சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

நட்புரை வாழ்க்கை பிரம்மாண்டமானது. வாழ்க்கை அனுபவங்களை சில வார்த்தைகளில், சில வரிகளில் சுருக்கிக் கவிதையாக அதிலும் குறிப்பாக ஹைக்கூவாகத் தரும் வல்லமை அமரன் அவர்களுக்கு எப்போதும் உண்டு. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் பிற மொழிகளில் கொண்டு செல்வதிலும் ஆர்வம் கொள்பவர். ஆயிரக்கணக்கான பக்கங்களை ஹைக்கூ கவிதைகளால் நிரப்பி இருப்பவர் . எவ்வளவு அனுபவங்கள் எவ்வளவு கைகுலுக்கல்கள் எவ்வளவு பரிமாற்றங்கள் அதெல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அந்த துறை சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கு ஹைக்கூ சுலபமாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு வகையில் பழமைத் தன்மையும் வேறு வகையான இறுக்கமும் இருப்பதை நான் அந்நியமாக கண்டு சில சமயம் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் அனுபவ அளவில் அவையெல்லாம் விரிந்த கடல் போன்றது. அதிலிருந்து சிலவற்றை எடுத்து சொல்ல சொல்ல நாமும் அந்த கடலுக்குள் போய் பயணம் செய்கிற அனுபவத்தை பெறுகிறோம். அதற்குள் நீச்சல் அடிக்கிறோம். சில சமயம் கடல் நீர் வாய்க்குள் புகுந்து கொள்வது உண்டு. அப்படித்தான் நான் முன்னால் குறிப்பிட்ட பழமைத்தன்மையும் கூட. ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தொடர்ந்து கவிதை உலகில் இருப்பதும் ஆயிரக்கணக்கான கவிதைகளை அக்கறையுடன் எழுதி இருப்பதும் பெரிய சாதனையாகப்படுகிறது. அதில் ஒரு நூலை கனவு பதிப்பகத்தின் மூலம் அவர் வெளியிட இசிவு தந்தது என்னை பெரு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மகிழ்ச்சியை ஹைக்கூ வாசகங்கள் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். .அமரன் அவர்களின் ஹைக்கூ உலகத்திற்குள் நாம் செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை கனவு வெளியீட்டின் மூலமாக அவர் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி அவரின் ஹைக்கூ உலகில் அவரோடு இணைந்து அவருடன் கைக்குலுக்கிக் கொள்வோம்.. வாருங்கள் 0 சுப்ரபாரதி மணியன் 9486101003 ( கனவு பதிப்பகம், திருப்பூர் )