப்பட்டு மலைகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளிலும் தூரத்து காட்சிகளையும் பார்த்துக்கொண்டே செல்வது தான் ஒரு சிறந்த அனுபவம். முக்கியமான இடத்தை பார்க்கிற நல்ல அனுபவம் போலவே வாகனத்தில் செல்கிறபோது சுற்றிலும் இருக்கிற இயற்கை வளம் மிகுந்த இடங்களை பார்ப்பது கூட. இதை உணராமல் இவ்வளவு நேரம் பயணம் செய்து இதைத்தான் பார்க்க வந்திருக்கிறோம் என்று அலுத்துக் கொள்வார்கள் சிலர். பயணம் தான் முக்கியம் பயணத்தில் தென்படுகிற பெரும் மலைகளும் இயற்கை காட்சிகளும் பள்ளத்தாக்குகளும் சாலை விலங்குகளும் ,நடமாடக் கூடிய வெவ்வேறு மனிதர்களும் சிறுசிறு கிராமங்களும் முக்கியம்..கிராம சிறு உணவகங்களில் கிடைக்கும் பிரத்யேக உணவுகள் இன்னும் முக்கியம். இது சார்ந்து பயணத்தின் குழு தலைவர் கிறிஸ்டோபர் ஒரு சம்பவத்தை சொன்னார்.அவருக்கு அப்போது உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது கோவையிலிருந்து ஊட்டிக்கு எட்டு ரூபாய் கட்டணம் அவருடைய சகோதரர் அவருக்கு இருபது ரூபாய் பணம் கொடுத்து நீ ஊட்டி போயிட்டு வா என்று சொல்லி இருக்கிறார் ஊட்டியில் படகு சவாரி செய்யும் இடமும் பொட்டானிக்கல் கார்டன் மட்டுமே முக்கியமான இடங்கள் அல்ல. நீ செல்கிறபோது இருக்கிற எல்லா இடங்களும் முக்கியமானவை. அழகான மலைகள் குன்றுகள் பள்ளத்தாக்குகள் இயற்கை காட்சிகள், மரங்கள் கடந்து செல்லும் மனிதர்கள் எல்லாம் முக்கியம். இவை எல்லாம் கடந்து படகு இல்லம், கார்டன் ஒரு செல்ல வேண்டும். அவற்றை எல்லாம் விட போகும் இடங்களில் இயற்கை காட்சிகள் மிக முக்கியம் அதை பார்த்துக் கொண்டே செல் என்று சொல்லியிருக்கிறார் .ஊட்டிக்கு போகிறபோது டிக்கெட்டுக்கான பணத்தை நடத்துனரிடம் தந்திருக்கிறார் அவர் ஒரு ரூபாய் மிச்சம் தர வேண்டி இருந்திருக்கிறது நடத்துனர் அந்தப்பக்கம் வருகிற போதெல்லாம் பணம் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர் வருவதை போவதையே கவனித்திருக்கிறார் .அவர் பணம் தருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் அவரையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஊட்டி சேரிங் கிராஸ் வந்தபோது அந்த நடத்துனர் நீங்கள் இங்கு தானே இருக்கவேண்டும் இறங்குங்கள் என்று சொல்லி அந்த மீதி பணத்தை கொடுத்திருக்கிறார். மீதி பணம் கைக்கு வரும் வராதா என்ற நினைப்பிலேயே அவரையே பார்த்துக் கொண்டிருப்பது, அவர் இருக்கை அருகில் வருகிறபோது பணம் தருவார் என்று எதிர்பார்ப்பது, அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது இப்படியே கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிற பயண நேரத்தை அவர் கழித்திருக்கிறார் அவர் பயணத்தின் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவருடைய சகோதரர் சொன்னதை தவற விட்டதால் முதல்தரம் ஊட்டிக்கு போனபோது ஊட்டியின் அழகை பயணத்தில் ரசிக்கிற வாய்ப்பை இழந்திருக்கிறார். சரி திரும்பி வருகிறபோது பார்க்கலாம் என்று எண்ணி இருக்கிறார் மதியம் நல்ல சாப்பாடு அவருக்குக் கிடைத்திருக்கிறது வயிறு முழுக்க சாப்பிட்டு இருக்கிறார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் தூக்கம் .பிறகு அதிகமாக சாப்பிட்டதால் வளைவுகளில் பேருந்து செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் வாந்தி எடுக்க வேண்டியிருக்கிறது வாந்தி எடுத்த பின்னால் மனநிலையும் உடல் நிலையும் மாறி இருக்கிறது ஆகவே உடல் சோர்வில் கண்களை மூடிக்கொண்டு கிடக்க வேண்டியது இருக்கிறது. அதனால் ஊட்டியிலிருந்து திரும்புகிற போது அவர் சகோதரர் சொன்னமாதிரி இயற்கை காட்சிகளை ரசிக்க முடியவில்லை. போகும் போதும், சரி வரும் போதும் சரி இந்த அனுபவம்தான் . அதனால் ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடம் இரண்டாம்பட்சம்தான் போகிற வழியில் இருக்கிற இயற்கை காட்சிகளும் மற்றவையும் தான் முக்கியம் என்பதை கிறிஸ்டோபர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பல மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து அங்கு ஒரு பத்து நிமிடங்கள், அல்லது அரை மணி நேரம் கழிப்பது என்பது பலருக்கு முகம் சுளிக்கும் விசயமாக தான் இருந்திருக்கிறது. ஆனால்வேடிக்கை பார்ப்பதை சென்னை நண்பர்கள் கண்ணய்யா, செந்தமிழ்தாசன் ஆகியோரும் அனுபவித்தனர் .சில சிரமங்கள் இருக்கும். ஆட்டு வாலை வெட்டி விட்டு கன்றுக்குட்டியென விற்கிறத்திறமை இது போன்ற பயண ஏற்பாட்டாளர்களிடம் எப்போதும் உண்டு என்பார் கோவை முத்துசாமி. . எங்கே போனாலும் இந்த சாலை, விரிவாக்கம் செய்வதைக் காண முடிகிறது. பஞ்சாப் போனாலும் இதே கதிதான் என்பார் மூர்த்தி. உடல் உபாதைகள் இருந்தாலும் தாங்கிக்கொள்ள பழகுவதும் பொறுமையும் பயணங்களில் சாதாரணம். வலது கடவாய்பல்லொன்று ஆடிக்கொண்டேயிருந்தது. வலுக்கட்டாயமாக்கி விழுந்து விடச்செய்ய வேண்டும் என்று பேருந்துப் பயணங்கள் போது முயன்றேன். முடியவில்லை. கோவா திரைப்பட விழாவுக்குச் சென்ற போது இடது கடவாய்ப்பல்லொன்று இப்படித்தான் சிரமம் தந்தது. சேரே பஞ்சாபி ஓட்டல் ஒன்றில் உலக சினிமா பாஸ்கரனுடன் உட்காந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கடக் என்று வினோத சப்தம். மட்டன் எலும்பு கடிபடுகிற சத்தமா என்றிருந்தது. கடவாய் பல்தான் கழன்று விட்டது. ஆகா எவ்வளவு பாக்யம் என்றிருந்தது. அதேபோல் இந்த ஷில்லாங் பயணத்தில் வலது கடவாய்ப் பல்லுக்கு நேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் . மதமாற்றம் அதிகமாக ஒரு காலத்தில் இங்கு இருந்திருக்கிறது. ஞாயிறில் மக்கள் சாரைசாரையாக தேவாலயத்திற்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது.இந்து கோவில்கள் கண்ணில்படவில்லை.பல பயணங்களில் கூட இருக்கும் பி எஸ் என் எல் மூர்த்தி ஷில்லாங்கின் எட்டு டிகிரி குளிரிலும் வெறும் காலோடு அறையில் உலாவுவார்.பனி படர்ந்த நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்வார். கழுத்தில் மாட்டியிருந்த ருத்ராட்சி தீட்சைபெற்றதால் கட்டியதல்ல. பிடித்திருந்தது. கட்டிக்கொண்டேன் என்றார். கோவில் போவது , சடங்குகளில் அதிக விருப்பம் இல்லை என்றார் பல சமயங்களில் இது போன்ற பயணங்கள் தனியாக அமைந்து விட்டால் தமிழில் பேச மாட்டோமா , தமிழைக்கேட்க மாட்டோமா என்றிருக்கும். நெல்லூரில் வசிக்கும் கிறிஸ்டோபர் பேரன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தான் மழலை மொழியில். “ இங்க தமிழ் பேச ஆளில்லெ “ என்று அவரிடம் எப்போதும் தொலைபேசியில் சொல்வானாம். பயணம் என்பதில் சக மனிதர்களை சந்தித்தலும், இயற்கையை உள்வாங்கி கொள்வதும் தான் முக்கியமான அம்சங்களாக இருக்கிறது என்பதை வடகிழக்கு இந்திய பயணத்தில் வாகனங்களில் செல்லும்போது கண்டுணர்ந்த காட்சிகள் திரும்பத் திரும்ப என் மனதுள் என்னுள் வந்து கொண்டிருந்தன அது மகத்தான அனுபவம். 000 30/3/22 வடகிழக்கு இந்தியப் பயணம் :15 சுப்ரபாரதிமணியன் சென்றாண்டில் இலக்கியத்திற்கான ஞானபீடம் பரிசு, சிறந்தத் திரைப் படத்திற்கான தேசிய விருது ( ரொனுவா- சரணடையாதவன் )ஆகியவை அஸ்ஸாம் மொழிக்குக் கிடைத்துள்ளன. என் ” திரை வெளி “ திரைப்படக்கட்டுரைகள் நூலில் ( முதல் பதிப்பு அமிர்தா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு நிவேதிதா பதிப்பகம் 2022) எனக்குப் பிடித்த அஸ்ஸாம் திரைப்படங்கள் பற்றியக்கட்டுரைகள் உள்ளன அசாமியத் திரைப்படத்துறை அல்லது ஜாலிவுட் என்பது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அசாமிய மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். அசாமியத் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் ஜோதி பிரசாத் அகர்வாலா என்பவர் இயக்கிய ஜயமதி என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து ஜானு பருவா மற்றும் பபேந்திர நாத் சய்கியா இயக்கிய திரைப்படங்கள் மூலம் அசாமியத் திரைப்படத்துறை மெதுவாக வளர்சியடைந்தது ஜாலிவுட்[ என்று பெயர் அகர்வாலாவின் ஜோதி சித்ராபன் பிலிம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது 0 அஸ்ஸாம் மொழியில் தயாரித்து வெளியிடப்பட்ட “வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்” (Village Rockstars) திரைப்படம் சிறந்த படமாக மனதில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவா திரைப்பட விழாவில் பார்த்தது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 10 வயது துனு தனது சொந்த ராக் இசைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறாள். பெண்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் கிராமம். கிராமஉலகில் துடிப்பான எண்ணங்கள் , கற்பனை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை தனித்து நிற்கின்றன. அவரது நண்பர்கள். , சிறு பையன்கள் மற்றும் விதவை தாயின் ஆதரவுடன், துனு தனது அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்கிறார், மேலும் அவர் இறுதியாக ஒரு உண்மையான கிதாரினை வாங்க முடியும் அதில் வாசித்து விளையாட முடியும் என்று நம்புகிறார் அப்படியே நிகழ்கிறது. கிராமியச் சூழல் , வறுமை சார்ந்த சித்திரங்கள் வெளிப்படுத்தப்பட்ட விதம் அற்புதம் .கிராமத்தை நிலைகுலையச் செய்து போகிற வெள்ளச் சூழல்களிலிருந்து அவர்கள் மீள்வது இன்னும் சிறப்பு பிரம்மபுதிராவின் சீற்றமும் அழகும் சிறப்பாகக் காட்டப்பட்டடுள்ளன பரூவா அல்லது போரா என்ற பெயர்கள் இலக்கிய உலகிலும் திரைப்பட உலகிலும் அடிக்கடி தென்படும் பெயர்களாகும் அப்படித்தான் பருவாக்கள் அஸ்ஸாம் திரைப்படங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அப்படித்தான் ஹிரன் போரா என்ற பெயர் பசுந்தரா படத்தின் மூலம் என் மனதில் அப்பிக்கொண்டதுஅது தேசிய விருது பெற்றப் படமும் கூட காடுகளில் இருக்கிற யானைகள் கிராமப் பகுதிகளுக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு சிரமங்கள் தருகிறது .வசுந்தரா என்ற ஒரு இளம் தன்னார்வ குழு பெண் அந்த கிராம மக்களின் மனதைப் புரிந்துகொள்வதற்கும் யானைகளை பாதுகாக்கவும் அந்த ஊருக்கு வருகிறார் ஆனால் அவரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கிராமத்தில் அவரை சிறைபடுத்துகின்றனர் .அலட்சியப் படுத்துகின்றனர். அர்ஜுன் என்ற உள்ளூர் பத்திரிக்கை செய்தி சேகரிப்பாளர் அவருக்கு அறிமுகமாகிறான் காற்றிலிருந்து யானைத் தந்தங்களும் மூங்கிலும் கடத்தப்படுவதற்கு அந்த கிராமம் எப்படி ஏதுவாக இருக்கிறது என்பதை அவர் சொல்கிறார். அதை தவிர கல்லுடைக்கும் பெரிய முதலாளிகள் அந்த பகுதியை ஆக்கிரமித்து இருப்பது தெரியவருகிறது. கிராம அதிகாரிகளும் காட்டிலாகா அதிகாரிகளும் லஞ்சத்தில் அக்கறை கொண்ட ஊழியராக இருக்கிறார்கள். எல்லாம் வசுந்தராவுக்கு கவனத்தில் கொண்டு வரப்படுகிறது அந்த மக்களின் நம்பிக்கையை பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளார் வசுந்தரா. இந்த சமயத்தில் அர்ஜுன் அந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளை பற்றி பத்திரிகையில் எழுதி போக மர்மமான முறையில் இறந்து போகிறார். வசுந்தராவும் அவரின் குழுவினரும் மிரட்டப்படுகிறார்கள் வசுந்தரா அங்கிருந்து வெளியேறி விடுவது என்று முடிவு செய்கிறாள். ஆனால் தற்செயலாக காட்டிலாகா அதிகாரி மாற்றப்படுவதும், நேர்மையான அதிகாரி வருவதும் அந்த சூழல் மாறுவதும் அவருக்கு நம்பிக்கைத் தருகிறது இந்தப் படம் என் மனதில் ரொம்ப நாளாக இருந்து கொண்டிருந்தது அசாம் மற்றும் வடகிழக்கு இந்திய திரைப்பட உலகம் பற்றி நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது இங்கு படங்கள் எடுப்பதற்கு முதலீடு செய்வதை விட வில் அம்பு போட்டி நடத்த முதலீடு செய்வது நல்லது என்றார் பத்திரிக்கையில் லாட்டரி சீட்டு குழுக்கள் பற்றிய செய்திகள் ஒரு புறம் இன்னொரு புறம் டிர் ரிசல்ட் என்று ஏகப்பட்ட செய்திகள். இதற்கு பலர் முதலீடு செய்கிறார்கள். பல சாதாரண மக்கள் இந்த விளையாட்டில் பணம் கட்டுகிறார்கள் லாட்டரி சீட்டு போன்றதுதான் இது. ஒரு சூதாட்டம் தான். ஒரே சமயத்தில் 50 வில் வித்தையாளர்கள் ஐந்து நிமிடத்தில் அம்பு விடுகிறார்கள். இரண்டு நிமிடங்களில் இதெல்லாம் நடந்து விடவேண்டும் இந்த விளையாட்டுக்கு என்று ஷில்லாங்கில் போலோ கிரவுண்டு முக்கியமாக இருக்கிறது. இந்த டிக்கட்டுகளை விறக 55 ஆயிரம் டிக்கெட் கவுண்டர்கள் மெகாலய 11 மாவட்டங்களில் இருக்கின்றன தினசரி காலை 10 மணியிலிருந்து இவற்றில் மக்கள் சூழ்ந்து காணப்படுகின்றனர். பாரம்பரிய விளையாட்டுகளோடு இந்த அம்பு வில் வித்தையும் கலந்திருக்கின்றன.அதன் மேல் நம்பிக்கை கொண்டு பணத்தைக் கட்டுகிறார்கள் எப்படி பணம் கட்ட போகிறோம். அப்படி ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் என்ன இருக்கிறது என்பது வாஸ்து முறை , எண் கணித முறை போல யார் மேல் கட்டுவது என்று சிலதை நம்பும் சூழ்நில உண்டு இதில் ஈடுபடும் வில்வித்தை வீரர்களுக்கு தினசரி 300 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. 50 மீட்டருக்கு அப்பால் இருந்து கொண்டு இந்த வீரர்கள் வில்லை எரிகிறார்கள் உடனே அந்த முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன டிக்கெட் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை உள்ளன .அதில் வெற்றி பெறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது ஒரே சமயத்தில் 10 ஆயிரம் பேர் கூடுகிற போரட்டக் களமாக இருக்கிறது. இப்படி சூதாட்டத்தில் பணத்தை போட்டால் கூட முதலீடு செய்த பணத்தை எடுத்து விடலாம் ஆனால் அசாம் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதியில் திரைப்படங்கள் எடுப்பது என்பது பெருத்த நஷ்டத்தை உண்டு செய்யும் என்று திரைப்பட முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். ஆனாலும்குறைந்த முதலீட்டில் நல்ல படங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன என்பது ஆறுதல்தான் . 000
