சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 18 ஜூன், 2025
Uyirezuthu june 2025.. சுப்ரபாரதிமணியன்
நாவல் குமாரகேசனின் வெட்டுக்காடு மருதகாளி நாவல்
நாவல் குமாரகேசனின் நாவல் நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டத்தில் நடப்பதாக அமைந்திருக்கிறது.பழனி, ஒட்டச்சத்திரம் சார்ந்த சில பகுதிகள் இந்த நாவலின் களங்களாயிருக்கிறன. பழனி ஒட்டன்சத்திரம் அதை சுற்றியுள்ள ஊர்களின் சாதாரண மக்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்களாக ஆகியிருக்கின்றனர்..
ஒரு மலைக்காட்டுப் பகுதி இரண்டு முறை எரிக்கப்பட்டு உயிர்கள் சிதைக்கப்பட்டு நிலமும் பொருட்களும் எரிந்து சாம்பலாகி கால்நடைகளும் இறந்து போக அங்கே குடியிருப்பவர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதும் மீண்டும் மீண்டும் அங்கேயே தொடரும் வாழ்க்கையும் என்று தொடர்கிறது ..அந்த சிதைந்தப் பகுதி மையமாகியிருக்கிறது.
ரத்தம் சிந்தாத மண்ணும் இல்லை. வஞ்சிக்கப்படாத மனிதரும் இல்லை என்று பல மனிதர்களின் துரோகம், அவர்களின் வரலாற்றை சொல்கிறது. ஒரு வகையில் அதிகார மனப்பான்மை தான் மையம்.. ஒரு விதவைப்பெபண்ணின் மகளான மருதகாளி தவறுதலாக கடத்தப்பட்டு ஒரு இடத்திற்கு கொண்டுவரப்படுகிறாள் அந்த பகுதி கொள்ளைக்காரர்கள் மூலம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாகிறது. காவிரி கரையில் சார்ந்தவன் ஊரை விட்டு வெளியே வந்து வாழ்க்கை நடத்துகிறான் சிவன்மலை. இன்னொரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். அந்தப் பகுதியில் வாழ்ந்த கொள்ளைக்காரர்களான தீவட்டியான், பாண்டிகூத்தன் இருவரின் செயலைப் பற்றி இந்த நாவல் அதிகம் பேசுகிறது. அந்த காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பும் விவசாய நிலங்களின் தன்மை பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.அது சார்ந்த விவசாயின் ஆழ்ந்த பார்வையும் ஆச்சர்ய்படுத்துகிறது பொள்ளாச்சி ஆழியாறு பழனி நடைஉலாவாக களன் படைக்கப்பட்டிருக்கிறது மாசாணி அம்மன் கதையும் ஒட்டன்சத்திரத்தின் பூர்வீகமும் வந்து போகிறது.
.
நிலமோ சொத்து சுகமோ இல்லாதவன் திருட்டை தான் அறுவடை செய்ய வேண்டும் என்று பலர் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் அவருடைய கட்டாயதிருட்டு வாழ்க்கையும் இந்த நாவலில் சொல்லப்படுகிறது. கொடுமுடி குருநாதர்,அந்த பகுதி ஜமீன் ஆயுத வழக்கும் தற்கொலை முயற்சிகளும் விரிவாக நாவலில் வருகிறது. நாவலின் காட்டப்படுகிற பகுதிகளும் மக்களின் இயல்புகளும் வெகு இயல்பாக சொல்லப்படுகின்றன புளிச்சோறு ரேகை பற்றிய வர்ணனை ஒரு உதாரணம்.
வண்டி ஒட்டு மனிதர்கள் சுமூகமாக தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் சந்திக்கிற பல சிரமங்களை நாவல் சொல்கிறது. திருடர்கள், திவட்டிக்கொள்ளையர்கள் வந்து போகிறார்கள். . காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் அவற்றின் குணாசம்களுடன் கூர்மையாக பழைய காலத்து ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுடைய வாழ்க்கையுடன் சொல்கிறபோது வியப்பாக இருக்கிறது.
