சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 7 ஜூன், 2025

'இங்கிலாந்தின் நதிக்கரையில். அகிலா அவர்களின் இந்த பயண நூல் பயண இலக்கியத்தில் ஒரு சாதனைக்கல் என்னும் அளவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் என்ற வகையில்பயணக்குறிப்புகள் அனுபவங்கள் சார்ந்ததாக உள்ளன.வழக்கமான சரித்திர, பூகோளக் குறிப்புகளைக் குறிப்பிடும் போதும் தனி முத்திரை தென்படுகிறது. நடைமுறை அரசியலும், சுற்றுச்சூழல் அரசியலும் இதில் முக்கியப்பங்காற்றுகின்றன. ஆறுகள், வழித்தடங்கள்,பருவங்கள், மலைகள் சார்ந்த விபரங்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பின்னணியுடன் வெளிப்பட்டிருக்கின்றன. அசாத்திய உழைப்பு. தகவல் சேகரிப்பிலும், இங்கிலாந்தின் குறுக்கும் மறுக்குமான பயண அனுபவங்களிலும் மிளிரும் சாதனை நூல் இது. - சுப்ரபாரதிமணியன் - எழிலினி (Emerald) பதிப்பகத்தார் வெளியிட உள்ளார்கள் - சுற்றுச்சூழல் நூல் வெளியீடு : ஏழாம் பதிப்பு வெளியீடு - - சுப்ரபாரதிமணியனின் “ சூழல் அறம் “ என்ற சுற்றுச்சூழல் - - நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு பாண்டியன் நக்ர் நாலேஜ் செண்டரில் சனி அன்று நடைபெற்றது. - - கல்வியாளர் பாசிதாபானு வெளியிட்டார். - - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். - - கல்வியாளர் பாசிதாபானு பேசுகையில் - - “ பள்ளிக்குழந்தைகள் உணவில் அக்கறை எடுத்துக் கொண்டு உடல் நலம் பேண வேண்டும் . சுற்றுச்சூழல் பேண அக்கறை எடுக்க வேண்டும் என்றார். - - கனவு இலக்கிய வட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது . பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் அமைந்த நாலேஜ் செண்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது - நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு : என் சி பி எச் பதிப்பகம், சென்னை ரூ90 - சுற்றுச்சூழல் நூல் வெளியீடு : ஏழாம் பதிப்பு வெளியீடு சுப்ரபாரதிமணியனின் “ சூழல் அறம் “ என்ற சுற்றுச்சூழல் நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு பாண்டியன் நக்ர் நாலேஜ் செண்டரில் சனி அன்று நடைபெற்றது. கல்வியாளர் பாசிதாபானு வெளியிட்டார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். கல்வியாளர் பாசிதாபானு பேசுகையில் “ பள்ளிக்குழந்தைகள் உணவில் அக்கறை எடுத்துக் கொண்டு உடல் நலம் பேண வேண்டும் . சுற்றுச்சூழல் பேண அக்கறை எடுக்க வேண்டும் என்றார். ” முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில் கூட சரசரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும். இப்போது இதில் உணவுப் பொருட்களும் அடக்கம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயிலிருந்து தின்பண்டங்கள் சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் கூட தொங்குகின்றன. சிறார்களின் உணவு ஆசை சட் சட்டென்று நிறைவேறிப் போகிறது. அவர்களின் வயிறும் சுலபமாக குப்பைக் கழிவாகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றை கழிவுகளின் இருப்பிடம் ஆக்கிக் கொள்கிறார்கள் இதைத் தவிர்க்க வேண்டும் என்றார் கனவு இலக்கிய வட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது . பாண்டியன் நக்ர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் அமைந்த நாலேஜ் செண்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது நூலின் ஏழாம் பதிப்பு வெளியீடு : என் சி பி எச் பதிப்பகம், சென்னை ரூ90 இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்