வடகிழக்கு இந்தியப் பயணம் : 12 சுப்ரபாரதிமணியன் உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்றும் ஆசியாவின் தூய்மையான நதி என்றும் மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி அல்லது ட்வ்கி நதி சொல்லப்படுகிறது. நொய்யல் முதல் கங்கை வரை சாயக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் எனப் பார்த்து நொந்து போன மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி இது மேகாலயாவில் உள்ள ஒரு ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், ஆற்றின் கீழே உள்ள பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது போல் தெரியும் படத்தை ஜல் சக்தி அமைச்சகம் பகிர்ந்துள்ளது, இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டில், மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி இடம்பெற்றுள்ளது. தங்கள் நதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக மேகாலயா மாநில மக்களுக்கு அமைச்சகம் நன்றி தெரிவித்தது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இந்த உம்ங்கோட் நதி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்று ஜல் சக்தி அமைச்சகம் கூடத் தெரிவித்துள்ளது. மேற்பகுதியிலிருந்து 10 அடி ஆழத்திலும் தெரியும் பொருட்கள் தெளிவாக உள்ளன. இதில் தண்ணீர் தெளிவாகவும், சுத்தமாகவும் இருப்பதால் படகு காற்றில் பறப்பது போல தெரிகிறது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆப் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். வங்கதேச எல்லையின் ராணுவத்தினர் பார்வையில் பட இந்நதியின் படகுகளும் கண்ணில் படுகின்றன. சுத்தமான நதிதான். சிறுவர்கள் உட்பட வெளிநாட்டினர் கூட பாறைகளின் மேலிருந்து டை அடித்து குளிக்கின்றனர் இந்த டவ்கி நதியில். ஆனால் சில இடங்களில் பலர் துணி துவைக்கிறார்கள். சுத்தமான நதியில் இது போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். படகு சவாரியும் மீன் பிடிப்பும் இந்த நதியில் ஒரு கி மீ நீளத்திற்கு சுவாரஸ்யம் தருபவை. இரவுகளில் நதியின் மணல் மேட்டில் தங்கும் கூடார வசதிகளை பலர் அனுபவிக்கிறார்கள் .வங்கதேசத்தினரும் இந்நதி குறித்து மகிழ்ச்சி கொள்ளலாம். காரணம் எல்லையைத்தாண்டி டாக்காவிற்குச் சென்றால் திருப்பூர் போல் சாய்க்கழிவுகளும் வீட்ட்க்கழிவுகளும் ஓடும் நதிகளையே அங்கு பார்க்க முடியும், இரண்டு முறை டாக்கா சென்ற போது அவற்றைப்பார்த்திருக்கிறேன். நொந்து போயிருக்கிறேன். நதிகளைப்பார்ப்பது ஆசுவாசம் தருவது. அந்த வகையில் ஆசுவாசம் தரும் சில செய்திகள் நதிகள் பற்றியவை கீழே இணைய தள உபயத்துடன்.. அமேசான் கீழ் சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஒரு நிலத்தடி ஆற்றின் இருப்புக்கு சான்றுகள் உள்ளன. நீளம், அது அமேசான் போன்றது - அதன் நீளம் 6,000 கிலோமீட்டர் ஆகும், ஆனால் அது பல நூறு மடங்கு பரந்ததாகும். நதி ஹம்சா (ரியோ ஹம்சா) என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தாய்லாந்தில் அமைந்துள்ள மீகோங் ஆற்றின் (மெக்கோங் நதி) மேற்பரப்பில் இருந்து உமிழும்தீப் பந்துகள் உயரும். இந்த பந்துகள் நாகா தீப்பந்துகளாக அறியப்படுகின்றன, சிலர் மீத்தேன் கிளஸ்டர்களின் விளைவாக இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆயினும்கூட, இந்த பந்துகள் உள்ளூர் புராணங்களின் ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஒரு உத்வேகமாக ஆதாரமாக மாறிவிட்டன அமெரிக்காவின் பழமையான நதி உண்மையில் ஒரு புதிய நதி (புதிய நதி) என்று அழைக்கப்படுகிறது. சில விஞ்ஞானிகள் இந்த ஒற்றை நதி, அதன் வயது ஆப்பிரிக்க நதி நைல் வயதை விட அதிகமாக உள்ளது என்று நம்புகிறார்கள். லண்டனின் தெருக்களில், கிட்டத்தட்ட 20 மறைக்கப்பட்ட ஆறுகள் ஓடுகின்றன. மிகவும் மாசுபட்ட நதி ஆஸ்திரேலியாவின் நவீன மாநிலத்தின் பிரதேசத்தின் மூலம் ராயல் நதி ஆகும். இது சுரங்கத் தொழில்துறையிலிருந்து இரசாயன கழிவுகளுடன் மாசுபட்டது. 1995 ஆம் ஆண்டு முதல், 1.5 மில்லியனுக்கும் அதிகமான சல்பைட்ஸ் ராயல் நதிக்கு விழும். ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பிரதேசங்களில்தூய்மையான நதி வொன்ச்சா நதி, இது மாரி எல் குடியரசில் பாய்கிறது. இதன் நீளம் 33 கிலோமீட்டர் (அதன் ஆதாரங்கள் உட்பட), அதன் அகலம் 2-3 மீட்டர், அதன் ஆழம் 1.5 மீட்டருக்கு மிகாமல் உள்ளது. நதி படுக்கையின் முக்கிய பகுதி மாநில தேசிய பூங்கா மற்றும் ரிசர்வ் "மாரி சோத்ரா" வழியாக செல்கிறது. வோஞ்சா அதன் நீரை படிக தெளிவான நீரோடைகள் மற்றும் ஸ்ப்ரூஸ் மற்றும் பைன் காடுகளில் பாயும் நீரூற்றுகளில் இருந்து நிரப்புகிறது, கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயிரக் கணக்கான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. 7 புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசி) யில் கங்கை நதி உள்ளது. காசி புண்ணிய ஸ்தலம் என்பதால் பலரும் கங்கையில் நீராடி செல்லுவர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கங்கையில் வீசுவதையும் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி பல தொழிற்சாலைகளின் கழிவுகள் , குப்பைகள் மற்றும் , பூஜை பொருட்கள், மனிதர்களின் அசுத்தமுறை போன்றவற்றால் கங்கை நதியின் தூய்மை மாசடைந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனால் தற்போது ஊரடங்கு காலங்களில் கங்கை நீர் சுத்தமாக உள்ளது. கங்கை நதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீரின் தரத்தை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சோதனை செய்தது.கங்கை கழிவுகள் குறைந்ஹ்டு சுத்தமாகியிருப்பதை பரிசோதனிகள் சொல்கின்றன. ஆனால் இது நீடிக்க வேண்டுமே . ரெங்கையா முருகன் வி.ஹரிசரவணன் எழுதிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற வம்சி பதிப்பக வெளியீடு நூல் 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விருது பெற்றது. இந்த நூலின் ஒரு பகுதி உலக ஆறு தின கொண்டாட்ட சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு: பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் தான் ஜீவன் உருவாகிறது. ஆனாலும் தண்ணீரை மட்டுமே “ஜீவன்” என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மழை நீரை எதிர்பாராமல் ஆற்று நீர் பாய்ந்து பலன் அளிக்கும் பூமியை “நதிமாத்ருக்” என்ரு அழைப்பதுண்டு. நதியை அன்னை என்றதன் பேரில் நதியப் புனிதமாகப் பாவித்துத் தரிசிக்கச் செல்வதும், அக்காலத்தில் சமணத் துறவிகள் ஆற்றுப்படுகைகளின் போக்கிலே சென்று யாத்திரை மேற்கொண்டதால் தீர்த்தங்கரர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நதிகளை மையமாகக் கொண்டு பொருளாதார கலாச்சாரப் பரிவர்த்தனை நிகழ்கிறது. ஒவ்வொரு நதியும் தனக்கென்று சிறந்த பண்பாட்டு அடையாளத்துடன் பிரவாகமாகத் திகழ்கிறது. ஓடுகின்ற ஆற்று நீரில் குளிப்பது உத்தமம் என்றும், நிலைத்து உள்ள ஏரி, குளம், கிணற்றில் குளிப்பது மத்திமம் என்றும், பாத்திரங்களில் ஊற்றிக் குளிப்பதால் உடல் நிலைக்கு உகந்ததல்ல என்றும் ஸ்நான விதி கூறுகிறது. ஒருமுறை ஓடுகின்ற அதே நீரில் மறுமுறை குளிக்க முடியாது என்று உலக உயிர் வாழ்க்கை நிலையை ஒப்புமைப்படுத்திக் கூறுவர். எல்லா நதிகளும் கடலின் மனைவிகள் என்று கூறுவதுண்டு. எல்லா ஆறுகளும் தத்தம் புனிதமான நீரைக் கடலுக்கு அர்ப்பணிப்பதால் கடலின் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனது களப்பணி ஆய்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றுப்படுகைகளை ஒட்டிய பழங்குடிகளிடையே பயணிக்க நேர்ந்தது. அந்த வகையில் கோதாவரி, இந்திராவதி, நர்மதா, ஜோன்க், டேல், பிரம்மபுத்ரா ஆகிய நதிப்படுகைகளிடையே பயணித்துள்ளேன். அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பயணிக்கும் சமயங்களில் பிரம்மபுத்ராவின் பிரவாகத்தைக் காணாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பழங்குடிகளின் பண்பாட்டில் மலை, நதிகளுடன் உள்ள தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிவாசிகளைப் பொறுத்தமட்டில் நதி என்பது அவர்களுடைய வாழ்வின் சின்னம், பண்பாடு, நதிகளுடனான பழமரபுக்கதை, வாய்மொழி வரலாறு, பல்வேறு நாட்டுப்புறக் கதை என வெவ்வேறு வடிவங்களில் நதிகளுடன் தங்களுக்கான உறவை அர்த்தப்படுத்துவர். பிரம்மபுத்ரா நதியினையொட்டி அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் மின்யோங்ஙாதி, பாதாம் ஆதி, பான்கி, டோரி, காலாங், மிஸிங், கச்சாரி, ராபா, காசி, ஜைண்டியா, ஹாஸோங், கர்பி, போடா, குக்கி, மான் போன்ற பல்வேறு பழங்குடிகள் தங்களது வாழ்வியலை ஆற்றுப்பகுதிகளோடு இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பழங்குடியினரிடையே பிரம்மபுத்ரா நதியினைக் குறித்து பல்வேறு தொன்மக் கதைகள், பல்வேறு வழிபாட்டுச் சடங்குகள், நதியினைச் சார்ந்த வாழ்க்கைப் பண்பாடு முதலியன காணப்படுகின்றன. ஒவ்வொரு பழங்குடியினரும் தனக்கென்று தனித்துவமான பண்பாட்டை பிரம்மபுத்ரா நதியினோடு பிணைத்துள்ளனர். கிழக்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு ஷியாங் மாவட்டத் தலைநகரான பாஸிகாட்டில் (Pasighat) இருந்து பான்கின், ரியூ, போலங், கெல்லிங், ட்யூட்டிங் ஆகிய வளமான மலைப்பகுதியிடையே “சியாங்” (Siang) என்ற பெயருடன் பாய்ந்தோடும் பிரம்மபுத்ரா நதிப் படுகையினிடையே எங்களது பிரயாணப் பாதை அமைந்தது. நான் மேற்கொண்ட பல்வேறு பிரயாணங்களில் மிகவும் உற்சாகமாக அமைந்த பயணம் கிழக்கு இமயமலைத் தொடர்ப் பயணம். குறுகிய ஒருவழிப் பாதையில் ஒருபுறம் அதல பாதாளத்தில் சியாங் நதி சந்தடியின்றி அமைதியுடனும் அதே நேரத்தில் பெரும் ஆர்ப்பரிப்புடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள அகலப்பாதையில் நீல நிறத்தில் சுத்தமான தண்ணீர் தொடர்ந்து கொண்டே இருந்தது. பயணிக்கும் வழிப்பாதையின் மறுபுறம் வானை முட்டும் அளவுக்குப் பச்சைப் பசேலென்ற வளம் மிக்க அடர்த்தியான மரங்கள். சியாங் நதியின் எல்லையற்ற வண்டல் படிந்த பச்சைக்கல் மரகதத்தையொத்த மணற்திட்டுகள் உண்மையிலேயே ஆள் அரவமற்ற பூமிப்பரப்பில் சிறு சிறு பறவைகளின் ஒலியுடன் எங்களது மனஓட்டம் எப்படி இருந்தது என்பதை வர்ணிக்க முடியவில்லை. வாழ்க்கையின் மாய நர்த்தனத்துடன் லயிக்கப்பட்டு, இயற்கைத் தேவியின் மகாசக்தியைக் கணநேரப் பரவசத்துடன் அதிசயங்கள் நிறைந்த ஒவ்வொரு கணமும் அணு அணுவாக சியாங் நதியின் அழகை ரசித்தேன். பொதிகையிலிருந்து கிளம்பும் தென்றல் காற்று போல, செவியினிடையே மரங்கள் அசையும்போது உருவாகும் சில்லென்ற இளங்காற்று ஒருபுறம் வீசிக் கொண்டிருக்க, மேக மூட்டத்துடனான மதிய வேளை மஞ்சள் இளவெயில் ஒருபுறம் மனதை வருடிக் கொண்டிருந்தது. சியாங் நதியின் அழகை அப்படியே வருணிக்க எந்தக் கவிஞனாலும் முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஏனெனில் அந்த இடத்தில் மன ஓட்டநிலை தியான நிலையின் இறுதியான ஆல்பா நிலைக்குச் (எவ்விதச் சலனமற்ற நிலை) சென்றுவிடுகிறது. கிட்டத்தட்ட அக்கணத்தில் உள்ள நிலையை மட்டுமே ரசிக்கும் மனநிலை உருவாகிறது. கிழக்கு இமயமலைத் தொடர்ப் பகுதியிடையே சுமார் 300 கி.மீ. பயணம் மேற்கொண்டோம். சியாங் நதி பல கோணங்களில் பல சாயைகளைக் கொண்டதாக இருந்தது. ஒரு இடத்தில் நதி காட்டுப் பிரதேசத்தினூடே பாயும். அதே நதி வேறு சில இடங்களில் பாறைகளிடையே துளைத்துக் கொண்டு பாய்கிறது. நதியின் வர்ணமும் அடிக்கடி மாறித் தோன்றுகிறது. “சியாங்” என்ற சொல் ஆதிமொழி (Adi Language). சியாங் என்பது அசியாங் என்பதிலிருந்து மருவி “அசி” (Asi) என்றால் “தண்ணீர்”, “யாங்” என்றால் “இதயம்” என்ற பொருள்படக்கூடிய இச்சொல் இதயத்தைக் குளிர்விக்கும் என்ற பொருளுடையதாகிறது. பிரம்மபுத்ரா நதியைக் குறித்துப் பல்வேறு பிரயாணக் குறிப்புகள் வெளிவந்துள்ளன. முக்கியமாக “திபெத்தில் மூன்று வருடங்கள்” என்ற புகழ்பெற்ற பிரயாண நூலை எழுதிய புத்தமதத் துறவி இகாய் சுவாஹுச்சி (Ekai Kawaguchi) என்பவர் பிரம்மபுத்ராவின் அழகை அந்த நூலில் குறிப்பிடப்படுவதாவது: “பனி முகடுகளின் விரிவில் படர்ந்த தொலைதூர முகில்கள் பொழிகின்ற பிரம்மாண்ட பிரம்மபுத்ரா நதியே அப்பாலுக்கப்பாலான ஆகாயங்களுக்குள் பாயும் வெகு தூரத்து நிலங்களின் அடிவானங்களைச் சந்திக்கும் பிரம்மபுத்ரா நதி தன்னுடைய கம்பீரத்திலும் பெருமிதத்திலுமாய்க் காட்சி அளிக்கும். இந்த வீர்யக் காட்சி அலையும் புத்தர் சிலையாய் வைரோசனா என்ற பெயரைத் தாங்கியிருக்கும் அனைத்து இயற்கையின் அதிரூபக் கடவுள் என்று பிரம்மபுத்ராவின் அழகை அப்படியே வர்ணித்துக் கூற முடியவில்லை. முயன்றும் தோற்றுவிட்டேன்” என்று குறிப்பிடுகிறார். பிரம்மபுத்ரா நதி உற்பத்தியாகும் இடம் குறித்துப் பல நூற்றாண்டுகளாக அவிழ்க்க முடியாத புரியாத புதிராக இன்னும் கூட நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். திபெத்திய மக்களுக்கு மானசரோவரிலிருந்து உற்பத்தியாகும் “ஷாங்போ” (Tsangpo) நதி குறித்துத் தெரியும். அவர்களைப் பொறுத்தமட்டில் அதிகபட்சமாக நதி கிழக்கு நோக்கிச் சென்று காட்டில் மறைந்துவிடுகிறது என்று மட்டும்தான் தெரிகிறது. இந்தியப் பகுதியில் பிரம்மபுத்ராவின் உற்பத்தி ஸ்தானத்தைத் தேடிக்கொண்டு அதே காட்டின் மறு முனை வரை சென்று தேடியும் மூலப்பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பியர்கள் தகுந்த சூழ்நிலை இல்லாதபோதும் காடுகளைக் கடந்து திபெத் பகுதியிலுள்ள “ஷாங்போ” ஆறுதான் இந்தியப் பகுதிகளில் பாயும் பிரம்மபுத்ரா என்று கண்டுபிடித்தனர். கி.