சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
கிளமெண்ட் விக்டரின் திரைக்கதைகள்
திரையரங்குகளில் வேலை என்ற அளவில் சுமார் 40 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்திருப்பவர் கிளமெண்ட் விக்டர் அவர்கள் .ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பவர். தொழில் ரீதியாக அந்த படங்கள் அவரோடு ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தமிழ் திரைப்பட உலகின் அகல ஆழங்களை நன்கு அறிந்தவர் நீண்டகால தமிழ் திரைப்பட வரலாற்றை தன் மனதில் கொண்டிருப்பவர். திரைப்பட ஆக்கங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பவ.ர் திரைக்கதை ஆக்கங்கள் சார்ந்த பல ஆலோசனைகளில் அவருடைய திறமையை கண்டு வியந்திருக்கிறேன் அது சார்ந்த உழைப்பும் அக்கறையும் ஆச்சரியப்படுத்தும்.
அவர் இயக்கிய குறும்படங்களை பார்க்கிற போது அதில் திரைக்கதைகளில் நேர்த்தியும் தொழில்நுட்ப நேர்த்தியும் அவரின் கைவண்ணத்தை காட்டும். அவரும் திரைக்கதை நூல்களை எழுதி இருக்கிறார். திரைப்பட பாடல்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் முத்திரை அவருடைய குறும்படங்களில் பளிச்சென்று தெரிகின்றன
முழுநீளத்திரைப் படம் எடுக்கிற அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதைப் புத்தகம் கொண்டு வருகிறார்
இன்றைய திரைப்பட ஆக்கங்களில் திரைக்கதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன அந்த வகைக் கதைகளை சொல்ல அவர் கேட்டு இருப்பது ஆச்சரியம் எனக்குள். திகைப்பும் புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரங்களும் திரைக்கதை ஆக்கமும் வசனமும் ஆச்சரியப்படுத்தும் அப்படி ஆச்சரியப்படுத்திய ஒரு திரைக்கதை தான் இது. இதுபோல் அவருடைய மனதில் நிறைய திரைக்கதைகள் உள்ளன. பல பதிவுகள் உள்ளன அவையெல்லாம் திரைப்பட ஆக்கங்களாக வெளிவர வேண்டும் அதற்கு காலம் கை கொடுக்க வேண்டும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதை நூலை எடுத்துக் கொள்ளலாம் நானும் அவருடைய முயற்சிகளில் பங்கு பெறவே விரும்புகிறேன்.
காலம் ஒத்துழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்
. சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர் திருப்பூர
ReplyForward
Add reaction