சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 18 ஜூன், 2025

New Centuary Book publishers, Tiruppur நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம்.. வணக்கம். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் “ உங்கள் நூலகம் “ஜீன் மாத இதழில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட, சேலம் பொன் குமார் தொகுத்த “ திருப்பூர் சிறுகதைகள் “ ” நூல் பற்றிய அறிமுகத்தை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார். அந்த நூலில் தங்கள் சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதை எழுதிய தங்களைப் பாராட்டுகிறோம். உங்கள் படைப்புப் பயணம் தொடர வாழ்த்துகிறோம். தொடர்ந்து தங்களின் இலக்கியப் பயணத்தின் மூலம் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். உங்களைப் போன்றோரின் நூல்களை விற்பனை செய்யவும்,தங்கள் நூல்கள் விற்பனையிலும் வெளியீட்டிலும் பங்கு பெறவும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் விரும்புகிறது. உங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துகிறோம். உங்கள் நூலகம் மாத இதம் ஆண்டுச்சந்தா ரூ540. அன்புடன், குணசேகரன் ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் )(8098426515) ராமசாமி ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் ( 9363044117 ) திருப்பூர் சிறுகதைகள் Thiruppuu sirukathaikal : veral books 01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன் 02. அப்பா - சுப்ரபாரதி மணியன் 03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம் 04. அரூப நெருப்பு - கே. என். செந்தில் 05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு 06. அரசாங்கம் - தாண்டவக்கோன் 07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி 08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ் 09. பெண் வலிமையானவள் - ரா. தீபன் 10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன் 11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன் 12. முக்கோணம் - அ. இளஞாயிறு 13. மன்னிப்பு - சிவதாசன் 14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர் 15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம் 16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர் 17. டயர் வண்டி - வெண் புரவி 18. தக்காளி - பிரபாகர் 19. இயலாமை - முத்துபாரதி 20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி 21 பெருசு - முரளி குமார் 22. செத்தவன் - இரா. சிந்தன் 23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி 24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு 25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்ட