பி. 1762ஆம் ஆண்டு சைனா நில ஆய்வாளர் “ஷு சௌகென்” என்பவர் முதலில் பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடத்தை ஆராய்ந்து வரைபடம் வரைந்தார். இவரது கூற்றுப்படி “ஷாங்போ” இமயமலையின் ஒரு பகுதியாகிய கைலாச பர்வதத்தின் தென்கிழக்குப் பிரிவில் லாங்சென்ஹபாப் என்ற இடத்தில் “டிஜிமாகௌங்கிராங்” ஏரியில் உள்ள பனிமலையே மூலம் என்று முன்னதாக வரையறுக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறுபட்ட நில ஆய்வாளர்கள் தொடர்ந்து பிரம்மபுத்ராவின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய பயணம் மேற்கொண்டார்கள். குறிப்பாக நைன்சிங், தாமஸ்வெப்பர், ராவ்லிங், ரைடர், வாடெல் போன்றோர் திபெத் பக்குதியில் பாய்ந்தோடும் ஷாங்போ குறித்து ஏராளமான பயணக் குறிப்புகள் எழுதியுள்ளனர். இறுதியாக ஸ்வென்ஹெடின் (Dr.Sven Hedin) என்பவர் தான் 1907-08 வாக்கில் பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் அதே இடத்தில் சட்லெஜ் (Sutlej), சிந்து (Indus) மற்றும் கர்னாலி (Karnali) ஆகிய மூன்று பெரிய நதிகளும் உருவாகிறது என்று நீண்டகாலப் புரியாத புதிருக்கு விடை கண்டார். ஸ்வென்ஹெடின் ஆய்வுக்குப் பிறகு இவரது பயணப்பாதையை ஒட்டியே மானசரோவரில் உருவாகும் பிரம்மபுத்ரா உற்பத்தி குறித்து அப்பகுதிகளிடையே வாழும் பல்வேறு பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மழமரபுக் கதைகளை ஒட்டியும் பிரம்மபுத்ரா பாயும் பகுதிகள் குறித்துத் தெளிவான முடிவுக்கு வருவதற்கு உபாயமாக இருந்தது என்று கூறலாம். இந்தியாவில் பிரம்மபுத்திரா ஓடி செழுமைப்படுத்தும் பல பகுதிகளை வடகிழக்கு மாநிலங்கள் கொண்டிருக்கிறன “கான்க்ரி கார்சோக்” (Kangri Karchok) எனப்படும் திபெத் கைலாச புரானில் சட்லெஜ், சிந்து, பிரம்மபுத்ரா, கர்னாலி ஆகிய நதிகளின் உற்பத்தி மூலத்தைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. லாங்சென் ஹம்பாப் என்றழைப்படும் யானை வாய்ப்பகுதி கொண்ட சட்லெஜ் நதி மேற்கு நோக்கியும் சென்கே ஹம்பாப் (Senge Khambab) என்ற சிங்கவாய் கொண்ட சிந்து நதி வடக்கு நோக்கியும், தம்சோக் ஹம்பாப் (Tamchok Khambab) என்ற குதிரைக் காதுடைய பிரம்மபுத்ரா கிழக்குப் பகுதி நோக்கியும், மப்சுஹம்பாப் என்ற மயில் வாயுடைய கர்னாலி நதி தெற்கு நோக்கியும் மானசரோவர் அருகில் உள்ள பனிச்சறுக்கு ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. இதில் “தம்சோக் ஹம்பாப்” பற்றி ஸ்வென் ஹெடின் குறிப்பிடுவதாவது, திபெத்திய மொழியில் “தா” (Ta) என்றால் குதிரை, “அம்சோக்” (amchok) என்றால் “காது”, ஹம்பாப் (Khambab) என்றால் “வாய்” என்று பொருள்படுகிறது. அதாவது மானசரோவர் பகுதியில் செம்யுன்டங் (Chemayundung) பனிச்சறுக்கு ஏரிப் பகுதியில் பிரம்மபுத்ரா உருவாகிறது. உற்பத்தியாகுமிடம் ஒன்றாக இருந்தாலும் நான்கு நதிகளின் நீரின் தன்மையில் மாறுபாடு காணப்படுகிறது. சட்லெஜ் நதி குளிர்ந்த நிலையிலும், சிந்து நதி கூடுதல் வெப்பமாகவும், பிரம்மபுத்ரா ஐஸ் போன்று மிகக் குளிர்ந்த நிலையிலும், கர்னாலி நதி வெதுவெதுப்பு உடையதாகவும் இருக்கிறது. சட்லெஜ் பாயும் பகுதிகளில் தங்க நிறத்தில் மணற் பகுதியும் (Gold Sands), சிந்து நதி பாயும் பகுதிகளில் வைரத்தையொத்த மணற்பகுதியும் பிரம்மபுத்ரா பாயும் பகுதிகளில் மரகதத்தையொத்த மணல் பகுதியும், கர்னாலி நதி பாயும் இடங்களில் வெள்ளியையொத்த மணல் பகுதியும் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5300 மீட்டர் உயரமுடைய மலைப்பகுதியில் உருவாகும் “ஷாங்போ” என்ற பெயருடன் பிரம்மபுத்ரா சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி திபெத் உட்பட 1,625கி.மீ. பயணம் செய்கிறது. பின்பு ஷாங்போ யார்லுங்சூ, தார்லுங்சூ என்ற உபநதிகளாகப் பிரிகிறது. பின்பு இந்தியப் பகுதியில் அருணாசலப்பிரதேசத்தின் கடைசி எல்லைப் பகுதியாக விளங்கக்கூடிய ஸெலாஸாங் (Tsela Dzong) வழியாக நுழைந்து பே (Pe) மற்றும் நம்ச பர்வா (Namcha Barwa) ஆகிய பகுதிகளில் பாய்ந்து மின்யோங் மற்றும் பாதாம் ஆதிப்பழங்குடிகள் வாழ்கின்ற கிழக்கு ஷியாங் மாவட்டம் முழுவது “ஷியாங்” என்ற பெயரில் பிரம்மபுத்ரா ஆர்ப்பரிப்புடன் பயணம் செய்கிறது. பின்பு பாஸிகாட்டிலிருந்து இறங்குமுகமாக அஸ்ஸாம் சமவெளிப் பகுதிகளில் “லோகித்” (Lohit) மற்றும் லூட் (Luit) என்ற பெயருடன் 918 கி.மீ. பயணிக்கிறது. அஸ்ஸாமின் மேற்குப் பகுதியில் கடைசி எல்லைப் பகுதியான துப்ரி (Dhubri) நகரில் நுழைந்து பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பிரம்மபுத்ரா என்ற பெயருடன் 337 கி.மீ. பாய்ந்து “கோ அலுந்தோ”வுக்கு அருகில் கங்கையுடன் பிரம்மபுத்ரா ஒன்றாகி பத்மா என்ற பெயருடன் சிறிது தூரம் பாய்ந்து மேக்னா என்ற பெயருடன் வங்காள விரிகுடாவில் சங்கமித்து விடுகிறது. ஆக மொத்தம் பிரம்மபுத்ரா ஆறு பயணிக்கும் தொலைவு 2,280கி.மீ பிரம்மபுத்ரா 25க்கும் மேற்பட்ட பல உப நதிகளான சபவான்சரி, டிபாங், ஜியா, பராலி, பீசாம், டிகாரி, ஹாரிடிக்ராய், கங்காநர், மஞ்சரி போன்ற நதிகளை உள்ளடக்கியதாய்ப் பாய்ந்தோடுகிறது. பிரம்மபுத்ரா நதி தோன்றிய கதை குறித்த பலவேறு நாட்டுப்புறக் கதைகளும் நிலவி வருகிறது. குறிப்பாகத் திபெத் பகுதியில் ஷாங்போ என்ற பெயர், கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தில் விளங்கக்கூடிய பிரம்மபுத்ரா என்ற சொல்லுடன் நேரிடையான பொருள் கொண்டதாகக் கூறுகிறார்கள். திபெத் பகுதியில் வழங்குகிற பழமரபுக் கதைகளில் ஏழாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்து வந்த “தி - ஷ்ராங் - டென் – ஷான்” என்பவருடைய மகன் “ஷாங்போ” நதியில் மூழ்கி இறந்தான். இவன் மூழ்கிய அந்த இடத்தில் தினமும் கசையடியால் தண்ணீரைத் தண்டிக்கும்படி ஆணையிட்டானாம். கசையடி தண்டனை தொடர்ந்து நீடித்து வருகையில் சில நாள் கழித்து நதியின் ஆத்மா அரசன் முன்பு தோன்றி, ‘தங்களது மகன் மூழ்கிய அந்த இடத்தின் தண்ணீர் எப்போதோ கடந்து சென்றுவிட்டது. ஆனால், செய்யாத பாவத்திற்காகத் தற்பொழுதுவரை எங்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்டது. ஷ்ராங் – ஷான் – ஹாம் – போ ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு அரசாண்ட மன்னன். ஏழாம் நூற்றாண்டிற்கு முன்புவரை பிரம்மா என்ற வார்த்தை திபெத்திய லாமாக்களுக்கு அறிமுகம் இல்லை. திபெத்திய லாமாக்கள் இந்திய பிராமணர்களோடு ஒத்தவர்கள். ஆகையால் இந்தியப் பழம்பெரும் நதிகளின் புராணப் பெயர்களை நேரிடையாக திபெத்தில் ஓடுகின்ற நதிகளுக்கும் வைத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என்று மேஜர் எல்.ஏ.வாடெல் குறிப்பிடுகிறார். ஷ்ராங் –ஷான் – காம் – போ (Srong – tsan-gam-po) என்ற அரசனின் சுருக்கப் பெயரான “ஷாங்போ” என்ற திபெத் வார்த்தை பிரம்மா என்ற வார்த்தையுடன் நேரிடையான விளக்கம் தருகிறது. மேலும், “ஷாங்போ” என்றால் “தூய்மையான”, “மிகப்பிரமாண்டமான” என்ற பொருளுடையதாகிறது. உயரமான இடத்திலிருந்து சிறிது சிறிதாக ஊற்றேடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி மிக பிரமாண்டமாக வளர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் பச்சை பசேலென வளங்களை அள்ளி கொடுத்து கடைசியில் கடலில் கலக்கக்கூடிய ஆறுகள் உலகின் வளங்களை அதிகரிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஓடிவரும் ஆற்றின் நீர் அளவை கொண்டு அவை வற்றும் ஆறுகள் மற்றும் வற்றாத ஆறுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. எல்லா ஆறுகளிலும் மழைக்காலத்தில் நீரோட்டம் அதிக அளவில் இருக்கும். கோடையில் நீரோட்டம் குறைவாக காணப்படும். சில ஆறுகள் கோடையில் முற்றிலுமாக வறண்டுவிடும். ஆறுகள் பெரும்பாலும் நல்ல சுத்தமான தண்ணீரை கொண்டது. இதனால் ஆற்றுநீர் ஏராளமான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. உலகில் உள்ள மிக நீளமான ஆறு நைல் ஆறு இது 6,650 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனுடைய நீர்வளம் பதினோரு நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இரண்டாவது நீளமான ஆறு அமேசான் ஆறு இது 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. உலகில் உள்ள மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. அமேசான் நதிக்கு அடியில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு நிலத்தடி நதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது அமேசான் நதியின் நீளத்தை 100 மடங்குக்கும் அதிகமாக பரந்து காணப்படலாம் என சொல்லப்படுகிறது. கடலில் வந்து சேரக்கூடிய நன்னீர் 20% அமேசான் நதியில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள நீளமான ஆறு கங்கை ஆறு. இது 2525 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கங்கையாற்றில் 12 சிறிய ஆறுகள் சேர்ந்து மிகப்பெரும் கங்கை நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நம்முடைய தமிழகத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 60 ஆறுகள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான ஆறுகள் காவேரி ஆறு, பாலாறு, தாமிரபரணி ஆறு, வைகை ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு, நொய்யல் ஆறு போன்றவை. ஏராளமான விலங்குகளுக்கு ஆறுகளே முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விலங்குகள் மட்டுமல்லாமல் ஏராளமான மீன் வகைகள் நீரில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆற்றில் அதிக அளவில் காணப்படுகிறது. உலகில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் கடலை விட 600 மடங்கு குறைவான நீரைக் கொண்டிருந்தாலும் கடலில் இருப்பதை விட அதிக அளவிலான மீனினங்கள் ஆறு மற்றும் ஏரிகளில் தான் காணப்படுகிறது. சுமார் 550 மில்லியன் மக்கள் நன்னீரில் வாழக்கூடிய மீன்களை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். உலகில் தற்பொழுது வரை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான நன்னீர் உயிர்வாழ் இனங்கள் அழிந்துள்ளன. தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது. இதில் உலகில் உள்ள நன்னீர் மீன் இனங்களில் 37 சதவிகிதம் அழிந்துள்ளது. தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது. உலக நதிகள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் 60 நாடுகள் கலந்து கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள நதிகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நதிகள் மாசுபடுத்தப்படாமல் இருப்பதற்கும் இந்த நாளில் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ நதி முன்பு ஜைர் நதி என அழைக்கப்பட்டது. இந்த நதி உலகின் மிக ஆழமான நதி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடைய ஆழமான பகுதி 220 மீட்டருக்கும் மேல் என அளவிடப்பட்டுள்ளது. அதாவது 720 அடிகள். இதனுடைய நீளம் 4700 கிலோ மீட்டர்கள். அமேசான் ஆற்றின் துணை ஆறான ரியோ நீக்ரோ ஆறு உலகின் மிகப் பெரிய கறுப்பு நீர் நதி என அழைக்கப்படுகிறது. இதனுடைய நீர் முற்றிலும் கருப்பு நிறமாக இருக்காது. அடர்ந்த தேநீரின் நிறத்தோடு காணப்படும். இதை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது கருப்பு நிறமாக தெரிகிறது. இது இப்படி இருண்ட கருப்பு நிறமாக வருவதற்கு காரணம் இந்த ஆற்றின் தண்ணீரில் இருக்கக்கூடிய ஹியூமிக் அமிலத்தின் காரணமாக. உலகில் உள்ள பல முக்கியமான நகரங்கள் நதிக்கரைகளில் தான் அமைந்துள்ளது. வியட்நாமின் ஹனோயி நகரம் சிவப்பு நதியின் கரையில் இருக்கிறது. தாய்லாந்தின் பாங்காக் நகரம் சாவோப்ராயா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஈராக்கின் பாக்தாத் நகரம் டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரம் மற்றும் கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஹாங்காங் நகரம் பேல் நதிக்கரையில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரம் மோஸ்கவா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் பராதா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் கிலிவுங் நதிக்கரையில் அமைந்துள்ளது. லண்டன் நகரம் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரம் மான்ஸநாரஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரம் லிபி நதிக்கரையில் அமைந்துள்ளது. பாரிஸ் நகரம் ஸீன் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் யாரா நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகில் பல வர்ணங்களாக காணப்படக்கூடிய மிக அழகான நதிகளில் ஒன்று கானோ கிறிஸ்டெல்ஸ். இது கொலம்பியாவில் காணப்படுகிறது. இது ரிவர் ஆப் பைவ் கலர்ஸ் அதாவது ஐந்து வர்ணங்களின் நதி எனவும் லிக்யூட் ரெயின்போ அதாவது திரவ வானவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நதி ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, சிவப்பு இப்படி பல வர்ணங்களில் காட்சியளிக்கிறது. இந்த வர்ணங்கள் ஆற்றின் அடிப்பகுதியில் வளரக்கூடிய மகரேனியா கிளாவிஜெரா எனப்படும் நீர்வாழ் தாவரத்தால் உருவாகிறது. உலகில் ஒரு நதி கூட இல்லாமல் சவுதி அரேபியா உட்பட 18 நாடுகள் உள்ளது. 