சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
1 அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது
கதிர் பாரதி கவிதைகள்
கதிர் பாரதியின் புதிய கவிதை நூல்
அம்மா என்பவள் குடும்பத்தில் ஒருத்தி... முக்கியமானவள் மற்றும் நாட்டை அம்மா என்று அழைக்கிற வழக்கமும் நம்மிடம் உண்டு. பாரதமாதா அப்படித்தான்.
ஆனால் பிரபஞ்சத் தாயாகி அம்மா எல்லோரையும் அணைக்கும் அனுபவங்களால் இந்த தொகுப்பை நிறைத்திருக்கிறார் கதிர் பாரதி அவர்கள்
இன்றைய நவீன கவிதை உலகம் இறுக்கமும் படிமக்குவியல்களும் தெளிவின்மையும் பல மாய ரூபங்களும் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிகிற போது தெளிவான அனுபவங்களால் அமைக்கப்பட்ட இக் கவிதை வரிகளை பார்க்கிறபோது ஆறுதலாகவே இருக்கிறது.
. அவையெல்லாம் நல்ல கவிதைகள் அடையாளமாக இருக்கின்றன.
காட்சிகளை விவரிப்பது, உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது, , தேவையான வார்த்தைகள் . அது எளிமையானதொரு பகிர்வாய். இருத்தல் வேண்டும் என்ற அணுகுமுறையில் இவை உச்சம் பெறுகின்றன.
இப்படி அம்மாக்களை வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள். இப்படி அம்மாக்கள் அமையாது போனவர்களை எண்ணி கண்ணீர் விட ஒரு சந்தர்ப்பம் கூட இது .
நிகழ்கால சம்பவங்கள் ஊடே ஒரு பேண்டஸித் தன்மையும் பல பகுதிகளில் வந்து விடுவது இன்னொரு பரிமாணமாக இருக்கிறது அம்மா மாடு முதல் குழந்தைகள் வரைக்கும் பலருக்கு ஆறுதல். உயிர் தண்ணீர் என்று இருப்பது போல் இருக்கிறவள் ஏர்வாடியில் கொஞ்சம் இருக்கிற அனுபவங்களும் வந்து எதார்த்தத்தைத் தொட்டுப் போகிறது. கொஞ்சம் பைபிளும் உலவும் குருவிகளும் கற்றாழைச் செடிகளும் இந்த கவிதைகளுக்கு ஒரு அரணாக அமைந்து விடுகின்றன. மாந்திரீகமாய் முளைப்பாரிக்கு தலை துவட்டும் சந்தர்ப்பங்களும் பல அமைகின்றன பொன் மூக்குத்திகளுக்கு மத்தியில் வேப்பம்பூக்கள் பளபளக்கும் தருணங்களை கவிதைகளில் பார்க்க முடிகிறது. மேகம் கூட அனாதையாய் விடக்கூடாது என்று துயரம் படும் அம்மா யாரையும் அனாதையாக விட்டதில்லை. ஆனால் அவள் கதி என்னவென்று பல சமயம் யோசிக்க வைக்கிறது
அம்மாவின் குருதியில் இருந்து கிளம்பிய வார்த்தைகளால் இக்கவிதைகள் அமைந்துள்ளன. விளைந்த கதிர் அசைவது போல வலம் வரும் அவளது உடலை கூறாக்கி பசியாற்ற முடிகிறது . சமூகத்தில் அவள் தன்னை மனதால் நிலைநிறுத்திக் கொண்ட அனுபவங்களால் இந்த கவிதைகள் நிரம்பி இருக்கிறது உலகத்தையே அணைத்துக்கொள்ளும் இது போன்ற அம்மாவின் உள்ளங்களால் கவிதை வாசகர்களை அணைத்துக் கொள்ள முடிகிறது கதிர் பாரதியால்.
( ரூ 100 நாதன் பதிப்பகம், சென்னை )
-சுப்ரபாரதிமணியன்