. பல மூத்தவர்கள் இந்த சம்பவங்களை நினைவு கூறுவார்கள் அவர்களின் மனித கலாச்சாரம் நம்பிக்கைகளும் பாரம்பரிய கதைகளும் கொண்டிருப்பதை இந்த நாவல் சொல்கிறது .அப்பகுதி மக்களின் வாழ்க்கை விரிவாக இதில் உள்ளது
வடகாட்டு மலைக்கு சென்று காடுவெட்டி பயிர் தொழில் செய்து விடுவர்களை சந்திக்கிறார்கள் துன்பவியல் சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மனிதர்கள் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. அவர்கள் நிலத்தை வளப்படுத்தினார்கள். கானகப் பொருட்கள் உணவாகின. நிலத்தைக் கெடுக்கவில்லை. மரங்களை வெட்டவில்லை. ஆனாலும் அவர்கள் விரட்டப்படுகிறார்கள்
கொங்கு நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறையும் தினசரி வாழ்க்கையும் விரிவாக சொல்லப்படுகிறது சமையல் பாத்திரத்தின் மீது கல்மாரி விழுகிற சத்தம் சரியாக கேட்பது போல் இந்த பகுதி மக்களின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கின்றன .காட்டுப் பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்களும் செடி கொடிகளும் அதன் மருத்துவ குணம் மற்றும் அவற்ற அவற்றின் பயன்பாடுகள் நிறைய வந்து போகின்றன மண் குதிரை அசைந்தது கல்மாரி விழுந்ததால் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார் /அதேபோல இந்த மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் எழுச்சியாக நடந்ததா என்று சொல்ல முடியாது. ஆடி காற்று காலம் திருட்டுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது அந்த காலத்தில் நாய்களின் மோப்பசக்தை குறைவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்ற தகவல்கள் நாவல் முழுக்க இருக்கின்றன. மரம் வெட்டி கரி வண்டி ஓட்டும் வாழ்க்கை, உப்பு வண்டி ஓட்டும் வாழ்க்கை என்று பல சகோதரர்களும் வருகிறார்கள். ஆள்மாற்றத்தால் மலையில் வந்து சேரும் மருதகாளி வாழ்க்கை கண்ணாமூச்சி வாழ்க்கையாகிறது இந்த அனுபவங்களை நேர்த்தியாகவும் தன்னுடைய கொங்கு அனுபவ வார்த்தைகளோடும் நாவல் குமாரகேசன் சொல்கிறார் பிரிட்டிஷ் ஆட்சி கால சம்பவங்களால் நிறைந்திருக்கிறாய் இந்த நாவல் அந்த காலகட்டத்தில் சரித்திரச் சான்றுகளுடன் சொல்கிறது. புனைவும் கூட. இரண்டும் கலந்து அடையாளம் காட்டுகிறது மனிதர்களை.
சொந்த நிலம் இல்லாத எளிய மக்கள் வேலை வாய்ப்புக்காக வடகாட்டு மலைக்கு செல்வதும் அங்கு விவசாயத்பைல் தொழில் செய்வதும் வனக்காவலர்களால் விரட்டப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மிரட்டலுக்கும் நடுவில் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கொஞ்சம் குறிப்பையும் வைத்துப் போகிறது. இன்னும் பக்கங்கள் நீண்டு போய் சமீபகால அனுபவங்களோடு இந்த நாவல் முடிவு பெற்றிருந்தால் வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும்.
. வெட்டுக்காடு திரும்பத் திரும்ப அழிக்கப்பட்டு அதில் குடியேறுகிற மக்களின் வாழ்க்கையும் விவசாயிகளின் நிலமையும் ஒட்டஞ்சத்திரம் துண்டுப் பகுதி சார்ந்து சரியாக சொல்லப்பட்ட ஒரு கொங்கு நாவல் என்ற பெருமையை இது பெறுகிறது
( பக்கங்கள் 794.. ரூபாய் 750 அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )
சுப்ரபாரதிமணியன்
0