700க்கும் மேற்பட்ட நதிகளை கொண்ட நதிகளின் நிலம் என அழைக்கப்படுகிறது பங்களாதேஷ். உலகில் அதிக அளவு நதிகளை கொண்ட நாடு ரஷ்யா. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெர்மனியிலுள்ள எல்பே ஆற்றின் குறுக்கே தண்ணீர் செல்லும் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பாலம் சரக்கு கப்பல்கள் செல்வதற்காக கட்டப்பட்டுள்ளது. இதனுடைய நீளம் ஒரு கிலோ மீட்டர் அகலம் 34 மீட்டர்கள். தென்கொரியாவில் உள்ள இம்ஜின் நதிக்கு ரிவர் ஆப் த டெட் அதாவது இறந்தவர்களின் நதியென பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதனால் இந்த பெயர் வந்துள்ளது என்றால் வட கொரியர்கள் ஏராளமான பேர் உடல்கள் இந்த ஆற்றில் மிதந்து சென்றுள்ளதாம். ஸ்லோவேனியாவை சேர்ந்த மார்ட்டின் ஸ்ட்ரெல் என்பவர் ஐரோப்பாவை சேர்ந்த டானூப் நதி, அமெரிக்காவை சேர்ந்த மிசிசிப்பி நதி, சீனாவை சேர்ந்த யாங்சே நதி, தென் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நதி ஆகிய இந்த நதிகளை முழுமையாக நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார். ஒரு ஆற்றின் புகைப்படம் 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ரைன் II என பெயரிடப்பட்ட இந்த மிகவும் விலையுயர்ந்த புகைப்படம் ரைன் ஆற்றில் எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தாலும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழை பெய்யும் பொழுது அல்லது மழை வரும் நேரங்களில் நம்முடைய ஊர்களில் இடி மின்னல் தாக்குதல் ஏற்படும். ஆனால் ஒரு நதியின் அருகில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து மின்னல் தாக்கி வருகிறது. வெனிசுலாவில் உள்ள கட்டடம்போ ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு 280 மின்னல்கள் தாக்குகிறது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை இது தொடர்ந்து நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளாக இப்படி இந்த ஆற்றின் அருகில் மின்னல் தாக்கி கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 16 லிருந்து 40 தடவை மின்னல் தாக்குகிறது. பொதுவாக எல்லா ஆறுகளும் கடைசியில் கடலில் போய் கலக்கிறது. உலகிலுள்ள அனைத்து நதிகளிலும் கிட்டத்தட்ட பாதி அளவு அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. மிக சுத்தமாக அழகாக ஓடிக்கொண்டிருந்த ஆறுகள் தற்பொழுது ரசாயனங்கள், கழிவுநீர், வீடுகளிலிருந்து வரக்கூடிய கழிவுகள் இவைகளால் தொடர்ந்து மாசுபட்டு கொண்டே வருகிறது. இது விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் கடுமையான தீங்கு விளைவித்தாலும் தொடர்ந்து மனிதர்கள் ஆற்றை மாசுபடுத்தி கொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 300 லிருந்து 400 மில்லியன் டன் கழிவுகள் ஆறுகளை மாசுபடுத்தி கொண்டே வருகிறது. உலகில் உள்ள ஆறுகள் ஆண்டுதோறும் சுமார் 16 பில்லியன் டன் பாறைகள் மற்றும் குப்பைகளை கடல்களுக்கு எடுத்துச்செல்கிறது. பூமியில் ஓடக்கூடிய மிகவும் தூய்மையான நதி ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் சீனா வழியாக ஓடும் இர்டிஷ்(Irtysh) நதி என சொல்லப்படுகிறது. ஆசியாவின் தூய்மையான நதியைக்கண்டு களித்த மகிழ்ச்சி மனதில் இருக்கிறது By உலக நதிகள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது என்பதும் மனதிற்கு மகிழ்ச்சி
வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 சுப்ரபாரதிமணியன் தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா என்ற முரட்டு பட்டிலும் இந்த ஆடை உண்டு. இவைகள் பொன்னிறத்தில் இருக்கும். பிஹூ நடனம் நடக்கும் இடங்களில் மேகலா சத்தர் அணிந்த பெண்கள் சுலபமாகத் தென்படுவார்களாம் . பிஹூ நடனம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும் அசாமியக் கலாச்சாரத்தின் ஒரு ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் பிஹூத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வு இந்த நடனமாகும். இந்த பிஹூ நடனம் குழுவாக நிகழ்த்தப்படும், பொதுவாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்தே இந்த நடனத்தை ஆடுவார்கள். இந்த நடனம் விறுவிறுப்பான படிகள் மற்றும் விரைவான கை அசைவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. நடனக் கலைஞர்களின் பாரம்பரிய உடை வண்ணமயமானதாகவும், சிவப்பு வண்ண கருப்பொருளை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது, இது மகிழ்ச்சியையும் வீரியத்தையும் குறிக்கிறது. அஸ்ஸாமின் புத்தாண்டைக் கொண்டாடும் அசாமின் தேசிய விழாவான போஹாக் பிஹு திருவிழாவிலிருந்து ( ரங்கலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது) பிஹு நடனம் அதன் பெயரைப் பெற்றது. திருவிழா ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் நடைபெறுகிறது. மேலும் பிஹு நடனம் பருவகாலத்தைக் கொண்டாடவும், பின்பற்றவும், செழிப்பு மற்றும் புதுமைக்காகவும் கொண்டாடப்படுகிறது பிஹு இளைஞர்கள் மற்றும் பெண்களின் குழுக்களால் நிகழ்த்தப்படுகிறது மற்றும் முந்தைய காலங்களில் இது முக்கியமாக ஒரு களவியல் நடனமாக இருந்தது. நில வளத்துடனான (புதிய பயிர்) பிஹு நடனத்தின் தொடர்பு மனித கருவுறுதல், நடனத்தின் சிற்றின்ப இயல்பு, அத்துடன் இயற்கையின் கருவுறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது, அதாவது வசந்தத்தை கொண்டாடுவது மற்றும் உயிரைக் கொடுக்கும் வசந்த மழையை வரவேற்பது. தாளம், கொம்பு வாத்தியங்கள், புல்லாங்குழல் போன்ற கருவிகளின் பயன்பாடு உண்மையான மழைப்பொழிவைத் தூண்டுவதற்கான ஒரு வழியாக, மழை மற்றும் இடியின் ஒலியைப் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. ” பாரம்பரியமுறை சாயமேற்றல், அச்சிடுதல், நெய்தல் போன்றவற்றை பயன்படுத்தி பெண்களுக்கான உடைகளைத் தயாரிக்க வேண்டும்.அதிலும் நடனப்பெண்களுக்கானவை சிரமம். ஒரு விசைத்தறியில் நெய்து லேசரால் அச்சிடப்பட்ட துணி என்னைக் கவர்வதில்லை. குஜராத்தில் கருநீல அஜ்ரக் வகை, மகாராஷ்டிரத்தின் கண் வகை, ஆந்திரா மற்றும் ஒரிஸாவின் இக்கட் வகை உணர்வுகளைத் தூண்டும். இவற்றின் கலவைகளை நான் துணிகளில் பயன்படுத்துகிறேன். காஞ்சிபுரத்தின் பருத்தி சேலை அல்லது குர்தாவை பெல்லாரியின் லம்பானிகளிடம் கொண்டுசென்று பூத்தையல் வேலைப்பாடு செய்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் நிறங்கள் அதற்கு தனி அடையாளத்தைத் தருகின்றன. அஜ்ரக் துணியைக்கொண்டு ஒரு ஒற்றை ஆடையை தயாரித்தோம். அந்த ஆடையின் பொருத்தம் கச்சிதமாகவும் மிக அழகாகவும் இருக்கிறது என்கிறார் “ பாரம்பரிய துணிகள், கலைகள் கொண்டு பாங்கான உடைகள் தயாரிக்கும் மாலினி முத்தப்பா ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஒலிம்பிக் களத்தில் ஹாக்கி பந்தை விரட்டிய மங்கைகள் இன்று நம் தேசத்துக்கு புதிய பெருமித அடையாளத்தைத் தேடித் தந்துள்ளனர். ஆனால், ஷார்ட்ஸ் அணிந்து வந்ததாலேயே தேர்வு எழுத ஒரு சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கின்றது. அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 19 வயதான ஜூப்ளி தமுலி தனது தந்தையுடன் தேர்வு மையத்துக்குச் சென்றார். ஜிப்ஸ் எனப்படும் கிரிஜாநந்தா சவுத்ரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மாசிடிகல்ஸ் சயின்சஸ் மையத்தில் தேர்வு எழுதவிருந்தார். ஆனால், தேர்வு அனுமதி அட்டையுடன் சென்ற அவரை உள்ளே அனுமதிக்க தேர்வு கண்காணிப்பாளர்கள் மறுத்தனர். ஜூப்ளி அணிந்திருந்த ஷார்ட்ஸ், டிஷர்ட் உடையே அதற்குக் காரணம். இப்படியொரு உடையை அணிந்து கொண்டு தேர்வு எழுத முடியாது எனக் கூறியுள்ளனர். அதிர்ந்து போன மாணவி இதே உடையில் தான் கடந்த வாரம் நீட் தேர்வு எழுதினேன் என்று சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே, மாணவியின் தந்தை 8 கி.மீக்கு அப்பால் இருக்கும் கடைக்குச்சென்று மகளுக்கு பேன்ட் வாங்கச் சென்றார். அதற்குள் நேரம் ஓடிக் கொண்டிருக்க மாணவி அழுது புலம்பினார். உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஜன்னல் திரைச்சீலை ஒன்றை எடுத்துவந்து கொடுத்துள்ளனர். மாணவி இடுப்பில் அதை சுற்றிக் கொண்டு பின்னர் தேர்வு எழுதச் சென்றுள்ளார். இது குறித்து மாணவி ஜூப்ளி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், இது மிகப்பெரிய அநீதி. தேர்வு மையத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கவில்லை, மாஸ்க் பற்றி கேள்வி கேட்கவில்லை. ஆனால், எனது ஷார்ட்ஸ் மட்டும் அவர்களுக்கு சர்ச்சையாக இருந்துள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் உடைக்கட்டுப்பாடு குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், நான் நீட் தேர்வுக்கு அணிந்து சென்ற அதே உடையை இங்கேயும் அணிந்து வந்தேன். தேர்வுக்கு வரும்போது எத்தகைய உடை அணிய வேண்டும் என்ற பொது அறிவு கூட எனக்கு இல்லை என்று அவர்கள் விமர்சித்தனர். இது ஏற்புடையதல்ல. என் வாழ்நாளின் மிக மோசமான நாளை நான் அனுபவித்தேன். நான் சிறுமைப்படுத்தப்பட்டேன். ஒரு ஆணின் உடை இங்கே எப்போதுமே கேள்விக்கு உள்ளாவதில்லை. சில நேரங்களில் பொது இடங்களில் கூட ஆண்கள் மேலாடை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் ஷார்ட்ஸ் அணிந்தால் இத்தனை கெடுபிடியா? ஒரு திரைச்சீலையை சுற்றிக் கொண்டு நான் தேர்வு எழுத மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறினார். கருப்புதான் எனக்குப் புடிச்சக்கலர் என்று தமிழ்ப்பாட்டுப் பாடுகிறோம் அசாமை ஆளும் பாஜக அரசு, பொது நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிய தடை விதித்துள்ளது என்பது ஒரு செய்தி . குழந்தையை அழவைத்து, கருப்பு உடையை கழற்ற வைத்திருக்கிறது போலீசு. என்கிறது வினவு இணைய தளம். அசாம் பாஜக முதலமைச்சர் சர்பானந்த சொனாவால் பேச இருந்த கூட்டத்தை பார்க்க தன்னுடைய மூன்று வயது குழந்தையுடன் வந்திருக்கிறார் ஒரு பெண். அந்தக் குழந்தை அணிந்திருந்த கருப்பு மேல் உடையை கழற்றச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறது அசாம் போலீசு. போராட்டம் நடத்த வரவில்லை; வேடிக்கை பார்க்க வந்ததாகக் கூறியும் அந்தக் குழந்தையை அழவைத்து, கருப்பு உடையை கழற்ற வைத்திருக்கிறது போலீசு. இது வீடியோவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அசாம் மாநில தொலைக்காட்சிகளும் இந்த வீடியோவை ஒளிபரப்பின. “குளிரிலிருந்து தப்பிக்க போட்டிருந்த ஜாக்கெட்டை கழற்றச் சொல்வதன் மூலம் போலீசு தனக்கு கருப்பு மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது” என அசாம் போலிசின் நடவடிக்கை கடுமையாக சாடியிருக்கிறார்கள் மக்கள். சாதாரணத் தொழிலாளர்களின் அழுக்கு உடைகள் இப்படியும் இருக்கின்றன ” ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சிக்கு பயணம் வழியெங்கும் குறிஞ்சியின் அற்புதங்கள், வெயிலில் ஆரம்பித்த பயணம் இடையில் பனியும் சேர்ந்து விட்டது. பனி இறங்கியதும் உலகம் மாறுகிறது… மாயலோகம் உருவாகிறது. நீண்ட தூரம் பனியில் பயணம், குழந்தைகளின் அனிமேசன் விளையாட்டுப் போல எங்களுடைய கார் வழுக்கிக் கொண்டு பனிக்குள்ளாக மறைந்து வெளியேறுகிறது. திடீரென சாலையின் இருபுறமும் விநோதமான உடைகளுடன் மனிதர்கள் தென்பட்டனர்… கையில் ஆயுதங்களுடன், அதிக சத்தங்களுடன், நரகமா, சொர்க்கமா தெரியவில்லையே??… வண்டியை விட்டு வெளியே வந்து வெகுநேரம் கழித்துதான் தெரிந்தது, மக்கள் மலையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று. மேகாலயா இயற்கையின் சுரங்கம்… எனவே எண்ணற்ற கனிமங்களை அரசும் பன்னாட்டு முதலாளிகளும் நாடெங்கும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். 15 க்கும் அதிகமான அரிய கனிமங்கள் மேகாலயாவில் தோண்டி எடுக்கப் படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்வது, மலைகள் தோண்டப்பட்ட கோரக்காட்சிகள், இயந்திரங்கள், பெரும் லாரிகள், கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் என படிமங்கள் விரிந்து கொண்டே போகிறது. பழக்கமான படிமங்கள் தான்…. ஆனால் இவை யாவும் பனிப்பொழிவில் நடைபெறும்போதுதான் அதன் பொருளும், படிமங்களின் சாயைகளும் மாறுகின்றன… மெல்லக் கவிதையாக, தியானமாக மாறுகிறது… எல்லாமே பனியில் உறைந்து போன செயல்பாடுகள். காலமற்ற சலனம்..என்று ஆர் ஆர் சீனிவாசன் ஒரு பதிவில் மேலே உள்ளதைத் தெரிவித்திருந்தார், தொழிலாளர்கள் வேலை செய்வது, மலைகள் தோண்டப்பட்ட கோரக்காட்சிகள் அவர்களின் அழுக்கு உடைகளுடன் எப்போதும் கண்ணில் விரிகிறது வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் நடனம் மிக முக்கியமானது.