சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

The Faces Of The Dead

Subrabharrathimanian's Novel!
----------------------------------------------------
------ R Balakrishnan --------

Subraharathimanians fictions palpatitate with passion for the poor and the marginalised based on the Tiruppur of 15,000crores rupees export town,Tamil nadu and related settings they deal with lives of migrant and unorganised workers and probably children, their plight etc.., This novel "Faces of the Dead" is a translation of his "pinakalin mughankal"in tamil. this work is thematised on how the strong, physical components of the body of the children are exploited by various, especially the hardcore labour system... Male ones are given jobs which are more for their capacity and female ones are sexually too exploited. Their parents are from a community of descendents who have neither anyform of possessions nor meaning behind their lives.These helpless ones are thrown into a space where the thoughtless plundering of the natural resourses take place from sunrise to sunset. Kanagu, senthil, devaki, veni, poorani are all central charaters of this novel, children they are in the beginning of their teens but are exposed the nearbig atire which never suit to. Instead of their dreams or even a persuit of heigher education they are exposed to hard working conditions- as their families need their salary. The Tamil original has been translated into English by R.Balakrishnan, a poet and an English lecturer.

Kanagu and senthil are packed up, leave their school after the last working day. Kanagu has a dream to pursue higher education, wherever senthil belongs to a still poorer family wants to take up an errand job after holidays. Kanagu's father finds his job work in weaving indoldrum and gets difficult to make up both the ends meet. Hence Kanagu is forced to take up a small job at a nearby textile unit. Poorani is one such a ward, though interested in learning she finds it difficult to make herself comfortable in huge schools. The teachers too are seemingly threatening. She believes a job would bail out her from her troubles; so also her family, sheis given a small job of taking care of a mentally disturbed women Meenakshi. When days role by she finds how difficult it is to do a job instead of leaving Kanagu and Senthil find their pockets swell with a bit of money earned through hard work.., they spend lavishly, learn to smoke and drink too. Senthil develops a feeling for one of his colleagues in the mill, Devaki though she is older than him. she is a migrant from downsouth. Yet he got appalled in a situation after finding that she is sexual exploit of the mill owners,. the agonies of Meenakshi grow more and totally it results in sending out poorani from the job. Meanwhile the city is targeted with a terrorist attack, bombs serially exploidng everywhere hit the normal life and people lose jobs too as the city's economy is badly affected. This is the time perhaps Poorani may leave the town to find an another job, leaving her affectionate family at a tender age. There is an abandoned house, find a space a wide canvas of this novel which is probabily a place meant for illegal activities and brothel. Fire burns this small edifice and the story ends up into an epic setting burning.

Sent by: issundarakannan7@gmail.com

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும் விதங்களில்தான் ஆளுக்காள் மாறுபடுவர். சுவாரஸ்யத்துக்கோ, தகவலுக்கோ ஒருவர் ருசித்த விதத்தை ஒன்னொருவருக்குச் சொல்லுவது தேவையெனில் - 'ஓலைக்கீற்று'க்கான இவ்விமர்சனமும் தேவையானதே.


வெறும் கற்பனைச் சம்பவங்களிலும், விநோதப் புனைவு உத்திகளிலும் நம்பிக்கையில்லாத படைப்பாளியாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருப்பவர் ஆர்பிஎஸ் எனப்படும் சுப்ரபாரதிமணியன் அவர்கள் அவரது படைப்புகள் என்றுமே சமகால வாழ்வியலின் அவலங்களை வெகு அக்கறைரயோடு பேசுபவை. ஜிலுஜிலுப்பான வார்த்தை விளையாட்டுக்களையும், பொறுப்பற்ற சொல்லாடல்களையும் அவரது படைப்புகளில் காணவியலாது. கீழே நடக்கும் கலவரத்தை உயரமான கட்டிடத்தின் மீது வெகு பாதுகாப்பாக நிற்பவர் விவரிப்பதற்கும்- அதே கலவரத்தில் சிக்குண்டு சேதப்பட்டவர் அதை விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. இதில் ஆர்பிஎஸ் இரண்டாவது வகை.


அதனால்தான் கதை செய்வதற்காகப் போலியான வறட்டுப் பாணிகளில் யோசிப்பதில்லையவர். எக்கதையிலும் தான் புழங்கிக் கொண்டிருக்கும் மண்ணையும் மக்களையுமே பதிவு செய்கிறார். மண் என்றால் மண் சார்ந்த வளங்களும், மக்கள் என்றால் அவர்களின் சுகங்களும் அவரின் கதைப் பொருட்களாகின்றன. மண்ணும் மனிதமும் வளமாக இருத்தலே சமூக வெற்றி எனும் கோட்பாட்டில் நின்றுகொண்டு, அவற்றைச் சுரண்டும் சக்திகளை அடையாளப்படுத்தி ஆணி அடிக்கிறார்..'ஓலைக்கீற்று' தொகுப்பின் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு ஆணி குத்துகிறது.


ஆற்றைக் கெடுத்த ரசாயனக் கழிவுகள் உருவாக்கிய பூச்சிகள் 'ஈரம்' கதை முடிந்த பிறகும் நம்முள் ஊர்கின்றன. செத்த எலிகளாய் மனிதர்களைப் பந்தாடும் அப்பூச்சிகளின் அரக்கத் தனம் ஆணியாய்ப் பதிகிறது. இதில் அடிக்க மறந்த ஆணிகள் சிலவற்றை 'கழிவு' கதையில் அடித்துக் கடமை முடிக்கிறார். செருப்பை மாற்றி அணிந்து கொண்ட நகைப்பில் தொடங்கிக் கரடுமுரடான தனியார்மய எதிர்ப்பைக் குத்திக் கதை செய்திருக்கும் இவரின் எழுத்தாணி பிரமிப்பானது. அந்த 'மாற்றங்கள்' கதையின் அரசு அதிகாரி யார் என்றும் நமக்குத் தெரிந்துதான் விடுகிறது.


தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்காகக் கூட்டமாக விமானம் ஏறும் நாட்களில் விமானங்களில் வழங்கப்படும் உணவு வழக்கமானதாக இல்லாமல் சாதாரணமானதாக இருக்கும் என்கிற சர்வதேச அவலத்தைப் போகிற போக்கில் குத்திச் சொல்கிறது 'திரும்புதல்' கதை. மருந்துப் பொட்டலங்களோடு வாழப்பழகிவிட்ட இன்றைய சூழல் குறித்த குத்தலோடு "பொட்டலங்கள்' கதை. சுடுகாடுகள் அழிந்து மின் மயானங்கள் வந்து விட்டன, ஆனால் சாகிறவர்களும் சாகிற காரணங்களும் மாறவில்லை என்றொரு ஆணி 'மயானம்' கதையில்.


ஒரு மனப் பிறழ்ச்சியாளரின் ஓலைக் கீற்று வழியான பார்வையும் அவர் மீதான புறப்பார்வைகளும் 'ஒலைக்கீற்று' கதையையும் தாண்டிக் குத்துகின்றன மனதில். நாகரீகம் வளர்கிறதா வீங்கி நாறுகிறதா என்றொரு குத்தல் 'வெளுப்பு'வில் உறவுகளை உதறிக்கொண்டு தனித்தனி மனிதச் சில்லுகளாகச் சிதறிவிட்ட இன்றைய நடப்பைக் குத்துகிறது 'முன்பதிவு'.


'நீலப்படமும் சுசித்ராவும்' கதையில் தன் சிநேகிதியை நீலப்படத்தில் பார்க்க நேரும் யதார்த்தம் பயங்கரக் குத்தல். மேல்தட்டுக் கலாச்சாரத்தின் விகாரம், 'சூடு' கதையில் குத்தித் துருத்துகிறது. பிழைப்புச் செய்து வந்த தறிகளையே கட்டைகளாக உடைத்து விற்றுப் பிழைக்கும் நெசவாளிகளைப் பேசும் 'சாம்பல்' - அடிப்படையறிந்து வளராத விஞ்ஞானத்திற் கெதிரான குத்து.


சமூக ஏற்ற தாழ்வுகள் கழிப்பறைகளிலிருந்தே தொடங்குவதைக் குத்திக் காட்டிச் சொல்கிறது 'கழிப்பறைகள்' எனும் கதையாணி. இளம் விதவையொருத்தியின் நகர மறுக்கும் வாழ்க்கையின் நடுவே நம்பிக்கை அச்சாணியாகக் குத்தி நின்று இயக்கம் கொடுக்கிறது 'பாதுகாப்புகள்' சிறுகதை.


தொட்டு விட்டால் பிறகு விட்டுவிட முடியாத ஒரு 'தொடுப்பு'க்கு நம்மை ஆளாக்குகிறது இத்தொகுப்பு. ஆர்பிஎஸ் அவர்களின் எதிரே உட்கார்ந்து கதை பேசுவது மாதிரியான எழுத்துப் பாணிக்கு நம் கண், செவி, மெய் என்று அத்தனையையும் ஆளாக்கிக் கொண்டு அசந்து உட்கார்ந்து விடுகிறோம், வேறெதையும் விடுத்து பாத்திரங்களின் மன ஓட்டங்களையே கதைப் பட்டங்களுக்கான நூலாக்கிச் சுண்டுவதில் இவருக்கு நிகர் அவரே.


இது இவரது 13 வது சிறுகதைத் தொகுப்பு எனும் நான்காம் பக்கத் தகவல், நம்மிடம் இருக்கும் இல்லாத இவரது ஏனைய தொகுப்புகள் குறித்த அக்கறையோடு நம்மை அலமாறிப் பக்கம் உந்தித் தள்ளுகிறது. அர்த்தமுள்ள அழகிய வடிவமும் கொடுத்து வெளியிட்டிருக்கும் காவ்யா பதிப்பகத்தாருக்கு தமிழுலக வாசகர்கள் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.


( 26-08-2008 அன்று திருப்பூரில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியனின் " ஓலைக்கீற்று " சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் குறும்பட இயக்குனர் தாண்டவக்கோன் பேசியது. நூலை பேராசிரியை முத்து சிதம்பரம் வெளியிட , சுதாமா கோபாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார். " ஓலைக்கீற்று " ரூ 50/ காவ்யா பதிப்பக வெளியீடு, சென்னை. இவ்விழாவில் இவ்வாண்டின் அரிமா குறும்பட விருதுகள் 8 குறும்படப்படைப்பாளிகளுக்கும் ( கருணா ,விஆர்பி மனோகர், ஆண்டோ, தாரகை, கோவை சதாசிவம்,புவனராஜன், சுபாஸ், குணவதிமைந்தன்) அரிமா சக்தி விருது 5 பெண் எழுத்தாளர்களுக்கும்( பேராசிரிகைகள் முத்து சிதம்பரம், பாக்கியமேரி, சுலோட்சனா, அருணாதேவி, அம்சா) வழங்கப்பட்டன. சேலம் ஆண்டோவின் " ஆதிவாசிகள் " என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. )


செய்தி: issundarakannan7@gmail.com

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

காகித்யா அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சி














நன்றி :தினத்தந்தி /19/08/2008

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

" ஓடும்நதி "

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்
----------------------------------------------------------------------
கீரனூர் ஜாகிர்ராஜா
-----------------



தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

======================================================================

அனுப்பியவர்:issundarakannan7@gmail.com