சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 7 ஜூன், 2025

ஏழை நோயாளிகள் பெங்களூரூ சாயிபாபா மருத்துவ மனைக்கு இலவச சிகிச்சைக்காக போய் விடாதீர்கள் . எந்த எதிர்வினையும் இராது ஓம் சாந்தி ஒம் சாந்தி என்று கண்களை மூடி படுத்துக்கொள்வது நல்லது. 0 நண்பர் மதுராந்தகன் எழுத்தாளர் வயது எண்பத்தி மூணு இதய நோய் சார்ந்து சமீப காலமாக மிகுந்த சிரமப்படுகிறார் பெங்களூர் சாய்பாபா இலவச சிகிச்சை மருத்துவமனைக்காக அவரை புதன்கிழமை அழைத்துச் சென்றேன் அதற்கு முன்னால் பலரிடம் அவரும் பேசினார் நானும் பேசினேன் எல்லோரும் அங்கு சென்று பதிவு செய்து கொண்டால் போதும் உடனே சிகிச்சையும் தங்குவதற்கான இடமும் தருவார்கள் என்றார்கள் ஆனால் அங்கு சென்றபோது பழைய டோக்கன் முறை எதுவும் இப்போது இல்லை அதனால் காத்திருக்க வேண்டியதில்லை உங்களுடைய பதிவை தொலைபேசியில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார்கள் அந்த தொலைபேசியில் பதிவு செய்து கொண்ட போது முன்பு பதிவு செய்யப்பட்ட குரல்கள் வந்து கொண்டே இருந்தன பலமுறை பதிவு செய்தும் இதே நிலைமை பிறகு ஒரு நாள் கழிந்தது மருத்துவமனையின் முகப்பில் இருந்த காவலாளிகள் கன்னடம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேசினார்கள் எல்லாவற்றிற்கும் அந்த தொலைபேசி எண் தான் உதவி என்றார்கள். வேறு வழி இல்லாமல் திரும்பி விட்டோம் நடைமுறையில் அவர்களுக்கு இருக்கிற சிக்கல்கள் நிறைய இருக்கும் ஆனால் அங்கு செல்கிறவர்களை குறைந்தபட்சம் பதிவு செய்து கொள்ள அவர்கள் ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும் தொலைபேசி பதிவின் பின்னால் உங்களை அழைப்போம் வாரங்களாகும் என்றார்கள் இரண்டு மூன்று நாட்களாய் அந்த எண்களில் இருந்து திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட குரல்கள் வந்து நீங்கள் யாருக்கும் பணம் தரக்கூடாது லஞ்சம் தரக்கூடாது இது இலவச மருத்துவமனை என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் எப்போதும் சிகிச்சைக்காக வருவது என்று பற்றி எந்த செய்தி வருவதில்லை குறைந்தபட்சம் குஞ்செய்திகள் மின்னஞ்சல் மூலமாக செய்து அனுப்பலாம் நீண்ட காலமாக இலவச மருத்துவமனை என்ற பெயர் பெற்ற அந்த மருத்துவமனை அனுபவங்கள் கசப்பாகத்தான் இருந்தன சில ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூர் போன அனுபவம் பெங்களூர் மெட்ரோ ரயிலில் ஒரு பயணம். வழக்கம் போல் எல்லா ஊர்களைப் போல ஆட்டோ நண்பர்கள் அதிக கேட்கிறார்கள் கருணை இல்லாதபோது மாதிரி நடந்து கொள்கிறார்கள் ஒயிட் பீல்டில் இருந்து மெசேஜ் மெஜஸ்டிக் சர்க்கிள் செல்லும் பேருந்தில் நீண்ட நேரம் பயணத்தில் பெங்களூரை ஒரு பார்வை பார்க்க முடிந்தது பிறகு அங்கிருந்து சேலம் செல்லும் பேருந்துக்காக சேட்டிலைட் டவுனுக்கு சென்றது இன்னொரு பயண அனுபவம் ஒரே நாளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது உடம்பை வருத்திவிட்டது சாய்பாபா இலவச மருத்துவமனை பற்றி பொது புத்தியில் இருக்கும் அபிப்பிராயங்கள் அங்கு போனால் மாறிவிடுகிறது No response after 3 5 days also