அப்போது அவர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து நடமாடுவதே மரபு மேகாலயாவின் மக்கள்தொகையில் 48%, உண்மையிலேயே ஒரு தனித்துவமான பழங்குடியினர். ஆண்கள் ஜிம்பாங் என்ற பாரம்பரிய உடையை அணிவார்கள். ஒரு ஜிம்பாங் என்பது காலர் இல்லாத நீளமான ஸ்லீவ்லெஸ் கோட் ஆகும். இது முன்னால் உள்ள விஷயங்களுடன் வைக்கப்படுகிறது. நவீன நாளில், மேற்கு நாடுகளின் செல்வாக்கை ஆடை அலங்காரத்திலும் ஒருவர் காணலாம். குலத்தின் பெரும்பாலான ஆண்கள் மேற்கத்திய ஆடைகளை எடுத்துள்ளனர். விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்வுகளின் போது, அவர்கள் ஒரு சரோங் மற்றும் தலைப்பாகையுடன் ஜிம்பாங் அணிவார்கள்.. பெண்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய உடை ஜைன்செம் அல்லது தாரா. முந்தையது ஒவ்வொரு தோள்களிலும் இணைக்கப்பட்டுள்ள இரண்டு துண்டுகள் உள்ளன காசிஸ்.., இது கி ஹின்னியூட்ரெப் அல்லது ஏழு குடிசைகளுக்கு வேர்களைக் கண்டுபிடிக்கும். இதன்படி, மனித இனம் பதினாறு பரலோக குடும்பங்களாக கடவுள் அல்லது இறைவன் (இறைவன் மாஸ்டர்) (காஸிகள் தங்கள் கடவுளை யு ப்ளீ ட்ராய் கின்ராட் என்று அழைக்கிறார்கள்). இருப்பினும், இந்த பதினாறு குடும்பங்களில், ஒன்பது பேர் மட்டுமே சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டனர், மற்ற ஏழு பேர் பூமியில் எஞ்சியுள்ளனர். லம் சோஹ்பெட்ப்நெங் சிகரத்தில் ஒரு பரலோக ஏணி அல்லது தங்க மரம் இருந்ததாக புராணம் விவரிக்கிறது, இது குடும்பங்களுக்கு வானங்களுக்கு இலவச அணுகலை வழங்கியது. மனித இனம் பாவத்தால் சிதைக்கப்படும் வரை வானத்திலிருந்து முன்னும் பின்னுமாக அவர்களின் பயணம் தடையின்றி இருந்தது. ஒரு அதிர்ஷ்டமான நாள், மனிதர்கள் புனித மரத்தை வெட்டுவதற்கு ஏமாற்றப்பட்டனர், இதனால் அவர்களுக்கு சொர்க்கத்தின் வாயில்களை மூடி, மீண்டும் ஒருபோதும் திறக்க முடியாது. இந்த புராணத்தில் காசிகளின் தீவிர நம்பிக்கை மரங்களையும் இயற்கையையும் பூமியில் கடவுளின் வெளிப்பாடாகக் கருதுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, மரங்களை வெட்டுவது மற்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிப்பது அவர்களின் கடவுளுடனான உறவைத் துண்டிக்கும் பாவமாகும். இன்றுவரை, லும் சோபெட்ப்னெங் சிகரம் காசிகளுக்கு புனிதமான இடமாக உள்ளது. ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும், பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், சடங்குகள் மற்றும் சடங்குகளை நிகழ்த்துவதற்காக வருடாந்திர யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப காலத்திலும், இன்றும், காஸிகள் இயற்கையை கடவுளின் ஒரு பகுதியாக கருதுகின்றனர், எனவே பாகன் கடவுள்களையும் வணங்குகிறார்கள். காசிஸ் சேவல் ஒரு வழிபாட்டு உருவமாக கருதுகிறது, ஏனென்றால் சேவலை கடவுளை பிரார்த்தனையுடன் நகர்த்தியது, ஏனெனில் பிரபஞ்சத்தை முதலில் உருவாக்க வேண்டும். காசிஸ் தங்கள் முன்னோர்களை வணங்கவில்லை என்றாலும், அவர்கள் அவர்களை மதித்து, அவர்களை மத்தியஸ்தர்களாகவும், பெரியவர்களாகவும் கருதினார்கள். மேற்கத்திய செல்வாக்கு மற்றும் கிறித்துவத்தின் வருகைக்கு முன்னர், காஸிகள் தங்கள் சொந்த பூர்வீக மதத்தை பின்பற்றினர், இது கா நியாம்-இம், இது உயிருள்ளவர்களின் சடங்குகள் மற்றும் இறந்தவர்களின் சடங்குகளான கா நியாம்-ஐயாப் ஆகும். கா நியாம் வாழ்க்கை உறுப்பினர்களின் தற்போதைய வாழ்க்கையைப் பற்றியது. உறுப்பினர்கள் அமைதியான முறையில் பின்பற்றுகிறார்கள் வாழ்க்கை முறை அவர்களின் உறுதி மரணத்திற்குப் பிறகான வாழ்வில் பிரவேசித்து அதனால் அழியாத ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். கா நியாம்-ஐயாப் என்பது பூமிக்குரிய ஆன்மாவின் புறப்படும்போது, அவர்கள் பரலோகத்திற்குள் நுழையும் வரை, எளிதான மாற்றத்திற்காக செய்யப்படும் சடங்குகள் மற்றும் சடங்குகளை உள்ளடக்கியது. குலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தவுடன், அவர்களின் எலும்புகள் ஒரு மவ்பாவில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. மவ்பா என்பது இறந்தவர்களின் புனிதமான கல், இது எலும்புகளை சேமிக்கும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இறந்த நபரின் அடுத்த பகுதிக்கு நுழைவதற்கான அடையாளமாக இது நம்பப்படுகிறது. ஒரு நபரின் எலும்புகளை வைக்கும் சடங்கு இறுதி முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் அவ்வாறு செய்யாவிட்டால், ஆன்மீக உலகில் மூதாதையர் தாயை சந்திக்க முடியாமல் போன ஆத்மா ஒருபோதும் ஓய்வெடுக்காது. இன்று, கா நியாம்-இம் மற்றும் கா நியாம்-ஐயாப் மீதான நம்பிக்கை பல்வேறு காரணங்களால் கணிசமாகக் குறைந்துள்ளது. மாறிவரும் காலங்களையும் சூழ்நிலைகளையும் கடைப்பிடிப்பதற்காக மதத்தை பின்பற்றுபவர்கள் பல சடங்குகளை நிராகரித்தனர். மேற்கத்திய செல்வாக்கு மற்றொரு முக்கிய காரணம். கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை குலத்தை குறிப்பிடத்தக்க வழிகளில் பாதித்தது. இன்று, பெரும்பாலான காஸிகள் கிறித்துவத்தை பின்பற்றுகிறார்கள், அவற்றில் முக்கிய பிரிவுகள் கத்தோலிக்கம், ஆங்கிலிகனிசம் மற்றும் பிரஸ்பைடிரியனிசம் (இது காசி மக்களிடையே மிகப்பெரியது.) இடைக்கால திருமணங்களின் விளைவாக, இஸ்லாம் குலத்திலும் மேலோங்கி நிற்கிறது. காசி வாழ்க்கை முறையின் பல சாதகமான அம்சங்களில் ஒன்று, எந்த ஒரு மதமும் உறுப்பினர்கள் மீது திணிக்கப்படவில்லை. எந்த தெய்வத்தை அல்லது கடவுளை நம்புவதற்கு அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். காசிஸுக்கு சொந்த ஸ்கிரிப்ட் அல்லது மொழி இல்லை என்று நம்பப்படுகிறது. ஆங்கிலேயர்கள் வரும் வரை அவர்கள் வங்காள மொழியில் பேசினார்கள். ஆண்கள் ஜிம்பாங் என்ற பாரம்பரிய உடையை அணிவார்கள். ஒரு ஜிம்பாங் என்பது காலர் இல்லாத நீளமான ஸ்லீவ்லெஸ் கோட் ஆகும். இது முன்னால் உள்ள விஷயங்களுடன் வைக்கப்படுகிறது. நவீன நாளில், மேற்கு நாடுகளின் செல்வாக்கை ஆடை அலங்காரத்திலும் ஒருவர் காணலாம். குலத்தின் பெரும்பாலான ஆண்கள் மேற்கத்திய ஆடைகளை எடுத்துள்ளனர். விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்வுகளின் போது, அவர்கள் ஒரு சரோங் மற்றும் தலைப்பாகையுடன் ஜிம்பாங் அணிவார்கள். ஒரு அலங்கார இடுப்பு இசைக்குழு அவர்களின் இடுப்பில் காயம் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய உடை ஜைன்செம் அல்லது தாரா. முந்தையது ஒவ்வொரு தோள்களிலும் இணைக்கப்பட்டுள்ள இரண்டு துண்டுகள் உள்ளன, அதே சமயம் ஒவ்வொரு தோள்பட்டையிலும் ஒரு துண்டு பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆடைகளும் மிகவும் விரிவானவை, பல அடுக்குகள் மற்றும் துணி துண்டுகளால் ஆனவை. இவற்றில் ஆடை அணிந்தவுடன், உடல் ஒரு உருளை வடிவத்தை அடைகிறது. விழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது ஆண்கள் தலைப்பாகை அணிவதைப் போல, பெண்கள் வெள்ளி அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவார்கள். கிரீடத்தின் பின்புறத்தில் ஒரு ஸ்பைக் உள்ளது, இது ஆண்கள் அணியும் வண்ணமயமான இறகுகளுக்கு ஒத்திருக்கிறது. விழாக்களில் நடனக் கலைஞர்கள் இன்னும் விரிவான ஆடைகளை அணிவார்கள். பெண் நடனக் கலைஞர்கள் கா ஜிங்பிம் ஷாட் என்ற துணியில் இடுப்பிலிருந்து கணுக்கால் வரை இழுக்கப்படுகிறார்கள். கழுத்தில் சிக்கலான லேஸ்வொர்க் மற்றும் கா சோப்டி முக்மோர் என்று அழைக்கப்படும் நீண்ட சட்டைகளுடன் கூடிய ரவிக்கை அணிந்திருக்கிறது. ஆபரணங்களில் ஒரு நெக்லஸ் (யு க்பியங் பைலா, சிவப்பு பவளம் மற்றும் மணிகளைக் கொண்டது), ஒரு வெள்ளி சங்கிலி (யு கின்ஜிரி தபா), தங்க காதணிகள் (கி சோஹ்ஷ்கோர் க்ஸியர்), ஆயுதங்கள் மற்றும் தங்க வளையல்கள் (கிகாடு நே கி சின்கா). தோளோடு இணைக்கப்பட்ட துணி துண்டுகள், கா தாரா ரோங் க்சியார் என்று அழைக்கப்படுகின்றன, இது செவ்வக வடிவத்தில் உள்ளது, தங்க நூலால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. கிரீடம் புதிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆண் நடனக் கலைஞர்கள் ஒரு பெரிய இறகுடன் பட்டு (கா ஜெயின் ஸ்பாங் கோர்) தங்க தலைப்பாகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜாக்கெட் பெரிதும் எம்ப்ராய்டரி மற்றும் ஸ்லீவ்ஸ் இல்லாமல் (கா ஜிம்பாங்) அணியப்படுகிறது. தோள்கள் ஒரு வெள்ளி சங்கிலியால் (யு தபன்) அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெள்ளியால் செய்யப்பட்ட அம்புகள் மற்றும் ஒரு விலங்கு வால் இடுப்பிலிருந்து தொங்குகின்றன. தோதி ஒரு மெரூன் பட்டுத் துணி. ஆண்கள் ஒரு சடங்கு வாளையும் சுமக்கிறார்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, காசிஸின் சிறந்த அம்சம் என்னவென்றால், அது ஒரு திருமண சமூகம். நாட்டின் பிற பகுதிகளைப் போலல்லாமல், பெண்களுக்கு இங்கு ஆதிக்கம் உண்டு. ஒரு குடும்பத்தில், இளைய மகள் (கா கதுஹ்) தான் எல்லா சொத்துகளையும் வாரிசாகப் பெறுகிறாள். கணவர் மாமியார் வீட்டிற்கு திருமணத்திற்குப் பின் செல்கிறார். தம்பதியருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்கள் தந்தையின் பெயருக்குப் பதிலாக தாயின் குடும்பப் பெயரைப் பெறுவார்கள். தம்பதியருக்கு மகள்கள் இல்லையென்றால், அவர்கள் ஒருவரை தத்தெடுத்து, சொத்துக்கள் அனைத்தும் அவளுக்கு வழங்கப்படுகின்றன. ஒரு மகனின் பிறப்பு வெறுமனே ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஒரு மகளின் பிறப்பு மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒரு பெண் குழந்தைகளை திருமணத்திலிருந்து வெளியேற்றுவதற்காக அல்லது மறுமணம் செய்து கொள்வதற்காக எந்த விமர்சனத்தையும் களங்கத்தையும் எதிர்கொள்வதில்லை. அவர்கள் தங்கள் சொந்த கோத்திரத்திற்கு வெளியே திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன் செக்ஸ் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் விபச்சாரம் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பெண்ணும் திருமணமாகாமல் இருக்க தேர்வு செய்யலாம். பெரும்பாலான வணிகங்கள் பெண்களுக்கு சொந்தமானவை மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன. தாய் அல்லது மாமியார் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள். சொத்தை வாரிசாகக் கொண்ட பெண் தன் பெற்றோரையும் உடன்பிறப்புகளையும் கவனித்துக்கொள்வதில் பங்கு வகிக்கிறாள். பல வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளுடன், காஸிகள் தங்களுக்கு ஒரு இனமாகும். பெண்களை அவர்கள் நடத்துவது நிச்சயமாக முழு நாட்டிலிருந்தும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. யோயர் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிற இந்தச் செய்திகளைப் பற்றி முன்னரே சித்தலிங்கய்யா தெரிவித்திருந்தார் பயண ஏற்பாடுகளின் போது.
வடகிழக்கு இந்தியப் பயணம் : 10 சுப்ரபாரதிமணியன் பாறைகளும், குகைகளும் வேர்ப்பாலங்களும் : பிரபு சாலமன் இயக்கிய ” கயல்” படத்தில் சிரபுஞ்சி வேர்பாலத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் நெருக்கம் காதலர்களிடம் இருக்கும் .அதை கவனித்த சென்னை கண்ணய்யா அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்றார். அந்த இடம் டூயட் பாட இளசுகளுக்கானது. வேடிக்கை பார்க்க கூட வயதானவர்கள் அங்கே போய் சிரமப்படக்கூடாது என்றேன். டபுள் டக்கர் வேர்ப்பாலம் ஒன்று உள்ளது. அதைக்காணச் செல்லவே சிரமப்பட வேண்டியிருந்தது. . இதே சிரபுஞ்சியில் அமைந்த புகழ் பெற்ற ஒரு இடம் தான் டபிள் டெக்கர் பாலம்..3000 படிக்கட்டுகள் முதலில் இறங்க வேண்டும்.. திரும்பும் போது ஏற வேண்டும்.. .இரு அட்டகாசமான தொங்கு பாலங்கள் உள்ளன. டபிள் டெக்கர் பாலம் மரத்தின் வேர்களால் ஆனது. இரண்டு அடுக்ககளில் கீழும் மேலுமாய் இருக்கும் இதன் அமைப்பு மட்டுமல்ல, அருகில் இருக்கும் அற்புத இயற்கை நீச்சல் குளமும் அற்புதம்திரும்பும் போது பாதி வழி வரை அதிக சிரமம் இல்லை; ஆனால் கடைசி பகுதியில் 2000 படிக்கட்டுகள் செங்குத்தாக ஏறவேண்டும்.. இதேபோல் கண்ணையா அவர்களிடம் நான் போகக்கூடாத இடம் என்று ஆர்வா குகை போன்றவற்றைச் சொன்னேன் . வகைவகையாய் குகைகள் . விதவிதமானப் பாறைகள். ராட்சத மனிதர்களைப் போல். சுண்ணாம்புக்கல் குகைகள் இவை. பூமியின் கீழே இயற்கையாகவும், தண்ணீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட அரிப்புகளாலும் சுண்ணாம்புக் கற்களில் பற்பல உருவங்கள் உருவாகி இருப்பதை காண முடியும். ஒவ்வொரு பாறைகளிலும் பல உருவங்கள் –இறைவன் உருவமோ, மனித உருவமோ, பறவைகள், விலங்குகள், என எதுவாகவும் இருக்கலாம். கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு ஒவ்வொரு உருவமாகப் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள் எத்தனை எத்தனை உருவங்கள். எத்தனை விதமான வடிவங்கள். இயற்கையாகவே உருவானவை என்பதால் ஒவ்வொரு உருவமும் இப்படி உருவாக எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும் உள்ளேப் போகப்போக பல இடங்களில் குனிந்தும், தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்ல வேண்டிய அளவிற்கு இருந்தது அந்தக் குகை. எல்லா இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தி இருப்பதால் கொஞ்சம் பயமில்லை என்றாலும், மின்விளக்கு இல்லாத சமயத்தில் என்ன ஆகும் என்ற எண்ணமும் வருவதை தடுக்க முடியவில்லை. விதம் விதமான சந்துகளில் புகுந்து வெளிவருவது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. . ஒரு சில இடங்களில் பாறைகளின் மேலே இருந்து வெளிச்சம் வரும் அளவிற்கு சிறிய ஓட்டைகளும், சில இடங்களில் பெரிய இடைவெளியும் இருந்தது. அவை மூலமும் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. பல இடங்களில் பாறைகளையும், அவர்களில் இயற்கை வடித்திருக்கும் சிற்பங்களைப் பார்த்தபடியே வந்தாலும், நடுநடுவே எங்களின் மறைத்து வைத்திருக்கும் வாலும் எட்டிப்பார்த்தது. அப்படி எட்டிப் பார்க்க, சில பாறைகள் மீது தத்தித் தாவி ஏறி பாதையை விட்டு விலகி மேலே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும் சில இடங்களில் குனிந்து சென்றாலும், நிறைய இடங்களில் பத்து பன்னிரெண்டு அடி உயர இடைவெளியும் இருந்தது. உள்ளே பல இடங்களில் கம்பிகள் கொண்டு பாதைகள் அமைத்திருக்கிறார்கள் – சில சமயங்களில் அந்த இடங்களில் தண்ணீர் வரும் எனவும், அந்தச் சமயத்தில் அவற்றைக் கடக்க இந்த இந்தப் பாலங்கள் பயன்படும் எனவும் தோன்றியது.. …. இந்தக் குகைகள் மிக நீளமானவை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவது 150 மீட்டர் தொலைவு மட்டுமே. அதற்கு மேல் குகைக்குள் செல்வது சற்றே ஆபத்தானது – உள்ளே நுழைந்து வெளியே வர முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது! மேகாலயா சென்றால், பார்க்க விடக்கூடாத இடங்கள் இரண்டு – ஒன்று இந்த மாஸ்மை சுண்ணாம்புக்கல் குகைகள், மற்றது மரங்களின் வேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலங்கள் –இது ஒரு நண்பரின் அனுபவம். பிரையன் டி. கார்ப்ரான் அனுபவம் கீழே .. "பயணத்தில் நீங்கள் தனித்து போய்விட்டால் வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முடியாது" என்று, குகைக்கு செல்லும் கரடுமுரடான பாதையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பிரையன் டி. கார்ப்ரான் முன்னெச்சரிக்கை விடுத்தார். காடுகளின் சரிவுகளில் மரங்கள், தாவரங்களுக்கு இடையே ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து, குகையின் நுழைவாயிலை அடைந்தோம். உள்ளூர் காஷி மொழியில் 'க்ரெம் புரி' என்று அழைக்கப்படும் அந்த குகையை தமிழில் மொழிபெயர்த்தால் 'தேவதைகளின் குகை' என்று பொருள் வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 4,025 அடி (1227 மீ) ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த 'தேவதைகளின் குகை'. 24.5 கிமீ நீளமும் (15 மைல்), 13 சதுர கிமீ பரப்பளவையும் உள்ளடக்கிய இந்த குகை, ஜிப்ரால்டரைவிட இருமடங்கு பெரியது. பூமியிலேயே மிக அதிக மழை பெய்யும் பகுதியாக அறியப்பெற்ற மாசிம்ராம் பசுமை சமவெளிகளில் 13 சதுர கிமீ பரப்பளவில் ஜிப்ரால்டர் விரிந்து பரந்துள்ளது. வெனிசுவேலாவின் 18.7 கிமீ நீளம் கொண்ட 'இவாவரி யியூடா' என்ற குகையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உலகின் மிக நீண்ட குகையாக கருதப்பட்டது. 71 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் பிரையன் டி. கார்ப்ரான் குகைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இந்த அழகிய மலை மாநிலத்தில் குகைகளை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பட மூலாதாரம்,RONNY SEN 1992ம் ஆண்டு அவர் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, மேகாலயாவில் ஒரு டஜன் குகைகள் மட்டுமே இருந்தன. 26 ஆண்டுகளில் 28 தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அவர், 30 ஆய்வாளர்கள் கொண்ட வலுவான சர்வதேச குழு ஒன்றை உருவாகியுள்ளார். புவியியலாளர்கள், நீர்வாழ் உயிரின நிபுணர்கள், உயிரியலாளர்கள், தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, மாநிலத்தில் 1,650 குகைகளை கண்டறிந்துள்ளது. தற்போது உலகின் மிகவும் சிக்கலான குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக அறியப்படும் மேகாலயா மாநிலத்தில் நாட்டிலேயே மிக அதிகமான குகைகள் உள்ளது தெரியவந்துள்ளது. சரி, இப்போது தேவதைகளின் குகைக்குள் செல்ல நாங்கள் தயாராகிவிட்டோம். வழிகாட்டுவதற்காக விளக்குகளை கொண்ட கடினமான தொப்பிகளை அணிந்த நாங்கள், இருளில் நுழைந்தோம். இடப்புறம் கீழ்ப்பகுதியில் சிறிய நடைபாதை உள்ளது. இந்த மூடப்பட்ட, இருண்ட குகை மீள முடியா அச்சத்தை (கிளாஸ்ட்ரோஃபோபியா) ஏற்படுத்தும். துளைகள் மூலம் உள்ளே செல்ல விரும்பினால், குகை ஆராய்ச்சி உடையை (cave suits) அணிந்திருக்க வேண்டும். அப்போது குகையின் வாயிலில் இருந்து தவழ்ந்தவாறே செல்லலாம். நான் அந்த பிரத்யேக உடையை அணியாததால், அந்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன். பட மூலாதாரம்,MARCEL DIKSTRA பிரதான நடைபாதையில், இரண்டு பெரிய பாறைகள் ஒன்றாக காணப்பட்டன. முன்னோக்கி செல்வதற்கு, அவற்றின்மீது ஏற வேண்டும் அல்லது அவற்றிற்கு நடுவே நீந்திச் செல்ல வேண்டும். நான் புத்திசாலித்தனமாக இரண்டு வழிகளிலும் முயற்சி செய்தேன், ஆனால் என்னுடைய காலணிகள் பாறைகள் இடையே சிக்கிக் கொண்டன. தண்ணீரில் மூழ்கியுள்ள பாறைகளைத் தாண்டிச் செல்கிறோம், அங்கு நீரோட்டம் மெதுவாக உள்ளது. மழைக்காலத்தில் நீரோட்டம் வேகமாகிவிடும். சுவரில் ஒரு பெரிய சிலந்தி இருப்பதை கண்டறிந்தார் பிரையன் கர்ப்ரான். அதுமட்டுமல்ல பாறையின் சுவர்களில் படிந்திருப்பது சுறாவின் பல் அச்சாக இருக்கலாம் என்று புவியியலாளர்கள் கருதுகின்றனர். "இந்தக் குகை பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது" என்கிறார் அவர். ஒரு பெரிய வலையமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குறுகிய பாதைகளும், நீண்ட வழித்தடங்களையும் கொண்ட இந்த தேவதைகளின் குகை நம்பமுடியாத தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த குகையில் வழக்கமாக பிற குகைகளில் காணப்படுவது போன்ற ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மைட்டுகள்) கணப்படுகின்றன. அதாவது நிலத்தின் மேற்பரப்பில் இருந்து கனிமங்கள், நீர் போன்றவை குகையின் உச்சியில் கசிந்து ஏற்படும் தோற்றம் விதானம் போன்று இருக்கும், அதை ஸ்டாலாக்டைட் என்கிறோம். அதேபோல் நிலத்தின் கீழ்பரப்பில் இருந்து கசிவதால் ஏற்படும் தோற்றம் ஸ்டாலாக்மைட் எனப்படும். தவளைகள், மீன்கள், பிரம்மாண்ட சிலந்திகள் மற்றும் வெளவால்கள் என ஏராளமான உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன. "இந்த குகைகளை ஆய்வு செய்வது மிகவும் கடினமான சவால்" என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குகை மற்றும் குகை வரைபட நிபுணர் தாமஸ் அர்பென்ஸ். நிலத்தடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் குகையின் வரைபடத்தை உன்னிப்பாக கவனித்தால், குகை, அதன் பாதைகள், மேடு-பள்ளங்கள், பாறைகள் மற்றும் பெரிய பாறைகளின் எல்லைகளில் சர்வேயர் பெயர்களையும், குறிப்புகளையும் காணலாம். பட மூலாதாரம்,RONNY SEN 26 ஆண்டுகளாக குகைகளை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரையன் டி. கார்ப்ரான் உதாரணமாக, பள்ளத்தாக்கில் நடுப்பகுதியில் அமைந்துள்ள 'கிரேட் வொயிட் ஷார்க்' என்ற சாம்பல் பாறையை காணலாம். பார்ப்பதற்கு சுறா போன்ற தோற்றத்தில் இருக்கும். மணற்பாறைகளில் நடப்பது உண்மையிலுமே மிகப்பெரிய சவால். குறுகிய ஆபத்தான அச்சுறுத்தும் இடங்களில் தவழ்ந்து செல்லும் அனுபவம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது. குகைகளை தேடி கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானி பிரான்செஸ்கோ சாவ்ரோ, சில சுறா பற்களை அடையாளம் கண்டதாகச் செல்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வாழ் டைனோசர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,RONNY SEN "இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் பல பொருட்கள் அறிவியலாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே, மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்களா என்பது தெரியவரும்" என்கிறார் செளரோ. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் ஆதி மனிதர்கள் வசிப்பதற்கு பெரிய அளவிலான குகைகளையே தேர்ந்தெடுப்பார்கள். அதோடு, மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த இடம் பொருத்தமானது அல்ல. மேகாலயா அதிக மழை பெய்யும் இடமாக இருப்பதால், இங்குள்ள பெரும்பாலான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். மழைநீர் காற்றில் இருந்து கரியமில வாயுவை ஈர்ப்பதால் சுண்ணாம்புப் பாறைகள் கரைந்து வலுவிழந்துவிடும். பொதுவாக மணற்கல்லால் உருவாகும் குகைகள் அரியவை. ஏனெனில் இந்த வகை பாறைகளின் கரையும் திறன் குறைவு. தாழ்வான இடத்தில் இருக்கும் பாறைகளை கரைக்கவும், அதில் வெற்றிடத்தை உருவாக்கவும், மிக அதிகமான அளவு நீர் தேவைப்படும். பட மூலாதாரம்,MARCEL DIKSTRA உலகிலேயே மிக அதிகமான மழைப்பொழிவை கொண்ட மாநிலம் மேகாலயா. எனவே, இங்கு இத்தகைய மணற்குகைகள் வியத்தகு முறையில் உருவாக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை. தேவதைகளின் குகை போன்ற குகைகள், இந்த இடத்தின் உலகின் காலநிலை மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகின்றன. "இவை புவியின் உட்பகுதியில் உள்ள சூழல் தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன" என்று கூறுகிறார் மேகலயாவில் இருக்கும் குகைகளைத் ஆரயும் 'கிளவுட்ஸ் எக்ஸ்பேடிஷன்' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் ப்ரூக்ஸ். பூமி இந்த "மேற்பரப்பு காப்பகங்கள்" கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு, எரிமலைகளின் செயல்பாடு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தடயங்களை பாதுகாக்கின்றன. மேகாலயாவில் இருக்கும் குகைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கின்றன. 31.1 கி.மீ நீளம் கொண்ட லயட் பிரா (Liat Prah) சுண்ணாம்பு குகை அமைப்பும் இந்த மலைத்தொடரில்தான் அமைந்துள்ளது. அதிகபட்ச உயரத்தில் இருந்து, குறைந்த உயரம் வரையிலான இந்த ஆழமான குகைகள் 317 மீட்டர் முதல் 97 மீட்டர் வரையிலானவை. பெரும்பாலான குகைகளில் எப்போதுமே மனிதர்கள் வசித்ததே இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், போர்க்காலத்தில் தஞ்சம் புக சில குகைகள் பயன்பட்டால், சிலவற்றை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் சில குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,RONNY SEN தேவதைகளின் குகையில் கிடைத்த சில பொருட்கள் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு வர்த்தகம் இந்த குகைகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. (மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களைத் தடுப்பதற்காக, 2007இல் கார்ப்ரான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்.) தேவதைகளின் குகையில் வெப்பநிலை எப்போதும் 16-17 டிகிரிக்கு இடைப்பட்ட நிலையிலேயே இருக்கும். இங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, ஏனெனில் இந்தக் குகையின் சிறிய பிளவுகள், விரிசல்கள் மற்றும் இரண்டு நுழைவாயில்கள் வழியாக காற்றோட்டம் நன்றாகவே இருக்கிறது. பிரையன் டி. கார்ப்ரான் இணையதளக்குறிப்புகள் குகைகள் பற்றிய இவ்வகை ஆய்வுகளைச் சொல்கின்றன. பிரையன் டி. கார்ப்ரான் வார்த்தைகளை அடையாளம் காண மெனக்கெட வேண்டியிருக்கும் சிரமப்பட வேண்டியிருக்கும். இது போல் பல குகைகள் உள்ளன. 1700 ..குகைகள் என்றாலே வாகனத்திலிருந்து இறங்க மறுத்த பலருள் நானும் ஒருவனாகிப் போனேன்ஓரிரு நாட்களிலேயே . பாறைகளில் இருக்கும் கன்னிகளைக்காணவேண்டாமா என்றார் மு.சாமி பாறை உருவங்களா இல்லை. நிஜமாகவே கன்னிகள் கன்னிகளைத் தேடும் முன் கொஞ்சம் பாறைகளுக்குள் நடக்க ஆரம்பித்தாலே தண்ணீர் தாகம் வாட்டியெடுக்கும். எனக்குத் தேவை தண்ணீர் .சிரமப்படுவதால் வரும் கண்ணீர் அல்ல சரி.. கயல் படம் போல் ” சிரபுஞ்சி சாலையிலே” என்று ஒரு தமிழ்ப்பாடல் உள்ள படத்தின் பெயர் தெரியுமா ..
வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 சுப்ரபாரதிமணியன் • உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. • இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது என்றார்கள். ஆனால் புல்வெளிகளும் கூட காய்ந்து கிடந்தன. புவிவெப்பயமாதலின் விளைவுதான் இங்கும் பாதிப்பாகியுள்ளதாகச் சொன்னார்கள். அது சார்ந்த விளக்கங்களுக்கு கடைசிப்பத்தியைப் பாருங்கள். உடனே அல்ல.. இக்கட்டுரையை மெதுவாகப் படித்து விட்டு ..மெதுவாகப் பாருங்கள் . • சிரபுஞ்சி என்றால் “ஆரஞ்சுகளின் நிலம்” என்று அர்த்தமாம். மெட்ராஸ் சென்னை ஆனதுபோல, கல்கத்தா கொல்கத்தா ஆனது போல மேகாலயா அரசும் சிரபுஞ்சியை பழைய பெயரான ஷோரா என்றே மாற்றியிருக்கிறது. சிரபுஞ்சியை ஒட்டியே வங்கதேச நாடு அமைந்துள்ளது. சிரபுஞ்சி ஷில்லாங்க்கிலிருந்து நோங்கரம் வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது. • தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும். • 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1]. • 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. • காண்பதற்கே பயமுறுத்தும் வகையில் மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், காண்பதிலேயே தலை சுற்றச் செய்யும் நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் முழு பரப்பையும் நன்றாக காணத்தகும் முழுமையான காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பகுதி • சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது.இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. சராசரியாக வருடத்திற்கு 180 நாட்கள் சிரபுஞ்சியில் மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை. இரவில்தான் அதிக மழை பெய்வதால், பகலில் அடைமழை கூட . • நோகலிகை நீர்வீழ்ச்சி: இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுவாகும். அதிக அளவு நீர் வரத்து காரணமாக நீர் வீழ்ச்சி பிரம்மாண்ட மாக காட்சியளிக்கும். அருகில் உணவு விடுதிகளில் உள்ளூர் காஸி உணவு வகைகள், வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் கிடைக்கின்றன. • நோக்காலிகாய்(Nohkalikai) அருவி. உலகின் நான்காவது பெரிய அருவி. 1115 அடி உயரம் கொண்ட அருவியில் குளிக்கவெல்லாம் முடியாது. தூரத்திலிருந்து தரிசனம் மட்டுமே. ஆனால், அதுவே எல்லையில்லா ஆனந்தம் தரவல்லது. இந்த அருவிக்கும் ஒரு கதை இருக்கிறது. நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அருவியை மறக்காமல் இருக்கவும், ஷோரா வந்தவர்கள் இந்த அருவியைப் பார்க்காமல் போகவும் விடாத கதை. • லிகாய் என்பது அந்தப் பெண்ணின் பெயர். திருமணமாகி ஒரு குழந்தையும் அவளுக்கு இருந்திருக்கிறது. திடீரென அவள் கணவன் இறந்துவிடுகிறான். லிகாய் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறாள். புதிய கணவன் குழந்தையையும் அவளையும் நன்கு பார்த்துக்கொள்கிறான். சில நாள்களில் அவன் சுயரூபம் தெரிகிறது. அவளை வேலைக்குச் செல்லுமாறு அடிக்கிறான். அந்தப் பணத்தில் வாழ்கிறான். ஒருநாள் வேலையிலிருந்து வீடு திரும்புகிறாள்; வீட்டில் இருவரையும் காணவில்லை. ஆனால், மேஜையில் உணவு தயாராக இருந்திருக்கிறது. களைப்பாக இருந்த அவளுக்கு பசித்தது. உணவை சாப்பிடுகிறாள். சாப்பிட்டபின் வெற்றிலைப் போட கூடையை எடுக்கிறாள். உள்ளே அவள் மகளின் கைவிரல் துண்டாக கிடக்கிறது. நல்லவன் போல் நடித்தவன் குழந்தையைக் கொன்று, அதை சமைத்தும் வைத்திருக்கிறான். தன் மகளை தானே தின்றுவிட்டோமே என்ற சோகத்தில் லிகாய் அருகிலிருக்கும் அருவியில் குதித்து உயிரை விட்டிருக்கிறாள். அந்த இடம் தாம் நோக்காலிகாய் அருவி. குதிப்பது என்ற அர்த்தம். லிக்காய் குதித்த இடம்.- விகடன் வாசகர் .விஜயா இதைப்பகிர்ந்து கொண்டார். • மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி: மேகாலயாவின் கண்கவர் நீர் வீழ்ச்சிகளில் ஒன்று ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகள் இணைந்து இந்த நீர்வீழ்ச்சி ஓடுகிறது.சூரியனிலிருந்து வரும் ஒளி இங்கு பிரதிபலித்து மிகவும் வித்தியாசமானதாக காட்சியளிக்கும் கைன்ரெம் நீர்வீழ்ச்சி: கைன்ரெம் நீர்வீழ்ச்சி சோஹ்ராவின் மலைகளில் இருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது.அருகாமையில் பாயும் மற்ற அருவிகளை இணைத்துக் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சியை, மழைக்காலத்தின் போது கட்டாயம் காண வேண்டும். • . நோங்சாவ்லியா: நோங்சாவ்லியா சிரபுஞ்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.வட கிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயம் இங்குதான் அமைக்கப்பட்டது ஈகோ பூங்கா: • மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஈகோ பூங்காவைச் சுற்றிலும் அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும் கொண்டது ஆகும்.சுற்றுலாப் பயணிகள் மலைகளிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளை கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. • பூங்காவைப் போல் இங்கு வருகிறவர்கள் விவேகானந்தா மடத்திற்கும் செல்கிறார்கள் .1924-ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தரின் சீடர்களுள் ஒருவரான கேதகி மஹாராஜ் என்பவர் காசி மக்களின் முன்னேற்றத்திற்காக, ஷெல்லா கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடமும் ஒரு சுகாதார மையமும் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி தொடர்ந்து காசி மலைப் பகுதி கிராமங்களில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கே கல்வி நிறுவனங்கள், சுகாதார மையம், ஆஸ்ரமம் என பலவும் தொடங்கப்பட்டது. சிரபுஞ்சியில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் 1934-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. • • கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அங்கே ஒரு சிறிய அருங்காட்சியகமும் உண்டு. அங்கே சென்று காசி பழங்குடி மக்களின் பாரம்பர்யம், அவர்களது நடவடிக்கைகள் ஆகிய பற்றிய காட்சிப்பொருட்களையும், ராமகிருஷ்ணா மிஷன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கண்டோம். அங்கேயும் சில கடைகள் உண்டு. அப்பகுதி மக்கள் தங்கள் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள் என்பதை தில்லி வெங்கட் பகிர்ந்து கொண்டார்.. • சிரபுஞ்சியானது வங்கதேசத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடிய இந்திய எல்லையோரப் பகுதி. மேகாலயா மாநிலத்தில் எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது. வங்கதேசம் தரைப்பகுதியாக இருக்கும். சிரபுஞ்சியில் இருந்தே வங்கத்தேசத்து சமவெளியை பார்க்க முடியும். வங்காள விரிகுடா கடலில் இருந்து எழும் குளிர்காற்று மேகங்கள் தவழ்ந்தோடும் மேகலாயாவின் சிரபுஞ்சி மீதுதான் முதலில் மோதுகின்றன. இதனால்தான் அங்கு மழைபொழிவு உலகிலேயே அதிகமாக இருந்து வருகிறது. • 1973-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரைக்கும் சிரபுஞ்சியின் சராசரி மழை அளவானது 11,820.8 மில்லி மீட்டராக இருந்து வருகிறது. இருப்பினும் 2010-ம் ஆண்டு 13,472.4 மில்லி மீட்டராக இருந்த ஆண்டு மழைப் பொழிவானது 2011-ம் ஆண்டு கணிசமாகக் குறைந்து 8732.2 ஆக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு 9069.9 ஆக பதிவாகி இருந்திருக்கிறது.இது இப்போது இன்னும் குறைந்துள்ளதாம் • சிரபுஞ்சியில் ஒரேநாளில் 471.7 மி.மீட்டர் மழைபெய்து உள்ளது. ஒரேநாளில் அதிகபட்ச மழைப்பொழிவு என்ற கடந்த 10 ஆண்டு சாதனையை சிரபுஞ்சி உடைத்தது.10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது சிரபுஞ்சியில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 12,000 மில்லி மீட்டராக பதிவாகிறது. சிரபுஞ்சி காசி மலைப்பகுதியின் தென்சரிவில் அமைந்து இயக்கை எழிலை தன்னுடனே கொண்டு உள்ளது. சிரபுஞ்சியில் கடந்த 1974-ம் ஆண்டு, 24,555 மி.மீ. பெய்ததே, ஒரு ஆண்டில் பெய்த அதிகப்பட்ச மழைப்பொழிவு ஆகும். சிரபுஞ்சி கடல்மட்டத்தில் இருந்து 1,290 மீட்டர் உயரத்திலும் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. மேகாலயாவிலும் வழக்கத்திற்கு மாறாக அதிகப்பட்சமாக கடந்த செவ்வாய் அன்று 100.4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகிஉள்ளது. . இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த சிரபுஞ்சியில் இன்று வறட்சி நிலவுகிறது, இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளுக்கு உலகிற்கே மழைக்களஞ்சியமாக விளங்கிய ஒருகாலத்து பசுமை சிரபுஞ்சி இன்று காய்ந்துபோன வறட்சி பூமிக்கு உதாரணமாக திகழ்கின்றது, மழை இப்படி மீட்டர் கணக்கில் கொட்டும் போது மக்களின் தாகத்தை தனிப்பதற்கு ஒரு துளிகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள். இதற்கு எல்லாம் மூலகாரணம் அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதுதான், முன்னொரு காலத்தில் சிரபுஞ்சியை சுற்றிலும் இருந்த மலைகளில் அடர்ந்த காடுகள் இருந்தன, அதிகமாக பெய்த மழையால் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தன இங்குள்ள காடுகள், காடுகளில் இயற்கையாகவே கொட்டிக்கிடந்த இலை தழைகள் சிறிது சிறிதாக பெய்யும் மழை நீரை பூமிக்குள் அனுப்பி வைத்தன, இந்த செயல் தொடர்ந்தும், பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தன, ஆனால் சமீபகாலமாக கண்மூடித்தனமாக காட்டுமரங்கள் அளவுக்கு அதிகமாக வெட்டி சாய்க்கப்பட்டன, இலை தழைகளால் மூடப்படாமல் கட்டாந்தரையில் படிந்து கிடந்த வளமான மேல் மண் கனமாக பெய்யும் மழையால் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. , அதனால் சிரபுஞ்சியில் இருக்கும் மலைச்சரிவுகள் பாலைவனங்களாக காட்சி தருகின்றன, போதாகுறைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல இங்குள்ள காடுகளில் சுரங்கங்கள் தோண்டுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள், இந்த சுரங்கங்களில் நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லும் வெட்டி எடுக்கப்படுகின்றன, இதனால் தூசுக்கள் நிறைந்த காற்றை இங்குள்ள மக்கள் சுவாசிக்கிறார்கள், ஒடிவந்த மழைநீரை முன்பெல்லாம் தேக்கி வைப்பதற்கு நீரை சேமித்துவைக்கும் வசதிகள் இங்கு கிடையாது, கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பல செ.மீ மழை பெய்தாலும் அதை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை . கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலைந்த கதையைப் போலாகிவிட்டது சிரபுஞ்சியின் அமைப்பு. இங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறையும் தான். காடுகள் முன் யோசனையின்றி அழிக்கப்படுவதால் சிரபுஞ்சியில் பெய்யும் மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, காடுகள் அழிக்கப்பட்டால் பொங்கி எழும் உணர்வு நம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்பட வேண்டும், காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதால் பெய்யும் மழையின் அளவும் குறைகிறது., சிரபுஞ்சிக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைமை பூமி முழுவதற்குமே இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது, நாளை ஒரு நாள் சிரபுஞ்சி போல மழை என்றால் என்ன என்பதற்கு விடையாக வருங்கால சந்ததிகளுக்கு அதையும் இணையதளத்தின் வழியாய் காட்ட வேண்டிய ஒரு கேடு கெட்ட நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். எச்சரிக்கை, அதற்கு முன்னால் இந்த பூமியின் மொத்த இயற்கை வளங்களுக்கும் சொந்தக்காரன் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாம் விழித்துக்கொண்டால் பிழைத்தோம். இல்லை என்றால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் பாலுட்டிகள் குடும்பத்தில் சீக்கிரத்திலேயே மற்ற உயிரினங்களோடு மனிதன் என்ற ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனமும் சேர வேண்டியிருக்கும் என்று பசுமை இந்தியா அமைப்பின் ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி இடத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. . இதற்கு வளிமண்டல மேலடுக்கு தான் காரணம். கூடுதலாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், கனமழை எல்லா இடங்களிலும் கொட்டி தீர்த்துள்ளது. நீலகிரி மாவாட்டத்தில் உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இங்கு எப்போதும் பருவமழை காலங்களில் மழை அதிகமாக பெய்யும். இந்த ஆண்டு மிகவும் அதிகமாக மழை பெய்துள்ளது. பதிவாகி உள்ளது. அதிகப்படியான மழை பெய்துள்ளதால், “தமிழகத்தின் சிரபுன்ஞ்சி”என்று ஆனது, அவலாஞ்சி. இது ஒரு நீர்ப்பிடிப்பு பகுதி அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. • சிரபுஞ்சியில் நிலவி வரும் சீரற்ற மழைப் பொழிவானது மற்றும் மழை இல்லாமல் போவது புவிவெப்பயமாதலின் விளைவு என்ற போதும் அங்கிங்கெணாதபடி தொடரும் பசுமை வேட்டையைத் தடுத்தால்தான் சிரபுஞ்சியின் புகழைத் தக்க வைக்க முடியும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள். • அதிக மழைப்பொழிவு ஊரிலிருந்து ஒரு சொட்டு மழையைக் கூட உணராமல், மழை பெய்து கிளம்பும் மண் வாசனையை உணராமல் திரும்ப வேண்டியிருந்தது. 00000
வடகிழக்கு இந்திய பயணம் 7 சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . 9டிகிரி சி யில் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.குளிர் மட்டுமா நம்மைப் பிரிக்கிறது , எல்லைப் பிரச்சினை எப்போதும் இங்கு மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்றார் வாகன ஓட்டுனர். மேகாலயா எல்லைப்பிரச்சினை சக மனிதர்களையும் இடம் பெயர்ந்தவர்களையும் கூறு போட்டுத் தனியே பிரித்து வைத்திருப்பதையும் நான் மொழிபெயர்த்த சாகித்ய அகாதமி வெளியிட்ட “ பூமியின் பாடல்கள்” நூலில் மூன்று கதைகள் வெளிப்படுத்துகின்றன அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது. இவர்களுக்கான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அஸ்ஸாம், மேகாலயா முதல் அமைச்சர்களைக்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நடத்திய மாநில எல்லைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியச் செய்திகளை அங்கிருக்கும் போது பத்திரிக்கைகளில் படித்தேன். காங்கிரஸ் கட்சியினரும் மேகலாயா அரசாங்கம் எல்லைப்பிரச்சினைகளைப் பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது . அதைக்கண்டிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருந்த்தைக் காண முடிந்தது. கொரானா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு இந்த மாநிலங்களில் இடம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதையும் அவர்களின் அடையாளங்கள்- அடையாள அட்டைகள், உரிமங்கள் சார்ந்து- எதுவுமில்லாமல் இருப்பதையும் கண்டித்தும் குரல்கள் எழுப்பியதைப்பார்க்க முடிந்தது. உக்ரேனிலிருந்து போர் சூழலில் தப்பித்து வந்த இரண்டு மாணவர்கள் கவுகாத்தி வருவதற்குப் பணமின்றி சிரமப்பட்டுக்க்கொண்டிருப்பதாக சில செய்திகள் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன.நாங்கள் அங்கிருந்த மார்ச் மாத்த்ஹ்டின் இரண்டாம் வாரம் வரி சுமார் 110 பேர் உக்ரேனிலிருந்ஹ்டு தப்பித்து வந்து ஊர் சேர்ந்திருந்தார்கள் . கடைசியாக வந்தவர்கள் டெல்லி, காசியாபாத்தில் அடக்கலமாகியிருப்பதையும் அஸ்ஸாம் வர அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதையும் செய்திகள் சொல்லின. உக்ரேனில் சாப்பாட்டு வசதியில்லாமல் குண்டு போடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தவர்கள் தங்கள் நிலைகளை வீடியோ மூலம் சமூக ஊடகங்களுக்குத் தர அவர்கள் வெளியேற சமூக ஊடகங்கள் உதவியதை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் டெல்லி, காசியாபாத் கூட அவர்களுக்கு நெடுந்தொலைவு ஆகி விட்டது பொதுவாகவே, வடகிழக்குப் பிராந்தியம் மலைப் பாங்கானதால் சாலைப் பயணம் சிரமமானது. தூரம் குறைவாய் இருந்தாலும் மலைப் (மழைப்?) பாதையில் நேரம் அதிகம் எடுக்கும். தவிர, மேற்கு வங்கத்தில், உதாரணமாக, கொல்கத்தாவிலிருந்து சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால், இடையில் பெருமளவுக்கு வங்க தேசம் வந்து விடுகிறது. எனவே நீங்கள் மிகவும் சுற்றித்தான் குவாஹாத்தியை அடைய முடியும்.இவற்றை விட மிக எளிதானது, சிக்கனமானது விமானப் பயணம் என்று முன்பே முருகன் வேம்பு தெரிவித்திருந்தார். நியூஜல்பைகுரி…அப்புறம்…கவுஹாத்தி..திமாபூர்..நியூடின்சுகியா.அத்தோடு இந்தியா பார்டர்.ஒரே இரயில் செல்லும் பாதை (கிழக்கு-மேற்காக) தவிர மற்ற அனைத்தும்(வடக்கு, தெற்கு)மலைப்பிரதேசங்கள் வளைந்து வளைந்து சாலை செல்லும்.ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலையில்…ஏற வேண்டும். பொழுதுபோக விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு….. சாலை போடுவது, பராமரிப்பது கடினம். இரண்டு சமயங்களிலும் அதிக நேரம் காத்திருந்து செல்லவேண்டும். ஆனால் இயற்கையின் அழகை ரசிக்க இதை விட அருமையானச் சந்தர்ப்பம் கிடைக்காதல்லவா. மேகாலயா : 30 லட்சத்திற்கும் கீழ் தான் இங்கு மக்கள் தொகை. பேசப்படுகிற மொழி காசி மற்றும் காரோ. இங்கு ஒரு 1% மக்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள். சிறப்புஞ்சி இந்த மாநிலத்தின் சிறப்பம்சம். இம்மாநிலத்தின் ஒரு சிறப்பு மனிதரைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும் அவர் பெயர் ராம் சிங் இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவர் தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்கிக்கொள்வார் தன் தேவைக்கேற்ப. கூடவே நாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்கிறார். சிறிய மாநிலங்களின் சாபக்கேடு என்னவென்றால் மத்திய அரசின் கவனத்தை அவர்களால் ஈர்க்க முடியாது. காரணம் அவர்களின் ஓட்டு வங்கி மிக மிக குறைவு. பெரிதான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு விளையாட்டு வீரர்களும், கலைத்துறை சார்ந்தவர்களும் அங்கு வளர்வது அரிது. வடகிழக்கு மாநிலங்களில் பெரிய பலவீனம் அவர்களுக்கு துறைமுகங்கள் கிடையாது. அதனாலேயே பெரிய தொழிற்சாலைகள் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருப்பது இல்லை. அதனால் விவசாயத்தை மட்டும் நம்பி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறப்பான சீதோசன நிலை எப்போதும் அங்கு காணப்படுகிறது. அதனால் சுற்றுலாத்துறை அங்கு சிறப்பாக செயல்படுகிறது. மெத்த படித்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறும் அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இது போல் உள்ள சிறிய மாநிலங்களில். லாட்டரி சீட்டு நாடு முழுதும் தடை செய்யப்பட்டாலும் 13 மாநிலத்தில் இன்றும் லாட்டரி தொழில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த 13 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. செந்தில்நாதன் அவர்கள் தெரிவித்த தகவலையொட்டி லாட்டரி சீட்டு வாங்கி விடுவது , அதிஷ்ட்த்தைப் பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் லாட்டரி சீட்டுகள் கண்ணில் படவில்லை • எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் 'மேகாலயா" என அழைக்கப்படுகிறது. • மேகாலய மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழி பேசப்படுகிறது. • மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. • 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. • பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். • மேகாலயாவின் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. • மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. தகவல் தந்த அஜய் சாய்க்கு நன்றி 0 பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) 2900 கிலோ மீட்டர்கள் பிரம்மபுத்ரா ஆறு சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் ஆரம்பித்து நாம்சா- படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2900 கிலோ மீட்டர். பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை பல படகுப் பயணங்களில் கண்டேன் . எங்கு போனாலும் அக்ண்ணில் படும் அதன் அழகு மன்திற்கு இதம் தருவது. அது தரும் வெள்ளம், அழிவு சார்ந்த விசயங்கள் மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை கவிதைகளால், ஓவியங்களால் சரியாகச் சொல்லி விடமுடியும் வங்கதேசத்தின் எல்லை ஓரத்தில் இது தூய்மையானதாக ஓடி வியப்புகளை அள்ளி வழங்குகிறது வடகிழக்கு இந்தியப் பயணம் : 8 சுப்ரபாரதிமணியன் ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும் போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்.. இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டாம். இந்தியாவிலே செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா ஷில்லாங்கில் நடைபெறுகிறது. சமீபமாய் சில ஆண்டுகளாய் இந்தியாவில் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் செர்ரி பூக்கள் அபரிமிதமாய் பூத்து அழகு தருமாம்..வழக்கமாய் செர்ரி மரங்களைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெறும் சமயத்தில் மேகாலயாவின் விசேசமான உணவு வகைகள் கிடைக்கும் அவற்றில் அரிசி உணவு ஜடோ, நகாம் பிச்சு சூப், அசைவ சாலட் டோலி, அசைவ உணவு துங்கிரிம்பை ஆகியவை முக்கியமானவை மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை (74.59 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் (0.32 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர். இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.வட்டார மொழிகளோடு வட்டார உணவுகளும் முக்கியம் \வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மட்டுமல்லாமல் உணவு வகைகளும் உணவு முறைகளும்கூட இந்திய பெருநிலத்திலிருந்து வேறுபட்டவை. மேகாலயா மாநிலம் அளவில் சிறியது என்றாலும் தனக்கென தனித்த உணவு முறைகளைக் கொண்டது. மேகாலயா மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தவர்களாகவே உள்ளனர். மலை மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள மேகாலயாவில் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, சணல், இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, மிளகு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றன. பழத்தோட்டங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் மேகாலயாவில் அதிகம் காணப்படுகின்றன. அரிசி, மீன் மற்றும் இறைச்சிகள் மேகாலயா மக்களின் முதன்மையான உணவுகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இவை இல்லாமல் சோளம், கிழங்கு மற்றும் சிறுதானியங்களையும் விரும்பி உண்கின்றனர். மேகாலயாவில் உள்ள வெவ்வேறு இன மக்களின் உணவு முறைகளின் அடிப்படையில், அவர்களின் உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கரோ, காசி மற்றும் ஜெயின்டியா. கரோ வகை உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிமையானவை. காய்ந்த மீன் கொண்டு தயாரிக்கப்படும் நகாம் பிட்சி மிகவும் புகழ்பெற்ற கரோ வகை உணவாகும். அரிசியினால் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் காசி என அழைக்கப்படுகின்றன. ஜடோ, ஜஸ்டெம் ஆகியவை பிரபலமான காசி உணவுகள். காளானில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், ஜெயின்டியா எனப்படுகின்றன. ‘டிட் துங்’ மேகாலயாவில் விரும்பி உண்ணப்படும் ஜெயின்டியா வகை உணவு. சாதத்தை புளிக்கவைத்து தயாரிக்கப்படும், கியாத் எனும் பானம் மேகாலயாவில் மிகவும் பிரபலம். மேகாலயாவில் உள்ள காசி எனும் குறிப்பிட்ட சமூகத்து மக்களால் தயாரிக்கப்படும் அரிசி உணவு ஜடோ. அரிசி, இறைச்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிகுந்த காரத்துடன் ஜடோ உணவு சமைக்கப்படுகிறது. மேகாலயா செல்பவர்கள் ஜடோ உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த உணவு பிரியாணியின் சுவைச் சாயலைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பிரியாணியைவிட ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். மேகாலயா மக்களின் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களை கியாத் பானம் இல்லாமல் பார்க்க முடியாது; முழுமையும் பெறாது. அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வோடு ஒன்றியது மேகாலயா கியாத். சோற்றைப் புளிக்கச் செய்து அதிலிருந்து கியாத் பானம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகள் மற்றும் பிளேவர்களில் தயாரிக்கப்படும் இந்தப் பானத்தை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் விரும்பி அருந்துகின்றனர். மற்ற மேகாலயா உணவு வகைகளைவிட நகாம் பிட்சி சூப்பை தயாரிப்பது மிகவும் எளிதானது. மேகாலயாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த சூப், நன்றாக சாப்பிட்ட பின்பு அருந்த வேண்டியது. நகாம் பிட்சி சூப், காய்ந்த மீன் (கருவாடு) கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக மீன்களைத் தேர்ந்தெடுத்து காய வைக்கின்றனர். அதிக அளவு காரம் சேர்த்து மிகவும் சுவையாக இந்த சூப் தயார் செய்யப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற அசைவ சாலட் டோக்லி. இறைச்சி, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து இந்த சாலட் தயார் செய்யப்படுகிறது. சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என நம்பப்படுவதால், டோக்லி மீது ஈர்ப்பு அதிகம். பீன்ஸ், தக்காளி, கேரட் ஆகியவற்றையும் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்து பதமாகத் தயாரிக்கப்படும் உணவு என்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. மேகாலயாவில் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் புகழ்பெற்ற அசைவ உணவு, துங்கிரிம்பை. இறைச்சி, பீன்ஸ் மற்றும் எள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இறைச்சி, பீன்ஸ் இரண்டையும் வேக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து, அதை அரைத்து எடுத்துக்கொண்டு, வேக வைத்துள்ள பீன்ஸ் உடன் சேர்த்து, கடைசியாக இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இஞ்சி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். ( விக்கிபீடியா/ இணைய தள தகவல்கள்) எங்கள் குழுவில் மூன்று சமையல் பணியாளர்கள் கோவையிலிருந்து கூட வந்திருந்தனர். ( அதில் ஒருவர் முதல் விமானப் பயணம் என்பதால் கையில் வைத்திருந்த பையில் கரண்டி, கத்தி உட்பட பல சமையல் சாமான்கள் இருக்க ஸ்கேனரில் சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அலறி விட்டனர். விமானத்திற்குள் நுழைய அதனால் தாமதமாகி விட்டது) அவர்கள் சமைக்கும் சமையலில் வீட்டுச்சமையல் தன்மை இருக்கும்.வயிறு கெடாமல் இருக்கும். காலையில் பேருந்து கிளம்பும்போதே மதியம் உணவும் தயாரிக்கப்பட்டு நாங்கள் செல்லும் வாகனத்திலேயே வந்து விடும். சில இடங்களுக்குச் செல்லும் போது சமையல் பொருட்கள், பாத்திரங்கள் என்று சகலத்தையும் கொண்டு செல்வோம் .சமைப்போம். அப்படி நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு சென்று போது அங்கு சமைத்து உண்ணலாம் என்றத்திட்டம் சாலை சிரம காலதாமதத்தால் சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் என்ற திட்டத்திலிருந்து நழுவி வெறும் ரசம், கத்திரிக்காய் பொறியல் . அப்பளம் என்ற அளவில் சுருங்கி பசிக்கு அமிர்தமாக இருந்தது. அதனால் மேகாலயாவின் உணவுகளை ஆசைக்குத் தேடிப் போய் உண்ண வேண்டியிருந்தது. கண்ட இடத்தில் மேய வேண்டியிருந்தது. அப்படி கொஞ்சம் மீனும், துங்கிரிம்பையும் எனக்குச் சுவைக்கக் கிடைத்தன.